Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். சர்வதேச விமான நிலையத்தை விஸ்தரிப்பது தொடர்பில் விசேட கலந்துரையாடல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: NANTHINI

17 JUN, 2023 | 01:16 PM
image
 

பலாலியில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் விஸ்தரிப்பு தொடர்பில் கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தலைமையில் இன்றைய தினம் (17) இடம்பெற்ற கலந்துரையாடலின்போது ஆராயப்பட்டது. 

இதில் கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, கிராமிய பொருளாதார இராஜாங்க அமைச்சர் காதர் மஸ்தான், பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர், யாழ்ப்பாணத்துக்கான இந்திய துணைத் தூதுவர், விமான நிலைய உயர் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டிருந்தனர். 

இக்கலந்துரையாடலில் விமான நிலையத்தை வடக்கு பக்கமாக விஸ்தரிப்பதுடன், விமான சேவையை அதிகரிப்பது தொடர்பிலும் பேசப்பட்டது.

IMG-20230616-WA0045.jpg

மேலும், விமானங்களின் வருகையை அதிகரிப்பது, அதிகளவான ஆசனங்களை கொண்ட விமானங்களை சேவையில் ஈடுபடுத்துவதன் மூலம் தொடர்ந்து அந்நிய செலாவணியை பெற்றுக்கொள்வது, யாழ்ப்பாண மக்கள் இலகுவான முறையில் பிரயாணத்தை மேற்கொள்வதற்கான வசதி வாய்ப்புகள் தொடர்பிலும் ஆலோசனைகள் இதன்போது முன்வைக்கப்பட்டன.

அத்துடன் விமான இறங்குதளம் விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும், மக்களுடைய காணிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல், மேலும் நிலங்கள் சுவீகரிக்கப்படாமல் இறங்குதளம் விஸ்தரிக்கப்பட வேண்டும் எனவும் பேசப்பட்டது. 

அவ்வேளை பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், கூடுதலாக விமான நிலையத்தின் வடக்கு பக்கமாக அதாவது கடல் பக்கமாக, இயன்றளவு காணிகளையும் ஓடுதளத்தையும் விஸ்தரித்து, தெற்கு பக்கத்தில் மிக சொற்ப அளவிலான காணிகளை எடுத்து விஸ்தரிக்க வேண்டும் என்றவாறு தனது ஆலோசனைகளை முன்வைத்தார்.

இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மக்களுக்கு பாதிப்பில்லாதவாறு விமான நிலைய விஸ்தரிப்பை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியமையும் குறிப்பிடத்தக்கது.

IMG-20230616-WA0050.jpg

IMG-20230616-WA0048.jpg

IMG-20230616-WA0047.jpg

image_c1f29fa274.jpg

https://www.virakesari.lk/article/157907

  • கருத்துக்கள உறவுகள்

அப்ப வடக்குப்பக்க காணி பறிபோகப்போகுது...அவ்விடத்தில் ஒரு விக்கரையும் வரும்...நம்ம  யாழ்ப்பாணீஸ் போகவும் வரவும் தேங்காய் அடித்து கும்பிட்டுவர எல்லாம் சரியாகிடும்..

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

அப்ப வடக்குப்பக்க காணி பறிபோகப்போகுது...அவ்விடத்தில் ஒரு விக்கரையும் வரும்...நம்ம  யாழ்ப்பாணீஸ் போகவும் வரவும் தேங்காய் அடித்து கும்பிட்டுவர எல்லாம் சரியாகிடும்..

விகாரையில் தேங்காய் உடைத்து கற்பூரமும் கொழுத்துவார்களா? 🫢
புது மொடலாய்… இருக்கே… 🤣

  • கருத்துக்கள உறவுகள்

தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணியையும் சுவீகரித்துவிட்டால் பிரச்சனை முடிந்தது. 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

விகாரையில் தேங்காய் உடைத்து கற்பூரமும் கொழுத்துவார்களா? 🫢
புது மொடலாய்… இருக்கே… 🤣

எங்கடை ஆட்கள் அதை நடைமுறையில் கொண்டுவருவினம்...தேவையென்றால் சுற்றி அங்கப்பிரதட்சனம்கூடச் செய்வினம்...காசு புரண்டால் ...தரிசன முறையே மாற்றுவான் சிங்களவன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிப்பதற்கு முன்னைய திட்டங்கள் சரிவராவிட்டால், புதுசு புதுசாய் உருவாக்குவார்கள்/ முன்பு சர்வதேச விமான தபாற்சேவை பலாலியில் இடம்பெற்றதாக அறிகிறேன் உண்மையா?

3 hours ago, MEERA said:

தையிட்டியில் விகாரை அமைந்துள்ள காணியையும் சுவீகரித்துவிட்டால் பிரச்சனை முடிந்தது. 

இப்போதைக்கு இதுதான் ஆலோசனையில் உள்ளது. தேவைப்பட்டால் தையிட்டிவரை விஸ்தரிப்பார்கள். யார் கேள்வி கேட்ப்பது? போராடுபவர்களையும் பரிகாசம் செய்து நிறுத்திவிட மாட்டோம் நாம்!   

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

விகாரையில் தேங்காய் உடைத்து கற்பூரமும் கொழுத்துவார்களா? 🫢
புது மொடலாய்… இருக்கே… 🤣

வியாபாரம். கொழும்பில் சில  விகாரைகளில் ஒரு பகுதியை ஒதுக்கி இந்துக்களின் சிலைகள் சிலவற்றை வைத்திருப்பார்கள். இந்துக்கள் அங்கு போய் தேங்காய் உடைத்து காணிக்கை போடுவதை பார்த்திருக்கிறேன். எனவே அங்கு அது பிரச்சினையாக இருக்காது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

வியாபாரம். கொழும்பில் சில  விகாரைகளில் ஒரு பகுதியை ஒதுக்கி இந்துக்களின் சிலைகள் சிலவற்றை வைத்திருப்பார்கள். இந்துக்கள் அங்கு போய் தேங்காய் உடைத்து காணிக்கை போடுவதை பார்த்திருக்கிறேன். எனவே அங்கு அது பிரச்சினையாக இருக்காது. 

கொழும்பு, வெள்ளவத்தை விசா பிள்ளையார் கோவில் ஓனர் சிங்களவர் (ஐடியா கொடுத்த மனைவி தமிழ்). மூவின மக்களும் வருகின்றனர். உண்டியல் நிரம்புகிறது.

பக்கத்தில் விகாரை. ஓனர் சிங்களவர் என்பதால், பிக்குக்கும், அவருக்கும் உண்டியலில் டீல். ஆக எதிர்ப்பு இல்லை.

வடிவாக பார்த்தால், விகாரையின், மூலையில் பிள்ளையார் இருப்பது தெளிவாகும்.

வெளிநாடு போகும் பயணிகள், யாழ் செல்லும், பஸ், ரயில் பயணிகள், தேங்காய் உடைத்து, துன்னூறு பூசி, உண்டியலில் காசு போட்டு கிளம்புவார்கள்.

நல்ல யாவாரம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.