Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்! - செல்வம் அடைக்கலநாதன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பேச்சுக்களுக்கு இந்திய அனுசரணை, உலக நாடுகளின் மேற்பார்வை அவசியம்!

R-6.jpg

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில், மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ள இனப் பிரச்சினைக்கான பேச்சுவார்த்தை, இந்தியாவின் அனுசரணையிலும், உலக நாடுகளின் மேற்பார்வையிலும் இடம்பெற வேண்டும் என, வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.

மன்னாரில் உள்ள அலுவலகத்தில், இடம்பெற்ற ஊடக சந்திப்பில், இவ்வாறு குறிப்பிட்டார்.

இப்பொழுது பரபரப்பாக பேசப்படும் விடயம் ஜனாதிபதியின் இந்த பேச்சுவார்த்தை முயற்சி சம்பந்தமாகவே. எங்களைப் பொறுத்தமட்டில் 31ம் தேதி வரை கால அவகாசம் கொடுத்திருந்தோம். அதில் ராணுவம் ஏனைய திணைக்களங்கள் பிடித்திருக்கின்ற நிலங்கள் பேச்சுவார்த்தை ஆரம்பமாகும் நாளிலிருந்து நிலங்கள் அபகரிக்கும் செயல்பாடுகளை நிறுத்த வேண்டும் என்றும் ஒரு தீர்மானமாக அதைச் சொல்லி இருந்தோம்.

அந்த அடிப்படையில் ஜனாதிபதி இந்த 31ஆம் தேதி வரையில் கால அவகாசம் கேட்டிருந்தார். அந்த வகையில் இராணுவம் எந்தெந்த இடங்களை விடப் போகிறது என்ற கேள்வி இருக்கிறது. பேச்சுவார்த்தையின் போது நாங்களும் இந்த ராணுவம் கைப்பற்றிய சில இடங்களை வரைமுறையோடு எத்தனை ஏக்கர் எங்கெங்கு பிடிக்கப்பட்டு இருக்கிறது என்பதை சுட்டிக்காட்ட இருக்கிறோம்.

அதேபோல் மிக மோசமாக வயல் காணிகளையும் மக்களின் வீட்டுக்கு காணிகளையும் எல்லைகளை போடுகின்ற ஒரு துர்பாக்கிய நிலை காணப்படுகிறது.

பேச்சுவார்த்தை என்பது அவசரப்பட்டு செல்வதில் எனக்கு உடன்பாடு இல்லை .பேச்சுவார்த்தை என்பது அனைவரையும் ஒன்று திரட்டுகின்ற அல்லது ஒற்றுமை படுத்துகின்ற செயற்பாடாக அமைய வேண்டும். ஆனால் இந்த 31 ஆம் திகதி வரை எந்த ஒரு திருப்ப முனையும் இல்லாத நிலை ஜனாதிபதி அவர்கள் அதில் எதிர்வரும் 10, 13 வரை திகதிகளை நிர்ணயம் செய்திருக்கின்றார்.

இது எவ்வாறு சாத்தியமாகும் என்பது தெரியவில்லை. 31ம் தேதிக்கு முன்பு நாங்கள் வைத்த கோரிக்கைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்பதில் நாங்கள் ஆணித்தரமாக இருக்கின்றோம்.

அரசியல் கைதிகள் 5 பேர் மட்டுமே விடுதலை செய்ய முடியும் என்று கூறுவது நல்லபடியாக இருந்தாலும் அனைத்து அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும். குறிப்பாக தீர்ப்பு சொல்லப்பட்டு வெளியில் வந்தவர்களுக்கு மீண்டும் வழக்கு போடப்படும் ஒரு துர்பாக்கிய நிலை இருக்கிறது. ஜனாதிபதி அவர்கள் இதை கவனம் எடுத்து அவர்களுக்கு பொது மன்னிப்பு வழங்கி விடுதலை செய்வதற்கு ஜனாதிபதியால் முடியும்.

காணாமல் போனவர்களுடைய விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் விசாரிக்கப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பதுதான் எங்களுடைய கோரிக்கையாக இருக்கிறது.

ஆகவே இந்த விடயத்தில் அரசாங்கம் மெத்தனப் போக்கையே காட்டுகிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு முந்தைய நிதி அமைச்சர் ஒரு லட்சம் என்றும் இந்த நிதி அமைச்சர் 2 லட்சம் தருவதாக கூறுகிறார்கள்.

எங்களுடைய உறவுகளின் பெறுமதி என்பது வெறும் 2 லட்சம் தானா ? அவை நியாயமாக விசாரிக்கப்பட வேண்டும். அவர்களுக்கு என்ன நடந்தது அவர்கள் எங்கு இருக்கிறார்கள் என்பது பற்றி அரசாங்கம் உறவுகளுக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு பிரச்சனைகள் இருக்கையில் நாங்கள் உடனடியாக சென்று இந்த பேச்சுவார்த்தை கலந்துரையாடலில் கலந்து கொண்டு இதனை மலிவு படுத்துகின்ற செயற்பாட்டினை செய்யக்கூடாது என்பது என்னுடைய கருத்து.

மேலும் எங்களுடைய போராளிகள் இயக்கங்கள் அனைத்தும் உருவாகியது இந்த நிலத்தை காப்பாற்றுவதற்காக. அதற்காக பல போராளிகள் பல மக்கள் உயிர் தியாகம் செய்திருக்கின்றார்கள். ஆகவே நிலங்கள் விடுவிக்கப் படாத வரைக்கும் பேச்சுவார்த்தை என்பது அர்த்தமற்று போகும். அவ்வாறு பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்ட உடன் பிடிக்கப்பட்ட காணிகள் விடுவிக்கப்பட வேண்டும் ஆனால் இது எப்படி சாத்தியம் எவ்வாறு அமையப் போகிறது என்பது தெரியாது.

ஆனால் இப்போது இருக்கின்ற சூழ்நிலையில் தமிழ் தரப்பு ஆகிய நாங்கள் சாதிக்க முடியும். பேச்சுவார்த்தை விடயத்தில் நாங்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும். எங்களுடைய செயற்பாடுகளின் படி பேச்சுவார்த்தை என்பது இந்தியாவினுடைய அனுசரணையோடு ஏனைய நாடுகளின் மேற்பார்வையில் நடைபெற வேண்டும் என்பதும் எங்களுடைய கோரிக்கையாக நாங்கள் முன் வைத்திருக்கிறோம்.

அந்த வகையில் சில பேர் கேட்கிறார்கள் பேச்சு வார்த்தை ஆரம்பத்தில் ஏன் இதைச் சொல்லவில்லை என்று? ஆனால் நான் அதை சொல்லாத அதற்கான காரணம் ஜனாதிபதியின் நிகழ்ச்சித் திட்டம் என்ன நடக்கப் என்பது எங்களுக்கு தெரியவில்லை.

ஆனால் இப்பொழுது நாங்கள் ஒரு கால வரையறையை கொடுத்திருக்கின்றோம். அதன் அடிப்படையில் அவை நடைபெற வேண்டும் ஜனாதிபதி நல்ல நோக்கத்திற்காக இதனை கையில் எடுத்துள்ளாரா? அல்லது பொருளாதாரப் பிரச்சனைகளை மேம்படுத்துவதற்காக செய்கிறாரா என்றொரு கேள்வி இருக்கிறது.

ஆனாலும் இந்த சந்தர்ப்பங்களில் வாய்ப்பை நாங்கள் நழுவ விட்டு விடக்கூடாது. ஆகவே தமிழர் தரப்பு எல்லோருமாக சேர்ந்து முடிவுகளை எடுக்கும் பட்சத்தில் எங்களுடைய நிபந்தனைகளையும் எங்களுடைய கோரிக்கைகளையும் சரியான முறையில் நடைமுறைப்படுத்துவதற்கான வாய்ப்பாக அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.

 

https://akkinikkunchu.com/?p=233335

 

  • கருத்துக்கள உறவுகள்

செல்வமும் விக்கியும்இந்தியாவை இந்தப் பேச்சு வார்ததைக்குள் இழுக்கப்படாத பாடு படுகினம். இந்தியா 13 மேல் போகாது. சிங்கம் கொடுக்க வெளிக்கிட்டாலும் இந்தியாவிடாது..இந்தியா தனது மாநிலங்களுக்கு உள்ள அதிகாரமற்ற தீர்வைத்தான் விரும்பும் சர்வதேச மத்தியஸ்தையே தமிழ்க்கட்சிகள் வலியுறுத்த வேண்டும். இதற்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் உள்ள கட்சிகள் விடாது.

  • கருத்துக்கள உறவுகள்

இப்படிக் குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கும் இந்தியாவை மத்தியஸ்தம் வகிக்க வேண்டும் என்று சில தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எம்பிமார் விடாப்பிடியாக நிற்கிறார்கள் என்றால் அவர்கள் யார் என்பதை தமிழ்மக்கள் அறிந்து கொள்ள வேண்டும்.இந்தியா தவிர்ந்த மேற்குலக நாடுகளின் மத்தியஸ்த்தில் பேச்சு வார்த்தை நடைபெற்றால் அது  நீடித்த நிலையான தீர்வுக்கு ஒரு வேளை வழிவகுக்கும் ஆனால் இந்தியாவின் மத்தியஸதம் இருந்தால் இப்போது தமிழ்மக்கள் இருக்கும் நிலையை விட மோசமானதாக இருக்கும். அவர்களின் மத்தியஸத்தில் 1987 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட இலங்கை இந்தி ஒப்பந்தத்துக்கு என்ன நடந்தது. அதை நிறைவேற்றுவதற்கு இந்தியா எந்த அளவு முனைப்புக்காட்டியது என்பது தமிழ்மக்கள் அறிந்த விடயம். இது தெரிந்திருந்தும் இந்தியாவை இந்தப் பேச்சுவார்தைகளுக்குள் கொண்டு வந்து செருகிவிட எத்தனைக்கும் தமிழ்அரசியல்வாதிகளும் பத்தி எழுத்தாளர்களும் இந்தியாவின் ஏஜென்டுகளே,

  • கருத்துக்கள உறவுகள்

இவை ஹிந்திய சார்பு முடிவுகளை எடுக்க வெளிக்கிட்டுத்தான்.. தமிழீழக் கோரிக்கையையே கைவிட்டவை. அப்புறம்.. ஒரு கோரிக்கையும் இல்லாமல்.. தமிழ் மக்களின் உரிமைக்காகப் போராடியவர்களை அழிப்பதை கடமையாகச் செய்தார்கள்.

இப்ப மீண்டும்.. ஹிந்தியா.

ஹிந்தியா.. அமெரிக்கா.. மேற்குலகம்.. ஜப்பான்.. சொல்கைம்.. இவை எல்லாம் தமிழர் தரப்பு எனியும் நம்பக் கூடிய சக்திகள் அல்ல. 

தமிழர்களுக்கு உள்ள ஒரே வழிமுறை.. போர்க்குற்ற விசாரணை.. இனப்படுகொலை விசாரணை.. ஐநா மத்தியஸ்தத்தில்.. தமிழர்களின் பிரிந்து செல்வதற்கான விருப்புக் கேட்கும் தேர்தல். இதில் ஹிந்தியாவுக்கு விருப்பமில்லை.. அமெரிக்கனுக்கு விருப்பமில்லை.. சொல்கைமுக்கு விருப்பமில்லை.. என்பது எல்லாம் ஒரு பொருட்டே அல்ல. ஏனெனில்.. சிங்களவனிடம் காலாகாலமாக அடிமைப்பட்டு அடிவாங்கினது.. வாங்கிறது தமிழர்கள். அவர்கள் தான் தங்களை தலைவிதியை தீர்மானிக்க வேண்டியவர்கள். அடுத்தவர்கள் அல்ல.

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியா என்கிற சகுனியை அழைக்காவிட்டாலும் அது சும்மா இராது. பூகோள பிராந்திய நலன் என்று பூந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். சர்வதேசமும் இந்தியாவை மீறி ஒன்றும் செய்யாது, அது அவர்களை கட்டுப்படுத்தும். இந்த பேச்சுவாத்தை என்ற செய்தி வெளிவந்தவுடன் எத்தனை மனிதர்கள் இரகசியப்பயணம் வந்து சென்றிருக்கிறார்கள் இந்தியாவிலிருந்து. இந்தியா இதிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் இலங்கையைப்போல் ஒரு சூழ்நிலை இந்தியாவுக்கு வரவேண்டும், இல்லையேல் அதை அணைப்பதுபோல் அணைத்து எங்களின் கட்டுப்பாட்டுக்குள் முடக்கவேண்டும். முடியுமா? அப்படியென்றால் அது யாரால்?

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, satan said:

இந்தியா என்கிற சகுனியை அழைக்காவிட்டாலும் அது சும்மா இராது. பூகோள பிராந்திய நலன் என்று பூந்து குடைச்சல் கொடுத்துக் கொண்டே இருக்கும். சர்வதேசமும் இந்தியாவை மீறி ஒன்றும் செய்யாது, அது அவர்களை கட்டுப்படுத்தும். இந்த பேச்சுவாத்தை என்ற செய்தி வெளிவந்தவுடன் எத்தனை மனிதர்கள் இரகசியப்பயணம் வந்து சென்றிருக்கிறார்கள் இந்தியாவிலிருந்து. இந்தியா இதிலிருந்து விலகி இருக்க வேண்டுமென்றால் இலங்கையைப்போல் ஒரு சூழ்நிலை இந்தியாவுக்கு வரவேண்டும், இல்லையேல் அதை அணைப்பதுபோல் அணைத்து எங்களின் கட்டுப்பாட்டுக்குள் முடக்கவேண்டும். முடியுமா? அப்படியென்றால் அது யாரால்?

யதார்தமான கருத்து.

எமது பிரச்சனையில் இந்தியாவை ஓரம் கட்டி நடக்கலாம் என நினைப்பது பானையும், அரிசி, சக்கரை இருந்தால் போதும் நெருப்பில்லாமல் பொங்கலாம் என நினைப்பதை போல.

எப்படியோ இந்தியா என்ற காலை சுத்திய பாம்பு, தமிழர், சிங்களவர், முஸ்லீம் மூவரும் சேர்ந்து வேண்டாம் என சொன்னாலும் மூக்கை நுழைத்தே ஆகும்.

ஆனால் இதை பலன்ஸ் பண்ண மேற்கை இழுக்கலாம்.

இப்போ சொல்கையிம் மேற்கின் முகவர் அல்ல. இந்தியாவின் முகவர் என நினைக்கிறேன். அதுதான் எவரும் வேண்டாம் என சொல்லி, இந்தியாவுடன் மட்டும் இதை முடிக்க பார்கிறார்.

சொல்கையும், செல்வம், விக்கி எல்லாரும் இந்தியாவுடன் இதை மட்டு படுத்த முயல்வதாகவே தெரிகிறது.

மேற்கும் வேண்டும் என யார் கேட்க போகிறார்கள்? சம்+சும்? கஜேஸ்?

  • கருத்துக்கள உறவுகள்
20 minutes ago, goshan_che said:

சொல்கையிம் மேற்கின் முகவர் அல்ல. இந்தியாவின் முகவர் என நினைக்கிறேன்.

நூறு வீதம் சாத்தியமுண்டு!

  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, goshan_che said:

மேற்கும் வேண்டும் என யார் கேட்க போகிறார்கள்? சம்+சும்? கஜேஸ்?

அவர்கள் ஏன் கேட்க வேண்டும் ?
தமிழர்களை அழிப்பதற்கா மேற்குலக நாடுகள் தான் சிங்களவர்களை பயன்படுத்துவதாக சொன்னவர் satan. தமிழர்களை அழிப்பதற்கான மேற்குலகநாடுகளின் ஒரு கருவி மட்டுமே  சிங்கலவர்கள் என்றும் சொன்னவர். இப்படியான கருத்து கொண்டவர்கள் யாழ்களத்தில் இருக்கிறார்கள் கல்யாணி அக்காவும்.   இப்படியான தீய மேற்குலக நாடுகள் பேச்சுவார்த்தையில் இடம்பெற வேண்டும் என்று சம்பந்தன், சுமந்திரன் கஜேந்திரகுமார் ஏப்படி கேட்பார்கள்? ஆகவே கேட்க மாட்டார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, விளங்க நினைப்பவன் said:

தமிழர்களை அழிப்பதற்கா மேற்குலக நாடுகள் தான் சிங்களவர்களை பயன்படுத்துவதாக சொன்னவர் satan. தமிழர்களை அழிப்பதற்கான மேற்குலகநாடுகளின் ஒரு கருவி மட்டுமே  சிங்கலவர்கள் என்றும் சொன்னவர்.

தமிழருக்கு ஒரு தீர்வை கொடுப்பதற்கு புலிகள் தடையாக இருக்கிறார்கள் அவர்களை அழித்தபின் தமிழருக்கான தீர்வை வைப்போம் என்றே புலிகளை அழித்தார்கள். ஆகவே அழித்தவர்களே தமிழ் மக்களின்  தீர்வுக்கு, புலிகளின் அழிவுக்கு பொறுப்பெடுத்து தீர்வை வைக்க வேண்டியது, நான் நீ என்று போட்டி போட்டு அழித்தவர்கள் யாவரினதும் பொறுப்பு.

தமிழரை அழிப்பதற்கு சர்வதேசத்தை அழைத்தவர்கள் தீர்வுக்கு அவர்கள் வரவேண்டாமாம். ஏன் அவர்கள் கேள்வி கேட்கவில்லை? ஓடோடி உதவியவர்கள் தீர்வை வைப்பதற்கு தள்ளி நிற்பதன் நோக்கம் என்ன?

  • கருத்துக்கள உறவுகள்
On 26/12/2022 at 21:34, nedukkalapoovan said:

ஹிந்தியா.. அமெரிக்கா.. மேற்குலகம்.. ஜப்பான்.. சொல்கைம்.. இவை எல்லாம் தமிழர் தரப்பு எனியும் நம்பக் கூடிய சக்திகள் அல்ல.

அப்படியானால் யாரை நம்பலாம்?  செவ்வாய்? புதன்? வெள்ளி? சனி? வியாழன்? நெப்டியூன்? யூரெனெஸ்? அல்லது சூரிய குடும்பத்தை தவிர்த்து வேறு யூனிவேர்ஸ்?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.