Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

ஞானம் பெற்றவர் புத்தர் ; ஞானம் அற்றவர் சரத் வீரசேகர - மறவன்புலோ சச்சிதானந்தம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: VISHNU

09 MAY, 2023 | 03:49 PM
image

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் இன்றையதினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

அந்த அறிக்கையில் உள்ளதாவது,

இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர்.

நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள்.

தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை.

புத்தரையும் இயேசுவையும் முகமதுவையும் வழிபாட்டிடங்கள் அமைத்தே வழிபட வேண்டும்.

சைவர்களுக்கு தமிழர்களுக்கு நிலமே கோயில் நீரே கோயில் காற்றே கோயில் வானமே கோயில் நெருப்பே கோயில்.

எனவே தமிழர்கள் சைவர்களின் கோயில்கள் அரசுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல. எத்திசைச் செல்லினும் சைவர்களுக்கு அத்திசை கோயிலே.

வினை வழி கருவறையில் பிறந்து தெளிவு பெற்றவர்கள் போதித்தவர்கள் வழிவந்த மதங்கள் யாவும் இலங்கைக்கு வந்தேறி மதங்கள். அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய வழிபாட்டிடங்கள் அமைக்கும் மதங்கள்.

மேற்கத்திய மத மாற்றிகளின் பரப்புரை மதமாற்ற உத்திகளில் ஒன்று Planting Churches. ஆசிய ஆபிரிக்க நாடுகளில் மக்களிடையே Planting churches உத்தியைப் பயன்படுத்துமாறு கோடிக் கணக்கில் பணம் வழங்கும் மதமாற்றச் சபைகள் ஆலோசனை சொல்கின்றன.

அதே உத்தியை இலங்கையில் புத்த மத மேலாதிக்க வாதிகள் கடைப்பிடிக்கிறார்கள்.

புத்த மதத்தவர் குடியேற்றம், சைவ மக்களின் நிலம் அபகரிப்பு, தொல்லியல் போர்வை, இவை காரணங்களாக அமையத் தான்தோன்றியாக அமைந்த சைவக் கோயில்களின் அருகே புத்த கோயில்களை அமைக்கிறார்கள் திரு. சரத்த வீரசேகரர் உள்ளிட்ட புத்த மேலாதிக்க வாதிகள்.

இவர்கள் கேட்கிறார்கள், தென் இலங்கையில் அமைந்த சைவக் கோயில்கள் சட்டத்துக்குள் அமைந்தனவா? என.

நிலத்தையும் நீரையும் காற்றையும் வானையும் நெருப்பையும் வழிபடச் சட்டம் எங்கே தேவை? 

அவற்றுக்கான குறியீடுகளான பாம்பும் வேம்பும் மயிலும் வேலும் சூலமும் சிவபெருமானும் பிள்ளையாரும் முருகனும் அமையச் சட்டங்கள் ஏன் தேவை?

புதிதாக வந்தவர் புத்தர். புதிதாக வந்தவர் இயேசு. புதிதாக வந்தவர் முகமது. இவர்கள் சார்ந்த வழிபாட்டிடங்கள் அமைக்கச் சட்டங்கள் தேவை. 

படைத் துறையில் வல்லவராக இருப்பவர், தத்துவத் துறையில் வல்லவராக சட்டத் துறையில் வல்லவராக இருப்பதில்லை என்பதைத் திரு சரத்த வீரசேகரரின் கூற்றுகள் தெளிவாகக் காட்டியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/154897

  • கருத்துக்கள உறவுகள்

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐயா கருத்துச் சொல்வதில்லை என்று இவரை திட்டித்தீர்த்தவர்கள்.. இதனை வாசிக்கவே இல்லைப் போலும். 

இதற்காக நெடுக்ஸ் இவரின் தீவிர ஆதரவாளர் என்பது பொருள் அல்ல. இவரது குரலும் பெரும்பான்மை தமிழ் மக்களின் குரலுடன் கூட ஒலிப்பது நன்மை என்பது சுட்டிக்காட்டப்படுவதும்.. இந்தக் கருத்தை வரவேற்பதும் ஐயாவின் எதிர்கால செயற்பாடுகள் சீர்பெற உதவலாம். 

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, nedukkalapoovan said:

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐயா கருத்துச் சொல்வதில்லை என்று இவரை திட்டித்தீர்த்தவர்கள்.. இதனை வாசிக்கவே இல்லைப் போலும். 

இதற்காக நெடுக்ஸ் இவரின் தீவிர ஆதரவாளர் என்பது பொருள் அல்ல. இவரது குரலும் பெரும்பான்மை தமிழ் மக்களின் குரலுடன் கூட ஒலிப்பது நன்மை என்பது சுட்டிக்காட்டப்படுவதும்.. இந்தக் கருத்தை வரவேற்பதும் ஐயாவின் எதிர்கால செயற்பாடுகள் சீர்பெற உதவலாம். 

சரியான கருத்து. :thumbs_up:

  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு விகாரைகள் பெருகுமளவும் பொத்திக்கொண்டு பாத்துக்கொண்டு பாராததுபோல, அதை மறைக்க கிறிஸ்த்தவர்களுக்கெதிராக சுவரொட்டியோடு  தமிழரை குழப்ப ஓடித்திரிந்தவர். இப்போ இவருக்கெதிராக விமர்சனம் எழுந்ததால் தவிர்க்கமுடியாமல் சவுண்டு விடுகிறார். 

12 hours ago, ஏராளன் said:

மேற்கத்திய மத மாற்றிகளின் பரப்புரை மதமாற்ற உத்திகளில் ஒன்று Planting Churches. ஆசிய ஆபிரிக்க நாடுகளில் மக்களிடையே Planting churches உத்தியைப் பயன்படுத்துமாறு கோடிக் கணக்கில் பணம் வழங்கும் மதமாற்றச் சபைகள் ஆலோசனை சொல்கின்றன.

ஆனால் இங்கே, தமிழனின் சொத்தில், அவர்களுக்கு பொருத்தமில்லாத, விருப்பமில்லாத, அவர்களால் பின்பற்றப்படாத மதம் அவர்களின் அனுமதியோ, விருப்போ இல்லாமல் எதிர்ப்பின், போராட்டத்தின் மத்தியில்  வலுக்கட்டாயமாக உருவாக்கப்படுகிறது அதை நிஞாயப்படுத்த சமப்படுத்த முனைகிறார். நேரடியாக சிங்களத்தை சாட முடியவில்லை. பலவந்தமாக, பணத்துக்காக, சுய தேவைக்காக  செய்யப்படும், திணிக்கப்படும்  காரியம் உண்மையானதல்ல, நிலைப்பதுமல்ல.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

Published By: VISHNU

09 MAY, 2023 | 03:49 PM
image

சரத் வீரசேகரவின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் முகமாக மறவன்புலோ சச்சிதானந்தம் அவர்கள் இன்றையதினம் ஊடகங்களுக்கு அறிக்கை ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். 

அந்த அறிக்கையில் உள்ளதாவது,

இலங்கை சிவபூமி. பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர்.

நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள்.

தாயின் கருவறையில் வினைவழிப் பிறந்த மனிதரைக் கடவுளாகத் தமிழர் கொள்வதில்லை, சைவர் கொள்வதில்லை.

புத்தரையும் இயேசுவையும் முகமதுவையும் வழிபாட்டிடங்கள் அமைத்தே வழிபட வேண்டும்.

சைவர்களுக்கு தமிழர்களுக்கு நிலமே கோயில் நீரே கோயில் காற்றே கோயில் வானமே கோயில் நெருப்பே கோயில்.

எனவே தமிழர்கள் சைவர்களின் கோயில்கள் அரசுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல. எத்திசைச் செல்லினும் சைவர்களுக்கு அத்திசை கோயிலே.

வினை வழி கருவறையில் பிறந்து தெளிவு பெற்றவர்கள் போதித்தவர்கள் வழிவந்த மதங்கள் யாவும் இலங்கைக்கு வந்தேறி மதங்கள். அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய வழிபாட்டிடங்கள் அமைக்கும் மதங்கள்.

மேற்கத்திய மத மாற்றிகளின் பரப்புரை மதமாற்ற உத்திகளில் ஒன்று Planting Churches. ஆசிய ஆபிரிக்க நாடுகளில் மக்களிடையே Planting churches உத்தியைப் பயன்படுத்துமாறு கோடிக் கணக்கில் பணம் வழங்கும் மதமாற்றச் சபைகள் ஆலோசனை சொல்கின்றன.

அதே உத்தியை இலங்கையில் புத்த மத மேலாதிக்க வாதிகள் கடைப்பிடிக்கிறார்கள்.

புத்த மதத்தவர் குடியேற்றம், சைவ மக்களின் நிலம் அபகரிப்பு, தொல்லியல் போர்வை, இவை காரணங்களாக அமையத் தான்தோன்றியாக அமைந்த சைவக் கோயில்களின் அருகே புத்த கோயில்களை அமைக்கிறார்கள் திரு. சரத்த வீரசேகரர் உள்ளிட்ட புத்த மேலாதிக்க வாதிகள்.

இவர்கள் கேட்கிறார்கள், தென் இலங்கையில் அமைந்த சைவக் கோயில்கள் சட்டத்துக்குள் அமைந்தனவா? என.

நிலத்தையும் நீரையும் காற்றையும் வானையும் நெருப்பையும் வழிபடச் சட்டம் எங்கே தேவை? 

அவற்றுக்கான குறியீடுகளான பாம்பும் வேம்பும் மயிலும் வேலும் சூலமும் சிவபெருமானும் பிள்ளையாரும் முருகனும் அமையச் சட்டங்கள் ஏன் தேவை?

புதிதாக வந்தவர் புத்தர். புதிதாக வந்தவர் இயேசு. புதிதாக வந்தவர் முகமது. இவர்கள் சார்ந்த வழிபாட்டிடங்கள் அமைக்கச் சட்டங்கள் தேவை. 

படைத் துறையில் வல்லவராக இருப்பவர், தத்துவத் துறையில் வல்லவராக சட்டத் துறையில் வல்லவராக இருப்பதில்லை என்பதைத் திரு சரத்த வீரசேகரரின் கூற்றுகள் தெளிவாகக் காட்டியுள்ளன என குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/154897

புத்தரையும் , வீரசேகரவையும் விடுங்கள். சச்சி ஐயாவுக்கு இப்போதுதான் ஞானம் பிறந்திருக்குது போல. 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, nedukkalapoovan said:

சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு எதிராக ஐயா கருத்துச் சொல்வதில்லை என்று இவரை திட்டித்தீர்த்தவர்கள்.. இதனை வாசிக்கவே இல்லைப் போலும். 

இதற்காக நெடுக்ஸ் இவரின் தீவிர ஆதரவாளர் என்பது பொருள் அல்ல. இவரது குரலும் பெரும்பான்மை தமிழ் மக்களின் குரலுடன் கூட ஒலிப்பது நன்மை என்பது சுட்டிக்காட்டப்படுவதும்.. இந்தக் கருத்தை வரவேற்பதும் ஐயாவின் எதிர்கால செயற்பாடுகள் சீர்பெற உதவலாம். 

 

1) எனவே தமிழர்கள் சைவர்களின் கோயில்கள் அரசுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல. 

2) வினை வழி கருவறையில் பிறந்து தெளிவு பெற்றவர்கள் போதித்தவர்கள் வழிவந்த மதங்கள் யாவும் இலங்கைக்கு வந்தேறி மதங்கள். அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய வழிபாட்டிடங்கள் அமைக்கும் மதங்கள்.

3) மேற்கத்திய மத மாற்றிகளின் பரப்புரை மதமாற்ற உத்திகளில் ஒன்று Planting Churches. ஆசிய ஆபிரிக்க நாடுகளில் மக்களிடையே Planting churches உத்தியைப் பயன்படுத்துமாறு கோடிக் கணக்கில் பணம் வழங்கும் மதமாற்றச் சபைகள் ஆலோசனை சொல்கின்றன.

4) நிலத்தையும் நீரையும் காற்றையும் வானையும் நெருப்பையும் வழிபடச் சட்டம் எங்கே தேவை? 

5) அவற்றுக்கான குறியீடுகளான பாம்பும் வேம்பும் மயிலும் வேலும் சூலமும் சிவபெருமானும் பிள்ளையாரும் முருகனும் அமையச் சட்டங்கள் ஏன் தேவை?

5) புதிதாக வந்தவர் புத்தர். புதிதாக வந்தவர் இயேசு. புதிதாக வந்தவர் முகமது. இவர்கள் சார்ந்த வழிபாட்டிடங்கள் அமைக்கச் சட்டங்கள் தேவை. 

 

சச்சியர் சரத் வீரசேகரவைத் திட்டியதைவிட, மற்றயவர்களைத் திட்டியதுதான் அதிகம். 

இதில் எதை வரவேற்கச் சொல்கிறீர்கள்? 

  • nunavilan changed the title to ஞானம் பெற்றவர் புத்தர் ; ஞானம் அற்றவர் சரத் வீரசேகர - மறவன்புலோ சச்சிதானந்தம்
  • கருத்துக்கள உறவுகள்

ஆகவே சைவர்கள் கோயில் கட்ட அனுமதி தேவை இல்லை என்கிறார் சச்சி!!! என்னே ஓரு வறட்டுத் தனமான வாதம்? கற்காலத்திலா வாழ்கிறார் இவர்? சட்டம் ஆட்சி செய்யும் ( செய்ய வேண்டும் என்று நாம் விரும்பும் ) நாட்டில் என்ன தைரியத்தோடு இப்படி இவரால் பேச முடிகிறது?

இவரது கூற்றுப் படி நடு ரோட்டில் நடராஜர் சிலையை வைத்து வழிபாடு நடத்த முடியுமா என்ன? சுத்தப் பைத்தியக்காரக் கதை அல்லவா இவரின் தர்க்கம்?

இவர் சைவத்தை வளர்ப்பவராகத் தெரியவில்லை, மெது மெதுவாக சைவம் தனது தர்க்க நியாயங்களை, மெய்யியலை கைவிடச் செய்து அதை வெறும் ஆபிரிக்கர்களின் மூதாதையினர் வழிபாடாக, இயற்கை வழிபாடாக சுருக்கி சைவத்தை ஒழுங்கமைகப்பட்ட மத நிலையில் இருந்து சிறு குழு வழிபாடு என்கிற நிலைக்கு இறக்கி விடப் பார்க்கிறார். இதுவே இவருக்கு மேலிடத்தில் இருந்து இட்ட பணி. அதை செவ்வனே செய்து வருகிறார் சச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

பாம்பையும் வேம்பையும் கல்லையும் மண்ணையும் நீரையும் தீயையும் வானையும் காற்றையும் சிவனாக வழிபடுவோர் சைவர். இயற்கையை, ஐம்பூதங்களை, சிவபெருமானாகக் கொள்வோர் சைவர்.

 

23 hours ago, ஏராளன் said:

நாகர்களாய் இயக்கர்களாய் தமிழர்களாய் சைவர்களாய் இலங்கையின் ஆதி குடிகளாய் வாழ்கின்ற மக்களுக்கு இயற்கையே கடவுள்.

 

23 hours ago, ஏராளன் said:

புத்தரையும் இயேசுவையும் முகமதுவையும் வழிபாட்டிடங்கள் அமைத்தே வழிபட வேண்டும்

 

23 hours ago, ஏராளன் said:

சைவர்களுக்கு தமிழர்களுக்கு நிலமே கோயில் நீரே கோயில் காற்றே கோயில் வானமே கோயில் நெருப்பே கோயில்.

 

23 hours ago, ஏராளன் said:

தமிழர்கள் சைவர்களின் கோயில்கள் அரசுகளின் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டுக் கட்டப்பட்டவை அல்ல. எத்திசைச் செல்லினும் சைவர்களுக்கு அத்திசை கோயிலே.

 

23 hours ago, ஏராளன் said:

அரசுகளின் சட்ட திட்டங்களுக்கு அமைய வழிபாட்டிடங்கள் அமைக்கும் மதங்கள்.

 

23 hours ago, ஏராளன் said:

சைவக் கோயில்களின் அருகே புத்த கோயில்களை அமைக்கிறார்கள்

 

23 hours ago, ஏராளன் said:

இவர்கள் கேட்கிறார்கள், தென் இலங்கையில் அமைந்த சைவக் கோயில்கள் சட்டத்துக்குள் அமைந்தனவா? என

 

23 hours ago, ஏராளன் said:

நிலத்தையும் நீரையும் காற்றையும் வானையும் நெருப்பையும் வழிபடச் சட்டம் எங்கே தேவை?

 

23 hours ago, ஏராளன் said:

அவற்றுக்கான குறியீடுகளான பாம்பும் வேம்பும் மயிலும் வேலும் சூலமும் சிவபெருமானும் பிள்ளையாரும் முருகனும் அமையச் சட்டங்கள் ஏன் தேவை?

 

23 hours ago, ஏராளன் said:

புதிதாக வந்தவர் புத்தர். புதிதாக வந்தவர் இயேசு. புதிதாக வந்தவர் முகமது. இவர்கள் சார்ந்த வழிபாட்டிடங்கள் அமைக்கச் சட்டங்கள் தேவை. 

ஐயோ! இந்த மனுஷனின் லொள்ளு தாங்க முடியவில்லை, சத்தியமாய் யாராவது சொல்லுங்கோ ..... இந்தமனுஷன் சுய அறிவோடுதான் பேசுகிறாரா என்று? சைவர்களுக்கு சட்டமும் தேவையில்லை, கட்டடங்களும் (கோயில்)தேவையில்லை வழிபடுவதற்கு என்கிறார்.  ஜேசுவுக்கும், புத்தருக்கும், முகமதுவுக்குந்தான் வழிபாட்டிடங்கள் தேவை என்கிறார், பிறகு தங்கள் கோயில்களுக்கருகில் ஆலயம் அமைத்த கிறிஸ்தவர்களை விரட்டி விட்டோம் என்று வீரம் பேசுகிறார், அப்போ சைவ ஆலயங்களை அழித்து விகாரைகள் எழுவது சரி என்கிறாரா? பாம்பையும், வேலையும், ஐம்பூதங்களையும் வணங்குவதற்கு எதற்கு கட்டடங்கள் என்கிறார்? புத்தம் மதம் அல்ல, புத்தன் பெயரில் சிங்களம் குடியேறுகிறது, நிலத்தை அபகரிக்கிறது என்பது தெரியாமலா உளறுகிறார்? அல்லது பரவாயில்லை என்கிறாரா? இதற்கு இந்த மனுஷன் பேசாமலே இருந்திருக்கலாம்.      

2 hours ago, பகிடி said:

சைவர்கள் கோயில் கட்ட அனுமதி தேவை இல்லை என்கிறார் சச்சி!!!

      இல்லை! சைவர்கள் வழிபடுவதற்கு கட்டடங்களே (கோயில்களே) தேவையில்லை என்கிறார் சச்சியர். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.