Jump to content

25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

25 கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்ட அமெரிக்காவில் பொறியியல் பட்டம்பெற்ற நபர் கைது!

By DIGITAL DESK 2

17 NOV, 2022 | 02:39 PM
image

 

அமெரிக்காவில் கணினி மென்பொருள் பொறியியல் பட்டம் பெற்ற இளைஞர் ஒருவர், பல திருட்டு மற்றும் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினால் நாரஹேன்பிட்டி கித்துல்வத்தை பகுதியில் வைத்து கைது செய்துள்ளனர்.

25 கொள்ளைகள் மற்றும் 6 திருட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடைய இவர் சுமார் ஒரு கோடி ரூபா பெறுமதியான உடைமைகளை  கொள்ளையடித்துள்ளமையும் சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட நீண்ட விசாரணையின்போது தெரிய வந்துள்ளது.

 

bus-accident-_2_.jpg

சந்தேகநபரிடமிருந்து சுமார் 30 இலட்சம் ரூபா பெறுமதியான பல ஸ்மார்ட் கைத்தொலைபேசிகள் மற்றும் தங்க நகைகளும்  கைப்பற்றப்பட்டுள்ளன.

வீதிகளில் நிறுத்தி வைக்கப்படும் மோட்டார் சைக்கிள்களை திருடி கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் தனியாக செல்லும் பெண்களை குறிவைத்து கைப்பைகளை கொள்ளையடித்து வந்துள்ளதாக பொலிஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

https://www.virakesari.lk/article/140336

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்ன கறுமமாய் கிடக்கு.
அமெரிக்காவில் எஞ்சினியர் பட்டம் பெற்று விட்டு, 
சில்லறை திருட்டு செய்து இருக்கிறான்.
கைத்தொலைபேசி, பெண்களின்  கைப்பைகளை கொள்ளையடிக்கவா இந்தப்  படிப்பு படித்தான். 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, தமிழ் சிறி said:

இதென்ன கறுமமாய் கிடக்கு.
அமெரிக்காவில் எஞ்சினியர் பட்டம் பெற்று விட்டு, 
சில்லறை திருட்டு செய்து இருக்கிறான்.
கைத்தொலைபேசி, பெண்களின்  கைப்பைகளை கொள்ளையடிக்கவா இந்தப்  படிப்பு படித்தான். 

 

எதில் அதிக  வருமானம் கிடைக்க  சந்தர்ப்பமுண்டோ

அதனை தொழிலாக  கொள்ளல் என்ற  தற்போதைய தலைமுறையின்  வளர்சசி??  இது சிறி

இது  தொடரும்???😭

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

 

எதில் அதிக  வருமானம் கிடைக்க  சந்தர்ப்பமுண்டோ

அதனை தொழிலாக  கொள்ளல் என்ற  தற்போதைய தலைமுறையின்  வளர்சசி??  இது சிறி

இது  தொடரும்???😭

விசுகர்... இப்படி சில்லறையாக திருடி காசு சம்பாதித்தால் 
மரியாதை  போய் விடும் என்று அவன் நினைக்கவே  இல்லை.
படித்த படிப்பை கேவலப் படுத்தி விட்டான்.  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

இதென்ன கறுமமாய் கிடக்கு.
அமெரிக்காவில் எஞ்சினியர் பட்டம் பெற்று விட்டு, 
சில்லறை திருட்டு செய்து இருக்கிறான்.
கைத்தொலைபேசி, பெண்களின்  கைப்பைகளை கொள்ளையடிக்கவா இந்தப்  படிப்பு படித்தான். 

உந்தக் கள்ளன், அமெரிக்கன் பெரிய இன்னீயர் படிப்பெல்லாம் படிச்சனான் எண்டு பீலா விட்டிருக்கிறான்.

இதெல்லாம் செக் பணணிப் பார்கவே போகினம்..... படிச்சகள்ளன் எண்டு அடி விழாமல் இருக்கும் எண்ட ஜடியா போல...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

படிப்புக்கும் பழக்கவழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை நிறுவும் இன்னொரு கேஸ்.

Edited by goshan_che
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதுக்கு பேசாமல் ஒரு அரசியல்வாதியாகி மானம் மரியாதை புகழோடு பேரம்பேசியே வழ்ந்திருக்கலாம்.......!  😁

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

படிப்புக்கும் பழக்கவழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை என்பதை நிறுவும் இன்னொரு கேஸ்.

சரியாகச் சொன்னீர்கள் கோசான்.

மனிதர்களின் தரம் கல்வியால் மெருகூட்டப்படவேண்டுமே தவிர, கல்வியை இழிவுபடுத்தக்கூடாது. அதிலும் மேற்கு நாட்டில்US/UKயில் மேற்படிப்பு படித்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாது அல்லவா ? 

கோசானின் நல்லகாலம் இந்தத் திருடன் யாழ் பல்கலையில் கல்வி கற்றிருக்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால் கோசான் மலையேறியிருந்திருக்க வேண்டி வந்திருக்கும். 

😉

 

 

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, Kapithan said:

சரியாகச் சொன்னீர்கள் கோசான்.

மனிதர்களின் தரம் கல்வியால் மெருகூட்டப்படவேண்டுமே தவிர, கல்வியை இழிவுபடுத்தக்கூடாது. அதிலும் மேற்கு நாட்டில்US/UKயில் மேற்படிப்பு படித்துவிட்டு இப்படிச் செய்யக்கூடாது அல்லவா ? 

கோசானின் நல்லகாலம் இந்தத் திருடன் யாழ் பல்கலையில் கல்வி கற்றிருக்கவில்லை. அப்படிக் கற்றிருந்தால் கோசான் மலையேறியிருந்திருக்க வேண்டி வந்திருக்கும் அல்லவா ?

😉

 

 

கற்ப்ஸ் நான் எழுதினதை திரும்பி வாசியுங்கோ.

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை எனத்தான் எழுதி உள்ளேன்.

கோணல் புத்தி உள்ளவர்கள் யாழ், கேம்பிரிஜ், ஸ்டான்போர்ட் எதிலும் இருப்பார்கள்.

பழக்கவழக்கம் என்பது பெற்றோரால் நாம் வளர்க்கபடும், அனுபவ அடிப்படையில் நம்மை நாமே வளர்க்கும் விதத்தில் தங்கியுள்ளது.

பழக்கவழக்கம் என்பது “சுத்துமாத்து செய்தால்தான் புலம்பெயர் நாட்டில் பிழைக்கலாம்”(நியாபகம் இருக்கும் -bounce back loan fraud பற்றிய உரையாடல்)  என்ற அணுகுமுறை தவறு என்று உணரவைக்கும். 

எங்கு படித்தாலும் இதை சிலர் உணரமாட்டார்கள்.

ஆனால் பல்கலை கழக பக்கமே போகாத காமராஜரும், கக்கனும் கை சுத்தமாக இருந்தார்கள்.

ஆகவே,

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

 

43 minutes ago, suvy said:

இதுக்கு பேசாமல் ஒரு அரசியல்வாதியாகி மானம் மரியாதை புகழோடு பேரம்பேசியே வழ்ந்திருக்கலாம்.......!  😁

🤣 பொத்தாம் பொதுவா சொல்லாமல் யாரெண்டு அடிச்சு சொல்லுங்கோ 🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

கற்ப்ஸ் நான் எழுதினதை திரும்பி வாசியுங்கோ.

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை எனத்தான் எழுதி உள்ளேன்.

கோணல் புத்தி உள்ளவர்கள் யாழ், கேம்பிரிஜ், ஸ்டான்போர்ட் எதிலும் இருப்பார்கள்.

பழக்கவழக்கம் என்பது பெற்றோரால் நாம் வளர்க்கபடும், அனுபவ அடிப்படையில் நம்மை நாமே வளர்க்கும் விதத்தில் தங்கியுள்ளது.

பழக்கவழக்கம் என்பது “சுத்துமாத்து செய்தால்தான் புலம்பெயர் நாட்டில் பிழைக்கலாம்”(நியாபகம் இருக்கும் -bounce back loan fraud பற்றிய உரையாடல்)  என்ற அணுகுமுறை தவறு என்று உணரவைக்கும். 

எங்கு படித்தாலும் இதை சிலர் உணரமாட்டார்கள்.

ஆனால் பல்கலை கழக பக்கமே போகாத காமராஜரும், கக்கனும் கை சுத்தமாக இருந்தார்கள்.

ஆகவே,

படிப்புக்கும் பழக்க வழக்கத்துக்கும் ஒரு சம்பந்தமுமில்லை.

 

நீங்கள் கூறியதை ஆமோதித்துள்ளேனே தவிர, முரண்படவில்லையே. 

இதிலும் பல்வேறு அர்த்தங்கள் கண்டுபிடிப்பீர்களோ?

பேசாமல் உங்களுக்கு "~அர்த்தக வித்தகர்"" என்று பட்டமே கொடுக்கலாம். 

🤣

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நஸ்ரல்லாவை சாய்த்த இஸ்ரேல்: நிலை தடுமாறி அமைதியாய் நிற்கும் ஈரான் ஈரான் (Iran) ஆதரவு ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் நஸ்ரல்லா (Nasrallah)படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் (Israel) அறிவித்தும், ஈரான் அமைதி காத்து வருவது அந்நாட்டில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இஸ்ரேலின் அறிவிப்பிற்கு ஹிஸ்புல்லா, லெபனான் தரப்பிலிருந்தும் எவ்வித உறுதிபடுத்தப்பட்ட தகவல்களும் வெளியிடப்படவில்லை. இந்த நிலையில், லெபனானில் இஸ்ரேலின் தாக்குதல்களில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர், இதற்கு எதிராக ஈரான் மற்றும் ஏமன் நாடுகளில் பொதுமக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஈரானின் செயற்பாடு எவ்வாறானெதொரு பின்னணியில், இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிராக ஈரான் அமைதியாக இருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக, இத்தகைய சூழலில் ஈரான் கடுமையான பதிலடிகளை வழங்கும், ஆனால் இப்போது மிதவாதம் காட்டுவதாக உள்ளதாக ஈரானின் செயற்பாடுகள் அமைந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. அத்துடன், இது ஈரானில் உள்ள பழமைவாதிகள் மத்தியில் பாரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளதுடன், எதிர்காலத்தில் இது அரசியல் மாற்றங்களுக்கு காரணமாக இருக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது. இறுதி இலக்கு லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்றிரவு நடத்தப்பட்ட தொடர் வான்வழி தாக்குதலில் ஹிஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஹிஸ்புல்லா அமைப்பின் மொத்தம் 18 பேர் முக்கிய தளபதிகள் இருந்த நிலையில்,17 பேரை இஸ்ரேல் ஏற்கனவே படுகொலை செய்தது. இறுதியாக நஸ்ரல்லா மட்டுமே உயிருடன் இருந்த நிலையில் தற்போது அவரும் படுகொலை செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரேல் இராணுவம் அறிவித்துள்ளது.  https://ibctamil.com/article/death-of-hassan-nasrallah-pressure-on-iran-1727524484#google_vignette
    • இஸ்ரேலின் தாக்குதலில் ஹசன் நஸ்ரல்லா பலி- உறுதி செய்தது ஹெஸ்புல்லா அமைப்பு 28 SEP, 2024 | 07:08 PM ஹெஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் வான்தாக்குதலில் தனது தலைவர் கொல்லப்பட்டதை உறுதி செய்துள்ளது. லெபனான் தலைநகரின் தென்புறநகர் பகுதியில் சியோனிஸ்ட்கள் மேற்கொண்ட துரோகத்தனமான நடவடிக்கையில் ஹசன் நஸ்ரல்லா கொல்லப்பட்டார் என ஹெஸ்புல்லா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தொடர்ந்தும் போராடப்போவதாக உறுதியளித்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பு காசாவிற்கும் பாலஸ்தீனத்திற்கும் தொடர்ந்தும் ஆதரவளிக்கப்போவதாக தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/195018
    • அனுரவின்... தேசிய மக்கள் சக்தி கட்சி, நாளை 29.09.2024 அன்று புலம் பெயர் தமிழர்களுடன் இணையவழி (Zoom meeting)  சந்திப்பு ஒன்றுக்கு ஏற்பாடு செய்துள்ளதாக அறிய முடிகின்றது.  கேள்வி பதில் அரங்கு. பங்கு கொள்வோர்... # இராமலிங்கம் சந்திர சேகர். (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # சிவா சிவப்பிரகாசம். (மலையக தேசியக்குழு உறுப்பினர்) # எம்.ஜே.எம். பைசல்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) # ஜனகா செல்வராஜ்.  (நிறைவேற்றுக் குழு உறுப்பினர்) வழிப்படுத்தல்: எம். பெளசர். காலை 10:00 மணி - கனடா. மதியம் 2:00 மணி ஐரோப்பா. மதியம் 3:00 இங்கிலாந்து. மாலை 7:30 இலங்கை நேரப்படி இந்த சந்திப்பு நிகழும். Meeting ID : 831 9644 1969 Pass Code: 660804 Contact - Fauzer 0776613739 (Mob.) 0044 7817262980 (WhatsApp)
    • இது நான் இருக்கும் இடத்தில் இருந்து 150 மைல் தொலைவில்.
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 1 reply
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 3 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.