Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு ஆணை வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு ஆணை வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கு மக்கள் எதிர்வரும் தேர்தலில் எங்களுக்கு ஆணை வழங்க வேண்டும் – கஜேந்திரகுமார்

வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும் என அக்கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.

சமகாலநிலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில், அரசாங்கம் எந்தவொரு தேர்தலையும் எதிர்கொள்ள விரும்பாது. தேர்தல் எதையும் வைக்காமல் இருந்தால் சர்வதேசம் தவறாக கருதும் என்ற அடிப்படையில் உள்ளூராட்சி தேர்தலை அறிவித்து பின்னர் வழக்குகளை தாக்கல் செய்து தேர்தலை இழுத்தடிக்க முற்படலாம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியில் இருந்து வெளிவருவதாக இருந்தால் நிலையான அரசாங்கம் அமையவேண்டுமென சர்வதேச நிதி நிறுவனங்கள் விரும்புகின்றன.

நாடாளுமன்ற தேர்தலை நடத்தாமல் உள்ளூராட்சி தேர்தலை நடாத்துவது நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ் மக்கள் இதனை உள்ளூராட்சி தேர்தலாக கருதாமல் ஆணை வழங்கும் தேர்தலாக கருத வேண்டும்.

ஒற்றையாட்சிக்குள் ஏக்கியராஜ்ஜியவை ஏற்றவர்கள் 13ஆம் திருத்ததை ஏற்று இந்திய பிரதமருக்கு கடிதம் எழுதினவர்கள் வாக்குபெறுவதற்காக தற்போது தாயகம் ,தேசியம்,சுயநிர்ணயம் என்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள் போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் சைக்கிள் சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்” என்றார்.

https://athavannews.com/2023/1318805

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நிச்சயம் வழங்குவார்கள், ஆனால் அது ஆணையா அல்லது பாடையா என்பது உங்கள் கைகளில்👆

  • கருத்துக்கள உறவுகள்

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் இருந்து இற்றை வரை மக்களுக்கு செய்த சேவைகளை மக்களுக்கு சொல்வதை விட்டு  ஏனைய கட்சிகள் அரசாங்கத்தின் கூலிகள் யார் என்று மக்களுக்கு சொல்லத்தேவை இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் எனக்கு  ஆணையிட்டால் அது நடந்துவிட்டால் இந்த தமிழர்கள் வேதனைப்படமாட்டார். 

முன்பு பாட்டா (ஜீ. ஜீ) வந்தார் பின்பு அப்பா குமாரும் வந்தார் இந்த தமிழர்களை  திருத்திட வாக்கு கேட்டார்.  

இவர் திருந்தவில்லை வாக்கு போடவில்லை. அதனால் இன்று கண்ணீர்க்கடலிலே வீழ்ந்துவிட்டார்.

இனியாவது இவர் ஆணையிட்டால் அதை நடத்திவைத்தால்  இனி கண்ணீர்கடலிலே விழமாட்டார்.  

 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, nunavilan said:

கடந்த உள்ளூராட்சி தேர்தலில் இருந்து இற்றை வரை மக்களுக்கு செய்த சேவைகளை மக்களுக்கு சொல்வதை விட்டு

இருந்தால் சொல்லமாட்டாரா?

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, தமிழ் சிறி said:

தமிழ் தேசிய கூட்டமைப்பு விக்னேஸ்வரன் அணி ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் கூலிகள் போலித் தமிழ் தேசிய வாதிகள் ஆகியோரை இனங்கண்டு

அது மக்களது வேலை, அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள். உமது சேவைகளை எடுத்து வையும் மக்கள் முன்னால். சும்மா பரம்பரை பைம்பலுக்கு அரசியல் செய்பவர் ஆலோசனை வைக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இருந்தால் சொல்லமாட்டாரா?

மிகுதிப்பேருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். மக்கள் என்ன முடிவு வைத்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, nunavilan said:

மிகுதிப்பேருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். மக்கள் என்ன முடிவு வைத்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.

100%.

குறிப்பாக உள்ளூராட்ட்சி, பாராளுமன்றில் உறுப்பினர்களை வைத்து இருந்து கதிரையை சூடாக்கிய கட்சிகளுக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
30 minutes ago, nunavilan said:

மிகுதிப்பேருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். மக்கள் என்ன முடிவு வைத்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.

மக்களின் இயலாமையில் உணர்ச்சி அரசியல் செய்கிறார்கள் போக்கத்தவர்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
3 hours ago, goshan_che said:

இருந்தால் சொல்லமாட்டாரா?

ஏதோ மற்றவையள் செய்து கிழிச்சமாதிரி.......😂

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, குமாரசாமி said:

ஏதோ மற்றவையள் செய்து கிழிச்சமாதிரி.......😂

👆🏼👇

2 hours ago, nunavilan said:

மிகுதிப்பேருக்கும் பொருந்தும் என நினைக்கிறேன். மக்கள் என்ன முடிவு வைத்திருக்கிறார்கள் என பார்க்கலாம்.

 

1 hour ago, goshan_che said:

100%.

குறிப்பாக உள்ளூராட்ட்சி, பாராளுமன்றில் உறுப்பினர்களை வைத்து இருந்து கதிரையை சூடாக்கிய கட்சிகளுக்கு.

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, goshan_che said:

👆🏼👇

இப்பிடி எடுத்ததுக்கெல்லாம் அங்கை இஞ்ச விரலை நீட்டுற நேரம் நீங்களும் ஏதாவது ஐடியா  ஏன் சொல்லக்கூடாது ? :cool:

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

இப்பிடி எடுத்ததுக்கெல்லாம் அங்கை இஞ்ச விரலை நீட்டுற நேரம் நீங்களும் ஏதாவது ஐடியா  ஏன் சொல்லக்கூடாது ? :cool:

இருந்தால் சொல்ல மாட்டமா (உண்மையாகவே).

சீனா கூப்பிட்டும் ஒரு சைட் போகவில்லை.

இன்னொரு சைட் எங்களை கூப்பிடுங்கோ என கோரவும் இல்லை. 

இப்போதைக்கு / சம்+சும், 2கஜே இல்லாத மீதம் உள்ள தமிழ் தேசிய கட்சிகள் கூட்டிணைவது தான் முதல் படி என கருதுகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்

அப்போதான் இவர்கள் வாலைச் சுருட்டிக்கொண்டு வருவார்கள் இல்லது ஓய்வெடுப்பார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.