Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் மாணவி 591 மதிப்பெண்கள் பெற்று சாதனை

 

IMG-20230511-200357.jpg

இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் மாணவி 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 591 மதிப்பெண்கள் பெற்று சாதித்துள்ளார்.மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர். மதுரையில் ஆனையூர் பகுதியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 500க்கும் மேற்பட்டோர் வசிக்கும் நிலையில், இங்குள்ள 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் மாவட்டம் முழுவதுமுள்ள பல்வேறு அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், உதயராஜ் என்பவரின் மகள் திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார். தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண் பெற்றுள்ளார். 2022-23 கல்வியாண்டில் 8 மாணவ, மாணவிகள் 12ம் வகுப்பு தேர்வு எழுதிய நிலையில், உதயராஜ் என்பவரின் மகள் திரித்துஷா கூடல்நகர் பகுதியில் உள்ள புனித அந்தோணியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பில் ஆர்ட்ஸ் பிரிவில் பயின்று 591 மதிப்பெண் எடுத்துள்ளார்.

தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண் பெற்றுள்ளார். “பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. ஆனால், அகதிகள் முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது. அதனால் வணிகவியல் படித்துள்ளேன். ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” என திரித்துஷா தெரிவித்துள்ளார். “பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை.

ஆனால், அகதிகள் முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது. அதனால் வணிகவியல் படித்துள்ளேன். ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” என திரித்துஷா தெரிவித்துள்ளார். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாணவி திரித்துஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவருக்கு பரிசுகளும் வழங்கினர். மேலும், மாணவியிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படிப்பிற்கான கல்வி உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் மாணவி திரித்துஷாவை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்து அவருக்கு பரிசுகளும் வழங்கினர். மேலும், மாணவியிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு மேற்படிப்பிற்கான கல்வி உதவிகளை செய்வதாக உறுதியளித்துள்ளார்.

https://vanakkamlondon.com/world/tamilnadu/2023/05/193587/

டிஸ்கி 

இளம் தளிரின்ட மருத்துவ கனவை நாசமாக்குகினம்..😢

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

தமிழில் – 97, ஆங்கிலத்தில் – 96 எக்கனாமிக்ஸ் – 99 , வணிகவியல் 99, கணக்குப்பதிவியல் – 100, கம்ப்யூட்டர் அப்ளிகேஷனில் – 100 என மொத்தம் 591 மதிப்பெண் பெற்றுள்ளார். “பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை. ஆனால், அகதிகள் முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது. அதனால் வணிகவியல் படித்துள்ளேன். ஆடிட்டராக வேண்டும் என்பது எனது விருப்பம்” என திரித்துஷா தெரிவித்துள்ளார். “பத்தாம் வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை.

600ற்கு... 591 புள்ளிகள் எடுத்த, திரித்துஷா உதயராஜ்´ற்கு வாழ்த்துக்கள். 👋

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

இளம் தளிரின்ட மருத்துவ கனவை நாசமாக்குகினம்..😢

புரட்சி 
ஆர்ட்ஸ் குரூப்பில் படித்துவிட்டு மருத்துவராகலாமா ..? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, அக்னியஷ்த்ரா said:

புரட்சி 
ஆர்ட்ஸ் குரூப்பில் படித்துவிட்டு மருத்துவராகலாமா ..? 

 

ஆக இயலாது தோழர்.. "நாசமாக்கிவிட்டினம்" என்று வந்திருக்க வேண்டும்..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

வகுப்பு முடித்தவுடன் அறிவியல் பிரிவை தேர்ந்தெடுத்து மருத்துவராக வேண்டும் என்று தான் எனக்கு ஆசை.

 

14 hours ago, புரட்சிகர தமிழ்தேசியன் said:

ஆனால், அகதிகள் முகாமில் உள்ளதால் எங்களால் படிக்க முடியாது.

எமது இனம்  தமிழ் இனம்   தொப்புள்கொடி உறவுகள்.....என்று சொல்லி கொண்டு...எதற்காக  மனிதர்கள் மத்தியில் இப்படி பகுபாடு காட்டவேண்டும். ?? ஐரோப்பாவில் இப்படி   இல்லை  .....வாழ்த்துக்கள்  

  • கருத்துக்கள உறவுகள்

May be an image of 2 people and text that says 'இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த மாணவி... 591 மதிப்பெண்கள் எடுத்து சாதனை! Madurai exam result'

உரிய புள்ளிகள் எடுத்தாலும் அகதிகள் என்பதால் உயர் கல்வி (மருத்துவ கல்வி) மறுக்கப்படுகிறது.
இந்த அகதிகளும் இந்துக்கள்தான். ஆனாலும் இவர்களுக்கு உயர் கல்வியைக்கூட வழங்காத இந்திய அரசு இந்துத் தமிழீழம் எடுக்க உதவும் என்பவர்களை என்னவென்று அழைப்பது?
  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துகள்

  • கருத்துக்கள உறவுகள்
37 minutes ago, தமிழ் சிறி said:

இந்த அகதிகளும் இந்துக்கள்தான். ஆனாலும் இவர்களுக்கு உயர் கல்வியைக்கூட வழங்காத இந்திய அரசு இந்துத் தமிழீழம் எடுக்க உதவும் என்பவர்களை என்னவென்று அழைப்பது?

இலங்கையில் பவுத்த விரிவாக்கத்திற்கு நிதி வளம், ஆலோசனை கொடுப்பது இந்தியா. எம்மை முழுமூச்சாக அழித்தது இந்தியா. சைவ ஆலயங்கள் இடிக்கப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்காது மவுனம் காத்தது இந்தியா. முப்பத்தைந்து ஆண்டுகளாக பதின்மூன்று என்ற ஒன்றை வைத்து பூச்சாண்டி காட்டுவது இந்தியா. இலங்கை நன்கு அறிந்து வைத்திருக்கிறது; இந்தியா ஒருபோதும் இலங்கைத்தமிழர் நலன் காக்காது, தானே ஏதாவது கொடுக்க முன்வந்தாலும் இந்தியா மறுத்து வேறொன்று சொல்லும் என்பது. அதனால் அதற்கு இலங்கை சைவரைப்பற்றி கவலையில்லை ஆனால் கிறிஸ்தவ தமிழரால்  உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிடும் என அச்சம் கொள்கிறது, அதனாலேயே கிறிஸ்தவர்களையும் சைவர்களையும் மோதவிட்டு கிறிஸ்தவர்கள் அழிந்தபின் சைவர்களை தனிமைப்படுத்தி கூண்டோடு அழித்து  விட்டால்  நீண்டநாள் கனவு நிறைவேறும், கேள்வி கேட்க யாருமில்லை, பொறுப்புக்கூற வேண்டிய தேவையுமில்லை. இத்தனைக்கு பிறகும் இந்தியா தமிழருக்கு விடிவு பெற்றுத்தரும் என கண்மூடித்தனமாய் நம்பும், அறிக்கைவிடும் மூடர் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே!

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, satan said:

இலங்கையில் பவுத்த விரிவாக்கத்திற்கு நிதி வளம், ஆலோசனை கொடுப்பது இந்தியா. எம்மை முழுமூச்சாக அழித்தது இந்தியா. சைவ ஆலயங்கள் இடிக்கப்படும்போது எதிர்ப்பு தெரிவிக்காது மவுனம் காத்தது இந்தியா. முப்பத்தைந்து ஆண்டுகளாக பதின்மூன்று என்ற ஒன்றை வைத்து பூச்சாண்டி காட்டுவது இந்தியா. இலங்கை நன்கு அறிந்து வைத்திருக்கிறது; இந்தியா ஒருபோதும் இலங்கைத்தமிழர் நலன் காக்காது, தானே ஏதாவது கொடுக்க முன்வந்தாலும் இந்தியா மறுத்து வேறொன்று சொல்லும் என்பது. அதனால் அதற்கு இலங்கை சைவரைப்பற்றி கவலையில்லை ஆனால் கிறிஸ்தவ தமிழரால்  உலகுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிடும் என அச்சம் கொள்கிறது, அதனாலேயே கிறிஸ்தவர்களையும் சைவர்களையும் மோதவிட்டு கிறிஸ்தவர்கள் அழிந்தபின் சைவர்களை தனிமைப்படுத்தி கூண்டோடு அழித்து  விட்டால்  நீண்டநாள் கனவு நிறைவேறும், கேள்வி கேட்க யாருமில்லை, பொறுப்புக்கூற வேண்டிய தேவையுமில்லை. இத்தனைக்கு பிறகும் இந்தியா தமிழருக்கு விடிவு பெற்றுத்தரும் என கண்மூடித்தனமாய் நம்பும், அறிக்கைவிடும் மூடர் இன்னும் உலகில் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமே!

கனடாவில் உள்ள இந்தியர்கள் வழிபடும் இந்துக் கோவிலின் சுவரில்...
கறுப்பு மையால், யாரோ ஏதோ... எழுதியதற்கு,
கனடாவில் உள்ள இந்தியத் தூதரகம் முதல் டெல்லியுள்ள இந்திய அரசு வரை...
தமது கண்டனங்களை கனடா அரசுக்கு தெரிவித்து இருந்தது.

போலி அரசியல்வாதிகள். தமக்கு சாதகமான இடங்களில் மட்டும் வாயை திறப்பார்கள்.
இதற்காகத் தன்னும் இந்தியா என்னும் நாடு பல பகுதிகளாக பிரிந்து போக வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, தமிழ் சிறி said:

இந்தியா என்னும் நாடு பல பகுதிகளாக பிரிந்து போக வேண்டும்.

அதுவரை எங்களுக்கு விடிவு இல்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.