Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உக்ரைனில் ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள மரியுபோலுக்கு புடின் விஜயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, Justin said:

புட்டினைக் கைது செய்ய முடியுமென்று நம்பி இந்த கைது ஆணை பிறப்பிக்கவில்லை.

உண்மை தான்.......எது நடக்கும் என்று நம்புகிறோமோ  அது நடக்காது ...எது நடக்காது என்று நம்புகிறோமோ.   அது நடக்கும்....எனவே… புட்டினை கைது செய்ய முடியாது என்று உறுதியாக நம்புவோம் 🤣

  • Replies 118
  • Views 7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kandiah57 said:

உண்மை தான்.......எது நடக்கும் என்று நம்புகிறோமோ  அது நடக்காது ...எது நடக்காது என்று நம்புகிறோமோ.   அது நடக்கும்....எனவே… புட்டினை கைது செய்ய முடியாது என்று உறுதியாக நம்புவோம் 🤣

ட்ரம் கைது செய்யப்பட மாட்டார் என நம்புவோம். பைடன் அடுத்த தேர்தலில் வெல்லுவார் என நம்புவோம்.😜

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, kalyani said:

ட்ரம் கைது செய்யப்பட மாட்டார் என நம்புவோம். பைடன் அடுத்த தேர்தலில் வெல்லுவார் என நம்புவோம்.😜

ம்ம்

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசியல் - icc  இதனுடன் குலைய ஆரம்பிக்கும். ஏற்கனவே அவ்வளவு உறுதியாக இல்லை.

ருஸ்யா கிரிமினல் வழக்கு தொடுத்து இருக்கிறது ICC நீதிபதி மற்றும் ஆய்வாளர்கள் மேல்.

இது இன்னும் பிரச்சனையாகும் - காரணம் இது அரசுகளுக்கு இடையில் நடக்கும் பேரத்தை பொறுத்தது. 

இவர்கள், வேறு நாடுகளுக்கு செல்வது எப்போதும் நிச்சயமற்றதாகிவிட்டது.

ICC யம் பூகோள அரசியலுக்கு உட்பட்டது - இதைத்தானே ரஷ்யா முதலில்  இருந்தே சொல்கிறது. 

ICC இந்த வழக்கும் கேலிக்கூத்தானது - எந்த ஒரு பிரதேசத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு இருக்கும் அரசம், அங்குள்ள மக்களின் அடிப்படை நலத்தை பேண வேண்டும். அடிப்படை, சர்வதேச சட்டம்.

எனவே, கைவிடப்பட்ட குழந்தைகளை , யுத்த பிரதேசத்தில் இருந்து அகற்றி பேணுதல்   கிரிமினல் என்பது சோடிக்கப்பட்டது. 

அனால், ICC முதல் இந்த வழக்கை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மீது தொடுத்து இருந்தால்- வரலாற்றை சரி செய்யும் நோக்கில் - ஏனெனில், பழங்குடிகள் இன்னமும் தமது தொலைந்த சந்ததியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் - இந்த வழக்குக்கு இடம் இருக்கிறது. 

சட்ட அடிப்படையில், ருஷ்யாவின் வாதம், மிக வலுவானது, ICC இந்த வழக்கிலும் பார்க்க.

இது தான் மேற்கின் rule based - அவர்களேயே எதுவென்று சொல்லமுடியாமல், வேளைக்கு, சந்தர்ப்பத்துக்கு , தமக்கு ஏற்றவாறு செய்வது (இதை  மேற்கின் ஆய்வு மையங்களே சொல்கின்றன, அனால் இங்கு சிலர் சாதிக்கிறார்கள் அப்படி இல்லை என்று).

ICC ஐ ஏற்றுக்கொண்ட மேற்கு அல்லாத அரசுகளும் அநேகமாக இதை புறக்கணிக்க கூடும்; மற்றும் விலத்தவும்  கூடும், ஏனெனில் இந்த நிலை ஆப்பிரிக்காவில், ஆசியாவில், தென்னமெரிக்காவில் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

ICC யின் குலசைவு ஆரம்பிக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
31 minutes ago, Kadancha said:

ICC இந்த வழக்கும் கேலிக்கூத்தானது - எந்த ஒரு பிரதேசத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு இருக்கும் அரசம், அங்குள்ள மக்களின் அடிப்படை நலத்தை பேண வேண்டும். அடிப்படை, சர்வதேச சட்டம்.

எனவே, கைவிடப்பட்ட குழந்தைகளை , யுத்த பிரதேசத்தில் இருந்து அகற்றி பேணுதல்   கிரிமினல் என்பது சோடிக்கப்பட்டது. 

அனால், ICC முதல் இந்த வழக்கை அமெரிக்கா, கனடா,

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மக்களை - மெனிக்பார்ம் உட்பட்ட முகாமகளில் தடுத்துவைத்தது - இதே பேணலுக்குள் வருமா ?

இவர்கள் கைவிடப்பட்ட குழந்தைகள் இல்லை. அந்த நகரில், ரஸ்ய துருப்புகள் போய் இவர்களை எடுக்கும் வரை தம் பெற்றாருடன் வாழ்ந்த பிள்ளைகள்.

ஒரு குழந்தையின் best interest அதன் பெற்றாருடன் இருப்பதே என்கிறது சட்டம்.

பழங்குடி குழந்தைகளுக்கு நடந்தது கிரிமினல் குற்றம்தான். அதற்கு அவுஸ்ரேலிய அரசு பகிரங்க மன்னிப்பும் கேட்டுள்ளது.

ஆகவே பல வருடங்களுக்கு முன் மேற்கு ஒரு குற்றத்தை இழைத்தது என்பதால், இப்போ அதையே ரஸ்யா செய்வது குற்றம் இல்லை என்றாகாது.

ரஸ்யா உண்மையில் இந்த குழந்தைகளை பேண விரும்பினால் - அவர்களை பெற்றாருடன் சேர்த்து இடம் பெயர்த்து, பெற்றாருடன் சேர்த்து, உக்ரேனின் இன்னொரு நகருக்கு அனுப்பி இருக்க வேண்டும்.

போர்க்கைதிகளை பரிமாறும் ரஸ்யா இதை மிக இலகுவாக செய்திருக்கலாம்.

————-

ICC யில் 123 நாடுகள் ஒப்பம் இட்டுள்ளன.

அவை எவையும் விலகுவதாக அறிவிக்கவில்லை. வழமையாக ICC ஐ ஏற்காத நாடுகள்…ஏற்கப்போவதில்லை.

ஆனால்,  மனித குல விரோதமாக யார் நடந்தாலும் ICC விசாரிக்க முடியும் என்பதே உண்மை.

நிச்சயமாக இதில் அரசியல் உண்டு. அது மேற்கு சார்பான அரசியல்தான்.

மேற்கின் ஆளுமை இருக்கும் வரை ICC குலைய வாய்ப்பு அதிகம் இல்லை.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

முள்ளிவாய்க்காலில் சரணடைந்த மக்களை - மெனிக்பார்ம் உட்பட்ட முகாமகளில் தடுத்துவைத்தது - இதே பேணலுக்குள் வருமா ?

இந்த நிலை வேறு, முழு மக்களையும், பெயர்த்து, சிறையாக  அடைத்து வைத்து இருந்தது - முழு மக்களையும் ருஷ்யா கொண்டு போனதா?

அனால், முள்ளிவாய்க்காலுக்கு மேற்கு, சர்வதேச சட்டத்தை வைத்து மக்கள் கூட்டத்தை அடைத்த  சிறைக்கு நியாயம் கற்பித்தது. 
 

8 minutes ago, goshan_che said:

ஒரு குழந்தையின் best interest அதன் பெற்றாருடன் இருப்பதே என்கிறது சட்டம்.

இது சிவில் ஒழுங்கு இருக்கும் வரைக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
22 minutes ago, Kadancha said:

இந்த நிலை வேறு, முழு மக்களையும், பெயர்த்து, சிறையாக  அடைத்து வைத்து இருந்தது - முழு மக்களையும் ருஷ்யா கொண்டு போனதா?

 

இரெண்டுமே கொடுமைதான்.

எது அதிகம் கொடுமையானது?

தாய் தந்தை யுடன் பிள்ளைகளை அடைத்து வைத்தது (இலங்கை).

தாய் தந்தை யுடன் இருந்த பிள்ளையை, அவர்களிடம் இருந்து பிரித்து - வேற்று நாட்டில் கொண்டு போய் அடைத்து வைப்பது? (ரஸ்யா).

22 minutes ago, Kadancha said:

அனால், முள்ளிவாய்க்காலுக்கு மேற்கு, சர்வதேச சட்டத்தை வைத்து மக்கள் கூட்டத்தை அடைத்த  சிறைக்கு நியாயம் கற்பித்தது. 

முள்ளிவாய்கால் மக்களை முகாமில் அடைத்து வைத்ததை எந்த மேற்கு நாடு சட்டப்படியானது என்று நியாப்படுத்தி அறிக்கை விட்டது?

ஆதாரம்?

26 minutes ago, Kadancha said:

இது சிவில் ஒழுங்கு இருக்கும் வரைக்கும்.

இல்லை - பெற்றாரால் பிள்ளைக்கு தீங்கு என்ற ஒரு நிலை தவிர மிகுதி நிலைகளில் எல்லாம் பிள்ளைகளின் சேம நலன் - அவர்களின் பெற்றாருடன் தங்கி இருப்பதிலேயே உள்ளது.

35 minutes ago, goshan_che said:

ஆகவே பல வருடங்களுக்கு முன் மேற்கு ஒரு குற்றத்தை இழைத்தது என்பதால், இப்போ அதையே ரஸ்யா செய்வது குற்றம் இல்லை என்றாகாது.

இந்த கேள்வியை லாவகமாக கடந்து சென்றுள்ளீர்கள் என நினைக்கிறேன்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, goshan_che said:

முள்ளிவாய்கால் மக்களை முகாமில் அடைத்து வைத்ததை எந்த மேற்கு நாடு சட்டப்படியானது என்று நியாப்படுத்தி அறிக்கை விட்டது?

uk இன் அந்த நேர அமைச்சரே (அல்லது முது நிலை அதிகாரி)  (DFID க்கும் பொறுப்பாக இருந்தவர், பெயர் நினைவிபு இல்லை ), அந்த நிலையில் இந்த முகாம்களே ஏற்ற நிலை என்று.

அது முகாமூக்கு சென்று பார்த்து சொன்னதாக தான் எனது நினைவில் இருக்கிறது.
 

  • கருத்துக்கள உறவுகள்
45 minutes ago, goshan_che said:

தாய் தந்தை யுடன் இருந்த பிள்ளையை, அவர்களிடம் இருந்து பிரித்து - வேற்று நாட்டில் கொண்டு போய் அடைத்து வைப்பது? (ரஸ்யா).

இது நடந்து இருக்கலாம், அனால் திட்டமிட்டு அல்ல. மேற்றுகின் ஊடகங்களே, சொல்லும் சந்தர்ப்பங்கள், 10க்கும் குறைவாக இருக்கிறது.

https://apnews.com/article/ukrainian-children-russia-7493cb22c9086c6293c1ac7986d85ef6

மற்றது அடைத்து வைக்கவில்லை. 

மிகப் பெரும்பான்மையாக, கைவிடப்பட்ட சிறுவயதினர்.

முக்கியமாக, ருசியா இதை மறைக்கவில்லை. - இந்த சிறுவர்கள் பரமறுப்புக்காக ரஷ்யாவுக்கு கொண்டுவரப்படுவது. ( அனால்  மேற்கு இப்போதும்  தொலைந்தவர்களின் விபரத்தை  ஒழிக்கிறது - அதன் பரிமாணம் தெரிந்து விடும் என்பதால்)   

மேற்கு சொல்வது - அவர்கள் ருசியா கலாசாரத்தில் வளர்வது இனப்படுகொலை என்று. 

இது சீனாவில் Uyghurs குக்கு இனப்படுகொலை நடக்கிறது, 8 சந்தர்ப்பங்களை வைத்து மேற்கு சொன்ன கதையாகத் தான் இருக்கிறது; இறுதியில் cia இன் பிரச்சாரம் என்று வெளிப்பட்டது.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kadancha said:

இது அரசியல் - icc  இதனுடன் குலைய ஆரம்பிக்கும். ஏற்கனவே அவ்வளவு உறுதியாக இல்லை.

ருஸ்யா கிரிமினல் வழக்கு தொடுத்து இருக்கிறது ICC நீதிபதி மற்றும் ஆய்வாளர்கள் மேல்.

இது இன்னும் பிரச்சனையாகும் - காரணம் இது அரசுகளுக்கு இடையில் நடக்கும் பேரத்தை பொறுத்தது. 

இவர்கள், வேறு நாடுகளுக்கு செல்வது எப்போதும் நிச்சயமற்றதாகிவிட்டது.

ICC யம் பூகோள அரசியலுக்கு உட்பட்டது - இதைத்தானே ரஷ்யா முதலில்  இருந்தே சொல்கிறது. 

ICC இந்த வழக்கும் கேலிக்கூத்தானது - எந்த ஒரு பிரதேசத்தின் மீது கட்டுப்பாடு கொண்டு இருக்கும் அரசம், அங்குள்ள மக்களின் அடிப்படை நலத்தை பேண வேண்டும். அடிப்படை, சர்வதேச சட்டம்.

எனவே, கைவிடப்பட்ட குழந்தைகளை , யுத்த பிரதேசத்தில் இருந்து அகற்றி பேணுதல்   கிரிமினல் என்பது சோடிக்கப்பட்டது. 

அனால், ICC முதல் இந்த வழக்கை அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மீது தொடுத்து இருந்தால்- வரலாற்றை சரி செய்யும் நோக்கில் - ஏனெனில், பழங்குடிகள் இன்னமும் தமது தொலைந்த சந்ததியை தேடிக்கொண்டு இருக்கிறார்கள் - இந்த வழக்குக்கு இடம் இருக்கிறது. 

சட்ட அடிப்படையில், ருஷ்யாவின் வாதம், மிக வலுவானது, ICC இந்த வழக்கிலும் பார்க்க.

இது தான் மேற்கின் rule based - அவர்களேயே எதுவென்று சொல்லமுடியாமல், வேளைக்கு, சந்தர்ப்பத்துக்கு , தமக்கு ஏற்றவாறு செய்வது (இதை  மேற்கின் ஆய்வு மையங்களே சொல்கின்றன, அனால் இங்கு சிலர் சாதிக்கிறார்கள் அப்படி இல்லை என்று).

ICC ஐ ஏற்றுக்கொண்ட மேற்கு அல்லாத அரசுகளும் அநேகமாக இதை புறக்கணிக்க கூடும்; மற்றும் விலத்தவும்  கூடும், ஏனெனில் இந்த நிலை ஆப்பிரிக்காவில், ஆசியாவில், தென்னமெரிக்காவில் இடம்பெறக்கூடிய சந்தர்ப்பங்கள் இருக்கிறது.

ICC யின் குலசைவு ஆரம்பிக்கிறது.

எனது பிள்ளைகளை ரசியா பலாத்காரமாக பிடித்துச் சென்று விட்டது என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் ரசியா குற்றவாளியா இல்லையா??

 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

எனது பிள்ளைகளை ரசியா பலாத்காரமாக பிடித்துச் சென்று விட்டது என்று பெற்றோர் வழக்கு தொடர்ந்தால் ரசியா குற்றவாளியா இல்லையா??

வாய்க்கு வந்த கதையாக அல்லவே இருக்கிறது. என்னக்கு அப்படித் தான் தோன்றுகிறது.

எவரும் எந்த வழக்கும் போடலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

வாய்க்கு வந்த கதையாக அல்லவே இருக்கிறது. என்னக்கு அப்படித் தான் தோன்றுகிறது.

எவரும் எந்த வழக்கும் போடலாம். 

பதில்??

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

பதில்??

குற்றம் என்று தீர்மானித்த பின் வழக்கு எதுக்கு - தண்டனை கொடுத்து பிடிவிறாந்து, தணடனையை அமுல்படுத்த என்றல்லவா போட்டு இருக்க  வேண்டும்.
 

எதுவாயினும், உண்மையான சிக்கலான பிரச்னை, பூகோள  அரசியல் மயப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்பட்டுவிட்டது.  

ICC - அதுக்கு இதுவரை இருந்த நியாதிக்கத்தையும் மலினப்படுத்திவிட்டது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

uk இன் அந்த நேர அமைச்சரே (அல்லது முது நிலை அதிகாரி)  (DFID க்கும் பொறுப்பாக இருந்தவர், பெயர் நினைவிபு இல்லை ), அந்த நிலையில் இந்த முகாம்களே ஏற்ற நிலை என்று.

அது முகாமூக்கு சென்று பார்த்து சொன்னதாக தான் எனது நினைவில் இருக்கிறது.
 

வாய்பில்லை.

 DFID உருவாக்கப்பட்டதே ஜூலை 2016 இல்தான்.

ஆதாரம் இருந்தால் தரவும்.

10 minutes ago, Kadancha said:

இது நடந்து இருக்கலாம், அனால் திட்டமிட்டு அல்ல. மேற்றுகின் ஊடகங்களே, சொல்லும் சந்தர்ப்பங்கள், 10க்கும் குறைவாக இருக்கிறது.

ஜோக் அடிக்காதேங்கோ கடஞ்சா,

ஒரு யுத்த நகரத்தில் திடேரென்று எப்படி 4000 பெற்றோரால் கைவிடப்பட்ட குழந்தைகள் தோன்றினர்?

மரியபோல் என்ன மும்பாய் ரயில் நிலையம் போல், கைவிடபட்ட குழந்தைகள் வாழும் இடமா?

அப்படி பெற்றார் இறந்து இருந்தாலும் அவர்களை அடுத்து next of kin எனப்படும் உறவினர்களிடம் ஒப்படைப்பதுதான் முறை. பிள்ளைகளை பத்திரமாக மீட்டு, பெற்றார் அல்லது, உறவினரிடம் ஒப்படைப்பதுதான் முறை.

மாறாக அவர்களை கலச்சார சலவை செய்து, பொம்மைகள் போல் வெளிகிடுத்தி ரஸ்ய தொலைகாட்சிகளில் காட்சி பொருளாக்கியது ரஸ்யா.

இப்பதானே பிடியாணை போயிருக்கு? எப்படி, எந்த குழந்தைகளை, புட்டின் கடத்தினார் என்பது வழக்கு முன் போகும் போது வெளிவரும்?

15 minutes ago, Kadancha said:

மிகப் பெரும்பான்மையாக, கைவிடப்பட்ட சிறுவயதினர்.

ஆதாரம் எதும் அற்ற கூற்று

16 minutes ago, Kadancha said:

இது சீனாவில் Uyghurs குக்கு இனப்படுகொலை நடக்கிறது, 8 சந்தர்ப்பங்களை வைத்து மேற்கு சொன்ன கதையாகத் தான் இருக்கிறது; இறுதியில் cia இன் பிரச்சாரம் என்று வெளிப்பட்டது.

சீனாவில் நடப்பது இனப்படுகொலைதான். 

நாளைக்கு ரொஹிங்யாவிலும் ஒண்டும் நடக்கவில்லை என்பீர்கள் போல் இருக்கு.

ரஸ்யாவுக்கு வெள்ளை அடிக்க வெளிக்கிட்டு, எல்லாருக்கும் அடிக்கும் படி ஆகி விட்டது போலும்.

9 minutes ago, Kadancha said:

குற்றம் என்று தீர்மானித்த பின் வழக்கு எதுக்கு - தண்டனை கொடுத்து பிடிவிறாந்து, தணடனையை அமுல்படுத்த என்றல்லவா போட்டு இருக்க  வேண்டும்.

தவறான புரிதல். 

குற்றம் சாட்ட பட்டவரை நீதி மன்றம் கொண்டுவரும்

பிடிவிறாந்து தான் கொடுக்கப்பட்டிருக்கு.

இன்னும் குற்றன் என தீர்மானிக்கவில்லை. 

  • கருத்துக்கள உறவுகள்
10 minutes ago, Kadancha said:

ICC - அதுக்கு இதுவரை இருந்த நியாதிக்கத்தையும் மலினப்படுத்திவிட்டது. 

ICC மேற்கின் எதிரிகளை மட்டும் குறிவைக்கும் என்ற விமர்சனம் பல ஆண்டுகளாக உள்ளது.

இதை சொல்லித்தான் 2016 இல் என நினைக்கிறேன் ரஸ்யா ரோம் சரத்தில் வைத்த கையொப்பத்தை மீள பெற்றது.

123 நாடுகளில் பல திடீரென்று ரோம் சரத்தில் இருந்து விலகாதவரை - ICC யி. நியாயப்பாட்டில் அதிக மாற்றம் இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

DFID உருவாக்கப்பட்டதே ஜூலை 2016 இல்தான்.

உங்களை பொறுத்தவரையில் 

https://www.gov.uk/government/organisations/department-for-international-development/about

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, Kadancha said:

உங்களை பொறுத்தவரையில் 

https://www.gov.uk/government/organisations/department-for-international-development/about

ஓம்  DFID 2016 இல் உருவானது என்ற என் தரவு பிழைதான். 

ஆனால், மேற்கு இலங்கையின் தடை முகாம்களை நியாயப்படுத்தியது என்பதை நிறுவ இன்னும் நீங்கள் ஆதாரம் தரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

ஆனால், மேற்கு இலங்கையின் தடை முகாம்களை நியாயப்படுத்தியது என்பதை நிறுவ இன்னும் நீங்கள் ஆதாரம் தரவில்லை.

uk காசே கொடுத்தது. இதன் பின் நான் ஒன்றும் ...

https://webcache.googleusercontent.com/search?q=cache:BXErMzTszhMJ:https://socialistworker.co.uk/international/why-has-britain-funded-sri-lankan-detention-camps/&cd=5&hl=en&ct=clnk&gl=uk

 

 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Kadancha said:

முதலில் எந்த வெளி ஆட்களையும் உள்ளே விடாமல் இருந்த முகாமுக்குள், aid workers ஐ உள்ளே விடுவதற்கு இலங்க இணங்கியதால், அதை fund பண்ண வெளிநாடுகள் காசு கொடுத்தன? சரிதானே?

இது அடைக்கப்பட்ட மக்களின் நல வாழ்வை இட்டு மேற்கொள்ளபட்டது.

இது அல்ல நீங்கள் சொன்னது. நீங்கள் சொன்னீர்கள் மேற்கு இம்முகாம்களை நியாயபடுத்தியது என.

  • கருத்துக்கள உறவுகள்
34 minutes ago, Kadancha said:

குற்றம் என்று தீர்மானித்த பின் வழக்கு எதுக்கு - தண்டனை கொடுத்து பிடிவிறாந்து, தணடனையை அமுல்படுத்த என்றல்லவா போட்டு இருக்க  வேண்டும்.
 

எதுவாயினும், உண்மையான சிக்கலான பிரச்னை, பூகோள  அரசியல் மயப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்பட்டுவிட்டது.  

ICC - அதுக்கு இதுவரை இருந்த நியாதிக்கத்தையும் மலினப்படுத்திவிட்டது. 

ஒரு சாதாரண மனிதனுக்கு தெரியவேண்டயதை மாயாஜாலத்துடன் நீட்டுகிறீர்கள். முட்டுக் கொடுக்க வெளிக்கொண்டு?? 

நியாயம் தர்மம் ஏன் சட்டம் கூட மரத்துப்போச்சு???

Edited by விசுகு
பிழை திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, விசுகு said:

நியாயம் தர்மம் ஏன் சட்டம் கூட மரத்துப்போச்சு???

நாம் எல்லோரும் பெற்றோர்….

அந்த உள்ளுணர்வு கூட 😕

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kadancha said:

 

“We will not be prepared to fund closed camps after the monsoons.”

ஓம்…காசு தாறோம் உள்ள விடு என முதலில் போவது ….பிறகு அங்கே ஒரு சிஸ்டத்கை உருவக்கியபின்…காசில் இலங்கை தங்கி இருக்க தொடங்கிய பின்… இனி முகாம் தேவையில்லை, காசு தரமாட்டோம், முகாமை மூடு என்பது. மூட வைப்பது.

மேற்கின் இராஜதந்திரம் பற்றி சிலாகிக்கும் நீங்கள் இதை கிரகிப்பீர்கள் என்பது எனக்கு தெரியும்.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, goshan_che said:

முதலில் எந்த வெளி ஆட்களையும் உள்ளே விடாமல் இருந்த முகாமுக்குள், aid workers ஐ உள்ளே விடுவதற்கு இலங்க இணங்கியதால், அதை fund பண்ண வெளிநாடுகள் காசு கொடுத்தன? சரிதானே?

இது அடைக்கப்பட்ட மக்களின் நல வாழ்வை இட்டு மேற்கொள்ளபட்டது.

இது அல்ல நீங்கள் சொன்னது. நீங்கள் சொன்னீர்கள் மேற்கு இம்முகாம்களை நியாயபடுத்தியது என.

உங்களுக்கு DFID இந்த உண்மையான பரிமாணம் தெரியவில்லை. அதன கறுப்பு  பக்கம்  counter insurgency உடன் சம்பந்தப்பட்டது.
 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Kadancha said:

உங்களுக்கு DFID இந்த உண்மையான பரிமாணம் தெரியவில்லை. அதன கறுப்பு  பக்கம்  counter insurgency உடன் சம்பந்தப்பட்டது.
 

நிச்சயமாக. எல்லா நாடு கொடுக்கும் foreign aid உம், அதன் சுய நலன் சார்ந்தே.

அது pro insurgency ஆகவும் இருக்கலாம், counter insurgency ஆகவும் இருக்கலாம்.

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, விசுகு said:

 

இப்படி இங்கு பலரும்  எழுதுவதை  பார்க்கமுடிகிறது

உண்மையில் இது  தான்  எமது  பிரச்சினை  இழுபடக்காரணம்

மது உண்மைநிலை?

எமது  பலம் என்ன?

எமக்கென்று எத்தனை நாடுகள்??

 

 விசுகு இதை விபரமாக எழுதுங்களேன், நீங்கள் மாறியதை போல் நாங்களும் மாற

மது உண்மைநிலை?................

எமது  பலம் என்ன? ................

எமக்கென்று எத்தனை நாடுகள்??............

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.