Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இலங்கையை மையப்படுத்தி தம்மை வலுப்படுத்தும் ஜப்பான்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையை மையப்படுத்தி தம்மை வலுப்படுத்தும் ஜப்பான்!

Digital News Team 2022-08-26T16:01:21 

1-150.jpg

இலங்கையை மையப்படுத்தி முக்கிய சர்வதேச ராஜதந்திர நகர்வுகளும் மேற்கொள்ளப்படுகின்றன.

அந்த வகையில் இலங்கையின் கடன் நெருக்கடியை தீர்க்கும் வகையில் இலங்கைக்கு கடன் வழங்கும் நாடுகளின் கூட்டம் ஒன்றை கூட்டுவதற்கு ஜப்பான் முன்வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

இது ஜப்பானிய அரசாங்கத்தினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படாதபோதும் உறுதிப்படுத்தப்பட்ட செய்தியாகவே வெளியாகியுள்ளது.

முன்னதாக இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளை மையப்படுத்தி கடன் வழங்குனர்களின் மாநாட்டை நடத்துமாறு இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஜப்பானை கேட்டிருந்தார்.

இதற்கமையவே ஜப்பான் குறித்த மாநாட்டை கூட்ட விருப்பம் கொண்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. இந்தநிலையில், இந்த மாநாட்டை கூட்டுவதன் மூலம் ஜப்பானுக்கு இலங்கை ஏற்கனவே வழங்கவேண்டிய 3 பில்லியன் டொலர்களை மீண்டும் பெற்றுக்கொள்ளமுடியும் என்ற நோக்கம் ஜப்பானுக்கு இருக்கலாம் என்ற கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது.

எனினும் அந்த கருத்துக்கு அப்பால், பிராந்திய இருப்பு தொடர்பான கருத்தும் தற்போது வெளியாகியுள்ளது.
டோக்கியோவின் இந்த நடவடிக்கையானது, பிராந்தியத்தில் சீனாவின் இருப்பு வளர்ந்து வரும் நேரத்தில், தமது இராஜதந்திர நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே ஜப்பான் இந்த நடவடிக்கைக்கு முன்வந்துள்ளதாக ஆய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

எனினும் ஜப்பான் நடத்த உத்தேசித்துள்ள இந்த மாநாட்டுக்கு சீனா ஒத்துழைக்குமா என்பதை பொறுத்தே, ஜப்பானின் இராஜதந்திர வெற்றி உறுதிப்படுத்தப்படும் என்று ஜப்பானிய ஆய்வு இதழ் ஒன்று குறிப்பிட்டுள்ளது.

https://thinakkural.lk/article/203421

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஏராளன் said:

தமது இராஜதந்திர நலன்களைப் பாதுகாக்கும் நோக்கத்திலேயே ஜப்பான் இந்த நடவடிக்கைக்கு முன்வந்துள்ளதாக ஆய்வு இதழ் ஒன்று தெரிவித்துள்ளது.

அழகான ஈழத்தீவை தமிழரது பூர்வீக உரிமையை மறுதலித்து அழித்தொழித்து கடைசியாக உலகமெனும் மைதானத்தில் உதைபந்தாகிவிட்டதே. என்ன அவலம். எந்த அவலப்பட்டாலும் சிங்களத்தின் இனவாதமுகம் மாறவில்லை. மாறாது.

  • கருத்துக்கள உறவுகள்

இல்மனைட் எடுப்பதில் யப்பான் தீவிர கரிசனை கொண்டுள்ளது. முன்பு எடுத்தவர்கள் என நினைக்கிறேன். 

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, nunavilan said:

இல்மனைட் எடுப்பதில் யப்பான் தீவிர கரிசனை கொண்டுள்ளது. முன்பு எடுத்தவர்கள் என நினைக்கிறேன். 

அகாசி ஐயா அதற்காத்தான் சமாதானமென்று ஓடித்திரிஞ்சவர். ஒரு கப்பல் இல்மனைட்டோடை கடலுக்கை மூழ்கடிக்கப்பட்டது. எந்த ஆண்டு என்று நினைவில்லை- 

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, nochchi said:

அகாசி ஐயா அதற்காத்தான் சமாதானமென்று ஓடித்திரிஞ்சவர். ஒரு கப்பல் இல்மனைட்டோடை கடலுக்கை மூழ்கடிக்கப்பட்டது. எந்த ஆண்டு என்று நினைவில்லை- 

ரனில் எதாவது உள்ளதை விற்று கடனை அடைக்கலாம் என யோசித்திருப்பாரோ?
தமிழர் பகுதியில் இருப்பதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

ரனில் எதாவது உள்ளதை விற்று கடனை அடைக்கலாம் என யோசித்திருப்பாரோ?
தமிழர் பகுதியில் இருப்பதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

தமிழரது படைக் கட்டமைப்பில் கடற்படைக்கு அதிகளவு முக்கியததுவம் கொடுத்ததன் நோக்கமே  பல்வகமைகளிலான கடல் வளங்களையும் யோசித்தே என்று நினைக்கின்றேன். புலிகளது படைபலம் இருக்கும்வரை எல்லோரும் எட்டிநின்று பார்த்தார்கள். கிட்டப்போய் அள்ளுவதற்காக  அழிப்பதற்கு உதவினார்கள். மீண்டும் அவர்களது தேவைக்குத் திரிகிறார்கள். புல்மோட்டையில் ஒரு காலத்தில் தமிழர்களுக்கான வேலைவாய்பையும் இந்த இல்மனைட் கனியவளம் கொடுத்திருந்தது.  

  • கருத்துக்கள உறவுகள்

எது நடந்ததோ அ நன்றாகவே நடந்தது. எது நடக்கவிரக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும். 

நன்மையான விடயம், இந்தக் கூட்டு US, Japan, Germany, Britain கூட்டு முயற்சியில் இந்தியா பார்வையாளர் மட்டும் என்பதுதான். 

😉

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, nunavilan said:

ரனில் எதாவது உள்ளதை விற்று கடனை அடைக்கலாம் என யோசித்திருப்பாரோ?
தமிழர் பகுதியில் இருப்பதும் இன்னொரு காரணமாக இருக்கலாம்.

இருப்பதை  விற்று முன்னுக்கு வந்த சரித்திரம் எங்குமில்லை.
இருப்பதை வைத்து சுய முயற்சியிலும் ஏதாவது செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, குமாரசாமி said:

இருப்பதை  விற்று முன்னுக்கு வந்த சரித்திரம் எங்குமில்லை.
இருப்பதை வைத்து சுய முயற்சியிலும் ஏதாவது செய்ய வேண்டும்.

அதற்க்கு கடன் கொடுத்தவர் விடுவாரோ என்று கேட்டுப்பாப்போம்! இருக்கிறதை முதல் என நினைத்தே கடன் கொடுத்தார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, satan said:

அதற்க்கு கடன் கொடுத்தவர் விடுவாரோ என்று கேட்டுப்பாப்போம்! இருக்கிறதை முதல் என நினைத்தே கடன் கொடுத்தார்கள்.

இலங்கையில் இருப்பதை வைத்து......
சீமேந்து தொழிற்சாலை இருந்தது.
இரசாயன தொழிற்சாலை இருந்தது.
மட்பாண்ட தொழில்கள் இருந்தன.
கண்ணாடி தொழிற்சாலை இருந்தது.
சீனி தொழிற்சாலை இருந்தது.
காகித தொழிற்சலை இருந்தது.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.