Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் - சரத் வீரசேகர

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம் - சரத் வீரசேகர

Published By: Digital Desk 5

24 May, 2023 | 10:10 AM
image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.

மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் இலக்கை அடைய டயஸ்போராக்கல் செயற்படுகிறார்கள் என  ஆளும் தரப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (24) இடம்பெற்ற  பந்தயம்,சூதாட்ட விதிப்பனவு (திருத்தச் ) சட்டமூலம் மீதான விவாதத்தின் போது உரையாற்றிய கூட்டமைப்பின் உறுப்பினர் எஸ்.சிறிதரன் குறிப்பிட்ட ஒரு சில விடயங்களை மேற்கோள்காட்டி உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் உரையாற்றியதாவது,

உலகளாவிய ரீதியில் மிக கொடிய அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பை  முடிவுக்கு கொண்டு வந்து 14 ஆண்டுகளை கடந்துள்ளோம் பயங்கரவாதத்தை ஒருபோதும் நியாயப்படுத்த முடியாது.

இராச்சியத்தை வீழ்த்தும் வகையில் செயற்பட்ட  விடுதலை புலிகள் அமைப்பை நாட்டுக்காகவே முடிவுக்கு கொண்டு வந்தோம்.

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

புலம் பெயர்ந்து வாழும் டயஸ்போராக்கல் மனித உரிமைகள் என்ற போர்வையில் விடுதலை புலிகள் அமைப்பின் நோக்கத்தை அடைய முயற்சிக்கிறார்கள்.இதற்காக ஐரோப்பிய நாடுகள் ஊடாக அழுத்தம் பிரயோகிக்கப்படுகிறது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் கனடா நாட்டு பிரதமர் வெளியிட்ட கருத்து முற்றிலும் தவறானது.அரசியல் நோக்கத்தை முன்னிலைப்படுத்தியே அவர் இவ்வாறான கருத்துக்களை குறிப்பிட்டுள்ளார். இவரது கருத்துக்கு இலங்கை வெளிவிவகாரத்துறை அமைச்சு வன்மையான கண்டனத்தை வெளிப்படுத்தியுள்ளது.

கடனாவில் புலம் பெயர் தமிழர்கள் வளம் பெற்றுள்ளார்கள்.இவர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்வதற்காகவே  கடனாவின் பிரதமர் இலங்கை தொடர்பில் முறையற்ற கருத்தை தெரிவித்துள்ளார்.

இலங்கையை காட்டிலும் கனடா பாரிய நிலப்பரப்பை கொண்டுள்ளது.ஈழத்தமிழர்கள் தொடர்பில் கடனாவின் பிரதமருக்கு உண்மையில் கரிசனை,அக்கறை காணப்படுமாக இருந்தால் கனடாவில் ஈழ இராச்சியத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் ஈழத்தை கோரவில்லை.தமிழ் அரசியல்வாதிகள் மாத்திரம் தான் இன்றும் ஈழத்துக்காக போராடுகிறார்கள்.

நாடு முழுவதும் தமிழர்கள் சிங்களவர்களுடன் வாழ்கிறார்கள்.எங்கும் பிரச்சினையில்லை.அரசியல்வாதிகள் மாத்திரமே பிரச்சினைகளை உருவாக்கி குறுகிய இலாபம் பெறுகிறார்கள் என்றார்.
 

https://www.virakesari.lk/article/156013

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, கிருபன் said:

யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் நாட்டில் தேசிய பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.இன நல்லிணக்கம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

முழுப்பூசணிக்காயை ஒரு தட்டு சோற்றில் மறைத்து விட்டேன் என்று வாதாடுகிறார்.

4 hours ago, கிருபன் said:

அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்.

தாங்கள் அரசியலில் செய்யும் தில்லு முல்லுகளைப்போல் மற்றவரையும் எடை போடுவது. அவருக்கு தெரிந்தது அது ஒன்றுதான். பூனை கண்ணை மூடிவிட்டால் உலகம் இருண்டு விட்டது என்கிற நினைப்பு. எல்லோரும் சிங்கள மக்களைப்போல் முட்டாள்களாக இருக்க வேண்டுமென எதிர்பார்க்கிறார். இவரை நல்லாய் கூவ விட வேண்டும், அப்போதான் உலகம் அறியும் இவர்களின் அடாவடியை. நாங்களும் எங்களை அழிக்க உதவிய நாடுகளைபார்த்து எச்சரிக்கலாந்தானே? அவ்வளவு அறிவு மேதை, உதுக்கு பதில் கொடுக்க அவர்களும் அறிவு குறைந்த திருடர்களாக இருக்க வேண்டும். உங்களுக்கு போர் செய்ய உதவியவர்களும் நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள் என்றுதானே சொல்கிறார்கள். நல்லிணக்கம் இருந்தால் ஏன் சொல்கிறார்கள்? ஏன் கால அவகாசம் கேட்கிறீர்கள்?

  • கருத்துக்கள உறவுகள்

இனவாதம் பேசி கேடு கெட்ட அரசியல் செய்யும் ஒருவர்  ஏனையோரை பார்த்து கை நீட்டுகிறார்.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, nunavilan said:

இனவாதம் பேசி கேடு கெட்ட அரசியல் செய்யும் ஒருவர்  ஏனையோரை பார்த்து கை நீட்டுகிறார்.

இனவாதத்தில்பிறந்து, இனவாதத்தில்வளர்ந்த ஒரு ஜீவன். அது கடிக்கத்தான் செய்யும். நாங்களும் அந்த ஜீவனிடம் நல்லவைகளை எதிர்பார்க்க முடியாது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

 

கனடாவில் வாழும் இலங்கை தமிழர்களின் அனுதாபத்தை பெற்றுக்கொள்ளும் அரசியல் நோக்கத்துடன் கனடா பிரதமர் ஜஸ்டின் ரூடோ இலங்கை தொடர்பில் தவறான கருத்தை தெரிவித்துள்ளார்.

ஈழத்தமிழர்கள் தொடர்பில் அவருக்கு உண்மையில் கரிசனை இருக்குமாயின் கனடாவில் ஈழத்தை ஸ்தாபித்துக் கொள்ளலாம்.

 

அன்றொரு காலத்தில் இதே போன்ற வாய் வீரங்களாலும்  இன அழிப்புகளாலும்  தான் இஸ்ரேல் என்றொரு நாடு உருவாகி இன்று  எல்லோர் கண்ணுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டுகின்றது.

  • கருத்துக்கள உறவுகள்
Just now, குமாரசாமி said:

அன்றொரு காலத்தில் இதே போன்ற வாய் வீரங்களாலும்  இன அழிப்புகளாலும்  தான் இஸ்ரேல் என்றொரு நாடு உருவாகி இன்று  எல்லோர் கண்ணுக்குள்ளும் விரலை விட்டு ஆட்டுகின்றது.

யூதர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் இழந்த நாடடை மீட்பதட்காக ஒரு இயக்கத்தை வுருவாக்கி அதன்மூலம் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றினார்கள். பொதுவாக எல்லா வங்கி கடடமைப்புகளூம் அவர்களிடம் இருந்தது. அதையும்விட அவர்களிடம் தன்னம்பிக்கையும், அறிவும் இருந்தது. தமிழர்களிடம் ஒற்றுமை இருக்குதா என்பதே கேள்விக்குறிதான்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 minute ago, Cruso said:

யூதர்களுக்குள் ஒரு ஒற்றுமை இருந்தது. அவர்கள் இழந்த நாடடை மீட்பதட்காக ஒரு இயக்கத்தை வுருவாக்கி அதன்மூலம் தங்கள் நோக்கத்தை நிறைவேற்றினார்கள். பொதுவாக எல்லா வங்கி கடடமைப்புகளூம் அவர்களிடம் இருந்தது. அதையும்விட அவர்களிடம் தன்னம்பிக்கையும், அறிவும் இருந்தது. தமிழர்களிடம் ஒற்றுமை இருக்குதா என்பதே கேள்விக்குறிதான்.

2009 க்கு முதல் இருந்த 70% ஒற்றுமை போல் இன்றும் இருக்கின்றதென நினைக்கின்றேன். அதை ஒருங்கிணைத்து முன்னுக்கு கொண்டு வர ஒரு தலைமை தேவை.

  • கருத்துக்கள உறவுகள்

செல்ல பிராணி வாயை கட்டுவதற்கு எல்லாம் மந்திரம் இருப்பதா சொல்கினம்..

maxresdefault.jpg

இறைவா இந்த..

 

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் பாரிய நிலப்பரப்பு இருக்கு.. அதற்கு மேல் தேவையான உரிமைகள் வழங்கப்படுகின்றன.

ஆனால்.. இலங்கையில் தமிழர்களுக்கு பாரம்பரிய நிலம் இருக்குது. நாடு இருக்குது. அதனை சிங்களம் ஆக்கிரமித்திருப்பதுதான் பிரச்சனையே. ஆக்கிரமிப்பை விலக்கி தமிழர் நிலத்தை தமிழர்களிடம் வழங்கிவிட்டு சிங்களவர்கள் தங்கள் நிலத்தில் வாழ்ந்து கொள்ளட்டும். யாரும் அதை நிராகரிக்கவில்லையே. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு இனத்தின் உரிமையை பிடுங்கி வைத்துக்கொண்டு அடாத்துப்பண்ணிக்கொண்டு பாதிக்கப்பட மக்களுக்கு அனுதாபம் தெரிவிப்போரை, தாங்கள் கண்டுபிடிக்கப்பட்டு விட்டோமே என்கிற உணர்வினால் வம்புக்கிழுக்கும் இவனை அமைச்சராக தெரிந்த நாட்டு மக்களையும் அரசாங்கத்தையும் அவர்களின் அசிங்கத்தையும் மீண்டும் மீண்டும் உலகுக்கு வெளிப்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். ஐ. நாவில் கேட்பது கால அவகாசம், எடுப்பது பிச்சை இதில மற்றவரை சீண்டும் வசனம். இலங்கையில் உள்ள எவரும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை, மாறாக மனிதத்தை மதித்து துயரை பகிர்ந்து கொண்டதற்காக எதிர்ப்பை வெளியிடுள்ளார். கொலைகாரருக்கு பதவி பட்டம் வரவேற்பு கொடுக்கும் நாட்டில் வேறு எதை எதிர்பார்க்க முடியும்? அவர்கள் தங்களால் இயன்றதை செய்கிறார்கள். கொலைகாரரை தங்கள் நாட்டுக்குள் நுழைய தடை விதித்ததே இவர்கள் யார் அதே இவர்கள் நாட்டில் பொறுப்பில் இருக்கும்போது இந்த நாட்டின் சட்டதிட்டம் குறிக்கோள் என்ன என்பதை எடுத்துக்காட்டும். அதை விளக்கொள்ள இனவாதம் விடாது. அவர்கள் மவுனமாக இருந்து  இவரை உசுப்பிவிடுவது, எதிர்ப்பு வந்தால்; அது அவரின் சொந்தக்கருத்து என விலகிவிடுவது. ஆனா உலகில் வேறு எந்தநாடும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கவலை தெரிவிக்கவுமில்லை, இவனின் இந்தக்கருத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கவுமில்லை. அப்படிப்பட்டவர்கள் எமக்கு நல்ல தீர்வு கிடைக்க பாடுபடுவார்களா?

கனடா எத்தனை இன மக்களை சுதந்திரமாக பாதுகாப்பாக வைத்திருக்கிறது. சொந்த குடிமக்களையே ஏதிலிகளாக விரட்டும் இவர்கள் கனடாவுக்கு பாடம் எடுக்கிறார்கள். நிலவைப்பாத்து குரைக்கும் ஏதோ ஒன்றைப்போல! 

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர்கள் தெரிவிக்கும் ஒவ்வொரு எதிர்ப்பும் நமக்கு ஆதரவை பெருக்குவிக்கும், புலிகளை அழித்துவிட்டோம் என விடும் முழக்கம்; தமிழரின் வீரத்தை, அதன் தேவையை உலகுக்கு வெளிப்படுத்தும். ஆகவே இவர்கள் முழங்க வேண்டும், சவால் விட வேண்டும். அதற்கு நாம் கோல் கொடுக்க வேண்டும். அது எதிர்ப்பின்  மூலமாகவோ மவுனமாக இருப்பதன்  மூலமாகவோ எதுவாயினும் நல்லது ஏற்படவேண்டும் நமக்கு. 

 

  • கருத்துக்கள உறவுகள்

அன்று இழப்புகளையும் அவலங்களையும் கேட்பாரற்று அனுபவித்து அழுது அரற்றினோம். இன்று எங்களுக்காக குரல் கொடுக்கவும் அனுதாபம் தெரிவிக்கவும் உலகின் சில கோடிகளிலாவது மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். இதுவே விடுதலைப்புலிகளின் புலம்பெயர்ந்தோரின் சாதனை! இது நமது அரசியல்வாதிகளுக்கே உவப்பானதாக இராது. அவர்கள் உலகம் சுற்றியதெல்லாம் சிங்களத்தை பாதுகாக்கவே. இன்னும் செய்ய வேண்டியது நிறைய உள்ளது. திருப்பிப்பார்க்கும் உலகம் ஏதாவது செய்யத்தூண்ட வேண்டும். மகாவம்ஷம், நமது முன்னைய ஆட்சிமுறை, சரித்திரம் ஆகியவற்றை ஆங்கிலேயர் வருகைக்கு முன்,  மொழிபெயர்த்து உலகெங்கும் அறியச்செய்ய வேண்டும். சிங்களத்தில் மொழி பெயர்த்து சாதாரண மக்களும் வாசித்தறியும் வாய்ப்பை ஏற்படுத்த வேண்டும். சிங்களம் அதற்கு தடைபோடும், இணையம் வழியாக செய்யலாம். ஒரு குறிக்கோளை வைத்து ஓடவேண்டும், அதை அடைந்ததும் அடைந்ததை பாதுகாக்க அதைவிட வேகமாக ஓட வேண்டும். எப்போதும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும். ஓட வேண்டிய தூரம் அதிகம் காரணம் ஓடாமலேயே வெகு காலத்தை விரயமாக்கிவிட்டோம் அதையும் சேர்த்து ஓட வேண்டும். 

ஈழத்தமிழருக்கு பொது வாக்கெடுப்பு தீர்மானம் வைத்துள்ளது அமெரிக்க காங்கிரஸ் என அறியக்கிடக்கிறது. இந்தகாலக்கடத்தில் அது சரியோ பிழையோ  என்பது தெரியாது. இது இன்னும் இவர்களின் காதில் விழவில்லையோ? அல்லது தாங்கள் சத்தமிட்டால் அது நடந்துவிடும் என்கிற பயமோ? இதுவும் அரசியலுக்காக அமரிக்கா செய்கிறது என்று கூவாமலா விடப்போகிறார்கள்? தங்களின் வங்குரோத்து அரசியல் மாதிரி எல்லா நாடுகளையும் கருதி அறிக்கை விடுகிறது.   

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.