Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உடுவிலில் பனங்கூடலுக்கு தீ வைத்த விஷமிகள் - 20 பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உடுவிலில் பனங்கூடலுக்கு தீ வைத்த விஷமிகள் - 20 பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம்

By T YUWARAJ

18 SEP, 2022 | 04:19 PM
image

 

 

யாழ்ப்பாணம் உடுவில் தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினுள் நின்ற பனை மரங்களுக்கு விஷமிகள் தீ வைத்தமையால் 20 பனைகள் முற்றாக எரிந்து கருகியுள்ளன. 

யாழ்ப்பாணம் தொம்பை வீதியில் உள்ள தொம்பை வைரவர் ஆலய வளாகத்தினை சூழ பனை மரங்கள் காணப்பட்டன. அவற்றுக்கு விஷமிகள் தீ வைத்துள்ளனர். 

01__5_.jpg

பனை மரங்கள் திடீரென தீ பற்றி எரிவதனை அவதானித்த அயலவர்கள் உடனடியாக தீயணைப்பு பிரிவினருக்கு அறிவித்தமையை அடுத்து , அவ்விடத்திற்கு விரைந்த தீயணைப்பு பிரிவினர் தீயினை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

01__3_.jpg

தீயணைப்பு படையினர் விரைந்து செயற்பட்டமையினால் , தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது எனவும் , அதனால் அயலில் இருந்த தென்னம் தோட்டம் மற்றும் மேலும் பல பனை மரங்கள் தீயினால் அழிவடைந்திருக்கும் என அப்பகுதி வாசிகள் தெரிவித்தனர். 

01__4_.jpg

குறித்த தீயினால் 20 பனை மரங்கள் எரிந்து கருகியுள்ளன. சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கும் அறிவிக்கப்பட்டமையை அடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

உடுவிலில் பனங்கூடலுக்கு தீ வைத்த விஷமிகள் - 20 பனை மரங்கள் தீயில் எரிந்து நாசம் | Virakesari.lk

 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மரத்தை வளர்த்து எடுப்பது எவ்வளவு சிரமம் என்று தெரியாதவர்கள்.
நமது மக்களின் மனநிலை.. ஏன், இப்படி எல்லாம் போகின்றது. 

  • கருத்துக்கள உறவுகள்

இன்னுமா நெருப்பு வைத்தவர்களை கண்டுபிடிக்க முடியலை அதிசயம் நாங்க திரியும் காலத்தில் இன்னாரின் மகன் இந்த கூட்டத்துடன் இந்த இடத்தில் நிக்கிறார் என்று இலவச லொக்கேசன் பகிரப்படும்  அங்குள்ள வயது போன கூட்டம்களினால் போன இடம் பிழை என்றால் அல்லது கூடிய கூட்டம் பிழை என்றால் உடனே சைக்கிளில் தடியுடன் மாமன் எனும் தண்டனை வழங்கி வந்து ரிமோட்டில் அடி விழும்  .😀

22 minutes ago, தமிழ் சிறி said:

ஒரு மரத்தை வளர்த்து எடுப்பது எவ்வளவு சிரமம் என்று தெரியாதவர்கள்.
நமது மக்களின் மனநிலை.. ஏன், இப்படி எல்லாம் போகின்றது. 

மரங்களின் அருமை அறியாத வீணாப்போன கூட்டம் .

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

ஒரு மரத்தை வளர்த்து எடுப்பது எவ்வளவு சிரமம் என்று தெரியாதவர்கள்.
நமது மக்களின் மனநிலை.. ஏன், இப்படி எல்லாம் போகின்றது. 

எல்லாம் உரியவர் இல்லாததன் விளைவு.

 

54 minutes ago, பெருமாள் said:

இன்னுமா நெருப்பு வைத்தவர்களை கண்டுபிடிக்க முடியலை அதிசயம் நாங்க திரியும் காலத்தில் இன்னாரின் மகன் இந்த கூட்டத்துடன் இந்த இடத்தில் நிக்கிறார் என்று இலவச லொக்கேசன் பகிரப்படும்  அங்குள்ள வயது போன கூட்டம்களினால் போன இடம் பிழை என்றால் அல்லது கூடிய கூட்டம் பிழை என்றால் உடனே சைக்கிளில் தடியுடன் மாமன் எனும் தண்டனை வழங்கி வந்து ரிமோட்டில் அடி விழும்  .😀

மரங்களின் அருமை அறியாத வீணாப்போன கூட்டம் .


நீங்கள் கூறுவது பழைய காலத்தைப் பற்றி. உறவுகள், நட்புகளின் பிள்ளைகளை இயல்பாக காத்திட  வேண்டும் என்ற சிந்தனைகொண்ட பண்புடைக்காலத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது.  இன்று அப்படிக்கண்டாலும் காணாததுபோல் சென்றுவிடுவார்கள். போட்டியும், பொறாமைகளோடு ஆசைகளுக்கும் ஆட்பட்ட இனமாகிவிட்டது. இதனைத் திருத்துவது கடினமென்றே தோன்றுகிறது. இப்படியொரு சிதைவுநிலையையே சிங்களமும் விரும்புகிறது. அதனை நிறைவேற்றுகின்றது இந்தப் பாதகர் கூட்டம்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nochchi said:

நீங்கள் கூறுவது பழைய காலத்தைப் பற்றி. உறவுகள், நட்புகளின் பிள்ளைகளை இயல்பாக காத்திட  வேண்டும் என்ற சிந்தனைகொண்ட பண்புடைக்காலத்தை இப்போது எதிர்பார்க்க முடியாது.  இன்று அப்படிக்கண்டாலும் காணாததுபோல் சென்றுவிடுவார்கள். போட்டியும், பொறாமைகளோடு ஆசைகளுக்கும் ஆட்பட்ட இனமாகிவிட்டது. இதனைத் திருத்துவது கடினமென்றே தோன்றுகிறது. இப்படியொரு சிதைவுநிலையையே சிங்களமும் விரும்புகிறது. அதனை நிறைவேற்றுகின்றது இந்தப் பாதகர் கூட்டம்.

இதே நிலை சிங்களவர்களையும் தாக்கும் என்பதை அவர்கள் இலகுவாக மறகின்றார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்


தீ வைப்பது வருத்தத்துக்குரியது இங்கு எல்லாம் மரங்களை வர வர இன்னும் அதிகமாக பாதுகாக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தனிப்பட்ட கோபதாபங்களை வைத்து வாயில்லா பிராணிகளை துன்புறுத்துவது,இயற்கை மற்றும் விளைபயிர்களை நாசம் செய்பவர்களை கண்டறிந்து அவர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்துவிட்டு ஊரைவிட்டே துரத்த வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பெருமாள் said:

மரங்களின் அருமை அறியாத வீணாப்போன கூட்டம் .

இன்று இவர்கள் மரத்துக்கு வைத்த நெருப்பு இவர்களை, இவர்களின் சந்ததியை, சொத்தை எரிக்குமட்டும் அணையாது, எங்கோ  நீறு பூத்து காத்துக்கொண்டே இருக்கும்.

அது விளையாட்டுக்கு வைத்த தீயாக இருக்கலாம் அல்லது வினையாக இருக்கலாம், எதுவாக இருந்தாலும் விடாது துரத்தும்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தங்களுக்கு தாங்களே தீவைத்துள்ளனர்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.