Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் : ராகுல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் : ராகுல்

KaviSep 07, 2022 10:18AM
FcBfGe0aAAQl-PU.jpeg

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

ராகுல் காந்தி காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மேற்கொள்ள இருக்கும் பாத யாத்திரைக்காக நேற்று இரவு தமிழகம் வந்தார்.

இன்று காலை சென்னையிலிருந்து ஸ்ரீபெரும்புதூர் சென்று அங்குள்ள தனது தந்தை ராஜிவ் காந்தி நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். கண்களை மூடி அமர்ந்து சிறிது நேரம் தியானம் செய்தார்.

அங்கு நடைபெற்ற வீணை காயத்ரி இசையஞ்சலி நிகழ்ச்சியிலும் கலந்துகொண்டார். நினைவிட நுழைவு வாயில் பகுதியில் கட்சியின் கொடியை ஏற்றினார்.

முன்பகல் 11.40 மணிக்கு விமானம் மூலம் திருவனந்தபுரம் செல்லும் அவர் அங்கிருந்து குமரி செல்கிறார்.

இந்நிலையில் அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “வெறுப்பு மற்றும் பிரிவினை அரசியலால் எனது தந்தையை இழந்தேன்.

அதற்காக என் அன்பான நாட்டையும் இழக்க மாட்டேன். அன்பு வெறுப்பை வெல்லும். நம்பிக்கை பயத்தை வெல்லும். ஒன்றாக வெல்வோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.

 

https://minnambalam.com/i-wont-lose-my-country-like-i-lost-my-father/

 

  • கருத்துக்கள உறவுகள்

உமது தந்தை செய்த வேலைக்குத்தான்… 
உமது தந்தையை… இழந்தீர்.
அவர்… விமான ஓட்டியாகவே இருந்திருந்தால், அந்த துன்பியல் சம்பவம் நிகழ்ந்து இருக்காது. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, கிருபன் said:

ராஜிவ் காந்தி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் என்று கூறியுள்ளார்.

உங்கள் தந்தையால் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த நீங்கா வடுக்களை சிந்தித்து பார்.

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, கிருபன் said:

என் தந்தையை இழந்தது போல் நாட்டை இழக்கமாட்டேன் : ராகுல்

உங்கள் தந்தையால் உயிரிழந்த ஈழத்தமிழர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

உங்கள் தந்தையால் ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த நீங்கா வடுக்களை சிந்தித்து பார்.

 

ஈழத்தமிழருக்கு நேர்ந்ததை  அவர் நேர்மையாக  தனது  மக்களுக்கு  சொல்வாரானால்

எமக்கு  மனநிறைவு  நீதி  கிடைக்கலாம்

ஆனால்  அவரது  அரசியல் எதிர்காலம் அத்துடன்  முடிந்து  விடும்

அப்படியானால் அவர்  அதை  செய்வாரா?

காந்தியையே  இன்றும் வைத்து  அரசியல் தொழில்  செய்பவர்கள்...

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அதுக்கு சரி வரமாட்டார் எண்டு ஊரே முடிவு கட்டி விட்டது. குழந்தைப்பெடி என்று நக்கலாக அழைப்பார்கள்.

தலைமைப்பதவியே வேணாம் என்று கடந்த தோல்வியுடன் கிளம்பினார். ஆனால் தாய் மனிசி விடுதில்லை.

பாரம்பரிய ரேபலேழி தொகுதியில் தோல்வி நிச்சயம் என்று தெரிந்து, கேரளாவில் இரண்டாவது தொகுதியில் நின்று வென்றார்.

அடுத்த முறை மோடி வென்றால், அதுவே, காந்தி குடும்பத்தின் இறுதி முயல்வாக இருக்கும்.😎

இந்தியாவில் தலை சிறந்த வக்கீல் மறைந்த ராம் ஜெத்மாலினி ஒருமுறை சொன்னார், இந்தியாவின் பிரதமராக அல்ல, எனது அலுலலகத்தில் கிளாக் ஆக வேலை செய்யவே முடியாத முதிர்ச்சி இல்லாத 53 வயதுக்காரர் இவர் என்று.

இந்த வீடியோவின் கமெண்டுகளும் அதையே சொல்கின்றன.

நமக்கு தகப்பனிலும்,தாய் மனிசியிலும் காங்கிரசின் மீது தான் கோவம்.  இவர் மேலல்ல.

Edited by Nathamuni

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.