Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

இந்திய மீனவரைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய மீனவரைக் கண்டு பயங்கொள்ள வேண்டாம்

dougls_03032023_LNN_CMY.jpg?itok=lKFLuMH

பிடித்து கடற்படையினரிடம் ஒப்படையுங்கள் -டக்ளஸ்

வடபகுதிக் கடற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்தால், அவர்களை எமது மீனவர்கள் பிடித்து கடற்படையினரிடமோ அல்லது பொலிஸாரிடமோ ஒப்படைக்கலாம் என, கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் வைத்துக் கருத்துத் தெரிவித்த போதே, அவர் இந்த விடயத்தை தெரிவித்தார்.

 

அத்துடன், “நான் ஏற்கெனவே எமது மீனவர்களுக்குச் சொல்லியிருக்கிறேன். நீங்கள் யாரும் பயப்பட வேண்டிய தேவையில்லை. கடலில் சட்டவிரோதச் செயற்பாடுகளில் ஈடுபடுவோரை பிடியுங்கள். பிரச்சினைகளைக் கையாள்வதற்கு நான் இருக்கிறேன்” எனவும் அவர் தெரிவித்தார்.

https://www.thinakaran.lk/2023/03/04/அரசியல்/96348/இந்திய-மீனவரைக்-கண்டு-பயங்கொள்ள-வேண்டாம்

  • கருத்துக்கள உறவுகள்

கடற்படையினரும் போலிசும் வடக்கு கிழக்கு பகுதியில் எண்ணத்துக்கு இருகினமாம் ?  பவுடர் கஞ்சா கடத்துபவர்களுக்கு மற்றும்   கள்ளர் கொள்ளையர் வாழ் வெட்டு குருப்புகளுக்கு  பாதுகாப்பு கொடுக்கவா அங்கு இருக்கினம் .

  • கருத்துக்கள உறவுகள்
41 minutes ago, பெருமாள் said:

கடற்படையினரும் போலிசும் வடக்கு கிழக்கு பகுதியில் எண்ணத்துக்கு இருகினமாம் ?  பவுடர் கஞ்சா கடத்துபவர்களுக்கு மற்றும்   கள்ளர் கொள்ளையர் வாழ் வெட்டு குருப்புகளுக்கு  பாதுகாப்பு கொடுக்கவா அங்கு இருக்கினம் .

பொதுமக்கள் சட்டத்தை கையில் எடுக்கக் கூடாது  என்று, அமைச்சருக்கு தெரியாதோ.
வருகின்றவர்கள் ஆயுதத்துடன் வந்து பொதுமக்களை தாக்கினால் இவர் பொறுப்பேற்பாரா.
லூசு கூட்டங்கள் ஆளும் நாட்டில்... ஒவ்வொரு நாளும் லூசு அறிக்கைகள்.

  • கருத்துக்கள உறவுகள்

முட்டாள் தனமான பொறுப்பற்ற பேச்சு. அத்துமீறி இலங்கை கடல்பரப்பில் நுழையும் இந்திய மீனவர்களைப் பிடித்துத் தரும்படி தூண்டுவதால் இந்த தமிழினத் துரோகி தனது எஜமான் விசுவாசத்தை வெளிப்படுத்துவதில் உச்சத்துக்கே போய்விட்டார். அரச மட்டத்தில் இராஜதந்திர நடவடிக்கைகள் மூலம் தீர்க்க முடியாத மீனவர் பிரச்னையை அவர்களிடமே ஒப்படைப்பதால் முதுகெலும்பு இல்லாத இந்த கடல்தொழில் மந்திரி தனது இயலாத்தன்மையை மறைக்கவும்  இராஜாங்க மட்ட பிரச்சனையொன்றைக் கைகழுவி விடுவதன்முலம் இக்கட்டான  சூழ்நிலையிலிருந்து  தன்னையும் தான் தொங்கிக்கொண்டிருக்கும் இனவாத சிங்கள அரசாங்கத்தையும்  தந்திரமாக காப்பாற்றப் பார்க்கிறார்.  

எமது மீனவர்கள் இவர் சொல்வதுபோல் நடந்தால் இந்திய ஈழத் தமிழர் நீண்டகால  நட்புறவு இதனால் நேரடியாகவே பாதிக்கப்படும். இருதரப்பும் கடலில் வைத்தே நேரடியாக கைகலப்பில் ஈடுபட நேரிட்டால் அது உயிராபத்தில் முடியும். இலங்கையின் பலமுள்ள கடற்படையும் எல்லை காவல்படையும் செய்ய முடியாத ஒன்றை சிவில் சமூகம் செய்யும் என்று எதிபார்ப்பது அடி முட்டாள்தனம்.

சிங்களவன் நீதிமன்ற உத்தரவையும் மீறி உள்நாட்டிலேயே தமிழர் நிலத்தை அபகரித்து இரவோடு இரவாக விகாரை கட்டுகிறான். அதையெல்லாம் இவர் பார்த்து கொண்டு சத்தமில்லாமல் தான் இருக்கிறார். இந்த விசயத்திலும்  முன்வந்து ”பிரச்சினைகளைக் கையாள்வதற்கு நான் இருக்கிறேன்” அவர்களை பிடித்து ஒப்படையுங்கள் என்று ஜனங்களைப் பார்த்து சொல்லட்டும். அப்படி செய்தால் சிங்களவன் உடனே இவரின்  சீட்டைக் கிழித்து   இவரை வீட்டுக்கு அனுப்பிடுவான்.

  • கருத்துக்கள உறவுகள்

கடலில் புலிகளின் நடமாட்டத்தை கண்காணிக்க அதிநவீன படகுகளை பயன்படுத்தியவர்கள், இந்த இந்திய மீனவரை கட்டுப்படுத்த முடியவில்லை என்றால் இன்னும் எதற்கு இங்கு தங்கியிருக்கிறார்கள்? மீனவரிடம் பொறுப்பை ஒப்படைத்து விட்டு வெளியேறலாமே? வேண்டுமென்றே ஈழத்தமிழரையும் தமிழக தமிழரையும் மோதவிட்டு எமக்கு எங்கும் ஆதரவுக்குரல் எழாமல் தடுத்து, தனிமைப்படுத்தி அடிமைகளாக வைத்திருப்பதற்கே இந்த பாராமுகம். பனையாலை விழுந்தவனை மாடேறி உழக்கின மாதிரி தமிழக மீனவரும் நம் கையறு நிலையை பயன்படுத்கின்றனர்.
இதில தாடியரின்ர பெரிய பகிடி ஒன்று! வடக்கில் பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியாவிடில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டால் இராணுவத்தை அழைக்குமாறு இவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இவருக்கு தன் நிலை இன்னும் புரியவில்லை. அடிமை தன் நிலை மீறி கனவு கண்டு ஆணை போட்டு இருந்த நிலையையும் இழக்க வேண்டிவரும். பொலிஸாருக்கு ஆலோசனை கூற இவர் யார்? ஆளுனரா? முதலமைச்சரா? அல்லது சட்டமா அதிபரா? கொஞ்சம் கூட யோசிக்க வேண்டாம் தன்னிலையை? முந்தியும் உப்பிடி வெளிக்கிட்டு மூக்குடைபட்டவர், மறந்து போனார் என நினைக்கிறேன். தமிழரை அடிபணிய வைக்க இப்படியான கோமாளிகளுக்கு சிங்களம் போலி முடிசூட்டுவது வழமை. அது தெரியாமல் இவர் விடும் அறிக்கைகளும் கொடுக்கும் ஆலோசனைகளும் தாங்க முடியவில்லை. ஏதாவது பொறுப்பான, பயனுள்ள ஆலோசனையாக இருந்தால் பரவாயில்லை. பானையில் இருந்தாற்தானே அகப்பையில் வருவதற்கு?

  • கருத்துக்கள உறவுகள்

இதில தாடியரின்ர பெரிய பகிடி ஒன்று! வடக்கில் பிரச்சனைகளை கட்டுப்படுத்த முடியாவிடில் ஆள்பற்றாக்குறை ஏற்பட்டால் இராணுவத்தை அழைக்குமாறு இவர் ஆலோசனை வழங்கியிருந்தார். இவருக்கு தன் நிலை இன்னும் புரியவில்லை. அடிமை தன் நிலை மீறி கனவு கண்டு ஆணை போட்டு இருந்த நிலையையும் இழக்க வேண்டிவரும். பொலிஸாருக்கு ஆலோசனை கூற இவர் யார்?

 

குத்திக்கு எங்கையோ மச்சமிருக்கு... அதாலை எந்தக்கட்சி வந்ததாலும் ....மீன்பிடி அமைச்சர்...அவருக்கு தில்...இருபகுதி மீனவரையும் கொழுவவிட்டு.. இடையிலை தூண்டில்போட்டு...அரசியல் இலாபம் பார்ப்பது..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

குத்திக்கு எங்கையோ மச்சமிருக்கு... அதாலை எந்தக்கட்சி வந்ததாலும் ....மீன்பிடி அமைச்சர்...அவருக்கு திழில்...இருபகுதி மீனவரையும் கொழுவவிட்டு.. இடையிலை தூண்டில்போட்டு...அரசியல் இலாபம் பார்ப்பது..

எந்தக்கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழரை அழிப்பதே அவர்களின் நோக்கம். அந்தத் தொழிலில் கைதேர்ந்தவர்கள் விண்ணப்பிப்பதும்,  அவர்களை இணைத்துக்கொள்வதும் தொழிலை இலகுபடுத்த உதவுமோ இல்லையோ? இவர் குட்டையை குழப்ப, மீன்பிடிப்பது அவர்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.