Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுத்தல்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

லைக்கா குழுமத்தின் தலைவருக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பில் அனைத்து அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து வலியுத்தல்!

adminJune 21, 2023
Subash.jpg?fit=700%2C480&ssl=1

லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை பிரித்தானியாவில் சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

யுத்தத்தினால் நலிவடைந்த வடக்கு கிழக்கு பிரதேசங்களின் அபிவிருத்தி, ஆதரவற்றோரின் வாழ்வை வளப்படுத்தல், அரசியல் தீர்வு என்பன சமாந்தரமாக நகர்த்தப்படல் வேண்டும் என்ற இலக்கை கொண்டுள்ள லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் அது குறித்த தனது நிலைப்பாட்டை ஜனாதிபதியுடனான உரையாடலில் வலியுறுத்தி உள்ளார்.

அதன் அடிப்படையில் ஆளும் அரசாங்கமும், ஜனாதிபதியும் தமது நல்லெண்ணத்தை வெளிப்படுத்துவதற்கான ஆரம்பமாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுவிப்பது குறித்த கோரிக்கையை முன்வைத்தார்.

இதனை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான சட்ட நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கும் இணங்கியுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மேற்கொண்ட சந்திப்புக்களில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

அத்துடன் நின்றுவிடாது, இலங்கை அரசாங்கத்தினால் முதற்கட்டமாக விடுவிக்கப்பட்ட 5 பேருக்கும், இரண்டாம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 10 பேருக்கும், தற்போது 3 ஆம் கட்டமாக விடுவிக்கப்பட்ட 13 பேருமாக 28 அரசியல் கைதிகளுக்கும் தலா 25 லட்சம் – (7கோடி ரூபாய்) லைக்கா ஞானம் அறக்கட்டளையின் ஊடாக வழங்கி வைத்துள்ளார்.

தமது வாழ்வை சிறைகளில் தொலைத்த அரசியல் கைதிகளுக்கு தனி ஒருவரால் இதுவரை வழங்கப்பட்ட அதி கூடிய உதவியாக இந்த உதவி அமைந்துள்ளது என சில ஆய்வாளர்கள் தமது கட்டுரைகளில் கூட்டிக்காட்டியிருந்தார்கள்.

யுத்தம் காவு கொண்ட பிரதேசங்களையும், மக்களின் வாழ்வையும் கட்டி எழுப்புவதற்கு அரசியல் தீர்வை நோக்கி பயணிப்பது அவசியம். அந்த அரசியல் தீர்வைப் பெறுவதற்கும், அதனோடு சமாந்தரமாக – அப்பிரதேசங்களின் அபிவிருத்தியையும், நாளாந்தம் மக்கள் எதிர்கொள்ளும் வாழ்வாதாரப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு, ஆளும் அரசாங்கங்களோடும், அவ்வரசாங்கங்களின் தலைவர்களோடுமே பேசவேண்டியது அவசியம் என்ற அடிப்படையில் தனது இந்த சந்திப்புகள் தொடர்வதாக, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவரும், லைக்கா ஞானம் அறக்கட்டளையின் நிறுவனருமான அல்லிராஜா சுபாஸ்கரன் அவர்கள் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியுடனான இந்த சந்திப்பில் லைக்கா குழுமத்தின் பிரதித் தலைவர் பிரேம் சிவசாமி, லைக்கா குழுமத்தின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரனின் பாரியாரும் லைக்கா ஹெல்த்தின் தலைவருமான பிரேமா சுபாஸ்கரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

 

https://globaltamilnews.net/2023/192123/

 

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தால் மகிழ்ச்சி.

  • கருத்துக்கள உறவுகள்
On 21/6/2023 at 22:33, கிருபன் said:

இதனை நிறைவேற்றுவதாக தெரிவித்த ஜனாதிபதி, அதற்கான சட்ட நடைமுறைகளை துரிதப்படுத்துவதற்கும் இணங்கியுள்ளார்.

இப்படி எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றுவதாக இணங்கியும் வாக்குறுதிகளும் காலாகாலமாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கு.

அடுத்த ஜனாதிபதியாக வரும்வரை தமிழர்களின் வாக்குகளை கவர்வதற்காக இன்னும் எத்தனை திட்டங்களுக்கு வேண்டுமானாலும் இணங்கலாம் வாக்குறுதிகள் கொடுக்கலாம்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படி எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றுவதாக இணங்கியும் வாக்குறுதிகளும் காலாகாலமாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கு.

அடுத்த ஜனாதிபதியாக வரும்வரை தமிழர்களின் வாக்குகளை கவர்வதற்காக இன்னும் எத்தனை திட்டங்களுக்கு வேண்டுமானாலும் இணங்கலாம் வாக்குறுதிகள் கொடுக்கலாம்.

அதே......

அதை 70 வருடங்களிற்கு மேலாக புகழ்ந்தும் வாழ்த்தும் தெரிவித்துக்கொண்டே இருக்கின்றோம்.

 

  • கருத்துக்கள உறவுகள்

இவர் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதாகவும், இவருக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மை விட்பதன்மூலம் நாடடை காட்டிக்கொடுக்க போவதாகவும் இனவாதிகள் எட்கெனவே கொக்கரிக்க தொடக்கி விடடார்கள்.

இப்போது இதையும் கேட்ட்டவுடன் இன்னும் துள்ளி குதிக்கப்போகிறார்கள்.

எப்படியோ கைதிகளின் விடுதலையும், ஸ்ரீலங்கா டெலிகாம் பிரச்சினையும் தீர்ந்தால் நல்லதுதான். 

53 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்படி எத்தனையோ திட்டங்களை நிறைவேற்றுவதாக இணங்கியும் வாக்குறுதிகளும் காலாகாலமாக தமிழர்களுக்கு வழங்கப்பட்டுக் கொண்டுதான் இருக்கு.

அடுத்த ஜனாதிபதியாக வரும்வரை தமிழர்களின் வாக்குகளை கவர்வதற்காக இன்னும் எத்தனை திட்டங்களுக்கு வேண்டுமானாலும் இணங்கலாம் வாக்குறுதிகள் கொடுக்கலாம்.

 

̀̀பேசாமல் குறுகி இருப்பதை விட சர்வதேச அளவவில் தொடர்ச்சியாக இவ்வாறான கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்துகொண்டே இருக்க வேண்டும். 

கோரிக்கையை முன்வைத்தவர் அரசியல்வாதி இல்லை. ஒரு தமிழர். ஏனைய தொழிலதிபர்கள் போல் அல்லாமல் முயற்சியைக் கைவிடாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கோரிக்கை வைக்கிறார். அதற்காகவே பாராட்டு.

On 22/6/2023 at 07:33, கிருபன் said:

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பதவியேற்றதன் பின், இலங்கையிலும், வெளிநாடுகளிலும் மேற்கொண்ட சந்திப்புக்களில் அரசியல் கைதிகளின் விடுதலை குறித்து, லைக்கா குழுமத்தின் நிறுவனரும் தலைவருமான அல்லிராஜா சுபாஸ்கரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறார்.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, Cruso said:

இவர் புலிகளுடன் கொடுக்கல் வாங்கல் செய்வதாகவும், இவருக்கு ஸ்ரீலங்கா டெலிகொம்மை விட்பதன்மூலம் நாடடை காட்டிக்கொடுக்க போவதாகவும் இனவாதிகள் எட்கெனவே கொக்கரிக்க தொடக்கி விடடார்கள்.

இப்போது இதையும் கேட்ட்டவுடன் இன்னும் துள்ளி குதிக்கப்போகிறார்கள்.

எப்படியோ கைதிகளின் விடுதலையும், ஸ்ரீலங்கா டெலிகாம் பிரச்சினையும் தீர்ந்தால் நல்லதுதான். 

இதோடு இனவாதிகளின் புலிகள் கூச்சல் அடக்கப்படவேண்டும் இல்லது இவர்களுக்குள் அடங்கிவிடவேண்டும். எது நடக்கிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்! ஆனால் இவர்களது கூச்சல் நாட்டை அழிக்கவும், தம்மை யார், தாம் செய்தது என்ன எதனால் விடுதலைப்போராட்டம் தோன்றியது என்பதையும் இவர்களே உலகறியைச் செய்யும் காலமிது. இவர்களின் கூச்சலுக்கு கோல் கொடுத்து உரக்கச்செய்ய வேண்டும். தமிழரின் பதின்மூன்றாம் திருத்தச்சட்டத்தை எரிக்கும் போது, நாம் உள்நாட்டில் சந்தோசமாக இருக்கிறோம் என்றும்  மற்றவர்களை அதில் தலையிட வேண்டாமென கூவும் முட்டாள்களாயும்  நாம் இருக்கும்வரை சிங்களம் நம்மை வைத்தே தாம் நினைத்ததை சாதிக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, இணையவன் said:

பேசாமல் குறுகி இருப்பதை விட சர்வதேச அளவவில் தொடர்ச்சியாக இவ்வாறான கோரிக்கைகள் வைக்கப்பட வேண்டும். அரசியல் கைதிகள் இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என்ற செய்தி வந்துகொண்டே இருக்க வேண்டும். 

கோரிக்கையை முன்வைத்தவர் அரசியல்வாதி இல்லை. ஒரு தமிழர். ஏனைய தொழிலதிபர்கள் போல் அல்லாமல் முயற்சியைக் கைவிடாமல் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் கோரிக்கை வைக்கிறார். அதற்காகவே பாராட்டு.

எமது தரப்புக்களை குற்றம் சாட்டவில்லை.

குள்ளநரி ஏன் ஊளையிடுகுது என்பதையே எழுதினேன்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.