Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மீண்டும் ஜெனீவா பொறியில் இலங்கை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

1665057809-1665022345-Human_Right_L.jpg
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

நிகழ்ச்சி நிரல்களின்படி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகளுக்கான ஆணையாளர் வோல்கர் டர்க், 19ஆம் திகதி பிற்பகலில் இலங்கை பற்றிய வாய்மொழி அறிவிப்பை வழங்குவார். அன்றைய தினமே அவர், ஈரான் இஸ்லாமிய குடியரசு மற்றும் நிகரகுவா மற்றும் இலங்கை பற்றிய தனது எழுத்துப்பூர்வ அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளார்.

முன்னதாக 2022 செப்டம்பர் 51/1 தீர்மானத்தின் கீழ், 2023 செப்டம்பர் 2023 இல் நடைபெறவுள்ள 54வது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிக்கையை வழங்க இலங்கை கட்டாயப்படுத்தப்பட்டிருப்பதால், எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு தெரிவித்துள்ளது.

2022இல் ஐக்கிய நாடுகளின் மனிதை உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட 51-1 தீர்மானத்தின்போது 20 நாடுகள் ஆதரவாகவும், 7 நாடுகள் எதிராகவும் வாக்களித்தன.20 நாடுகள் வாக்களிக்கவில்லை.

இந்த தீர்மானத்தின்படி, இலங்கையில் நல்லிணக்கத்தில் முன்னேற்றம் உட்பட மனித உரிமைகள் நிலைமையை கண்காணிப்பதற்கும் அறிக்கையிடுவதற்கும் உயர் ஸ்தானிகர் அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

அத்துடன் பொறுப்புக்கூறல், மனித உரிமைகள் மீதான பொருளாதார நெருக்கடி மற்றும் ஊழலின் தாக்கம் மற்றும் மனித உரிமைகள் பேரவைக்கு அதன் ஐம்பத்து மூன்றாவது மற்றும் ஐம்பத்தி ஐந்தாவது அமர்வுகளில் வாய்வழி புதுப்பிப்பை வழங்குதல், ஐம்பத்து நான்காவது அமர்வில் எழுத்துப்பூர்வ அறிவிப்பு மற்றும் அதன் ஐம்பத்தி ஏழாவது அமர்வில் பொறுப்புக்கூறலை முன்னெடுப்பதற்கான கூடுதல் விருப்பங்களை உள்ளடக்கிய ஒரு விரிவான அறிக்கை என்பன இந்த தீர்மானத்தின்படி வலியுறுத்தப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/255813

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் தவறாமல் நடக்கும்,  ஜெனீவா திருவிழா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

எதிர்வரும் ஜூன் மாத அறிக்கை கடுமையானதாக இருக்காது என்று ஜெனீவா தரப்பு தெரிவித்துள்ளது

ஒரு வேளை அறிக்கை கடுமையாக இருப்பின் உலகமே தாங்காது   எனும் மனப்பயம் இன்னும் இருந்து  கொண்டே இருக்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த பத்து வருடங்களுக்கு இழுத்தடித்தால் இலங்கையில் இனப்பிரச்சனை இருக்கிறதா எனும் கேள்விதான் மிஞ்சும்.

இது சிங்களத்திற்கும், இந்தியாவிற்கும் நன்கு தெரியும். 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, தமிழ் சிறி said:

வருடம் தவறாமல் நடக்கும்,  ஜெனீவா திருவிழா.

25 minutes ago, nunavilan said:

ஒரு வேளை அறிக்கை கடுமையாக இருப்பின் உலகமே தாங்காது   எனும் மனப்பயம் இன்னும் இருந்து  கொண்டே இருக்கிறது.

6 minutes ago, Kapithan said:

அடுத்த பத்து வருடங்களுக்கு இழுத்தடித்தால் இலங்கையில் இனப்பிரச்சனை இருக்கிறதா எனும் கேள்விதான் மிஞ்சும்.

இது சிங்களத்திற்கும், இந்தியாவிற்கும் நன்கு தெரியும். 

 

எங்கடை சோம்பேறிக்கூட்ட தமிழ் அரசியல்வாதிகளை வைச்சுக்கொண்டு மற்றவர்களை ஏன் நோவான்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 53வது கூட்டத்தொடர் எதிர்வரும் ஜூன் 19ஆம் திகதி ஆரம்பமாகிறது. எனினும், இம்முறை இந்த அமர்வின்போது இலங்கைக்கு அழுத்தம் குறைவாகவே இருக்கும் என்று நம்பப்படுகிறது.

 

சிங்களவன் பிச்சை எடுத்தாலும் எடுப்பானே ஒழிய இந்த வலுவற்ற பொறியில் எல்லாம் அகப்பட மாடான். தமிழர்கள் விடயத்தில் எந்த விலை கொடுத்தாவது தோற்கடிக்க தயாராக இருப்பவர்கள்தான் இவர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

எங்கடை சோம்பேறிக்கூட்ட தமிழ் அரசியல்வாதிகளை வைச்சுக்கொண்டு மற்றவர்களை ஏன் நோவான்.

 

 

திறனற்ற, கிரகிக்க வலுவற்றவர்களை நோவதால் பயனென்ன? அவர்களை கடந்து இளம் சந்ததியினரை ஊக்குவிப்போம். ஜெனிவாவில் இவ்வளவு நடந்திருக்கு, அதில் இவர்களின் பங்கு எந்தளவு?               

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, satan said:

திறனற்ற, கிரகிக்க வலுவற்றவர்களை நோவதால் பயனென்ன? அவர்களை கடந்து இளம் சந்ததியினரை ஊக்குவிப்போம். ஜெனிவாவில் இவ்வளவு நடந்திருக்கு, அதில் இவர்களின் பங்கு எந்தளவு?               

எதுவுமே இல்லை. ஆனால், புலிகள் வெற்றியின் ஏறுமுகமாக நின்றபோது 150 - 200 குடும்பங்கள் வாழ்ந்த ஒரு நகரத்திலிருந்து மக்கள்போராட்டக் களம்நோக்கி ஒன்றுக்கு மேற்பட்ட பேரூந்துகள் அணிவகுத்தன. புலிகளின் வீழ்சியின்பின் ஒரு சிற்றுந்தோடு குறுகிவிட்ட புலம்பெயர் சூழலையும் நாம் கருத்திலே எடுக்கவேண்டும். மாறிவரும் உறங்குநிலையா, மந்தநிலையா அல்லது இனியென்ன என்ற நிலையா எனப் புரியாதுள்ளது. மொத்தத்தில் ஆரோக்கியமற்றதொரு தமிழ்ச்சூழலாகவே தென்படுகிறது. என்றாலும் தினக்குரலுக்கும் குசும்பென்று தெரிகிறது தலைப்பு" மீண்டும் ஜெனீவா பொறியில் இலங்கை!" என்னபொறியோ.. யாரறிவார். 

Edited by nochchi
திருத்தம்

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, குமாரசாமி said:

எங்கடை சோம்பேறிக்கூட்ட தமிழ் அரசியல்வாதிகளை வைச்சுக்கொண்டு மற்றவர்களை ஏன் நோவான்.

 

 

சுயநலவாதிகளையும் சேர்த்து கொள்ளுங்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.