Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

விடுதலைப்புலிகளால் பல்வேறுகாலகட்டங்களில் பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்- அலிசப்ரி தெரிவிப்பு – ஆனந்த சங்கரிக்கு பாராட்டு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN

10 JUN, 2023 | 03:02 PM
image
 

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆனந்த சங்கரியை பாராட்டும் டுவிட்டர் பதிவொன்றை வெளிவிவகார அமைச்சர் அலிசப்ரி வெளியிட்டுள்ளார்.

ஆனந்த சங்கரி குறித்து வெளியாகியுள்ள கட்டுரையை பகிர்ந்துகொண்டுள்ள அவர் ஆனந்த சங்கரி குறித்த பதிவினையும் வெளியிட்டுள்ளார்.

அலிசப்ரி அந்த பதிவில் தெரிவித்துள்ளதாவது

ananda_san.jpg

தமிழீழ விடுதலைப்புலிகள் அரசியல்ரீதியில் தங்களுடன் உடன்படமறுப்பவர்களையோ தமிழர்கள் மத்தியி;ல் விமர்சனங்களையோ ஏற்றுக்கொள்ளவில்லை.

விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு  அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.

விடுதலைபுலிகளை பல்வேறுகாலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

புலிகளும் அவர்களுடன் இணைந்து பயணித்தவர்களும்  ஆனந்தசங்கரியை துரோகி என அவதூறாக கண்டித்துள்ளனர்இஆனால் இலங்கையில் என்ன நடக்கின்றது என்பதை சரியாக புரிந்துகொண்ட சரியாக சிந்தி;க்கும் அனைவரும் ஆனந்தசங்கரியின் அர்ப்பணிப்பையும் துணிவையும் பாராட்டியுள்ளனர் எனவும் அலிசப்ரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/157410

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, ஏராளன் said:

விடுதலைப்புலிகளின் கட்டளைகளிற்கு  அடிபணியாத அல்லது அதனை மீறத்துணிந்தவர்கள் இரக்கமற்ற முறையில் கையாளப்பட்டனர்.

புலிகளை எதிர்த்தவர்கள், எழுபது வருடங்களாக எதை சாதித்தவர்கள்? இலங்கையில் நடந்த இனப்படுகொலையை தடுக்கவோ, அதை இனப்படுகொலைதான் என்று எடுத்துரைக்கவோ திரணியற்றவர்களாய் இன்னும் இருக்கிறார்கள். இவர்களுக்கு எதற்கு பதவி? அதுசரி....., இவர் நல்லிணக்க பேச்சுவார்த்தை செய்யிற ஆள்மாதிரி தெரியவில்லை, தங்களின் பரவணிக்குணத்தை பாவித்து மூட்டிவிட துடிக்கிறார்.        

  • கருத்துக்கள உறவுகள்

அல் சப்ரி தான் ஒரு இஸ்லாமிய சிறுபான்மையினர் என்பதை மறந்து, கொழும்பு மேட்டுக்குடி போல நிணைத்து பேசுகிறார். ஆடுகிறார்.

இப்படி, சிங்கள பெளத்தத்துக்கு காவடி தூக்கி ஆடிய, சிறில் மத்தியூ, நெவில் பர்ணாண்டோ எல்லாம் என்ன ஆனார்கள், அவர்களது மதகுரு தேவாலயங்களை காக்க திண்டாடுறார்.

இவரது பாஸ் கோத்தா, கொரோணாவால் இறந்த இவர் சமூக மக்களை எரித்தார். விசுவாசம் காரணமாக அதையும் பாராட்டுவார் போலுள்ளது.

அடடா, பெளத்தம் நம்மை வெளிவிவகார அமைச்சராக்கி அழகு பார்க்கிறது என்று புளங்காகிதம் அடைகிறார்.

பெளத்தம் சரியான நேரத்தில் தலையில் கொட்டும்.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Nathamuni said:

இவரது பாஸ் கோத்தா, கொரோணாவால் இறந்த இவர் சமூக மக்களை எரித்தார்.

கோத்தாவின் காலத்தில் முபாறக் அப்துல் மஜீத் அதை மறைத்து ரணிலார் தான் முஸ்லிம்களுக்கு அநீதி இழைத்ததாக குற்றம் சாட்டியிருந்தார். பின் ரணில் கதிரையேறியதும் பல்டி அடித்துவிட்டார். அரசியல் கோமாளிகளின் வழமையது!

  • கருத்துக்கள உறவுகள்

பாவம் ஆனந்தசங்கரி.
விடுதலைப் புலிகள் காலத்தில்… அவர் புலிகளை திட்டி, காட்டிக் கொடுத்து…
செய்த அரசியலை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து,
தனது இறுதிக் காலத்தை… தமிழ் மக்களின் அரசியலுடன் கழிக்கலாம் என கணக்குப்
போட்டு வைத்திருந்தவரின் ஆசையில்… பழசை கிளறி எடுத்து,
மண் அள்ளிப் போட்டு விட்டார் அலி சப்ரி. 😂

அலி சப்ரி… இப்ப, ஆனந்த சங்கரியை… காட்டிக் கொடுத்துள்ளார். அம்புட்டுத்தான். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

பாவம் ஆனந்தசங்கரி.
விடுதலைப் புலிகள் காலத்தில்… அவர் புலிகளை திட்டி, காட்டிக் கொடுத்து…
செய்த அரசியலை மக்கள் மறந்திருப்பார்கள் என நினைத்து,
தனது இறுதிக் காலத்தை… தமிழ் மக்களின் அரசியலுடன் கழிக்கலாம் என கணக்குப்
போட்டு வைத்திருந்தவரின் ஆசையில்… பழசை கிளறி எடுத்து,
மண் அள்ளிப் போட்டு விட்டார் அலி சப்ரி. 😂

அலி சப்ரி… இப்ப, ஆனந்த சங்கரியை… காட்டிக் கொடுத்துள்ளார். அம்புட்டுத்தான். 🤣

ஆனந்தசங்கரி, தாடியரின் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது பேச்சுவார்த்தையை குழப்பியடிப்பதற்கு. ஒருபுறம் பேச வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் குழப்பியடிக்கும் கைங்கரியத்தையும் முடுக்கி விடுகிறார் இந்த மூனா.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, satan said:

ஆனந்தசங்கரி, தாடியரின் உதவி அவர்களுக்கு தேவைப்படுகிறது பேச்சுவார்த்தையை குழப்பியடிப்பதற்கு. ஒருபுறம் பேச வாருங்கள் என்று அழைத்துக்கொண்டு மறுபுறம் குழப்பியடிக்கும் கைங்கரியத்தையும் முடுக்கி விடுகிறார் இந்த மூனா.

இந்த மூனாவை,  கோத்தா தனது கடைசி காலத்தில் சில அமைச்சுப் பதவிக்கு நியமிக்க,
காலையில் ஜனாதிபதி மாளிகையில் சத்தியப் பிரமாணம் எடுத்து விட்டு....
தாழும் கப்பலில்... தான் எப்படி இருப்பது என்று, மாலையிலேயே ராஜினாமா செய்தவர். 
மூன்று முறை இப்படியான ராஜினாமக்களை செய்தவர் என்று நினைக்கின்றேன்.

பின்பு ரணில் வந்த பின் வெளிவிவகார அமைச்சராக வந்து,
கடன் வாங்க உலகம் முழுவதும் சுற்றி திரிந்து விட்டு,
இப்போ... தமிழனை உள்ளூரிலும், உலக அரங்கிலும்  கேவலப் படுத்தும் வேலையை 
தினமும் செய்து கொண்டு இருக்கின்றார்.
இதன் பின்... ரணில், மகிந்த எல்லோரின் ஆதரவும் இருக்கும் என நினைக்கின்றேன்.

  • கருத்துக்கள உறவுகள்

இவர் ஏன் அதிகமாக குலைத்து வேலை ஆட்டுகிறார் என்பது ஆச்சரியமானது அல்ல அவரது இனம் திருந்தவே திருந்தாது என்று மீண்டும் நிரூபிக்கிறார். 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, ஏராளன் said:

விடுதலைபுலிகளை பல்வேறுகாலகட்டங்களில் புண்படுத்திய பல தமிழ் அரசியல்வாதிகள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 

அப்பிடியே அரச படுகொலைகள்

நுhலக எரிப்பு

கோவில்கள் எரிப்பு

இனக்கலவரம் என்று தமிழர்களின் எத்தனை ஆயிரம் உயிர்கள் உடமைகள் அழிக்கப்பட்டன

என்று அதையும் ஒரு பட்டியல் போடலாமே.

பார்ப்பம் எந்த பட்டியல் நீட்டி என்று.

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, விசுகு said:

இவர் ஏன் அதிகமாக குலைத்து வேலை ஆட்டுகிறார் என்பது ஆச்சரியமானது அல்ல அவரது இனம் திருந்தவே திருந்தாது என்று மீண்டும் நிரூபிக்கிறார். 

இவர் யார் ? இவர்களது இனம் தமிழர் பிரச்சினையை தீர்க்கப்படாமல் இருப்பதில் கண்ணும் கருத்துமாக இருப்பவர்கள். எதோ தமிழர்களில் கரிசனையாக இருப்பதுபோல காட்டிக்கொண்டாலும் , இவர்களது நோக்கம் வேறு. இந்த பிரச்சினை இருக்கும் வரையிலும் அவர்களது பதவிக்கும், இனத்தின் செழிப்புக்கும் பாதிப்பு வராது என்று நன்றாகவே தெரியும். மற்றப்படி ஆடு நனையுது எண்டு ஓநாய் கவலைப்படட கதைதான். 

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, Cruso said:

இந்த பிரச்சினை இருக்கும் வரையிலும் அவர்களது பதவிக்கும், இனத்தின் செழிப்புக்கும் பாதிப்பு வராது என்று நன்றாகவே தெரியும்.

அது! எண்ணெய் ஊற்ற முடியாது விலையானபடியால், வாயால் ஊதி ஊதி எரியவைக்கப்பாக்கிறார்.

  • கருத்துக்கள உறவுகள்+

ஆனந்த சங்கரி & அலிசப்ரி; இரண்டுமே நரியள் தான்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.