Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா? - சுமந்திரன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?

ஜூலை 22, 2022
Photo_1658464475739.jpg
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா என எம்.ஏ சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் பலர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கோட்டா கோ கம போராட்டக்களத்தின் செயற்பாட்டாளர்களான ரந்திமல் கமகே, லஹிரு, அனுரங்க உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

இவ்வாறு கைது செய்யப்பட்ட எட்டிற்கும் மேற்பட்டவர்கள் மருதானை பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

அத்துடன், இரண்டு ஊடகவியலாளர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மேலும், குறித்த பகுதியில் இருந்த சில வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

இந்தநிலையிலேயே எம்.ஏ சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு கேள்வி எழுப்பியுள்ளார்.

‘மொட்டு கட்சியின் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க வருவதை தடுப்பதற்கென்று த. தே. கூ. ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?“ என அவர் பதிவிட்டுள்ளார்.
 

spacer.png
  • கருத்துக்கள உறவுகள்

உள்ளதையும் கெடுத்தான்... நொள்ளிக்கண்ணன் என்ற மாதிரி,  
இந்த சுமந்திரன்... நெடுக பினாத்திக் கொண்டு இருக்காமல்,
கொஞ்ச  நாளைக்காவது...  வாயை மூடிக் கொண்டிருக்க சொல்லுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

உள்ளதையும் கெடுத்தான்... நொள்ளிக்கண்ணன் என்ற மாதிரி,  
இந்த சுமந்திரன்... நெடுக பினாத்திக் கொண்டு இருக்காமல்,
கொஞ்ச  நாளைக்காவது...  வாயை மூடிக் கொண்டிருக்க சொல்லுங்கள்.

ஜனாதிபதி மொட்டுக் கட்சியோ, பூக்கொத்து கட்சியோ.... உந்தாள் பிரச்சணை அதுவா?

வாழையிலையா, தட்டா என்பதா பிரச்சணை?

சோறு வருமா, வராதா எண்டு தானே பார்க்க வேண்டும்....

சம்பந்தரின் முட்டாள் தேர்வே, சுமந்திரன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, தமிழ் சிறி said:

உள்ளதையும் கெடுத்தான்... நொள்ளிக்கண்ணன் என்ற மாதிரி,  
இந்த சுமந்திரன்... நெடுக பினாத்திக் கொண்டு இருக்காமல்,
கொஞ்ச  நாளைக்காவது...  வாயை மூடிக் கொண்டிருக்க சொல்லுங்கள்.

கட்சியை விட்டே நீக்க வேண்டும். வேறு யார் மூலமாவது நல்லது நடக்கும்.கட்சிக்குள் பிளவுகளை ஏற்படுத்தும் சகுனி இவர்.

  • கருத்துக்கள உறவுகள்

டலஸ் அழகப்பெருமா வந்திருந்தா மட்டும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களின் கையில்  பூக்கொத்து கொடுத்து வாழ்த்தியிருப்பாரா என்பதையும் சொல்லிவிட வேண்டியதுதானே? சும்மா வாய் இருக்கு என்பதற்காக அலம்பிக்கொண்டு திரியுறதே. கோத்தாவின் ஆட்சியில் எல்லாம் சரியென்று ஆமோதித்திருந்தவர், இப்ப மட்டும் மாறி செய்துபோடுவாராம். ரணிலும், டலசும் ஒரு கட்சிக்குத்தான் சேவை செய்கிறார்கள் என்பது தெரியாததுபோல் கதை அளக்கிறார். ஏன் இவர்களின் ஆட்சியில் எத்தனை பேர் கொல்லப்பட்டார்கள், காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பது இவருக்கு தெரியவில்லையோ? இது விக்கினேஸ்வரன் ரணிலுக்கு வாக்களித்த, தனக்கு கிடைக்காத  பதவி அவருக்கு கிடைத்து விடப்போகிறதே என்கிற கடுப்பில், ஏதோ தாங்கள் பெரிய சாதனை செய்ததுபோல உளறுறார்.  இவர்களுக்குள்ளேயே ரணிலுக்கு, காசுக்காக வாக்களித்தவர்கள் இருக்கிறார்கள்  என்பது தெரியாத மாதிரி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் என்று பிணாத்துறார். த .தே. கூட்டமைப்பு ஏகமானதாய் எடுத்த தீர்மானங்களை எத்தனை தடவை இவர் மறுதலித்து, இது சுமந்திரனின் தனிப்பட்ட கருத்து, கூட்டணியின் கருத்தல்ல என்று மறுப்பறிக்கை விட்டிருக்கிறார்கள் என்பது இவருக்கு மறந்து போச்சு.                

  • கருத்துக்கள உறவுகள்

ரணிலுக்காக போட்ட ஒப்பந்தம் என்கிறார்களே!🤭

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஏகமனதாக எடுத்த தீர்மானம் சரியானது என்பது இப்போதாவது புரிகிறதா?

அதுதானே

தீர்க்கதரிசியல்லவா.

  • கருத்துக்கள உறவுகள்

சிங்களத்தில் முழங்கித் தள்ளும் சாணக்கியன்.

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தில் முழங்கித் தள்ளும் சாணக்கியன்.

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.

 பிறகு மாற்றியடிக்க உதவியாக இருக்கும். ஏற்கெனவே ரணிலோட தகராறு இது வேற!

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, satan said:
7 hours ago, ஈழப்பிரியன் said:

சிங்களத்தில் முழங்கித் தள்ளும் சாணக்கியன்.

மொழிபெயர்ப்பாளர்கள் தேவை.

Expand  

 பிறகு மாற்றியடிக்க உதவியாக இருக்கும். ஏற்கெனவே ரணிலோட தகராறு இது வேற

இதில் என்ன தான் சொல்லுகிறார் என்றால் ஒருதரும் மொழிபெயர்ப்பாளர்கள் இல்லியோ?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.