Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ராஜீவ் கொலை வழக்கு: 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ராஜீவ் கொலை வழக்கு: 6 பேர் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சீராய்வு மனு

 

நளினி

பட மூலாதாரம்,GETTY IMAGES

29 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நளினி உள்ளிட்ட 6 பேர் விடுவிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

 

நளினி உள்ளிட்ட 6 பேரை விடுதலை செய்து இந்திய உச்ச நீதிமன்றம் கடந்த 11-ஆம் தேதி தீர்ப்பளித்திருந்தது. 

 

 

இதன்படி, நளினி, ஜெயக்குமார், ஆர்.பி.ரவிச்சந்திரன், ராபர்ட் பயாஸ், சுதேந்திரராஜா, ஸ்ரீஹரன் ஆகியோர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டனர்.

இந்த விவகாரத்தில் ஏற்கெனவே கடந்த மே 18ஆம் தேதி மற்றொரு கைதி பேரறிவாளனை விடுதலை செய்வதற்கு அளித்த தீர்ப்பின்படி, மேலும் ஆறு பேரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில் இந்தத் தீர்ப்பை எதிர்த்து மறு சீராய்வு மனுவை மத்திய அரசு தாக்கல் செய்துள்ளது. தங்கள் தரப்பை கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cmm67jd2722o

  • கருத்துக்கள உறவுகள்

டேய் உங்களுக்கு மனச்சாட்சியே இல்லையாடா?

  • கருத்துக்கள உறவுகள்

மூத்திரத்தை குடித்து குடித்து மனச்சாட்சியே இந்த ......களை விட்டு ஓடி விட்டது 😡

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, ஏராளன் said:

மத்திய அரசு சார்பில் சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தமிழர்களென்றால் அழியவேண்டும் என்பதே கிந்தியாவின் திட்டம். அதனை அனைத்துவிடயங்களிலும் எந்தப் பிசகுமின்றிக் கடைப்பிடித்துவருகிறது. கிந்தியா இல்லாமற்போனாற்றான் ஈழத்தமிழருக்கு விடிவுவரும்போல் உள்ளது.  

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களை நோக முதல் தமிழ் நாட்டில் இருந்து நளினியின் செவ்விக்கு வந்த பின்னூட்டங்களில் சில.................

ஆமா இவ அப்படியே நாட்டுக்கு சுதந்திரம் வாங்கி தர ஜெயிலுக்கு போனா... அதனால் பிள்ளைய பாக்க முடியல... கொலைகார நாய்...

கொலையாளிகளின் விடுதலையை வரவேற்பது கொலையை நியாயப்படுத்தும் செயல்.
கேவலம். தூ 😡

இந்திய மக்களால் தேர்வுசெய்யப்பட்ட இந்திய பிரதமர் ராஜீவ் காந்தி பதவியில் இருக்கும் போது மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தி கொலை செய்த தீவிரவாதிகளை தூக்கில் போட வேண்டும் அவர்களை விடுதலை செய்யக்கூடாது கொலையாளிகள் டீவி பத்திரிகை போன்ற சமூகவலைதளங்களில் தியாகிகள் போல் பேட்டி கொடுப்பதை எழுதுவதை தடை செய்ய வேண்டும் இதுவே அந்த தீவிரவாத தாக்குதலில் இறந்த ஆன்மாக்களுக்கு செய்யும் நீதியாகும் கொலையாளிகளுக்கு பணெளதவி செய்யும் தீவிரவாதிகளையும் தண்டிக்க வேண்டும்

இங்கு நம் தேச பிரதமர் ஒருவர் கொல்லப்பட்டார் என்பதே ஊடகத்திற்கு தெரிவிக்க வேண்டிய நிலையில் உள்ளோம்

இந்த கொலைகார கூட்டத்தை விடுதலை செய்தது அதிர்ச்சி அளிக்கிறது

ஊடக நண்பர்களே அவர்களைக் கொண்டு இலங்கையில் விட்டு விட்டு காலை கழுவி விட்டு தமிழ்நாட்டுக்கு வாருங்கள்

ஆமா ஒரு நாட்டு பிரதமரையும் அவரை சுற்றியுள்ள பலரையும் கொன்ற குளைக்கார கூட்டத்தை சும்மா விடுதலை செய்யும் இந்திய வாழ்த்துக்கள் ஆனால் ஒரு கைக் குண்டு வைத்துருந்த குற்றவாளியை தூக்கிளிட்டு கொன்றதும் அதெ இந்திய தான் வாழ்க இந்திய முஸ்லீம்களுக்கு ஒரு சட்டம் மற்றவர்களுக்கு ஒரு சட்டம்
தியாக தலைவி அம்மையார் நளினிக்கு ட்ம்க் சார்பில் ம்ப் பதவியோ அல்லது கவர்னர் பதவியோ கொடுத்து கௌரவிக்க வேண்டுகிறேன்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் பிரதமர் என்பது கூட தெரியல போல!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட 6 பேரின் விடுதலைக்கு எதிராக இந்திய அரசு மறு ஆய்வு மனு தாக்கல்

By DIGITAL DESK 2

18 NOV, 2022 | 10:55 AM
image

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்டோரை விடுதலை செய்ததற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

ராஜீவ் காந்தி கொலை குற்றவாளியான பேரறிவாளன் சிறை நன்னடத்தை, சிறையில் இருந்தபடி கல்வி கற்றது உள்ளிட்ட பல்வேறு காரணங்களை காட்டியும், ஆளுநர் அவரது விடுதலை குறித்த தமிழக அரசின் அமைச்சரவை முடிவின் மீது எந்த முடிவும் எடுக்காமல் காலதாமதம் செய்ததையும் சுட்டிக்காட்டியும், உச்ச நீதிமன்றத்தால் அதன் சிறப்பு அதிகாரத்தை பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

இதை அடிப்படையாகக் கொண்டு சாந்தன், முருகன், நளினி, ரோபர்ட் பையாஸ், ரவிச்சந்திரன் மற்றும் ஜெயக்குமார் உள்ளிட்ட சிறையில் இருந்த மற்ற குற்றவாளிகள் 6 பேரும் கடந்த 12ஆம் திகதி உச்ச நீதிமன்றத்தால் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

rajiv-gandhi-1235.jpg

இதற்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் வரவேற்பு தெரிவித்திருந்தாலும் காங்கிரஸ் கட்சி கடுமையான எதிர்ப்பினை பதிவு செய்திருந்தது.

சிறையிலிருந்து வெளி வந்ததற்கு பிறகு நளினி செய்தியாளர்களை சந்தித்தது உள்ளிட்டவையும் விமர்சிக்கப்பட்ட நிலையில், தற்பொழுது உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு சார்பாக சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

தங்கள் தரப்பு வாதங்களை முழுமையாக கேட்காமல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டிருப்பதாகவும், எனவே முந்தைய தீர்ப்பை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என மனுவின் இந்திய அரசு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 12 ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு சொலிஸ்ட்டர் ஜெனரல், கூடுதல் சொலிஸ்டர் ஜெனரல் உள்ளிட்ட மூத்த வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராகாமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/140416

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.