Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்.. 

நான் இலங்கைக்குக் (அதிலும் வடக்கு கிழக்குப் பகுதிகள் மாத்திரம் தான்) சென்ற சமயங்களில் என் கண்ணில் பட்டு கருத்தை கவர்ந்தவற்றை படம் எடுத்து சேர்த்து வைப்பது ஒரு பொழுதுபோக்கு!!!!

அப்படி எடுத்தவைகளில் சிலதை இங்கே பதிகிறேன்..நீங்கள் அங்கே நடந்த சம்பவங்களை நான்கு ஐந்து வரிகளில் எழுதுங்கள்.. ஏனெனில் மட்டுறுப்பினருக்கு நிறைய கஷ்டம் கொடுக்கக்கூடாது. 

உங்களுக்கு தெரிந்தது மற்றவர்களுக்கு சில சமயம் தெரிந்திருக்காது.. தனிப்பட்ட நினைவுகள் இருந்து எழுதினால் அதனால் ஏற்படும் விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை😊 

முதலில் இரு படங்களை இன்று இணைக்கிறேன்.. 

large.736CF981-49B5-4E9B-B1D4-65E9D669CD9C.jpeg.b42154c85c2b841306d1369adad166fa.jpeg

31613-A29-1-EF5-45-E3-90-C3-056-A710-B36

இது ஆலடிச் சந்தி - வல்வெட்டித்துறை.. முதல் படத்தைப் பார்த்து உங்களது மனதில் தோன்றுவதை இங்கே எழுதுங்கள்..

படங்களை நான் இணைக்கிறேன்.. அவற்றின் கருத்தை/எண்ணத்தை நீங்கள் கூறுங்கள். 

நன்றி..

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை. வசனம் சேர்க்கப்பட்டது

  • Replies 50
  • Views 5.3k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • P.S.பிரபா
    P.S.பிரபா

    இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது..  இந்த தேவாலயத்தினைக் கடந்துதான்  மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்ச

  • அண்ணா, பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட

  • கருத்துக்கள உறவுகள்

நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா?

பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…!

தொடருங்கள்…!

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

 

large.736CF981-49B5-4E9B-B1D4-65E9D669CD9C.jpeg.b42154c85c2b841306d1369adad166fa.jpeg

 

 

 

 இது பிளாட்டினத்திலும் பாசி பிடிக்கும் காலம்

 

பிகு

அருமையான கான்செப்ட். மிக பொருத்தமான படங்கள் 👏🏾.

  • கருத்துக்கள உறவுகள்

சூரியனை கார்முகில் மறைத்தல் போல் தலைவனின் இல்லத்தை கரிமுகில் மறைத்துள்ளது......!

கரிநீர் கழுவி ஓட மீண்டும் இல்லம் ஒளிரும் ........!

நன்றாக இருக்கு தொடருங்கள்.......!  👍

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, புங்கையூரன் said:

நம் மாவீரர்களின் உயிர்களின் மதிப்பு தென்னம் பிள்ளையா?

பிரபா, முதலாவது படத்துக்கு மேல்வரும் தலைப்பைத் தெரிந்து எடுங்கள்…!

தொடருங்கள்…!

நன்றி அண்ணா!!

அப்படித்தான் அந்த சுவரொட்டியில் கூறியுள்ளது.. எனக்குத் தெரிந்த ஒருவர் கூறினார் இப்ப மாவீரர் தினத்திற்கு தென்னங்கன்று கொடுத்தவுடன் கடமை முடிந்துவிட்டது என நினைக்குமளவிற்கு மக்களின் மனநிலை மாறுகிறது என. 

நான் இன்னமும் ஒன்றிரண்டு படங்களை இணைக்க நினைத்திருப்பதால்தான் படங்கள் கூறும் கதைகள் என தலைப்பிட்டேன். 

 

4 hours ago, goshan_che said:

இது பிளாட்டினத்திலும் பாசி பிடிக்கும் காலம்

உண்மைதான்.. பார்த்தவுடன் இப்படி செய்துவிட்டார்களே என கோபமும் இயலாமையும் ஏற்படுவதை தடுக்க முடியவில்லை. 

நன்றி .. 

2 hours ago, suvy said:

சூரியனை கார்முகில் மறைத்தல் போல் தலைவனின் இல்லத்தை கரிமுகில் மறைத்துள்ளது......!

கரிநீர் கழுவி ஓட மீண்டும் இல்லம் ஒளிரும் ........!

நன்றாக இருக்கு தொடருங்கள்.......!  👍

கடைசியில அவருக்கு ஒன்றுமே மிச்சமாக இல்லை. ஒரு இடிந்த சுவரைத் தவிர!!! 

நன்றி அண்ணா!!

  • கருத்துக்கள உறவுகள்

எந்த இடத்தில்... எதை ஓட்டுவது என்று சிந்திக்கும் அறிவு அற்றவர்கள்.
தலைவனின் இல்லம் என்று எழுதியிருந்ததற்கு கூட மதிப்பு கொடுக்காமல்,
அந்த விளம்பரத்தை கொண்டு போய் ஒட்டியுள்ளார்கள்.
பட பகிர்விற்கு நன்றி, பிரபா சிதம்பரநாதன். 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

எனக்கும் ஒரு ஆசை எப்படியாவது இந்த முறை யாழ் அகவை 25ற்கு ஏதாவது எழுதவேண்டும் என்று.. ஆனா எனக்கு கதை கவிதை எழுத தெரியாது அவற்றை வாசிக்க மட்டுமே விருப்பம்.. அரசியல் பற்றி எழுதுமளவிற்கு அதில் விருப்பம் இல்லை.. தெரிந்ததெல்லாம் இந்த மாதிரி படங்கள் எடுப்பதுதான்..

பிரபா நீங்கள் நிறைய பயணங்கள் போவதால் பயணக் கட்டுரையாகவே எழுதலாம்.

பழைய அகவைகளில் பலரும் பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள்.

அது வெளிநாடு உள்நாடு எதுவாகவும் இருக்கலாம்.

அத்துடன் உங்களுக்கு படம் எடுக்கும் திறமை இருப்பதால் படத்துடன் சேர்த்து இடங்களை எழுதுவதால் நாங்களும் அந்த இடங்களை தெரிந்து கொள்ளலாமல்லவா.

மேலே உள்ள படத்தை பார்க்க கோபமும் கவலையாகவும் இருக்கிறது.

புலனாய்வுப் பிரிவுகளின் வேலையாக இருக்கலாம்.

அடுத்த படம் எமது ஊரைப் (இருபாலை)போலவே கிராமத்தில் எடுத்த படம் போல உள்ளது.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, தமிழ் சிறி said:

எந்த இடத்தில்... எதை ஓட்டுவது என்று சிந்திக்கும் அறிவு அற்றவர்கள்.
தலைவனின் இல்லம் என்று எழுதியிருந்ததற்கு கூட மதிப்பு கொடுக்காமல்,
அந்த விளம்பரத்தை கொண்டு போய் ஒட்டியுள்ளார்கள்.
பட பகிர்விற்கு நன்றி, பிரபா சிதம்பரநாதன். 

உண்மைதான் தமிழ் சிறி அண்ணா.. 

நன்றி. 

22 hours ago, ஈழப்பிரியன் said:

பிரபா நீங்கள் நிறைய பயணங்கள் போவதால் பயணக் கட்டுரையாகவே எழுதலாம்.

பழைய அகவைகளில் பலரும் பயணக் கட்டுரைகள் எழுதியுள்ளார்கள்.

அது வெளிநாடு உள்நாடு எதுவாகவும் இருக்கலாம்.

அத்துடன் உங்களுக்கு படம் எடுக்கும் திறமை இருப்பதால் படத்துடன் சேர்த்து இடங்களை எழுதுவதால் நாங்களும் அந்த இடங்களை தெரிந்து கொள்ளலாமல்லவா.

மேலே உள்ள படத்தை பார்க்க கோபமும் கவலையாகவும் இருக்கிறது.

புலனாய்வுப் பிரிவுகளின் வேலையாக இருக்கலாம்.

அடுத்த படம் எமது ஊரைப் (இருபாலை)போலவே கிராமத்தில் எடுத்த படம் போல உள்ளது.

நன்றி அங்கிள். பயணக் கட்டுரை ஒன்று pendingல் உள்ளது.. Aboriginals சம்பந்தப்பட்டமையால் சரியானதை எழுதவேண்டும் அத்துடன் அப்பாவின் உடல்நலமும் பாதிக்கப்பட்டுள்ளதால்  எழுதமுடியாமல் தள்ளிப் போகிறது..பார்ப்போம்.. 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

68-C55-B7-E-AF39-4-CD3-8057-A371-FB222-D

இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல

எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம்

இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

68-C55-B7-E-AF39-4-CD3-8057-A371-FB222-D

இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல

எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம்

இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

பார்வைக்கு பாசையூர் அந்தோனியார் கோவில் போல உள்ளது.

நீங்கள் வடமராட்சி என்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

பார்வைக்கு பாசையூர் அந்தோனியார் கோவில் போல உள்ளது.

நீங்கள் வடமராட்சி என்கிறீர்கள்.

பாசையூர் அந்தோனியார் கோயிலில் இப்படி சுருவம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.....!  😁

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, பிரபா சிதம்பரநாதன் said:

68-C55-B7-E-AF39-4-CD3-8057-A371-FB222-D

இந்த இடம் வடமராச்சியில்தான் உள்ளது.. பிரேசிலில் அல்ல

எந்த இடம் என கூறுங்கள் பார்ப்போம்

இவரைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

கிளாலி, நாகர்கோவில் பகுதியாக இருக்கலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, suvy said:

பாசையூர் அந்தோனியார் கோயிலில் இப்படி சுருவம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.....!  😁

பாசையூர் அந்தோனியார் கோவிலுக்கு அருகில் எனது உயிர் நண்பன் இருந்தான்.84 வரை அடிக்கடி போய் வந்தேன்.அவன் ஜேர்மனி போனபின் அந்தப் பக்கம் போனதில்லை.

அவனது வீட்டில்த் தான் முதன்முதலாக ஆமை இறைச்சி சாப்பிட்டேன்.

2 minutes ago, nunavilan said:

கிளாலி, நாகர்கோவில் பகுதியாக இருக்கலாம். 

நாகர்கோவில் தாளையடி பக்கமும் நிறைய கிறீஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் வடமராட்சியில் என்றல்லவா எழுதியிருக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, suvy said:

பாசையூர் அந்தோனியார் கோயிலில் இப்படி சுருவம் இல்லை என்றுதான் நினைக்கிறேன்.....!  😁

உண்மைதான் பாசையூரில் இல்லை..

22 hours ago, nunavilan said:

கிளாலி, நாகர்கோவில் பகுதியாக இருக்கலாம். 

இந்த தேவாலயம் இருக்கும் இடத்தை கடந்தே நீங்கள் கூறிய இடத்திற்குப் போக வேண்டும்😊

22 hours ago, ஈழப்பிரியன் said:

நாகர்கோவில் தாளையடி பக்கமும் நிறைய கிறீஸ்தவர்கள் இருக்கிறார்கள்.

ஆனால் வடமராட்சியில் என்றல்லவா எழுதியிருக்கு.

அங்கிள் வடமராட்சி என்ற ஊர் இருக்கிறதா? நான் நினைப்பது வடமராட்சி என்றால் பருத்தித்துறை, VVT, கரவெட்டி தாளையடி   கட்டைக்காடு இப்படி பல ஊர்கள் சேர்ந்து என்று!!!

இந்த சுருவம் அண்மையில் கட்டியது இல்லை.. முன்பே இருக்கிறது என்றுதான் நினைக்கிறேன்.. 

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப்பிழை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பிரபா சிதம்பரநாதன் said:

அங்கிள் வடமராட்சி என்ற ஊர் இருக்கிறதா? நான் நினைப்பது வடமராட்சி என்றால் பருத்தித்துறை, VVT, கரவெட்டி தாளையடி   கட்டைக்காடு இப்படி பல ஊர்கள் சேர்ந்து என்று!!

வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.

கூகிள் தகவல்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

வடமராட்சியில் பருத்தித்துறை, வல்வெட்டித்துறை போன்ற துறைமுகப் பட்டினங்களும், கற்கோவளம், அம்பன், குடத்தனை, நாகர்கோயில் போன்ற கடல்சார் கிராமங்களும், தும்பளை, புலோலி, அல்வாய், வதிரி, கரவெட்டி, கரணவாய், துன்னாலை, உடுப்பிட்டி, வல்வெட்டித்துறை, தொண்டைமானாறு போன்ற கிராமங்களும் உள்ளன.

கூகிள் தகவல்.

அண்ணா,

பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட முற்படுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

 பொற்பதி   குடத்தனை    St. Peter's Church. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

அண்ணா,

பருத்தித்துறைக்குள் தும்பளை புலோலி அல்வாய் போன்ற இதர கிராமங்கள் உள்ளடக்கம். ஆனால் நீங்கள் குறிப்பிட்ட துறைமுகம் கடல்சார் காரணங்களால் அதாவது சாதீயக் காரணத்தால் தங்களை தற்போது பிரித்து காட்ட முற்படுகின்றனர்.

நன்றி மீரா.

இது விக்கியில் இருந்து சுட்டது.

வடமராட்சிப் பக்கம் எனக்கு அவ்வளவு பரிச்சயம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நிலாமதி said:

 பொற்பதி   குடத்தனை    St. Peter's Church. 

கூகிள் பண்ணி பார்த்ததில் பிரபா இணைத்த சிலை இந்த இடத்தில் காணவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

கூகிள் பண்ணி பார்த்ததில் பிரபா இணைத்த சிலை இந்த இடத்தில் காணவில்லை.

இந்த ஊரின் பெயர் மணற்காடு.. அங்கேதான் இந்த St.Peter’s Churchம் உள்ளது.. 

இந்த தேவாலயத்தினைக் கடந்துதான்  மணற்காடு கடற்கரைக்குப் போகவேண்டும்.. இந்தக் கடற்கரைக்குப் போகும் வழியில்தான் பாழடைந்த டச்சு தேவாலயம் ஒன்றும் சவுக்குத் தோப்பும் உள்ளது. 

0-D5-B4327-29-AB-45-A1-9-E73-67-ADB4-A33

சிறுவயதில் பார்த்தபொழுது இந்த தேவாலயத்தை சூழ அதிகளவான மணற்மேடுகள் இருந்தது போன்ற நினைவு இப்பொழுது தேவாலயத்தின் இடிபாடுகள் அதிகளவில் வெளியே தெரிகிறது.. காலப்போக்கில் மணற்மேடுகள் இன்னமும் குறையலாம்.. 

இந்த கடற்கரையும் அழகானதுதான்.. போகும் ஒவ்வொருமுறையும் சில இடங்களுக்குப் போகாமல் வந்ததில்லை அதில் இந்த கடற்கரையும் ஒன்று.. 

large.79170989-144E-4607-855F-38869E4EA494.jpeg.64fe869ab7deca33ef5ee7ea84834764.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் சகோதரி.......படங்களும் அழகாக இருக்கின்றன.......!   😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)
 

29-DAF843-5961-4600-BFF1-EC09-F0-AA5-EAD

முல்லைத்தீவில் ஒரு கிராமம்

இந்தப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)
 

29-DAF843-5961-4600-BFF1-EC09-F0-AA5-EAD

முல்லைத்தீவில் ஒரு கிராமம்

இந்தப்படங்களைப் பார்க்கும் பொழுது உங்களுக்கு தோன்றுவது என்ன? 

மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…!

பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, புங்கையூரன் said:

மதங்களுக்கும் கூட விளம்பரம் அவசியமாகின்றது…!

பக்குவப் பட்டவனுக்கு இரண்டுமே கற்கள் தான் என்பது புரியும்….!

உண்மைதான் 

நன்றி அண்ணா!!

முல்லைத்தீவில் சர்ச்சைக்குரிய நீராவியடியில் உள்ள புத்தர் சிலையே அது.. 

முல்லைத்தீவில் சிவனின் மகனை தள்ளிவிட்டு புத்தர் வந்துவிட்டார். யாழ்ப்பாணத்தில் புத்தர் வந்தாலும் என்று சிவன் முந்திவிட்டார்..

 

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

large.248A52E2-B722-48FF-B76F-BF2533BD4E06.jpeg.e22f6ad49dee1fc15eb0fab764bfe01a.jpeg

யாழ்ப்பாண townற்கு அருகில் உள்ள பகுதி(நகர்ப்புறம்)

பலாலி வீதி, பழம் வீதியில் இருக்கும் ஆலடி சந்தி போலவும் தெரிகின்றது. 
ஆனால்... பலாலி வீதி ஒடுக்கம் குறைவாக தெரிவதால், 
சிலவேளை வேறு இடமாகவும் இருக்கலாம். 🙂

சுந்தரம்  பிறதர்ஸ்... இன்னும் தாக்குப் பிடித்துக் கொண்டிருப்பது ஆச்சரியம். 
அந்த நிறுவனத்திற்கு... 100 ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என நினைக்கின்றேன். 🙂

Edited by தமிழ் சிறி

Join the conversation

You can post now and register later. If you have an account, sign in now to post with your account.

Guest
Reply to this topic...



இங்கு எழுதப்படும் விடயம் பிரதிசெய்யப்பட்டு (copy)மேலுள்ள கட்டத்தில் ஒட்டப்பட வேண்டும். Copy செய்த பின்னர் மேலுள்ள கட்டத்தில் ctrl + v இனை அழுத்தி ஒட்டிக் (paste) கொள்ள முடியும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.