Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

Published By: DIGITAL DESK 5

23 MAR, 2023 | 04:53 PM
image

(எம்.மனோசித்ரா)

நாட்டைக் கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளமை நியாயமானது. எனவே எம்மால் ஏற்கனவே வலியுறுத்தப்பட்டமைக்கமைய தற்போதாவது சர்வகட்சி அரசாங்கத்தை அமைப்பதற்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வகட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு நாம் தயார் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (23) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில் ,

கடன் பெற்றுள்ளமையை பட்டாசு கொளுத்தி கொண்டாடுவதைப் போன்று , அதனை மீள செலுத்துவதற்கான சூழலை ஏற்படுத்தக் கூடிய பொருளாதார ஸ்திரத்தன்மை உருவாக்கப்பட வேண்டும். பாரிய எரிமலையின் கீழ் நாம் நின்று கொண்டிருக்கின்றோம். அந்த தீயை அணைந்து சிறந்த நாட்டை எவ்வாறு உருவாக்குவது என்பது குறித்தே சிந்திக்க வேண்டியுள்ளது.

யார் ஆட்சி செய்தாலும் அந்த ஆட்சியாளர்கள் தற்போதுள்ள நெருக்கடிகளிலிருந்து நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டிய பொறுப்புள்ளது. தற்போது நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு அனைவரையும் ஒன்றிணையுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுக்கின்றார். ஆனால் கடந்த இரு வருடங்களுக்கு முன்னரிலிருந்தே நாம் இதனை வலியுறுத்திக் கொண்டிருக்கின்றோம்.

சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு எம்மால் பல சந்தர்ப்பங்களில் விடுக்கப்பட்ட கோரிக்கை , பொதுஜன பெரமுனவினரின் செயற்பாடுகளால் இடை நிறுத்தப்பட்டன. எனினும் நாம் இன்னும் அந்த நிலைப்பாட்டில் உறுதியாகவுள்ளோம். எனவே தற்போதேனும் சர்வகட்சி அரசாங்கத்தை அமைக்குமாறு ஜனாதிபதியிடம் வலியுறுத்துகின்றோம்.

அதற்கமைய குடும்ப அரசியல் அற்ற தூய்மையான அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் நாட்டைக் கட்டியெழுப்ப முடியும். பதவிகள் குறித்த எண்ணங்களை முற்றாகத் துறந்து ஆட்சியை பொறுப்பேற்க வேண்டும். ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் ஆட்சியின் பின்னர் யார் ஆட்சியமைத்தாலும் மீண்டும் நாணய நிதியத்திடம் கடன் பெற வேண்டிய நிலைமை ஏற்படும் என்றார்.

https://www.virakesari.lk/article/151268

  • கருத்துக்கள உறவுகள்

இவர் அடுத்த நசியல் கள்ளர். 

இவருக்கும் ஒரு ஆசை. 

அதென்னவோ, இலங்கையில் மட்டும், உச்ச பதவியை அனுபவித்தவர்கள், மீண்டும், MP ஆகி அரசியல் செய்ய பேராசை கொண்டு திரிவார்கள்

ஆக்குறைந்தது அந்த உயர் பதவிக்காவது மீண்டும் போட்டி போட்டால் கூட மரியாதையாக இருக்கலாம்.  

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

 

அதென்னவோ, இலங்கையில் மட்டும், உச்ச பதவியை அனுபவித்தவர்கள், மீண்டும், MP ஆகி அரசியல் செய்ய பேராசை கொண்டு திரிவார்கள்

ஆக்குறைந்தது அந்த உயர் பதவிக்காவது மீண்டும் போட்டி போட்டால் கூட மரியாதையாக இருக்கலாம்.  

இலங்கையிலும் ஜனாதிபதியாக இருந்து விட்டு அதன் பின் அடுத்த நிலை பதவிகளுக்கு போன சில்லறைகள் மைத்திரியும், மகிந்தவும்தான்?

அடுத்து இந்த லிஸ்டில் நரியும் சேரலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, ஏராளன் said:

சர்வகட்சி அரசாங்கத்தை அமைத்தால் அதில் பங்கேற்க தயார் - மைத்திரி

சுற்றிச் சுற்றி சுப்பர்ரை கொல்லைக்குள் நிற்கும்  குப்பன்..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

இலங்கையிலும் ஜனாதிபதியாக இருந்து விட்டு அதன் பின் அடுத்த நிலை பதவிகளுக்கு போன சில்லறைகள் மைத்திரியும், மகிந்தவும்தான்?

அடுத்து இந்த லிஸ்டில் நரியும் சேரலாம்.

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂
 

7 minutes ago, குமாரசாமி said:

சுற்றிச் சுற்றி சுப்பர்ரை கொல்லைக்குள் நிற்கும்  குப்பன்..

உலகத்திலேயே… தோசை பாட்டி வைத்து, ஜனாதிபதி ஆனதென்றால் சிங்கன் மைத்திரிதான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
19 minutes ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂

போகும் போது கதிரையில் போக வேணும் எண்டு ஆசையாம்🤣

20 minutes ago, தமிழ் சிறி said:

உலகத்திலேயே… தோசை பாட்டி வைத்து, ஜனாதிபதி ஆனதென்றால் சிங்கன் மைத்திரிதான். 🤣

அது அப்பம் எல்லோ?

  • கருத்துக்கள உறவுகள்
5 minutes ago, goshan_che said:

போகும் போது கதிரையில் போக வேணும் எண்டு ஆசையாம்🤣

அது அப்பம் எல்லோ?

ஓ.. நான், தோசை என நினைத்து விட்டேன்.
ஓரு சின்ன தோசை பாட்டி… மகிந்தவின் காதில் பூ சுற்றி,
My3‘ஐ.. ஜனாதிபதி ஆக்கினது சாதனைதான்.
இந்த மூஞ்சை எல்லாம் ஜனாதிபதியாக வரும் என்று, யாரும் நினைத்திருக்கவில்லை.
போதாக் குறைக்கு… சரவணபவனின் மகளின் “பேர்த்டே” பாட்டியையும் மனுசன் விட்டு வைக்கவில்லை. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, தமிழ் சிறி said:

ஓ.. நான், தோசை என நினைத்து விட்டேன்.
ஓரு சின்ன தோசை பாட்டி… மகிந்தவின் காதில் பூ சுற்றி,
My3‘ஐ.. ஜனாதிபதி ஆக்கினது சாதனைதான்.
இந்த மூஞ்சை எல்லாம் ஜனாதிபதியாக வரும் என்று, யாரும் நினைத்திருக்கவில்லை.
போதாக் குறைக்கு… சரவணபவனின் மகளின் “பேர்த்டே” பாட்டியையும் மனுசன் விட்டு வைக்கவில்லை. 🤣

அப்பத்துக்கே இலங்கை ஜனாதிபதி எண்டா..

கேக்குக்கு அமெரிக்க ஜனாயிபதியே ஆகலாம் என போயிருப்பார்🤣

யாரு கிட்ட?  ஹோம் பினான்ஸ் எண்டு நாமம் போட்ட முதலாளி கிட்ட?

பினாட்டை நாலா மடிச்சு கேக் எண்டு கொடுத்து முடிச்சிருப்பார் சோலியை🤣.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, தமிழ் சிறி said:

சம்பந்தன்…. எதிர்கட்சி தலைவராக இருந்து விட்டு, இப்பவும் சொந்த தொகுதிக்கு போகாமல்
எம்.பி. பதவி  வேணும் என்று ஒட்டிக் கொண்டிருக்கின்ற  வேலையும், சில்லறை வேலைதான். 😂

கொஞ்சம் பொறுங்கோ இன்னுமொரு செய்தி வருமாம்.....🤣

  • கருத்துக்கள உறவுகள்
On 24/3/2023 at 09:45, goshan_che said:

 

அது அப்பம் எல்லோ?

மஹிந்தா ஒன்றும் அப்பம் சுட்டு பாட்டி வைக்கேலை. மைத்திரி செய்த துரோகத்தை வர்ணிக்க; ஒரே மேசையில், ஒரே வரிசையில், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து விருந்து உண்டுவிட்டு கட்சியை விட்டு விலகி சென்றதை விளக்க அப்படி சொன்னார். அதற்காக மஹிந்தா ஒன்றும் யேசுவுமில்லை, ஒன்றும் புனிதரை காட்டிக்கொடுக்கவுமில்லை, இவர்கள் விலைக்கு வாங்கிய தமிழரை விட மைத்திரி செய்தது ஒன்றும் பெரிய குற்றமுமில்லை. போன மைத்திரி ஒழுங்காக ஆட்சி செய்யவுமில்லை ரத்தம் மணக்க மீண்டும் அதே பாதையில் தமிழரை பலி வாங்கி பழைய  குகைக்கே மீண்டார் கூழ் முட்டை மைத்திரி. இப்போ நீதிமன்றத்தோடு முட்டுறார் இருந்தும் ஆசை விடவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

மஹிந்தா ஒன்றும் அப்பம் சுட்டு பாட்டி வைக்கேலை. மைத்திரி செய்த துரோகத்தை வர்ணிக்க; ஒரே மேசையில், ஒரே வரிசையில், அவர்களோடு ஒன்றாக சேர்ந்து இருந்து விருந்து உண்டுவிட்டு கட்சியை விட்டு விலகி சென்றதை விளக்க அப்படி சொன்னார்.

இல்லை இது வெறும் சொலவடை அல்ல. 

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

Incidentally, the journalists who were invited for the discussion with the former President were served hoppers, which were the same food Sirisena ate with Rajapaksa, the night before his announcement where he broke ranks from Rajapaksa and announced his candidature at the 2015 Presidential Election, which he won, defeating his former leader, Rajapaksa.

https://www.colombotelegraph.com/index.php/ill-be-back-to-rule-sri-lanka-mahinda-rajapaksa-declares-while-serving-hoppers/amp/

  • கருத்துக்கள உறவுகள்

ஓஓ! அப்போ....  இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று முன்பே மஹிந்தா அறிந்தேதான் அப்பம் பரிமாறினாரோ? சொல்லி புலம்ப ஏற்ற வசீகரமான வசனநடை, அதற்கேற்ப ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மைத்திரி யார் என்பதை  நிரூபித்து, அவர் தொடங்கிய அரசியல் வாழ்விற்கு முடிவுரை வைத்தது. அவர் நாண்டுகொண்டு சாகவேண்டியவர் கதையின்படி.  

  • கருத்துக்கள உறவுகள்
33 minutes ago, goshan_che said:

இல்லை இது வெறும் சொலவடை அல்ல. 

உண்மையில் அப்படி ஒரு சம்பவம் நடந்தது.

Incidentally, the journalists who were invited for the discussion with the former President were served hoppers, which were the same food Sirisena ate with Rajapaksa, the night before his announcement where he broke ranks from Rajapaksa and announced his candidature at the 2015 Presidential Election, which he won, defeating his former leader, Rajapaksa.

https://www.colombotelegraph.com/index.php/ill-be-back-to-rule-sri-lanka-mahinda-rajapaksa-declares-while-serving-hoppers/amp/

 

8 minutes ago, satan said:

ஓஓ! அப்போ....  இப்படி ஒரு சம்பவம் நடக்குமென்று முன்பே மஹிந்தா அறிந்தேதான் அப்பம் பரிமாறினாரோ? சொல்லி புலம்ப ஏற்ற வசீகரமான வசனநடை, அதற்கேற்ப ஈஸ்ரர் குண்டுவெடிப்பு மைத்திரி யார் என்பதை  நிரூபித்து, அவர் தொடங்கிய அரசியல் வாழ்விற்கு முடிவுரை வைத்தது. அவர் நாண்டுகொண்டு சாகவேண்டியவர் கதையின்படி.  

"அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

 

"அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

சந்திரிக்காதான் மஹிந்தாவுக்கு எதிராக மைத்திரியை களமிறக்கியவர்!

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, satan said:

சந்திரிக்காதான் மஹிந்தாவுக்கு எதிராக மைத்திரியை களமிறக்கியவர்!

அப்ப, கணக்கு சரிதானே சாத்தான்.
பார்ட்டி வைக்க வேண்டிய கட் டாயத்தில்... சந்திரிகாதான் இருந்தவர். 

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, தமிழ் சிறி said:

அப்ப  பார்ட்டி" நடந்தது... சந்திரிகா வீட்டில் என நினைக்கின்றேன் 
உறுதியாக தெரியவில்லை.

அலரிமாளிகையில்?

அந்த சமயம் சந்திரிகா, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

மறைமுகமாக ரணில்+மங்கள+சந்திரிகா+மைத்திரி பேசிக்கொண்டர்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த கொழும்பு டெலிகிராப் - பொது வேட்பாளராக மைத்திரி என செய்தி வெளியிட்டது.

ஆனால், அந்த மைத்திரி - ரணிலில் மனைவி மைத்திரி என மங்கள கொழும்பு டெலிகிராபை நம்ப வைத்து விட்டார்.

ஆகவே சிறிசேன கடைசிவரைக்கும் சந்தேகிக்கபடாமல் இருந்து வேலையை கொடுத்தார்.

1 minute ago, தமிழ் சிறி said:

அப்ப, கணக்கு சரிதானே சாத்தான்.
பார்ட்டி வைக்க வேண்டிய கட் டாயத்தில்... சந்திரிகாதான் இருந்தவர். 

அண்ணை, பார்ட்டி கொடுத்தது மகிந்த. 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அலரிமாளிகையில்?

அந்த சமயம் சந்திரிகா, மகிந்தவை கடுமையாக விமர்சித்து வந்தார்.

மறைமுகமாக ரணில்+மங்கள+சந்திரிகா+மைத்திரி பேசிக்கொண்டர்கள்.

இதை எப்படியோ மோப்பம் பிடித்த கொழும்பு டெலிகிராப் - பொது வேட்பாளராக மைத்திரி என செய்தி வெளியிட்டது.

ஆனால், அந்த மைத்திரி - ரணிலில் மனைவி மைத்திரி என மங்கள கொழும்பு டெலிகிராபை நம்ப வைத்து விட்டார்.

ஆகவே சிறிசேன கடைசிவரைக்கும் சந்தேகிக்கபடாமல் இருந்து வேலையை கொடுத்தார்.

அண்ணை, பார்ட்டி கொடுத்தது மகிந்த. 

தகவலுக்கு நன்றி கோசான்.
பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

இதே மாதிரி...  சிறிமாவோ உயிருடன் இருக்கும் இறுதி காலத்தில்,
சந்திரிகா, அனுராவுக்கு இடையில் ஏதோ... லடாய் ஏற்பட..
சிறிமாவோ, இருவரையும்  கூப்பிட்டு... தோசைப் பார்ட்டி வைத்த கதை ஒன்றும் வந்தது.
அதனை கேள்விப்பட்டீர்களா? 😂

  • கருத்துக்கள உறவுகள்
Just now, தமிழ் சிறி said:

தகவலுக்கு நன்றி கோசான்.
பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

இதே மாதிரி...  சிறிமாவோ உயிருடன் இருக்கும் இறுதி காலத்தில்,
சந்திரிகா, அனுராவுக்கு இடையில் ஏதோ... லடாய் ஏற்பட..
சிறிமாவோ, இருவரையும்  கூப்பிட்டு... தோசைப் பார்ட்டி வைத்த கதை ஒன்றும் வந்தது.
அதனை கேள்விப்பட்டீர்களா? 😂

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

நீங்கள் சொல்லுறது... 100% சரி. 😛
@Nathamuni நாதத்தை... உடனடியாக மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

  • கருத்துக்கள உறவுகள்

மஹிந்தாவிடம் அப்பம் வாங்கி உண்டவர் அவரை விட்டு விலகி  நேராக சந்திரிகாவை சந்தித்து தமிழரின் வாக்கில் அரச கதிரை ஏறி அந்த மக்களையே பலிகொடுத்து பதவியிறங்கினார். ஆனால் அவர் கணக்கு இன்னும் முடியவில்லை காத்திருக்கிறது முடிவுக்காக.

26 minutes ago, தமிழ் சிறி said:

பழைய செய்தி என்ற படியால்... பல சம்பவங்கள் நினைவில் இல்லாமல் போய் விட்டது.

எத்தனை என்று நினைவில் வைத்திருப்பது? எல்லாம் நிரம்பி வழிந்து கலந்து மண்டையே குழம்புது எனக்கு.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

🤣உதுக்கு subject specialist @Nathamuni வந்து பதில் சொல்லுவார்🤣.

 

1 hour ago, தமிழ் சிறி said:

நீங்கள் சொல்லுறது... 100% சரி. 😛
@Nathamuni நாதத்தை... உடனடியாக மேடைக்கு அழைக்கின்றோம். 🤣

அய்யா தெரியாதைய்யா...

தோசை தமிழர்களது.... அநேகமா கிரிபத் ஆ இருக்கும்.

நான் நினைக்கிறேன், மகனுக்கு அம்மாவும், தம்பிக்கு அக்காவும் கலியாணம் கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்... 

ஏன் எண்டா, அவர்... வேற ஐடியாவில் இருந்தவர்.

என்ன ஐடியா எண்டு உடான்ச்சு சாமியார் விபரமா சொல்லுவார்... சிலவேளை ரணிலை கேட்டாலும் சொல்லுவார். 😁

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, Nathamuni said:

 

அய்யா தெரியாதைய்யா...

தோசை தமிழர்களது.... அநேகமா கிரிபத் ஆ இருக்கும்.

நான் நினைக்கிறேன், மகனுக்கு அம்மாவும், தம்பிக்கு அக்காவும் கலியாணம் கட்டி வைக்க யோசிச்சு இருக்கலாம்... 

ஏன் எண்டா, அவர்... வேற ஐடியாவில் இருந்தவர்.

என்ன ஐடியா எண்டு உடான்ச்சு சாமியார் விபரமா சொல்லுவார்... சிலவேளை ரணிலை கேட்டாலும் சொல்லுவார். 😁

Sri Lanka's former minister Mangala Samaraweera passes away | Tamil Guardian

மறைந்த முன்னாள் வெளிநாட்டமைச்சர்   மங்கள சமரவீரவும் லேசுப்பட்ட ஆளில்லையாம்..
என்று மகிந்த கூறியவர்.

  • கருத்துக்கள உறவுகள்

மைத்திரி; அப்பம் சாப்பிட்டதும், விட்டுப்பிரிந்ததும் பெரிய விடயமல்ல. கடைசிமட்டும் நம்பிக்கைக்குரியவராய் இருந்து, அப்பம் சாப்பிடும்வரை பதறாமல், அந்த குற்றச்சாட்டை மறுத்து, பொறுத்து வெளியேறி அதிர்ச்சி கொடுத்ததுதான் பெரிய விடயம். அதிலொன்று சொன்னார் பாருங்கள்! தேர்தல் முடிவு வரும்வரை ஒளித்திருந்தாராம், சரத் பொன்சேகாவின் நிலை, சிறை நிழலாடியிருக்கும். தமிழரை பிரித்து மோதவிட்டு குளிர் காய்ந்தவர்கள், துரோகம், காட்டிக்கொடுப்பு பற்றி பேசுவது வேடிக்கை. உலகத்துக்கு அது என்னவோ ஈஸ்ரர் குண்டுவெடிப்பு, ஆனால் இறந்தவர்களுக்கும் அவர்களின் குடும்பங்களுக்கும் தமிழருக்கும் அது புனித வெள்ளி! தமிழரின் வாக்கில் வென்ற மஹிந்தா அழித்ததும் அவர்களை, மைத்திரி குண்டு வைப்பித்தும் அவர்ளுக்கு, தமிழரால் கதிரை ஏற இருந்த பொன்சேகாவை இழுத்து விழுத்திய மஹிந்தவின் கொள்கைகளையே அவரும் பின்பற்றி தமிழரை அழித்தார் தொடர்ந்தும் செய்கிறார். அழித்தவர்களை வாழவைக்கும் இனம் என்னினம். வாழ வைத்தவர்களை அழிக்கும் இனம் மற்ற இனம். அதனாலேயே எங்களையே எல்லோரும் குறி வைக்கிறார்கள்.  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.