Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

குற்றவாளி கூண்டில் இராமர்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சிட்னியில் கம்பன்கழகம் தனது முதலாவது மேடையை தொடக்க போயினமாம்,தலைப்பு குற்றவாளி கூண்டில் இராமராம் வெகுவிரைவில் நடைபெறும் என்று சிட்னி தமிழ் ஊடகங்களில் அடிகடி ஒலிபரப்பிய வண்ணம் இருக்கிறது,அது நடைபெற்ற பிறகு யாழ்கள உறவுகளுடன் அதை பற்றிய கோசிப் பகிர்ந்து கொள்ளபடும்,தூக்கிறதும் தூக்காததும் என் கையில் இல்லை.இப்ப நான் எழுத சிலர் வந்து நுனிபுல் மேயும் புத்தன் என்று கூற ஏன் இந்த வம்பு.

இராமர் வாழ்ந்ததிற்கான அறிகுறிகளே இல்லை என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தகாலகட்டத்தில்,ஈழதமிழர

புத்து மாமா,

இப்படி இராமரை ஒவ்வொரு வருடமும் குற்றவாளிக் கூண்டில் இடுவதும், பின் பிணையில் வெளியே எடுப்பதும் பத்து, பதினைந்து வருடங்களாக வழமையாகிப் போச்சு. இதன்மூலம் இராமருக்கு அல்லது வேறு யாருக்கோ நல்ல விளம்பரம் கிடைக்கின்றது என நினைக்கின்றேன்.

தலைப்பை இப்படிப் போட்டால் இன்னும் நல்லா இருக்கும்.

குற்றவாளி கூண்டில் கம்பன் கழகம்!

அல்லது

குற்றவாளி கூண்டில் கம்பவாரிதி ஜெயராஜ்!

அல்லது

குற்றவாளி கூண்டில் புத்து மாமா!

அல்லது

குற்றவாளி கூண்டில் கலைஞன்!

அல்லது

குற்றவாளி கூண்டில் யாழ் இணையம்!

:D:D:D

  • கருத்துக்கள உறவுகள்

ம்-ம்-ம் எனது தாத்தா, பாட்டியர்கூட வாழ்ந்ததற்கான எவ்விதமான அத்தாட்சியோ அன்றி அறிகுறியோ என்னிடமில்லை. இன்னும் சுமார் நூறு வருடங்கள் போனால் ஈழத்தில் நான்கூட வாழ்ந்ததற்கான அத்தாட்சியோ, அறிகுறியோ இருக்குமென நான் நினைக்கவில்லை! :):lol:

நிறைய யோசிக்கவைத்துவிட்டீங்கள் புத்தன். :):)

  • கருத்துக்கள உறவுகள்

அவர்கள் கூண்டிலேற்றப்போவது இராமாயண காவியத்தில் வரும் இராமரையென்று நினைக்கிறேன். நம்ம எதிரி ராமரையல்ல.

இருப்பவர்களையே கூண்டிலேற்ற முடியாதுள்ளது. இல்லாத இராமரை எப்படி? எல்லோருமே இராமர் திருப்பி வாதாடமாட்டார் என்ற தைரியத்தில்தான் கூண்டிலேற்றப் போகிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

இராமர் வாழ்ந்ததிற்கான அறிகுறிகளே இல்லை என்று இந்திய நீதிமன்றம் தீர்ப்பு அளித்தகாலகட்டத்தில்..

இந்தத் தகவல் தவறானது. வாசகர்களுக்கு தவறான தகவல்களை அளிக்கிறீர்கள். இந்திய நீதிமன்றம்.. இராமர் வாழ்ந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. இந்திய மத்திய அரசின் செல்வாக்குக்குள் உள்ள மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனமே இந்த இப்படி ஒரு அறிக்கையை நீதிமன்றில் அளித்தது. அந்த அறிக்கையில் அவர்கள் தாங்கள் நேரடியாக எந்த தொல்பொருள் ஆய்வையும் இராமர் பாலத்தை மையப்படுத்திச் செய்யவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். தொல்பொருள் ஆய்வென்றில்லாமலே அவர்கள் விட்ட அறிக்கைதான் இது. அதனால் இராமர் என்பதை எப்படி நம்ப முடியல்லையோ.. அதேபோல் இந்த அறிக்கையையும் நம்ப முடியாது.

தமிழ் இலக்கியப்படைப்பாக கம்பர் இராமாயணத்தைப் படிப்பதும் சுவைப்பதும் தவறல்ல. மணிமேகலை பற்றிப் படிக்கிறோம்.. புத்த துறவிப் பெண்ணான மணிமேகலை புத்தமதத்தவள் என்று புறக்கணிக்கலாமோ..??! இலக்கியத்தை அதன் நயத்தை ரசிப்பது மொழி வளர்ச்சிக்கு உதவும். மூடநம்பிக்கைகளைக் களைந்திட்டு.. இலக்கியத்தை ரசிக்கலாம்.

கரிபோட்டரை.. கோடிக்கணக்கான ஆங்கிலேயர்களும் உலக மக்களும் ரசிக்கவில்லையா. அதுவும் இன்றை அறிவியல் காலத்தில். அதை நாகரிகமாகக் கருதி வாங்கிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தமிழர்களுக்கு.... இராமாயணத்தை அந்த வகையில் படிப்பது மட்டும்.. பிரச்சனை மிக்கதாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. :)

இந்தத் தகவல் தவறானது. வாசகர்களுக்கு தவறான தகவல்களை அளிக்கிறீர்கள். இந்திய நீதிமன்றம்.. இராமர் வாழ்ந்ததற்கான அறிகுறிகளே இல்லை என்று தீர்ப்பளிக்கவில்லை. இந்திய மத்திய அரசின் செல்வாக்குக்குள் உள்ள மத்திய தொல்பொருள் ஆராய்ச்சி நிறுவனமே இந்த இப்படி ஒரு அறிக்கையை நீதிமன்றில் அளித்தது. அந்த அறிக்கையில் அவர்கள் தாங்கள் நேரடியாக எந்த தொல்பொருள் ஆய்வையும் இராமர் பாலத்தை மையப்படுத்திச் செய்யவில்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். தொல்பொருள் ஆய்வென்றில்லாமலே அவர்கள் விட்ட அறிக்கைதான் இது. அதனால் இராமர் என்பதை எப்படி நம்ப முடியல்லையோ.. அதேபோல் இந்த அறிக்கையையும் நம்ப முடியாது.

தமிழ் இலக்கியப்படைப்பாக கம்பர் இராமாயணத்தைப் படிப்பதும் சுவைப்பதும் தவறல்ல. மணிமேகலை பற்றிப் படிக்கிறோம்.. புத்த துறவிப் பெண்ணான மணிமேகலை புத்தமதத்தவள் என்று புறக்கணிக்கலாமோ..??! இலக்கியத்தை அதன் நயத்தை ரசிப்பது மொழி வளர்ச்சிக்கு உதவும். மூடநம்பிக்கைகளைக் களைந்திட்டு.. இலக்கியத்தை ரசிக்கலாம்.

கரிபோட்டரை.. கோடிக்கணக்கான ஆங்கிலேயர்களும் உலக மக்களும் ரசிக்கவில்லையா. அதுவும் இன்றை அறிவியல் காலத்தில். அதை நாகரிகமாகக் கருதி வாங்கிப் பிள்ளைகளுக்குக் கொடுக்கும் தமிழர்களுக்கு.... இராமாயணத்தை அந்த வகையில் படிப்பது மட்டும்.. பிரச்சனை மிக்கதாக இருப்பது வேடிக்கையாக இருக்கிறது. :)

இராமாயணத்தை கரிபொட்டரைப்போல படிப்பதில் எந்தத் தவறும் இல்லை இரண்டும் சில சமகால சம்பவங்களைப் பின்னணியாக் கொண்டு மந்திர தந்திரங்களை புனைந்து எழுதப்பட்ட கற்பனைக்கதைகள்.இங்கே பிரச்சினை இந்தப் புனை கதையை உண்மை என்று மக்களுக்கு அபிவிருதியை வாழ்வில் வளத்தை வழங்கக் கூடிய ஒரு திட்டத்தை குலைக்கும் எண்ணதுடனும் இதன் மூலம் மக்களின் அறியாமையை வளர்த்து அதன் மூலம் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி தமது உயர் சாதீய மேலண்மைய இந்து சமய வெறியினூடாக நிலை நிறுத்த முயலும் இந்துவா வாதிகளே இராமர் வாழ்ந்தார் அவர் பாலம் கட்டினார் என்று நிறுவ முயலுகின்றனர்.கரி பொட்டர் படித்த பாடசாலை இது அதனால் இதை இடித்து விடாதீர்கள் என்று இங்கிலாந்தில் உயர் நீதிமன்றத்தில் ஒரு அரசியற் கச்சி வழக்குத் தாக்கல் செய்தால், மக்கள் அந்தக் அரசியற் கட்சியையும் அதன் தலைவர்களையும் மன நல வைத்தியரிடம் தான் அனுப்புவார்கள்.இதனை ஆதரிக்கும் எவரும் மதம் என்னும் வியாதியால் பீடிக்கப்பட்டவர்களே.

  • கருத்துக்கள உறவுகள்

ராமரை தமிழர்கள் குறிப்பாக இலங்கைத் தமிழர்கள் தூக்கிப்பிடிக்கவில்லை. காப்பிய ராமனாக மட்டுமே காண்கின்றனர். வடநாட்டில்தான் ராமா ராமா என்று மந்திரங்களை உருப்போட்டு அவரைத் தெய்வமாக வழிபடுகிறார்கள். நம்மவர்கள் என்னடாவென்றால் எப்படியாவது அவரை இங்கே கொண்டுவந்து விடுவார்கள் போல இருக்கிறது. கம்பன் கழகம் கம்பராமாயணத்தின் கவிச்சுவையை ஆய்வுசெய்கிறது. அதற்கு காப்பிய ராமனை, கம்பன் சொன்ன அவனது இயல்புகளைத் துணைக்கெடுத்து ஆய்வுக் களத்தில் பலரை மோதவிட்டு இலக்கியச் சுவையைப் பலரும் நுகர வழியமைத்துக் கொடுக்கிறார்கள். நம்மில் சிலரோ காப்பிய ராமனைக் கண்கண்ட ராமனாக்கி வேண்டாததை, இல்லாதததை உருவாக்கப் பார்க்கிறார்கள். வெறும் வாய்க்கு அவலை மென்றால் பரவாயில்லை இங்கோ உமியைச் சப்பிப் பொழுது போக்கப் பாக்கிறார்கள்.

முக்கிய குறிப்பு:

நான் கம்பன் கழகத்தைச் சேர்ந்தவனல்ல ஏனக்கு அவர்களில் யாரையும் தெரியவும் தெரியாது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.