Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மதுவில் விழுந்தவர் வார்த்தையை மறுநாள் கேட்பது அவசியம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

யேர்மனியில் Saarbruecken மாநிலத்தின் Wehrden நகரப் பொலீஸ் நிலையத்துக்கு சனிக்கிழமை 24.06.2023 மதியத்தின் பின்னர் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

பொருட்கள் வாங்க பல்பொருள் அங்காடிக்கு வந்தேன். காரை வாடிக்கையாளர்கள் தரிப்பிடத்தில் நிறுத்தி விட்டு பொருட்களை வாங்கிக் கொண்டு வந்து பார்த்தால் எனது காரைக் காணவில்லைஎன்று கவலையோடு  45 வயதான ஆண் ஒருவர்  தொலைபேசியினூடாக பொலிசாரிடம் முறைப்பாடு செய்தார்.

பொலிஸர் அந்த ஆணிடம் அவரது கார் பற்றிய தகவல்களைப் பெற்றுக் கொண்டனர். அங்காடியில், கமரா மூலம்  பதிவு செய்யப்பட்டிருந்த விபரங்களைப் பொலிஸார் பரிசோதித்த போது அவரது கார் தரிப்பிடத்தை விட்டு வெளியேறவேயில்லை என்பது உறுதியாகத் தெரிந்தது

பொலிஸார் சந்தேகம் வந்து அந்த ஆணுடன் அங்காடியின் தரிப்பிடத்தைச்  சுற்றிப் பார்வையிட்ட போது, எங்கே அவர் தனது காரை நிறுத்தி  வைத்தாரோ அதே இடத்தில் அவரது கார் அமைதியாக நின்றது

அந்த ஆணிடம் தகவல்களைப் பெறும் போது அவரிடம் இருந்து மது வாசனை வருவதை அவதானித்திருந்த பொலிஸார் அவரை இரத்தப்பரிசோதனைக்கு உட்படுத்திய போது, அவரது இரத்தத்தில் 2 புறோ மில்லி அற்ககோல் இருப்பது தெரிய வந்தது.

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினார் என்ற  அடிப்படையில்  அவரது சாரதிப் பத்திரத்தை பொலிஸார் எடுத்துக்  கொண்டு போய்விட்டார்கள்.

இப்பொழுது அவரது கார் அங்காடியின் வாடிக்கையாளர் தரிப்பிடத்தில் நிற்கிறது.

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, Kavi arunasalam said:

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினார் என்ற  அடிப்படையில்  அவரது சாரதிப் பத்திரத்தை பொலிஸார் எடுத்துக்  கொண்டு போய்விட்டார்கள்.

இப்பொழுது அவரது கார் அங்காடியின் வாடிக்கையாளர் தரிப்பிடத்தில் நிற்கிறது.

Bildergebnis für vadivelu memes gifதானே பொல்லையும் கொடுத்து தலையையும் காட்டியிருக்கிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என் கட்சிக்காரர் மது அருந்திவிட்டுத்தான் வாகனம் ஓட்டினார் என்பதற்கான ஆதாரம் .போட்டோ,வீடியோ எக்ஸ்சற்றா ஏதாவது இருக்கின்றதா?

என் கட்சிக்காரர் அங்காடிக்கு வந்த பின்னர்தான் மது அருந்தியுள்ளார். எனவே வாகன அனுமதிப்பத்திரத்தை திருப்பி கொடுக்குமாறு பரிந்துரைக்கின்றேன் :cool:

  • கருத்துக்கள உறவுகள்

வாகனம் நிக்கிற நாள் வரைக்கும் அங்காடியும் வாடகை வசூலிக்கப் போகுது.......அந்தாளுக்கு "அவர்" காகத்தில் வராமல் கழுகில வந்திருக்கிறார்......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Kavi arunasalam said:

மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டினார் என்ற  அடிப்படையில்  அவரது சாரதிப் பத்திரத்தை பொலிஸார் எடுத்துக்  கொண்டு போய்விட்டார்கள்.

ஒழிக்க தெரியாதவன்

தலையாளி வீட்டில் ஒழித்திருக்கிறார்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
21 hours ago, குமாரசாமி said:

என் கட்சிக்காரர் மது அருந்திவிட்டுத்தான் வாகனம் ஓட்டினார் என்பதற்கான ஆதாரம் .போட்டோ,வீடியோ எக்ஸ்சற்றா ஏதாவது இருக்கின்றதா?

என் கட்சிக்காரர் அங்காடிக்கு வந்த பின்னர்தான் மது அருந்தியுள்ளார். எனவே வாகன அனுமதிப்பத்திரத்தை திருப்பி கொடுக்குமாறு பரிந்துரைக்கின்றேன் :cool:

குற்றம் சாட்டப்பட்டவர் அங்காடிக்கு வந்த நேரம் கமராவில் பதிந்திருக்கிறது. வாகனங்கள் தரிப்பிடம் மற்றும் அங்காடியைச் சுற்றி உள்ள பகுதியில் உள்ள கமராக்களிலும் அவர் மது அருந்தியதற்கான காட்சிகள் இல்லை. அங்காடிக்குள்ளும் உள்ள கமராப் பதிவுகளிலும் அவர் மது அருந்தியதற்கான காட்சிகள் இல்லை. மாறாக அங்காடிக்குள் மது அருந்துவது முழுவதுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அங்காடிக்கு வருவதற்கு முன்னர்தான் அவர் மது அருந்தி இருக்க வேண்டும். ஆகவே, “என் கட்சிக்காரர் அங்காடிக்கு வந்த பின்னர்தான் மது அருந்தியுள்ளார்என்ற திரு குமாரசாமியின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை.  ஆனால் வாகனம் ஓட்டும் போது ஒருவர் மது அருந்தி இருந்தால், அவரது இரத்தம் பரிசோதணைக்கு உட்படுத்தி அவர் மது அருந்தி விட்டுத்தான் வாகனம் ஓட்டினார் என பொலீஸார் மன்றுக்கு ஆதாரப்படுத்தி இருக்க வேண்டும். இங்கு அது நடைபெறாத பட்சத்தில் குற்றம் சாட்டப் பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது………

பிகு. திரு. குமாரசாமி அவர்களின்  கட்சிக்காரர் பொலிஸ் நிலையத்துக்குச் சென்று கையெழுத்திட்டு தனது சாரதி அனுமதிப் பத்திரத்தை பெற்றுக் கொள்ளலாம். மேலும் மது அருந்திவிட்டு பொலிஸ் நிலையத்துக்கு அவர் செல்ல வேண்டாம் என கேட்டுக் கொள்ளப்படுகிறார்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, Kavi arunasalam said:

குற்றம் சாட்டப்பட்டவர் அங்காடிக்கு வந்த நேரம் கமராவில் பதிந்திருக்கிறது. வாகனங்கள் தரிப்பிடம் மற்றும் அங்காடியைச் சுற்றி உள்ள பகுதியில் உள்ள கமராக்களிலும் அவர் மது அருந்தியதற்கான காட்சிகள் இல்லை. அங்காடிக்குள்ளும் உள்ள கமராப் பதிவுகளிலும் அவர் மது அருந்தியதற்கான காட்சிகள் இல்லை. மாறாக அங்காடிக்குள் மது அருந்துவது முழுவதுமாகத் தடை செய்யப்பட்டிருக்கிறது. ஆகவே அங்காடிக்கு வருவதற்கு முன்னர்தான் அவர் மது அருந்தி இருக்க வேண்டும். ஆகவே, “என் கட்சிக்காரர் அங்காடிக்கு வந்த பின்னர்தான் மது அருந்தியுள்ளார்என்ற திரு குமாரசாமியின் வாதம் ஏற்றுக் கொள்ளக் கூடியது இல்லை.  ஆனால் வாகனம் ஓட்டும் போது ஒருவர் மது அருந்தி இருந்தால், அவரது இரத்தம் பரிசோதணைக்கு உட்படுத்தி அவர் மது அருந்தி விட்டுத்தான் வாகனம் ஓட்டினார் என பொலீஸார் மன்றுக்கு ஆதாரப்படுத்தி இருக்க வேண்டும். இங்கு அது நடைபெறாத பட்சத்தில் குற்றம் சாட்டப் பட்டவர் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியாது………

 

மன்னிக்க வேண்டும். என் கட்சிக்காரர் ஒழித்திருந்து தண்ணியடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் கமராவில் அது தெரிய வாய்ப்பில்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன். அது மட்டுமல்லாமல் என் கட்சிக்காரர் நிண்ட நிலையில் அண்ணார்ந்து ஒரு போத்தல்  விஸ்கியை உள்வாங்கக்கூடியவர் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன் யுவர் ஆனர்....

எனவே என் கட்சிக்காரர் சுத்தவாளி.

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்க வேண்டும். என் கட்சிக்காரர் ஒழித்திருந்து தண்ணியடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் கமராவில் அது தெரிய வாய்ப்பில்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன். அது மட்டுமல்லாமல் என் கட்சிக்காரர் நிண்ட நிலையில் அண்ணார்ந்து ஒரு போத்தல்  விஸ்கியை உள்வாங்கக்கூடியவர் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன் யுவர் ஆனர்....

எனவே என் கட்சிக்காரர் சுத்தவாளி.

உங்கள் கட்சிக்காரர்… நிண்ட நிலையில், அண்ணாந்து… ஒரு போத்தல் விஸ்கியை
குடிப்பவர் என்றால்… அவர் சுத்தவாளி இல்லை, ஊத்தைவாளி… யுவார் ஆனர். 😂 🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
15 minutes ago, தமிழ் சிறி said:

உங்கள் கட்சிக்காரர்… நிண்ட நிலையில், அண்ணாந்து… ஒரு போத்தல் விஸ்கியை
குடிப்பவர் என்றால்… அவர் சுத்தவாளி இல்லை, ஊத்தைவாளி… யுவார் ஆனர். 😂 🤣

அப்ஜெக்சன் யுவர் ஆனர்! :cool:

என் கட்சிக்காரர் நிண்ட நிலையில் ஒரு போத்தில் விஸ்கியை அமுக்கினாலும் பக்க விளைவுகளை செய்யாதவர்.
ஐ மீன் மற்றவர்களுடன் சோலி சுரட்டுகளுக்கு போகாதவர்.பக்க துணையின்றி வீட்டுக்கு நடந்து செல்லும் திறமை கொண்டவர். தானுண்டு தன் வேலை/சோலி என வாழும் ஜென்டில்மேன்.....😎

எனவே ஊத்தைவாளி என குற்றம் சுமத்தியதை வாபஸ் வாங்குமாறு வேண்டி  இருக்கையில் அமர்கின்றேன்.:rolling_on_the_floor_laughing:

☆ Bigg Boss Season 6 Week 7 Discussion Thread ☆ - Page 111 | Bigg Boss  Tamil 6

Edited by குமாரசாமி
குற்றம்

  • கருத்துக்கள உறவுகள்
6 minutes ago, குமாரசாமி said:

அப்ஜெக்சன் யுவர் ஆனர்! :cool:

என் கட்சிக்காரர் நிண்ட நிலையில் ஒரு போத்தில் விஸ்கியை அமுக்கினாலும் பக்க விளைவுகளை செய்யாதவர்.
ஐ மீன் மற்றவர்களுடன் சோலி சுரட்டுகளுக்கு போகாதவர்.பக்க துணையின்றி வீட்டுக்கு நடந்து செல்லும் திறமை கொண்டவர். தானுண்டு தன் வேலை/சோலி என வாழும் ஜென்டில்மேன்.....😎

எனவே ஊத்தைவாளி என குற்றம் சுமத்தியதை வாபஸ் வாங்குமாறு வேண்டி  இருக்கையில் அமர்கின்றேன்.:rolling_on_the_floor_laughing:

☆ Bigg Boss Season 6 Week 7 Discussion Thread ☆ - Page 111 | Bigg Boss  Tamil 6

கனம் கோட்டார் அவர்களே….
கு.சா.வின் கட்சிக்காரர், வெள்ளைக்காரனின் விஸ்கியை அடிப்பதால்தான்…
அவரை நான்… ஊத்தைவாளி என்று சொன்னேன்.
ரஷ்யனின்… “வொட்கா”வை, அடித்திருந்தால்… “நல்லவாளி” என்று பாராட்டி இருப்பேன். 😂🤣

  • கருத்துக்கள உறவுகள்
43 minutes ago, குமாரசாமி said:

மன்னிக்க வேண்டும். என் கட்சிக்காரர் ஒழித்திருந்து தண்ணியடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் கமராவில் அது தெரிய வாய்ப்பில்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன். அது மட்டுமல்லாமல் என் கட்சிக்காரர் நிண்ட நிலையில் அண்ணார்ந்து ஒரு போத்தல்  விஸ்கியை உள்வாங்கக்கூடியவர் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன் யுவர் ஆனர்....

எனவே என் கட்சிக்காரர் சுத்தவாளி.

யோவ் பெரிசு

உங்க தரப்பு ஆள் சுத்தவாளி என்று தீர்ப்பளித்து சாரதி அனுமதி பத்திரத்தையும் கொண்டு போக சொல்லிவிட்டார்கள். நீதிமன்றும் கலைந்துவிட்டது.

யாருமே இல்லாத மன்றில் இன்னும் ஏன் கத்திக் கொண்டிருக்கிறியள்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
37 minutes ago, ஈழப்பிரியன் said:

யோவ் பெரிசு

உங்க தரப்பு ஆள் சுத்தவாளி என்று தீர்ப்பளித்து சாரதி அனுமதி பத்திரத்தையும் கொண்டு போக சொல்லிவிட்டார்கள். நீதிமன்றும் கலைந்துவிட்டது.

யாருமே இல்லாத மன்றில் இன்னும் ஏன் கத்திக் கொண்டிருக்கிறியள்?

எனக்கு வில்லன்கள் வெளியிலை இல்லை.:face_with_tears_of_joy:

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, ஈழப்பிரியன் said:

யோவ் பெரிசு

உங்க தரப்பு ஆள் சுத்தவாளி என்று தீர்ப்பளித்து சாரதி அனுமதி பத்திரத்தையும் கொண்டு போக சொல்லிவிட்டார்கள். நீதிமன்றும் கலைந்துவிட்டது.

யாருமே இல்லாத மன்றில் இன்னும் ஏன் கத்திக் கொண்டிருக்கிறியள்?

அப்பாடா......நீதிபதியே நேரில் வந்து வக்கீல்களின் பிரச்சினையை (சாரதியின் பிரச்சினையை அல்ல) முடித்து வைத்ததற்கு நன்றி பிரபுவே........!  😂

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, குமாரசாமி said:

எனக்கு வில்லன்கள் வெளியிலை இல்லை.:face_with_tears_of_joy:

நானும் அதைத்தான் நினைக்கின்றேன்😁

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
14 hours ago, குமாரசாமி said:

மன்னிக்க வேண்டும். என் கட்சிக்காரர் ஒழித்திருந்து தண்ணியடிக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் கமராவில் அது தெரிய வாய்ப்பில்லை எ

IMG-4174.jpg

  • கருத்துக்கள உறவுகள்
On 26/6/2023 at 23:32, குமாரசாமி said:

அது மட்டுமல்லாமல் என் கட்சிக்காரர் நிண்ட நிலையில் அண்ணார்ந்து ஒரு போத்தல்  விஸ்கியை உள்வாங்கக்கூடியவர் என்பதையும் தெரியப்படுத்துகின்றேன் யுவர் ஆனர்....

 

கனம் நீதிபதி அவர்களே...
எதிர் தரப்பு வக்கீலை பார்த்து கேட்கிறேன்,
அவரது கட்சிக்காரர்....
காணொளியில் உள்ளவர் போல், 
நிண்ட நிலையில், தள்ளாடாமல் தண்ணி அடிப்பாரா?  🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.