Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் – மாவை நம்பிக்கை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் – மாவை நம்பிக்கை

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கான தீர்மானம், தமிழரசுக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் என அக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.அத்துடன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைமைத்துவத்துக்கான போட்டிக்களத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோரும், சீ.வி.கே.சிவஞானமும் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கட்சியின் வட்டாரக்கிளைகள் தெரிவு செய்யும் செயற்பாடுகள், யாழ்ப்பாணம், திருகோணமலை, அம்பாறை, மட்டக்களப்பு, முல்லைத்தீவு மற்றும் மன்னார் உள்ளிட்ட மாவட்டங்களில் முழுமையடையாத காரணத்தினால் குறித்த பணிகள் பூர்த்தி செய்த பின்னர், கட்சியின் தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் மத்தியகுழு உறுப்பினர்கள் உள்ளிட்ட பதவிநிலைகளுக்கான விண்ணப்பங்களை கோரப்படும் எனவும் தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டமும் வருடாந்த மாநாடு மற்றும் கட்சிக்குள் தலைமைத்துவத்திற்கான போட்டிகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகக்கான நிரந்தர தீர்வு, உடனடிப் பிரச்சினைகளுக்கான தீர்வு ஆகியன தொடர்பாக்கவும் இந்த மாநாட்டின் பொது தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.(15)

 

http://www.samakalam.com/தமிழ்த்-தேசியக்-கட்சிகள்/

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, கிருபன் said:

தொடர்ச்சியாக பிற்போடப்பட்டு வரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்சபைக் கூட்டமும் வருடாந்த மாநாடு மற்றும் கட்சிக்குள் தலைமைத்துவத்திற்கான போட்டிகள் குறித்து கருத்து வெளியிடும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அப்போ, கட்சியின் பேச்சாளர் பதவி என்னமாதிரி? யாருக்கு என்று தீர்மானித்து விட்டீர்களா?

  • கருத்துக்கள உறவுகள்

இப்போதைக்கு...  தேர்தல் ஒன்றும்  வராது போலுள்ளது.
தேர்தல்... வந்தால், நாங்கள் பிரிந்து நின்று அடிபடுவோம்.

13 minutes ago, satan said:

அப்போ, கட்சியின் பேச்சாளர் பதவி என்னமாதிரி? யாருக்கு என்று தீர்மானித்து விட்டீர்களா?

அவராக, சொந்த உழைப்பில்... எடுத்துக் கொண்ட பதவியை, எப்படி பறிக்கிறது. animiertes-lachen-bild-0072.gif

  • கருத்துக்கள உறவுகள்
48 minutes ago, தமிழ் சிறி said:

இப்போதைக்கு...  தேர்தல் ஒன்றும்  வராது போலுள்ளது.
தேர்தல்... வந்தால், நாங்கள் பிரிந்து நின்று அடிபடுவோம்.

அவராக, சொந்த உழைப்பில்... எடுத்துக் கொண்ட பதவியை, எப்படி பறிக்கிறது. animiertes-lachen-bild-0072.gif

என்ன சிறியர் இப்பிடி பிரண்டு பிரண்டு சிரிக்கிறீர்கள்? ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது போலுள்ளது தெற்கு ஆரவாரப்படுவதைப்பாத்தால். த. தே. கூட்டமைப்புக்கு யாரை தெரிவதென்கிற சங்கடம் ஏற்படப்போகிறது.

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, satan said:

என்ன சிறியர் இப்பிடி பிரண்டு பிரண்டு சிரிக்கிறீர்கள்? ஜனாதிபதி தேர்தல் வரப்போகிறது போலுள்ளது தெற்கு ஆரவாரப்படுவதைப்பாத்தால். த. தே. கூட்டமைப்புக்கு யாரை தெரிவதென்கிற சங்கடம் ஏற்படப்போகிறது.

கூட்டமைப்பின் ஆதரவு ரணிலுக்குத்தான். 
அதுக்குதான்... ரணில், இனப் பிரச்சினை தீர்வுக்கு  
பேச்சுவார்த்தை என்ற தூண்டிலைப் போட்டு இவர்களை அணைத்து வைத்திருக்கிறார்.
தேர்தல்... முடிந்த பின், அவர் இவையளை கழட்டி விட..
இவர்களும்.. நம்பி ஏமாந்து போனோம் என்று ஒரு அறிக்கையை  விட்டுட்டு..
ஆழ்ந்த உறக்கத்திற்கு போய் விடுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, கிருபன் said:

தமிழ்த் தேசியக் கட்சிகள் அனைத்தும் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படும் – மாவை நம்பிக்கை

சனநாய வேடத்துள் உட்கட்சி விமர்சனங்களையோ, கூட்டுக்கட்சிகளின் கோரிக்கைகளையோ செவிமடுக்காது கூட்டமைப்பைச் சீரழித்துவிட்டு கூட்டமைப்பே இல்லாத 'கழுதை தேய்ந்து கட்டெடறும்பானது' என்ற நிலையில் ஞானோதயம். எல்லாம் நாடாளுமன்ற சுகபோகம் செய்கின்ற வேலை.

  • கருத்துக்கள உறவுகள்

சுமத்திரன்>சிறிதரன் >சிவஞானம்  மூவரில் சிறிதரன் ஓரளவு பரவாயில்லை. சுமத்திரன் தலைவராக வந்தால் தமிழ்த்தேசியத்தைகு; கூறுபோட்டு விடுவார். தமிழரசுக் கட்சி மேலும் உடையுமு;. சிறிதரன் ஓரளவு எல்லோரையும் அனுசரித்துப் போகக் கூடியவர்.மக்கள் வசல்வாக்கும் உள்ளவர். ஆனால் எல்லாப்பக்கத்துக்கும் மாறி மாறி கதைப்பார். ஒருபக்கம் சுமத்தரனை ஆதரிப்பார். மறுபுறம் மாவையை ஆதரிப்பார்..சம்பந்தரும் சுமத்திரனும் சொல்வதை மறுக்காமல் தலையாட்டுவார். ஆளுமை உடையவர் எனச் சொல்ல முடியாது. சுமத்திரனுக்கு ஆளுமை உண்டு. எல்லோரையும் அனுசரித்துப் போகமாட்டார்.சிவஞானம் மக்கள் செல்வாக்கில்லாதவர். மூவரில் சிறிதரனை ஏற்றுக் கொள்ளலாம். 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

கூட்டமைப்பின் ஆதரவு ரணிலுக்குத்தான். 
அதுக்குதான்... ரணில், இனப் பிரச்சினை தீர்வுக்கு  
பேச்சுவார்த்தை என்ற தூண்டிலைப் போட்டு இவர்களை அணைத்து வைத்திருக்கிறார்.
தேர்தல்... முடிந்த பின், அவர் இவையளை கழட்டி விட..
இவர்களும்.. நம்பி ஏமாந்து போனோம் என்று ஒரு அறிக்கையை  விட்டுட்டு..
ஆழ்ந்த உறக்கத்திற்கு போய் விடுவார்கள்.

ஆனாலும் மாவையர் அதற்கிடையில் மயிலிட்டியில் 2 மாடி வீடு கட்டிவிடுவார்..

  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, nochchi said:

சனநாய வேடத்துள் உட்கட்சி விமர்சனங்களையோ, கூட்டுக்கட்சிகளின் கோரிக்கைகளையோ செவிமடுக்காது கூட்டமைப்பைச் சீரழித்துவிட்டு கூட்டமைப்பே இல்லாத 'கழுதை தேய்ந்து கட்டெடறும்பானது' என்ற நிலையில் ஞானோதயம். எல்லாம் நாடாளுமன்ற சுகபோகம் செய்கின்ற வேலை.

தேர்தல் வரப்போகுது, பதவிக்கு ஆபத்து என்றால் பேரம் பேச ஞானம் பிறக்கும், சட்டம் பிரிவு பிரிவாய் பிரித்து மேய்வார்கள், வீராவேசம் வானைப்பிளக்கும், செய்கிறோம் வாக்குப்போடுங்கள் என்று உறுதி வேறு தருவார்கள், அதோடு மக்களின் முகங்களும் கொடுத்த வாக்குறுதிகளும் மறந்துவிடும் அவர்களுக்கு. மக்கள் எதிர்பார்ப்போடு காத்திருக்க வேண்டியதுதான் மறுதேர்தல் வரும்வரை அவர்களை காண்பதற்கு. 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.