Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விழித்துக் கொள்ளவில்லையென்றால் தமிழ்த் தேசியம் பறிபோகும்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டது.அதை நாம் நன்றாக படித்து,இந்த புதிய அரசியல் அமைப்பு ஒற்றை ஆட்சியை தான் பிரதிபலிக்கிறது அதை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.நாம் நிராகரித்த ஒன்றைத் தான்,இப்போது வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அன்றே இந்த “ஏக்கிய இராஜ்ச்சிய” பிரச்சினை வந்தது.ஒற்றை ஆட்சி என்ற சொல் தமிழிலே நீக்கப்பட்டு,யூனிடேரி ஸ்டேட் என்ற சொல் ஆங்கிலத்தில் நீக்கப்பட்டு,சிங்களத்தில் ஏக்கிய இராஜ்ச்சிய என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு குழப்பத்தில் முடிந்தது.

நாம் போராடி ஒரு இலட்சம் உயிர்களை இழந்தது இந்த ஒற்றை ஆட்சி வேண்டாம் என்று தான்.அதனை ஒருமித்த நாடு என்ற பக்கத்தில் கொண்டு வருவதற்கு சுமந்திரன் நினைக்கிறார்.மக்களை மீண்டும் அடிமையாக மாற்றுவதற்கும்,தேர்தல் காலத்தில் மக்களை பயன்படுவதற்கும் தமிழ் தரப்புகள் முயற்சி செய்து வருகின்றனர்.தமிழ் மக்கள் துஷ்பிரயோகம் செய்து,ஏமாற்ற வேண்டும் என்பது இவர்களின் எண்ணம்.

ஆகவே தான் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வந்ததிலிருந்து ,பல விடயங்களை நாம் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றோம்.அதில் ஒன்று தான் இப்போது சீனா ,இந்திய உள்ளிட்ட நாடுகளின் கைப்பிடியில் இருப்பது.இதை நாம் அன்று கூறும் போது யாரும் நம்பவில்லை.இப்போது எல்லாமே அவர்களின் ஆளுகையின் கீழ் தான் இங்கே நடைபெறுகிறது.

இது தவிர இன்னுமொரு தரப்பு இப்போது வேறு ஒரு வேலை செய்கிறது.எமக்காக தியாகம் செய்த போராளிகளின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை.விடுதலை போராட்டத்தின் அடிப்படையை மாற்றி அமைக்க நினைக்கிறார்கள்.ஒரு சிலர் போராளிகளின் பெயரை பயன்படுத்தி இப்படி பலவற்றை மாற்ற நினைக்கிறார்கள்.ஆனால் நாம் எமக்காக போராடியவர்களுக்கு,பொருளாதார ரீதியில் ஏதும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம்.

இராஜபக்ச அரசை வெளியேற்ற மும்மரமாக இருந்த ,வெளிநாட்டு தரப்பு இனி ரணிலுக்கு நெருக்கடி கொடுக்கப்போவதில்லை.ரணிலை வைத்து தமது காரியங்ளை நகர்த்தப்போகிறார்கள்.அப்படியான நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தேசியம் பலியிடப்படும்.ஆகவே அவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை.

இரண்டு வருடத்துக்கு முதல், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கி ஆட்சியை வழங்கிய சிங்கள மக்களே,அவர்களை அடித்து துரத்தியுள்ளனர்.ஆனால் இப்படியான செயல்பாட்டை தான் தமிழ் தரப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன.இதற்கு தமிழ் மக்கள் தான் பலியாவார்கள்.ஆகவே இந்த வருத்தத்துடன் தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.seithy.com/breifNews.php?newsID=291611&category=TamilNews&language=tamil

தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, ஈழப்பிரியன் said:

தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:

 

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.புதிய அரசியல் அமைப்பு உருவாக்குவது தொடர்பாகவும்,அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.அந்த அறிவிப்பை தமிழ்த் தேசியக் கூட்டமைபின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எ.சுமந்திரன் வரவேற்பதாக தெரிவித்துள்ளார்.

அன்று ரணில் பிரதமராக இருந்த காலத்தில்,அரசியல் அமைப்புச் சபை உருவாக்கப்பட்டு,திருத்தம் ஒன்று முன்வைக்கப்பட்டது.அதை நாம் நன்றாக படித்து,இந்த புதிய அரசியல் அமைப்பு ஒற்றை ஆட்சியை தான் பிரதிபலிக்கிறது அதை நிராகரிக்க வேண்டும் என்று கூறியிருந்தோம்.நாம் நிராகரித்த ஒன்றைத் தான்,இப்போது வேண்டும் என சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

அன்றே இந்த “ஏக்கிய இராஜ்ச்சிய” பிரச்சினை வந்தது.ஒற்றை ஆட்சி என்ற சொல் தமிழிலே நீக்கப்பட்டு,யூனிடேரி ஸ்டேட் என்ற சொல் ஆங்கிலத்தில் நீக்கப்பட்டு,சிங்களத்தில் ஏக்கிய இராஜ்ச்சிய என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு குழப்பத்தில் முடிந்தது.

நாம் போராடி ஒரு இலட்சம் உயிர்களை இழந்தது இந்த ஒற்றை ஆட்சி வேண்டாம் என்று தான்.அதனை ஒருமித்த நாடு என்ற பக்கத்தில் கொண்டு வருவதற்கு சுமந்திரன் நினைக்கிறார்.மக்களை மீண்டும் அடிமையாக மாற்றுவதற்கும்,தேர்தல் காலத்தில் மக்களை பயன்படுவதற்கும் தமிழ் தரப்புகள் முயற்சி செய்து வருகின்றனர்.தமிழ் மக்கள் துஷ்பிரயோகம் செய்து,ஏமாற்ற வேண்டும் என்பது இவர்களின் எண்ணம்.

ஆகவே தான் நாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து வந்ததிலிருந்து ,பல விடயங்களை நாம் மக்களுக்கு வலியுறுத்தி வருகின்றோம்.அதில் ஒன்று தான் இப்போது சீனா ,இந்திய உள்ளிட்ட நாடுகளின் கைப்பிடியில் இருப்பது.இதை நாம் அன்று கூறும் போது யாரும் நம்பவில்லை.இப்போது எல்லாமே அவர்களின் ஆளுகையின் கீழ் தான் இங்கே நடைபெறுகிறது.

இது தவிர இன்னுமொரு தரப்பு இப்போது வேறு ஒரு வேலை செய்கிறது.எமக்காக தியாகம் செய்த போராளிகளின் உணர்வுகள் மதிக்கப்படவில்லை.விடுதலை போராட்டத்தின் அடிப்படையை மாற்றி அமைக்க நினைக்கிறார்கள்.ஒரு சிலர் போராளிகளின் பெயரை பயன்படுத்தி இப்படி பலவற்றை மாற்ற நினைக்கிறார்கள்.ஆனால் நாம் எமக்காக போராடியவர்களுக்கு,பொருளாதார ரீதியில் ஏதும் செய்ய வேண்டும் என்று நினைக்கின்றோம்.

இராஜபக்ச அரசை வெளியேற்ற மும்மரமாக இருந்த ,வெளிநாட்டு தரப்பு இனி ரணிலுக்கு நெருக்கடி கொடுக்கப்போவதில்லை.ரணிலை வைத்து தமது காரியங்ளை நகர்த்தப்போகிறார்கள்.அப்படியான நிலையில் அவரைக் காப்பாற்றுவதற்கு தமிழ்த் தேசியம் பலியிடப்படும்.ஆகவே அவர்களை நம்பி எந்தப் பயனும் இல்லை.

இரண்டு வருடத்துக்கு முதல், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வழங்கி ஆட்சியை வழங்கிய சிங்கள மக்களே,அவர்களை அடித்து துரத்தியுள்ளனர்.ஆனால் இப்படியான செயல்பாட்டை தான் தமிழ் தரப்புகள் செய்து கொண்டு இருக்கின்றன.இதற்கு தமிழ் மக்கள் தான் பலியாவார்கள்.ஆகவே இந்த வருத்தத்துடன் தமிழ் மக்கள் விழித்துக் கொள்ள வேண்டும் என்றார்.

https://www.seithy.com/breifNews.php?newsID=291611&category=TamilNews&language=tamil

தமிழ் மக்கள் இந்த ஆண்டுடன் விழித்துக் கொள்ளவில்லையென்றால் ,தமிழ்த் தேசியம் முழுமையாக பறிபோகும் என நாடளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்:

 

புலிகள் போர்க்குற்றம்:சாம் ...

ஏற்கேனவே... தமிழ் தேசியத்தை இல்லாமல் ஒழித்துக் கட்டத்தான்,
சம்பந்தனும், சுமந்திரனும்  மும்முரமாக இருக்கிறார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, ஈழப்பிரியன் said:

அன்றே இந்த “ஏக்கிய இராஜ்ச்சிய” பிரச்சினை வந்தது.ஒற்றை ஆட்சி என்ற சொல் தமிழிலே நீக்கப்பட்டு,யூனிடேரி ஸ்டேட் என்ற சொல் ஆங்கிலத்தில் நீக்கப்பட்டு,சிங்களத்தில் ஏக்கிய இராஜ்ச்சிய என்று தெளிவாக குறிப்பிடப்பட்டு குழப்பத்தில் முடிந்தது.

 

8 hours ago, தமிழ் சிறி said:

புலிகள் போர்க்குற்றம்:சாம் ...

ஏற்கேனவே... தமிழ் தேசியத்தை இல்லாமல் ஒழித்துக் கட்டத்தான்,
சம்பந்தனும், சுமந்திரனும்  மும்முரமாக இருக்கிறார்கள்.

இதைத் தான் @Kapithan யூனியன் என்று சொன்னாரோ?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, ஈழப்பிரியன் said:

இதைத் தான் @Kapithan யூனியன் என்று சொன்னாரோ?

ஈழப்பிரியன்... மேலே உள்ளதை, 
சிரிக்காமல் சொன்னதை நினைக்க.. எனக்கு சிரிப்பாக இருக்கு. 😁 😂

அதை... சம்பந்தன், ஏற்கேனவே... யூனியன் ஆக்கிப் போட்டாரே.
 @Kapithan சொன்னது.... சுமந்திரன் கொண்டு வாற, புது மொடல் யூனியன். 😂

 

இன்று... கபிதனுக்கு, கன பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்குது.  😅
அதோடை... இதுகும் சேர்ந்திருக்கு. 😎
பரவாயில்லை... வார விடுமுறை என்ற படியால்... "ஹோம் வேர்க்" செய்யட்டும்.   😜

  • கருத்துக்கள உறவுகள்

கஜேந்திரன் வரும் மேற்கு நாட்டு உயர் மட்டத்தவர்களிடம் ஊக்ரேனியர்களுக்கு விழுந்து விழுந்து உதவுகிறீர்கள். எமக்கும் உதவலாம் தானே என கேட்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, nunavilan said:

கஜேந்திரன் வரும் மேற்கு நாட்டு உயர் மட்டத்தவர்களிடம் ஊக்ரேனியர்களுக்கு விழுந்து விழுந்து உதவுகிறீர்கள். எமக்கும் உதவலாம் தானே என கேட்கலாம்.

நுணாவிலான்…. கஜேந்திரனை, ஐரோப்பாவை விட்டு..
நாடு கடத்த பிளான் போடுற மாதிரி இருக்கு. 😂

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, nunavilan said:

கஜேந்திரன் வரும் மேற்கு நாட்டு உயர் மட்டத்தவர்களிடம் ஊக்ரேனியர்களுக்கு விழுந்து விழுந்து உதவுகிறீர்கள். எமக்கும் உதவலாம் தானே என கேட்கலாம்.

உதவத் தானே போட்டிபோட்டு வருகிறார்கள்.

ஏதோ ஒரு பொதியோ சொதியோ திணிக்க போகிறார்கள்.

இதில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்க போகுது?

அதுக்கு தான் சொல்கேம் தமிழ்நாட்டில் இறக்கப்பட்டுள்ளாரா?

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, ஈழப்பிரியன் said:

உதவத் தானே போட்டிபோட்டு வருகிறார்கள்.

ஏதோ ஒரு பொதியோ சொதியோ திணிக்க போகிறார்கள்.

இதில் இந்தியாவின் பங்கு எப்படி இருக்க போகுது?

அதுக்கு தான் சொல்கேம் தமிழ்நாட்டில் இறக்கப்பட்டுள்ளாரா?

சொல்கைம் சம்பந்தப்படும் போதே  தீர்வு எப்படி இருக்கும் என ஊகிக்கலாம்.

5 minutes ago, தமிழ் சிறி said:

நுணாவிலான்…. கஜேந்திரனை, ஐரோப்பாவை விட்டு..
நாடு கடத்த பிளான் போடுற மாதிரி இருக்கு. 😂

உண்மையை உரக்க சொல்லும் படி அண்ணல் காந்தி சொல்லியுள்ளார்.🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

சொல்கைம் சம்பந்தப்படும் போதே  தீர்வு எப்படி இருக்கும் என ஊகிக்கலாம்.

உண்மையை உரக்க சொல்லும் படி அண்ணல் காந்தி சொல்லியுள்ளார்.🤣

எங்கள் விருப்பம் என ஒன்றுமே இங்கு இருக்கப்போவதில்லை. கிடைப்பதை கும்பிட்டுக்கொண்டு வேண்டவேண்டியதுதான். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
35 minutes ago, Kapithan said:

எங்கள் விருப்பம் என ஒன்றுமே இங்கு இருக்கப்போவதில்லை. கிடைப்பதை கும்பிட்டுக்கொண்டு வேண்டவேண்டியதுதான். 

சம்மந்தன் ஐயாவுக்கு கெட்ட கோபம் வரப் போகுது.

  • கருத்துக்கள உறவுகள்
14 minutes ago, ஈழப்பிரியன் said:

சம்மந்தன் ஐயாவுக்கு கெட்ட கோபம் வரப் போகுது.

அவருக்கு காதே கேட்காது. இதில கோபம் வேற..🤣

  • கருத்துக்கள உறவுகள்

கஜேயின் பிரச்சினை வேறு!

புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு அதன் பிரகாரம் ஒரு தேர்தல் நடாத்தப்படுமாயின் கஜேயும் கஜேயின் கட்சியும் ஒரு இடத்திலும் வெல்லமுடியாது. அதாவது இனி தொகுதிவாரி பிரதிநிதித்துவமே இருக்கும். கூச்சம் காரணமாக இதை கஜேயால் நேரடியாகச் சொல்லமுடியாது. அதனால் தமிழ்த் தேசியத்தின் பின் ஒளிந்துகொள்ள வேண்டியுள்ளது. 

யார் என்ன சொன்னாலும் அடுத்த தேர்தலில் கஜே அவுட்!😂

  • கருத்துக்கள உறவுகள்
19 hours ago, ஈழப்பிரியன் said:

சொல்கேம் தமிழ்நாட்டில் இறக்கப்பட்டுள்ளாரா?

அவர் போன நேரம் என்னத்தை சொன்னாரோ, ஸ்ராலின் வைத்தியசாலையில் அனுமதியாம்!

On 28/10/2022 at 12:30, ஈழப்பிரியன் said:

அதன் ஊடக இனப் பிரச்சினைக்கு தீர்வு தருவதாகவும்,அதற்கு ஒரு வருட காலம் தேவை என்றும் தெரிவித்துள்ளார்.

 அவர்களுக்கு நன்றாகத்  தெரியும், ஒருவருடமல்ல எத்தனை வருடமானாலும் தாமே மனமுவந்து ஒரு  தீர்வை   கொடுத்தாலும் த. தே. கூட்டமைப்பு அதை  ஏற்காது என்பது. மஹிந்தா உட்ப்பட பல அமைச்சர்கள் சொல்லிவிட்டார்கள், த. தே. கூட்டமைப்பு தமிழ் மக்களை ஏமாற்றியதேயொழிய போதிய அழுத்தம் தரவில்லை, நாங்கள் தீர்வை வைக்க தயாராயிருந்தோம், அவர்கள் தங்கள் நலன் சார்ந்தே செயற்பட்டார்கள் என்று குற்றம் சுமத்தியிருந்தார்கள். அதை இவர்கள் மறுக்கவில்லையே? 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.