Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மட்டக்களப்பில் வாள் வெட்டு – 7 பேர் படுகாயம்!

யாழ்.பல்கலை மாணவர்கள் மீது தாக்குதல் : 07 மாணவர்கள் காயம்

யாழ்ப்பாண பல்கலைக்காக மாணவர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 07 மாணவர்கள் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

யாழ்ப்பாணம் குருநகர், சிறுத்தீவு பகுதிக்கு பல்கலைக்கழக மாணவர்கள் குழுவொன்று நேற்றைய தினம் திங்கட்கிழமை சென்ற , சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர்.

ஒரு கட்டத்தில் கடலில் இறங்கி நீராடும் போது, அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர்.

அதனால் , கடலட்டை பண்ணையில் காவலில் இருந்தவர்களுக்கும் மாணவர்களுக்கும் இடையில் வாய்த்தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

வாய்த்தர்க்கம் முற்றி இரு தரப்பினரும் கைக்கலப்பில் ஈடுபட்டதில் , 07 மாணவர்களும் , கடலட்டை பண்ணை உரிமையாளர் ஒருவரும் , பண்ணை பணியாளர் ஒருவருமாக 09 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்கள் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2023/1340283

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

சந்தோஷமாக பொழுதை கழித்துள்ளனர்

 

சரி, 

 

2 hours ago, தமிழ் சிறி said:

அருகில் இருந்த கடலட்டை பண்ணைக்குள்ளும் நுழைந்துள்ளனர்.

 

யாருடைய பண்ணை? சீனாக்காரனதா? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, theeya said:

சரி, 

யாருடைய பண்ணை? சீனாக்காரனதா? 

கடலட்டை பண்ணையை சீனர்கள் நடத்துவதாக அறிந்தேன்.
கூடுதலான இடங்களில்… அவர்கள் நேரடியாக களத்தில் நிற்பதில்லை.
சிங்கள / தமிழ் முதலாளிகளின் நேரடி மேற்பார்வையில் இயக்கிக் கொண்டுள்ளார்கள்.
இதற்கு கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதமும், அடியாட்களும் நிறைய உண்டு.

  • கருத்துக்கள உறவுகள்
47 minutes ago, theeya said:

 

சரி, 

 

 

யாருடைய பண்ணை? சீனாக்காரனதா? 

 

32 minutes ago, தமிழ் சிறி said:

இதற்கு கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதமும், அடியாட்களும் நிறைய உண்டு.

அமைச்சர் பல பினாமிகளின் பெயரில் நடாத்துவதாக அறிந்தேன்.

உண்மை பொய் தெரியவில்லை.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

அமைச்சர் பல பினாமிகளின் பெயரில் நடாத்துவதாக அறிந்தேன்.

உண்மை பொய் தெரியவில்லை.

அமைச்சர் முந்தி… பினாமிகள் பெயரில், மணல் அள்ளினவர்.
இப்ப… கடலில், அள்ளுகிறார். 🤣

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, தமிழ் சிறி said:

கடலட்டை பண்ணையை சீனர்கள் நடத்துவதாக அறிந்தேன்.
கூடுதலான இடங்களில்… அவர்கள் நேரடியாக களத்தில் நிற்பதில்லை.
சிங்கள / தமிழ் முதலாளிகளின் நேரடி மேற்பார்வையில் இயக்கிக் கொண்டுள்ளார்கள்.
இதற்கு கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதமும், அடியாட்களும் நிறைய உண்டு.

அதுதானே பார்த்தேன், "அடி மடியில் கனம் ஏதோ இருக்கு" என்று நினைத்தேன், அது உண்மைதான் போல.

  • கருத்துக்கள உறவுகள்

நண்பர் ஒருவர் சுமார் 5-6 வருடங்களுக்கு முன் கடலட்டை பண்ணை தொடங்குவதற்கு என்று   ஊருக்கு புறப்பட்டுசென்றார். அங்கு ஆட்சிப் பொறுப்பில் இருந்தவர்கள் கொடுத்த டீலுக்கு ஒத்துபோகாததால்  போன வேகத்தில் திரும்பியும் வந்தார். அவர்  சொன்னதன்படி  மூலதனத்தின் அளவைப்பொறுத்து சில கோடிகளை முற்பணமாகவும் பின்னர்  வியாபாரத்தில் 40% பங்கு என்பது  அப்போதிருந்த நடைமுறை.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, தமிழ் சிறி said:

இதற்கு கடற் தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் ஆசீர்வாதமும், அடியாட்களும் நிறைய உண்டு.

அவரவருக்கு தெரிந்த முறையில், மொழியிற்தானே பேச முடியும் அவர்களால். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, satan said:

அவரவருக்கு தெரிந்த முறையில், மொழியிற்தானே பேச முடியும் அவர்களால். 

அதுக்காக…. பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களை
வைத்திய சாலை சென்று சிகிச்சை பெறும் அளவிற்கா அடிப்பார்கள்.
 

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, தமிழ் சிறி said:

அமைச்சர் முந்தி… பினாமிகள் பெயரில், மணல் அள்ளினவர்.
இப்ப… கடலில், அள்ளுகிறார். 🤣

காற்றுள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும். ஆனால் இவரது காட்டில் எப்போதுமே நல்ல காற்றடிக்கும். 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

காற்றுள்ள போதே தூற்றி கொள்ள வேண்டும். ஆனால் இவரது காட்டில் எப்போதுமே நல்ல காற்றடிக்கும். 

அரசியலில் இவரைப் பற்றி ஆயிரம் விமர்சனங்கள் இருந்தாலும்,
சிங்கள அரசின் போக்கை சரியாக கணித்து, அந்த இடத்தில் போய் சேர்ந்து 
அமைச்சராகியும் விடுவார். புலிகள் இருந்த காலத்தில் ஒரு முறை தேர்தலை 
பகிஷ்கரித்த  போது, இவர் தேர்தலில் நின்று 200 வாக்குகள் பெற்று 
பாராளுமன்றம் போய் அமைச்சரானவர் என நினைக்கின்றேன்.

சென்ற வருடம்... "அரகலய" போராட்டத்தின் பின், கோத்தா விலகிய போது...
புது ஜனாதிபதி யார் என்று இழுபறிப் பட்டுக் கொண்டிருந்த நேரத்தில்...
ஒற்றை ஆளாக நின்ற ரணிலுடன்... முதல் ஆளாக போய் சேர்ந்து 
தனது  ஆதரவை தெரிவித்து  அமைச்சரானார்.  

புலிகள் காலத்தில் இவர் மீது நடந்த கொலை முயற்சிகளிலும்...
வேட்டியுடன்  மதிலால் பாய்ந்து ஓடி, தனது உயிரை காப்பாற்றிக் கொண்டவர்.

அவரின் பெருமைகளை சொன்ன படியால்....
என்னை... ஈ.பி.டி.பி. லிஸ்ரிலை சேர்த்துப் போடாதீர்கள். 🙂

  • கருத்துக்கள உறவுகள்

இவற்றுக்கு அறிவு, திறமை ஏதும் தேவையில்லை. வீடு கொழுத்துற ராசாவுக்கு கொள்ளி கொடுக்கத்தெரிந்தால் சரி. 

7 hours ago, தமிழ் சிறி said:

அதுக்காக…. பல்கலைக் கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்களை
வைத்திய சாலை சென்று சிகிச்சை பெறும் அளவிற்கா அடிப்பார்கள்.
 

இல்லையென்றால், அங்கு யாரால் என்ன நடக்கிறது என்று புட்டு புட்டு வைத்துவிடுவார்கள், பிறகு வெள்ளை வேட்டித்தனம் பேசி மக்களை ஏமாற்ற முடியாதே. மாணவர்  உயிரோடு வந்ததே பெரிய புண்ணியம்.              

  • கருத்துக்கள உறவுகள்

இவர்  புலிகளுக்கு  எதிராக செயற்பட்டதால் சிங்கள கட்சிகள் இவரை தூக்கி (டக்லஸ்)வைத்திருக்கிறார்கள். முஸ்லிம் கட்சிகளுக்கு கூட இந்த வாய்ப்புகள் குறைவு.
தமிழருக்கான தீர்வை சிங்களத்திடம் இருந்து இவர் நினைத்தால் பெறக்கூடிய சாத்தியக்கூறு ஏனைய கட்சிகளை விட அதிகம். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.