Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குளவிகொட்டி 35 விமானப்படையினர் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

குளவிகொட்டி 35 விமானப்படையினர் காயம்

சிகிரியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டவர்கள் மீது குளவிகள் கொட்டியதில் 86 பேர் காயமடைந்து சிகிரியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குளவி கொட்டியவர்களில் 35 விமானப் படையினரும் அடங்குவர்.

- சங்கதி

சிங்கள காடையருக்கு குளவி கூட எதிரி போல

சிங்கள காடையருக்கு குளவி கூட எதிரி போல

அதையும் துன்புற்றுத்த வெளிக்கிட்டு இருப்பினம்... சும்மா போன வனை எந்த பிராணியும் தொல்லை கொடுப்பது இல்லை.. அதை துன்புறுத்தும் போதுதான் தற்பாதுகாப்புக்காக தாக்குகிறது...

அட இப்ப குளவியும் குத்த வெளிகிட்டுதா இது நம்ம சின்னாவின்ட படையணி மாதிரி இருக்கு......... :D

கொட்டுப்பட்டே பழகிப்போனவர்களுக்கு

இதெல்லாம் ...

Edited by அ

  • கருத்துக்கள உறவுகள்

குளவிகட்கு எதிராக சண்டை பிடிப்பதற்காக எந்த ரக "மிக் " விமானங்களை வாங்கலாம் என மகிந்த சகோதரர்கள் தீவிர ஆலோசனை நடத்தியுள்ளார்கள்.குத்திய குளவிகளை தேடி சரத் பொன்சேகா தலைமையிலான குழு ஒன்று சிகிரியாவை நோக்கி சென்று கொண்டிருக்கிறார்கள்.றம்பு மாமாவும் கூட சென்றுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பேசாமால் நாங்கள் போராளிகளை சண்டைக்கு அனுப்புறதை விட்டுப்போட்டு ஒரு 10 - 15 தொன் குளவிகளை உற்பத்திசெய்து உவங்களை கடிக்கவிட்டால் யாழ்ப்பாணத்தை விட்டு ஓடிவிடுவாங்கள் பயத்திலை.. :D:):D:)

புலிக் குளவிகள். சரியாக விமானப் படையினரைப்பார்த்தே கொட்டியிருக்கின்றன.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா அனுப்பிய ராடர்களில் பிழை இருக்கிறது , வேலை செய்ய வில்லை, இதனால் தான் குளவிகள் வருவது எங்களுக்கு தெரியவில்லை என்று கெகலிய ரம்புக்கெல இந்தியா மேல் குற்றம் சாட்டியுள்ளார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சிகிரியாவில் குளவிகொட்டி 250 பேர் பாதிப்பு

சிகிரியா குன்றை பார்வையிடச் சென்றவர்களை கரும் குளவி கொட்டியதில் 250 க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில் தம்புள்ள கிராமிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குளவிகளின் தாக்கம் காரணமாக காயமடைந்தவர்களை வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளில் பொலிஸார், விமானப்படையினருடன் இணைந்து அப்பகுதி மக்களும் ஈடுபட்டனர்.

குளவி கொட்டியவர்களைக் காப்பாற்றச் சென்ற 38 விமானப்படையினரும் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் காயமடைந்தவர்களில் 18 குழந்தைகளும் அடங்கும்.

மலை உச்சியைச் சுற்றியுள்ள பிரதேசத்தில் ஏற்பட்ட கடும் காற்றின் காரணமாக குளவிகள் கலைந்ததையடுத்தே இந்த அனர்த்தம் ஏற்பட்டுள்ளது.

-தினக்குரல்

புலிகள் இரகசியமாக தமது குளவிப் படையை சீகிரியாவை நோக்கி நகர்த்தியுள்ளனர். இதனை முறியடிக்க இந்தியாவிடமிருந்து ஆயுதம் பெறப்படவுள்ளது. ஆயுதப் பேரத்திற்காக 'கெட்டபய' கொதப்பயா தனது குடும்பம் சகிதம் இந்தியா சென்றுள்ளார். இவரது பயணத்தேவைக்காக கொழும்பில் இரண்டு மூன்று வர்த்தகர்கள் கப்பம் கேட்டு கடத்தப்படலாம் என மனோ கணேசன,் சந்திரிக்கா அம்மையிடம் தெரிவித்துள்ளார் என என் செய்திகள் தெரிவிக்கின்றன.

ஜானா

  • கருத்துக்கள உறவுகள்

சிகிரியா குன்றில் குளவிகள் மீண்டும் அட்டகாசம் 18 குழந்தைகள், 36 படையினர் உட்பட 250 பேர் காயம்

[29 - August - 2007]

சிகிரியா குன்றின் குளவிகள் கலைந்து சுற்றுலாப் பயணிகளை கொட்டியதால் 250க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

நேற்று முன்தினம் திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் குளவிகள் கலைந்து மக்களைக் கொட்ட ஆரம்பித்த போது, 18 குழந்தைகள் உட்பட 250 பேர் காயமடைந்த நிலையில் கிம்பிஸ்ஸ, தம்புள்ள வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் 6 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குளவிகள் கலைந்து மக்களைத் தாக்கும் போது ஏற்பட்ட களேபரத்தின் போது,அங்கு உதவிக்கு வந்த விமானப்படையினர் 36 பேரும் காயமடைந்தனர்.

குளவிகள் அடிக்கடி சுற்றுலாப் பயணிகளை கொட்டுவதால் சிகிரியாவுக்குள் பிரவேசிப்பது தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது. இம்மாதத்தினுள் சிகிரியா குன்றில் 4 ஆவது தடவையாக குளவிகள் இவ்வாறு பயணிகளை கொட்டியுள்ளது. இம்மாதத்தில் இதுவரை குளவிகொட்டி 400 இற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது பற்றி சிகிரிய கலாசார முக்கோண அதிகாரிகளிடம் வினவிய போது;

தமது அறிவுறுத்தல்களைப் பின்பற்றாமல், பேரிரைச்சலுடன் குரலெழுப்பியவாறு பார்வையாளர்கள் செல்வதே இந்நிலைக்குக் காரணமெனத் தெரிவித்தனர். அத்துடன்,தற்போது இப்பிரதேசத்தில் வீசும் பலத்த காற்றும் மற்றுமொரு காரணமெனவும் தெரிவித்தனர்.

சிகிரியா பிரதேசத்தில் குளவிகள் அடிக்கடி கொட்டி பலர் பாதிக்கப்படும்போதும், சிகிரியா நகரில் ஓர் அவசர சிகிச்சைப் பிரிவு இதுகாலவரையில் அமைக்கப்படாமையை இட்டும் பொதுமக்கள் கவலை தெரிவித்தனர்

தினக்குரல்

கொட்டியது குளவியா அல்லது கிழவியா? :icon_idea:

உவேள், வேறு ஏதும் தில்லு முள்ளு செய்யப்போய் கதை கந்தலாகி, கடைசியில் மானம் போகாது இருக்க செய்தியை திரித்தும் சொல்லி இருக்கலாம்..

  • கருத்துக்கள உறவுகள்

குளவி வளா்ப்பை மேம்படுத்தினால் நல்லம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.