Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

எரிகின்ற நெருப்புக்கு எண்ணெய் ஊற்றும் தொல்லியல் திணைக்களம்

”தொல்லியல் திணைக்களத்தின் ஆய்வுகளும் அடையாளப்படுதல்களும் இந்த நாட்டில் வாழும் அனைத்து மக்களினதும் கலாசார தொன்மைகளையும் வரலாறுகளையும் பேணிப் பாதுகாப்பதாக அமைய வேண்டுமே தவிர, எரிகின்ற நெருப்பிற்கு எண்ணெய் ஊற்றுவதாக அமையக் கூடாது” என்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்று (07) இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்திலேயே கடற்றொழில் அமைச்சரான டக்ளஸ் தேவானந்தா இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது ”சுழிபுரம், பறாளை முருகன் ஆலயம் உட்பட யாழ்ப்பாணத்தில் தமிழ் மக்களின் பாரம்பரிய பிரதேசங்கள் 3 தொல்லியல் திணைக்களத்திற்கு உரிய பகுதியாக அண்மையில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளமையை சுட்டிக்காட்டிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, குறித்த பகுதிகளை தொல்லியல் திணைக்களத்தினால் அடையாளப்படுத்தும் செயற்பாடானது உரிய வழிமுறைகளை பின்பற்றப்படாமல் மேற்கொள்ளப்பட்டிருப்பதை தன்னால் அறிந்து கொள்ளக் கூடியதாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் ”நாட்டை முன்னோக்கி கொண்டு செல்வதற்கு தற்போதைய ஜனாதிபதியும் அரசாங்கமும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் சூழலில், குறுகிய நலன்களுக்காக சிலரினால் முன்னெடுக்கப்படுகின்ற இவ்வாறான விடயங்கள் வேதனைக்குரியவை என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தேசிய நல்லிணக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட இணக்க அரசியல் என்பது, இருப்பவற்றை பாதுகாத்து முன்னோக்கி நகர்வதாகவும் பிரச்சினைகளை இலகுவாக தீர்ப்பதற்கான பொறிமுறையாகவும் இருக்க முடியுமே தவிர, தவறான நடவடிக்கைகளை கண்டுகொள்ளாமல் கடந்து செல்வதாக இருக்க முடியாது” எனவும் அமைச்சர் வலியுறுத்தியுள்ளார்.

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2023/1344064

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

கடற்றொழில் அமைச்சரின் கருத்துக்களை அமைச்சரவை ஏற்றுக்கொண்ட நிலையில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி, குறித்த விடயம் தொடர்பாக தொடர்ந்தும் அமைச்சரவைகளில் கலந்துரையாடி சரியான தீர்மானங்களை மேற்கொள்வதன் ஊடாக தவறுகள் இடம்பெற்றிருப்பின் திருத்திக் கொள்ள முடியும் என்று தெரிவித்துள்ளார்.

ரணிலின் உண்மை முகம்.

  • கருத்துக்கள உறவுகள்

தொல்லியல் திணைக்களம் எந்த அமைச்சரின் கீழ் இயங்குகிறது ?

  • கருத்துக்கள உறவுகள்
42 minutes ago, nunavilan said:

தொல்லியல் திணைக்களம் எந்த அமைச்சரின் கீழ் இயங்குகிறது ?

மகிந்த காலத்து, பெரும் இனவாதியான முன்னாள் பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்காவின் மகன் தான் பௌத்த சாசன அமைச்சர், விதுர விக்கிரமநாயக்கா.

இந்த மொட்டு கட்சி பின்னால் இருந்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்கிறது. இந்த பௌத்த சாசன உயர் அதிகாரியை பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார் ரணில். ஆனாலும், விதுர தன் வேலையினை காட்டிக் கொண்டே இருக்கிறார்.

எனது சந்தேகம், இவர்களுக்கு பின்னால் சீனாவும், அதன் நிதியுதவியும் இருக்க கூடும். காரணம், சீனமும், சிங்களமும் இணையும் ஒரே ஒருபுள்ளி பௌத்தம். 

சீனா நேரடியாக, வடபகுதியில் இயங்க முனைந்த போது, இந்தியா தடுத்ததால், இப்போது வேறு வகையில் நுழைகிறது போல தெரிகிறது. அண்மையில் மறவன்புலவு சச்சியர், குருந்தூர் சென்றார். அது இந்தியாவின் வேண்டுதலில் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிய போயிருக்கலாம் என்று கொழும்பு பத்திரிகையாள நண்பர் குசுகுசுத்தார்.

ஆக, இந்தியா வழக்கம் போல ஆவெண்டு இருந்தால், சீனன் வேறு வகையில் குடைச்சல் கொடுக்கத்தான் போகிறான்.

RADAR – Raising Awareness on Disinformation: Achieving Resilience - TEPSARadar - Free technology icons

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
46 minutes ago, Nathamuni said:

மகிந்த காலத்து, பெரும் இனவாதியான முன்னாள் பிரதமர் ரத்தினஸ்ரீ விக்கிரமநாயக்காவின் மகன் தான் பௌத்த சாசன அமைச்சர், விதுர விக்கிரமநாயக்கா.

இந்த மொட்டு கட்சி பின்னால் இருந்து பல தில்லாலங்கடி வேலைகளை செய்கிறது. இந்த பௌத்த சாசன உயர் அதிகாரியை பதிவியில் இருந்து ராஜினாமா செய்ய வைத்தார் ரணில். ஆனாலும், விதுர தன் வேலையினை காட்டிக் கொண்டே இருக்கிறார்.

எனது சந்தேகம், இவர்களுக்கு பின்னால் சீனாவும், அதன் நிதியுதவியும் இருக்க கூடும். காரணம், சீனமும், சிங்களமும் இணையும் ஒரே ஒருபுள்ளி பௌத்தம். 

சீனா நேரடியாக, வடபகுதியில் இயங்க முனைந்த போது, இந்தியா தடுத்ததால், இப்போது வேறு வகையில் நுழைகிறது போல தெரிகிறது. அண்மையில் மறவன்புலவு சச்சியர், குருந்தூர் சென்றார். அது இந்தியாவின் வேண்டுதலில் உள்ளே என்ன இருக்கிறது என்று அறிய போயிருக்கலாம் என்று கொழும்பு பத்திரிகையாள நண்பர் குசுகுசுத்தார்.

ஆக, இந்தியா வழக்கம் போல ஆவெண்டு இருந்தால், சீனன் வேறு வகையில் குடைச்சல் கொடுக்கத்தான் போகிறான்.

RADAR – Raising Awareness on Disinformation: Achieving Resilience - TEPSARadar - Free technology icons

அப்போ ரணில் அச்சாபிள்ளை?

விதுரதான் கக்காபிள்ளை என்கிறீர்களா?

இலங்கையில் நிர்வாக அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியிடமே - ஒரு ஜனாதிபதி கண்டும் காணாமல் விட்டாலே ஒழிய - எந்த அதிகாரியோ, அமைச்சரோ இப்படி செய்ய முடியாது.

இது முழுக்க முழுக்க ரணிலின் டபுள் கேம்.

இனவாதிகளில் மிக மோசமன இனவாதி தமிழர் அடையாளத்தை அழிக்க சங்கற்பம் பூண்டவரும் ரணில்.

 

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, goshan_che said:

அப்போ ரணில் அச்சாபிள்ளை?

விதுரதான் கக்காபிள்ளை என்கிறீர்களா?

இலங்கையில் நிர்வாக அதிகாரம் முழுவதும் ஜனாதிபதியிடமே - ஒரு ஜனாதிபதி கண்டும் காணாமல் விட்டாலே ஒழிய - எந்த அதிகாரியோ, அமைச்சரோ இப்படி செய்ய முடியாது.

இது முழுக்க முழுக்க ரணிலின் டபுள் கேம்.

இனவாதிகளில் மிக மோசமன இனவாதி தமிழர் அடையாளத்தை அழிக்க சங்கற்பம் பூண்டவரும் ரணில்.

 

ரணில் ஜனாதிபதி தான். ஆனாலும், மொட்டுக்கட்சியின் கையில் அரசும், மந்திரிசபையும். ஆக, ரணில் என்ன செய்தாலும், இந்த முழு இனவாதிகள் பின்னால் இருக்கும் வரை, ரணிலுக்கு benefit of doubts கொடுப்போம்.

ரணில் இனவாதி இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும், சிறிது நேரம் கொடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

எனது சிறு நம்பிக்கையின் காரணம்: ரணிலை பதவிக்கு கொண்டு வந்த அமெரிக்காவும், மேலை நாடுகளும். ரணில் இந்தியாவின் தெரிவு இல்லை என்ற வகையில் இந்த எனது சிறு நம்பிக்கை. இவர்கள் இதே வழியில் போனால், நாமும், வேறு வழியில்லாமல், சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல் என்று கிளம்ப வேண்டியது தான். 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Nathamuni said:

ரணில் ஜனாதிபதி தான். ஆனாலும், மொட்டுக்கட்சியின் கையில் அரசும், மந்திரிசபையும். ஆக, ரணில் என்ன செய்தாலும், இந்த முழு இனவாதிகள் பின்னால் இருக்கும் வரை, ரணிலுக்கு benefit of doubts கொடுப்போம்.

ரணில் இனவாதி இல்லை என்று சொல்ல வரவில்லை. ஆனாலும், சிறிது நேரம் கொடுத்து பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.

எனது சிறு நம்பிக்கையின் காரணம்: ரணிலை பதவிக்கு கொண்டு வந்த அமெரிக்காவும், மேலை நாடுகளும். ரணில் இந்தியாவின் தெரிவு இல்லை என்ற வகையில் எனது சிறு நம்பிக்கை. இவர்கள் இதே வழியில் போனால், நாமும், வேறு வழியில்லாமல், சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல் என்று கிளம்ப வேண்டியது தான். 

ரணில் மீள ஜனாதிபதியாக வர இரு காரணங்கள்.

1. பதவியாசை

2. இந்த பொருளாதர நெருக்கடியை பயன்படுத்தி தமிழர் தரப்பு ஒரு சுயாட்சி தீர்வை அடைந்து விடக்கூடாது என்ற ரணிலின் இனவாத-முனைப்பு.

ரணிலின் நோக்கம்

மேற்கு, தமிழர் தரப்பு எல்லோருக்கும் துண்ணீறு அடித்து விட்டு, ஒட்டு மொத்த பெளத்த சிங்கள மேலாண்மைக்கு நாட்டின் எந்த பகுதியிலும் ஒரு பங்கமும் ஏற்படாமல் - நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது.

நீங்கள் ரணில் மீது வைத்துள்ள சிறு நம்பிக்கை புரிகிறது. ஆனால் எனக்கு அப்படி நம்பிக்கை வரவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, goshan_che said:

ரணில் மீள ஜனாதிபதியாக வர இரு காரணங்கள்.

1. பதவியாசை

2. இந்த பொருளாதர நெருக்கடியை பயன்படுத்தி தமிழர் தரப்பு ஒரு சுயாட்சி தீர்வை அடைந்து விடக்கூடாது என்ற ரணிலின் இனவாத-முனைப்பு.

ரணிலின் நோக்கம்

மேற்கு, தமிழர் தரப்பு எல்லோருக்கும் துண்ணீறு அடித்து விட்டு, ஒட்டு மொத்த பெளத்த சிங்கள மேலாண்மைக்கு நாட்டின் எந்த பகுதியிலும் ஒரு பங்கமும் ஏற்படாமல் - நாட்டின் பொருளாதாரத்தை மீட்பது.

நீங்கள் ரணில் மீது வைத்துள்ள சிறு நம்பிக்கை புரிகிறது. ஆனால் எனக்கு அப்படி நம்பிக்கை வரவில்லை.

உங்கள் விரக்தி புரிகிறது. ஆனால் ரணில், அதிகார பகிர்வுக்கு வில்லன் (வில்லர்கள்) யார் என்று தெளிவாக்க முயல்வதாகவே நான் பார்க்கிறேன்.

13A யினை அமுல் படுத்தப்போவதாக சொல்லி இன்று பாரளுமன்றில் சொன்னபோது, ரிச்சர்ட் நெப்யூ என்ற அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி, இன்னோருவருடன் கொழும்பில் இருக்கிறார்.

இந்த வில்லர்கள் வெளியே தெரியப்போகிறார்கள் என்று பதறும் விசயம் தெரிந்த, பீரிஸ், இது (13A யினை அமுல் படுத்துவது) பாராளுமன்றம் வர தேவையில்லாத, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ரணில் வேலை என்று சொல்கிறார். 

பாராளுமன்றில் சமர்ப்பித்தது ரணிலின் நரி மூளை என்று சிலர் சொன்னாலும், அதன் பின்னால் வெளிநாடுகள் உள்ளன என்பதே யதார்த்தம். வில்லர்கள் வெளியே தெரிந்தால், அவர்களை கையாள்வதும் எப்படி என்று தெரிய வரும்.

மொட்டுகள், இறுதியாக, மொட்டைகளை அவிழ்த்து, தெருவுக்கு விடலாம். அது எமக்கு நன்மையாகவே முடியும். 

ஆகவே, அமைதியாக இருந்து, நம்ம தமிழ் சிறியர் வழக்கமாக சொல்வது போல, 'நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்போம்'.   

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, Nathamuni said:

உங்கள் விரக்தி புரிகிறது. ஆனால் ரணில், அதிகார பகிர்வுக்கு வில்லன் (வில்லர்கள்) யார் என்று தெளிவாக்க முயல்வதாகவே நான் பார்க்கிறேன்.

13A யினை அமுல் படுத்தப்போவதாக சொல்லி இன்று பாரளுமன்றில் சொன்னபோது, ரிச்சர்ட் நெப்யூ என்ற அமெரிக்க ராஜாங்க திணைக்கள அதிகாரி, இன்னோருவருடன் கொழும்பில் இருக்கிறார்.

இந்த வில்லர்கள் வெளியே தெரியப்போகிறார்கள் என்று பதறும் விசயம் தெரிந்த, பீரிஸ், இது (13A யினை அமுல் படுத்துவது) பாராளுமன்றம் வர தேவையில்லாத, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ரணில் வேலை என்று சொல்கிறார். 

பாராளுமன்றில் சமர்ப்பித்தது ரணிலின் நரி மூளை என்று சிலர் சொன்னாலும், அதன் பின்னால் வெளிநாடுகள் உள்ளன என்பதே யதார்த்தம். வில்லர்கள் வெளியே தெரிந்தால், அவர்களை கையாள்வதும் எப்படி என்று தெரிய வரும்.

ஆகவே, அமைதியாக இருந்து, நம்ம தமிழ் சிறியர் சொல்வது போல, 'நிலைமைகளை உன்னிப்பாக அவதானிப்போம்'.   

அவதானிப்பதை வேறு என்னத்தைதான் நாம் செய்ய முடியும்🤣.

நமது புலம், புலம்பெயர் தலைவர்களே இப்போ எமது விடயத்தில் வெறும் அவதானிப்பாளர்கள் மட்டுமே எனும் போது, கருத்தாளர் நாம் என்ன செய்ய முடியும்.

அவதானிப்போம்…அவதானிப்போம்…

48இல் இருந்து நாமும் அவதானிக்கிறோம்…அவர்களும் தீத்துகிறார்கள். இன்னும் கொஞ்ச காலம்தானே..அவதானித்து பார்ப்போம். பிறகு அவதானிக்க ஏதும் இராது.

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, goshan_che said:

48இல் இருந்து நாமும் அவதானிக்கிறோம்…அவர்களும் தீத்துகிறார்கள். இன்னும் கொஞ்ச காலம்தானே..அவதானித்து பார்ப்போம். பிறகு அவதானிக்க ஏதும் இராது.

கடந்த 500 வருட கால எமது வரலாறு அவ்வாறு சொல்லவில்லை.

பல ஆலயங்களை அழித்த போர்த்துக்கேயர் இரும்புப்பிடியில் இருந்த யாழ்ப்பாண ராஜ்ஜியம், அதனிடம் இருந்து எப்படி தப்பும் என்று தவித்த போது, ஒல்லாந்தர்கள் வந்தார்கள். ஓரளவு மத சுதந்திரமும் வந்தது.

அவர்களை வெளியே அனுப்ப முடியுமா என்று தவித்த போது, ஐரோப்பாவில் நடந்த குழப்பத்தால், ஒல்லாந்தர் இடம் இருந்து, ஆங்கிலேயர் கை மாறியது.

ஹிட்லர் செய்த குழப்பத்தால், ஆங்கிலேயர்களும் நம்மை விட்டு கிளம்பினார்கள்.

இப்போது, சிங்களவர்கள் முறை.... அவர்களும் கிளம்ப இலங்கைக்கு வெளியே சில வேலைகள் நடக்கின்றன. பொறுத்து இருப்போம். 

****

கடந்த வாரம் நடந்த சீமான் சர்ச்சையின் போது, சீமானிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது, இலங்கையில் தமிழர்கள் சிறுபான்மையா என்று.

சிறப்பான பதில் ஒன்றை வழங்கி இருந்தார்: சாத்திரி ஒப்பந்தத்தின் படி, 15 லட்ச்சத்தினை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களை சிறுபான்மை என்று சொல்ல முடியாதே.

Edited by Nathamuni
மேலதிக இணைப்பு

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர் என வரும் போது  சிங்களம் கட்சி பேதம் இன்றி தாக்க வருவார்கள். வகை தான் வேறு. அது ரனிலின் நரி விளையாட்டில் இருந்து விமலின் இனவாத பேச்சு வரை அடங்கும். 
இப்போ எதாவது  தமிழர்களுக்கு செய்வது போல் படம் காட்டுவது மேற்கின் கடனை வாங்கி  தின்று இனவாத ஏப்பம் விடவே.🙂

  • கருத்துக்கள உறவுகள்

//சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல்..//

தொல்லியல் தினைக்களம் ஒரு பக்கத்தால் இடத்தைப் பிடிக்க.. நாங்கள் தமிழ் மொழியை அதன் தொன்மையை முறையாக எழுதாமல் தொலைக்கிறோம். 

இப்பொழுது வரும் பத்திரிகை செய்திகளாகட்டும், கருத்துகளை எழுதுபவர்களாகட்டும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் மொழியும் வளரும்.

சுஜ என்ற ஒரு சொல் உள்ளதா? 

 

IMG-0597.png

Edited by பிரபா சிதம்பரநாதன்
எழுத்துப் பிழை

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, பிரபா சிதம்பரநாதன் said:

//சுஜ நிர்ணயத்துக்கான தேர்தல்..//

தொல்லியல் தினைக்களம் ஒரு பக்கத்தால் இடத்தைப் பிடிக்க.. நாங்கள் தமிழ் மொழியை அதன் தொன்மையை முறையாக எழுதாமல் தொலைக்கிறோம். 

இப்பொழுது வரும் பத்திரிகை செய்திகளாகட்டும், கருத்துகளை எழுதுபவர்களாகட்டும் சரியான சொற்களைப் பயன்படுத்தினால் மொழியும் வளரும்.

சுஜ என்ற ஒரு சொல் உள்ளதா? 

 

IMG-0597.png

நன்றி, ஆனாலும் திரி பேசும் முக்கியவிடயத்தை திசை திரும்புவதை தவிர்க்க, திண்ணையில் அல்லது புது திரியில் இதனை விவாதிப்பது நல்லது.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
5 hours ago, nunavilan said:

தொல்லியல் திணைக்களம் எந்த அமைச்சரின் கீழ் இயங்குகிறது ?

தெரிஞ்சு என்னத்தை செய்யப்போறியள் நுணாவில்? எந்த அமைச்சர் எண்டாலும் ஒரே குட்டையில் ஊறின மட்டைகள் தானே....:cool:

கேள்வி கேக்கிற விதத்தை பார்த்தால் ஆளை கூப்பிட்டு இரண்டு தட்டு தட்டுவியள் போல கிடக்கு..:rolling_on_the_floor_laughing:

  • கருத்துக்கள உறவுகள்

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

இதை ஏற்கனவே திண்ணை பூட்டப் பட முன்னர் திண்ணையில் பகிர்ந்தேன், ஏனெனில் இதனை ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி அறிவிப்பாளரிடமிருந்து hearsay ஆக அறிந்தேன். எனவே, நம்பகமான தகவலாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இது தான் நான் அறிந்த கதை:

1. இந்தியாவின் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் (RSS), விஷ்வ ஹிந்து பரிசத் (VHP) ஆகிய அமைப்புகளின் பிரமுகர்களுக்கும் இலங்கையின் பௌத்த குருமாருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. இந்தியா போனால் இவர்கள் அவர்களைச் சந்திப்பதும், இலங்கையில் இருக்கும் இவ்வமைப்புகளின் பிரதிநிதிகள் பௌத்த பீடத்தினரைச் சந்திப்பதும் நடக்கிற அளவுக்கு நெருக்கம்.

2. இந்த இந்து அமைப்புகளின் பிரமுகர்களிடம், பௌத்த குருமார் "வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் கிறிஸ்தவ மதமாற்றிகளாக மாறி, புதிய ஆலயங்கள் கட்டுகிறார்கள்" எனக் கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும் இந்த RSS, VHP அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதையே உறுதி செய்கிறார்களாம். எனவே இதைத் தடுக்க, "நாம் விகாரைகளையும், புத்த சின்னங்களையும் வைத்து இந்தியாவுக்கு நெருக்கமான பௌத்த மதத்தை காக்கிறோம்" என்கிறார்களாம்.  

இது உறுதியாக நிறுவ முடியாத ஒரு விடயம் என்றாலும், ஊரில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தத் தொடர்பிற்கு வலு சேர்க்கின்றன.

மறுபக்கம் பார்த்தால், இலங்கையில் இருக்கும் தேரவாத மஹாயான பௌத்தத்திற்கும் சீனாவிற்கும் என்ன தொடர்பு? சீனா ஒரு கம்யூனிச நாடு. அங்கே இந்தியாவிலிருந்து சென்ற பௌத்தம், டாவோயிசமாக மாறி 1950 வரை பிரபலமாக இருந்திருக்கிறது. இப்போது அது ஒரு அரச மதமாகக் கூட இல்லை. சீனா வேறு வகைகளில் இலங்கையில் நுழைகிறது - உண்மை. ஆனால், பௌத்தம் ஒரு தொடர்பிழை என்பது வரலாற்று ரீதியில் சரியான கணிப்பாகத் தெரியவில்லை!

  • கருத்துக்கள உறவுகள்

1. RSS இலங்கை பௌத்த அமைப்புகளுடன் நெருக்கமாக இருக்க வேண்டிய தேவை தான் என்ன? அப்படி நெருக்கமாக இருந்து அடையும் நன்மைகள் எதுவுமே இல்லையே.

2. மிக சிறிய இலங்கையில் கிறிஸ்தவம் பரவினால், மிகப் பெரிய இந்தியாவின், RSS க்கும் கவலைப்பட தேவை இல்லையே. அவர்களுக்கு முக்கியமானது இந்து மதம், அதுகுறித்த கவலைப்படுவார்கள். பௌத்தமதம் குறித்ததாக இராதே.

3. சீனா சிங்களத்துடன் இணையும் ஒரே ஒரு புள்ளி, பௌத்தம். சீனாவின் நோக்கம் ராணுவ நலன், மதமல்ல. ஆனால் மதத்தினை ஒரு காரணமாக காட்டி உள்ளே புக வேட்டி, சால்வையுடன் நல்லூர் வந்தார்கள் என்பதை மறக்காமல், இப்போது, வேறு வகையில் வருகிறார்கள் என்பதை புரிவது புத்திசாலித்தனமானது. 

இஸ்லாமியர் மத்திய கிழக்குடன் இணையும் ஒரே புள்ளி இஸ்லாம். ஆயினும், உள்ளே புகுந்து, சன்னி, சியா என்று ஆய்வது, பிரயோசனம் இல்லாத வேலை.

சீனாவுக்கு, இராணுவ நலன் முக்கியமானது. இந்தியா அதனை மறந்ததால், தென் இலங்கையும், கொழும்பு போர்ட் சிட்டியும் கைமாறியது. இதனாலேயே, அமெரிக்கா உள்ளே வந்தது.

.

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Nathamuni said:

இப்போது, சிங்களவர்கள் முறை.... அவர்களும் கிளம்ப இலங்கைக்கு வெளியே சில வேலைகள் நடக்கின்றன. பொறுத்து இருப்போம். 

ம்ம்ம்… ஏதோ நீங்கள் சொல்லுறியள் எண்டு பொறுக்கிறன். இல்லாட்டில் ஒரு படையணியோட மன்னாரில இறங்கி அடிபட ரெடி🤣

 

6 hours ago, Nathamuni said:

சிறப்பான பதில் ஒன்றை வழங்கி இருந்தார்: சாத்திரி ஒப்பந்தத்தின் படி, 15 லட்ச்சத்தினை இந்தியாவுக்கு அனுப்பாமல் இருந்திருந்தால், தமிழர்களை திட்டமிட்டு இனப்படுகொலை செய்யாமல் இருந்திருந்தால், அவர்களை சிறுபான்மை என்று சொல்ல முடியாதே

திரிக்கு சம்பந்தம் இல்லை. ஆனால் இனப்படுகொலை, மலையக உறவு வெளியேற்றம் நடக்காமல் - இயற்கையான இனப்பெருக்கம் நடந்து இருந்தாலும் இலங்கை தீவில் சிஙகளவர்தான் இப்போதும் பெரும்பான்மையாக இருப்பர். இப்போ 75% மாய் இருப்பது 65-70% இருந்திருக்கும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதை ஏற்கனவே திண்ணை பூட்டப் பட முன்னர் திண்ணையில் பகிர்ந்தேன், ஏனெனில் இதனை ஒரு ஐரோப்பிய தமிழ் வானொலி அறிவிப்பாளரிடமிருந்து hearsay ஆக அறிந்தேன். எனவே, நம்பகமான தகவலாகச் சொல்ல முடியவில்லை. ஆனால், இது தான் நான் அறிந்த கதை:

1. இந்தியாவின் ராஷ்ட்ரிய சுயம் சேவக் சங் (RSS), விஷ்வ ஹிந்து பரிசத் (VHP) ஆகிய அமைப்புகளின் பிரமுகர்களுக்கும் இலங்கையின் பௌத்த குருமாருக்கும் நெருங்கிய தொடர்புகள் இருக்கின்றன. இந்தியா போனால் இவர்கள் அவர்களைச் சந்திப்பதும், இலங்கையில் இருக்கும் இவ்வமைப்புகளின் பிரதிநிதிகள் பௌத்த பீடத்தினரைச் சந்திப்பதும் நடக்கிற அளவுக்கு நெருக்கம்.

2. இந்த இந்து அமைப்புகளின் பிரமுகர்களிடம், பௌத்த குருமார் "வெளிநாட்டிலிருந்து இலங்கை வரும் தமிழர்கள் கிறிஸ்தவ மதமாற்றிகளாக மாறி, புதிய ஆலயங்கள் கட்டுகிறார்கள்" எனக் கூறுகிறார்கள். இலங்கையில் இருக்கும் இந்த RSS, VHP அமைப்புகளின் பிரதிநிதிகளும் இதையே உறுதி செய்கிறார்களாம். எனவே இதைத் தடுக்க, "நாம் விகாரைகளையும், புத்த சின்னங்களையும் வைத்து இந்தியாவுக்கு நெருக்கமான பௌத்த மதத்தை காக்கிறோம்" என்கிறார்களாம்.  

இது உறுதியாக நிறுவ முடியாத ஒரு விடயம் என்றாலும், ஊரில் நடக்கும் சில சம்பவங்கள் இந்தத் தொடர்பிற்கு வலு சேர்க்கின்றன.

மறுபக்கம் பார்த்தால், இலங்கையில் இருக்கும் தேரவாத மஹாயான பௌத்தத்திற்கும் சீனாவிற்கும் என்ன தொடர்பு? சீனா ஒரு கம்யூனிச நாடு. அங்கே இந்தியாவிலிருந்து சென்ற பௌத்தம், டாவோயிசமாக மாறி 1950 வரை பிரபலமாக இருந்திருக்கிறது. இப்போது அது ஒரு அரச மதமாகக் கூட இல்லை. சீனா வேறு வகைகளில் இலங்கையில் நுழைகிறது - உண்மை. ஆனால், பௌத்தம் ஒரு தொடர்பிழை என்பது வரலாற்று ரீதியில் சரியான கணிப்பாகத் தெரியவில்லை!

இதற்கு hearsay evidence மட்டும் அல்ல சந்தர்பசாட்சியும் உண்டு. RSS ஐ பொறுத்தவரை பெளத்தம் இந்து என்ற குடையின் கீழ் வருகிறது. இது அவர்களின் சிந்தாத்ந்த முடிவு.

https://m.timesofindia.com/city/bhopal/jains-sikhs-buddhists-not-different-from-hindus-rss/articleshow/39495560.cms

அதேபோல் மகிந்த என நினைக்கிறேன் புத்த காயா போனபோது - உமா பாரதி உள்ளிட்டோர் - அவரும் இந்துவே என கூவினர்.

உண்மை என்னவென்றால்,

ஆரிய வம்சம் என கூறி கொள்ளும் சிங்களவர்களை, இந்துதுவா தலைமகள், சூத்திர திராவிடர் என தாம் கருதும் தமிழர்களை விட தமது பங்காளிகளாகவே கருதுகிறார்கள்.

 

2 hours ago, Justin said:

பௌத்தம் ஒரு தொடர்பிழை என்பது வரலாற்று ரீதியில் சரியான கணிப்பாகத் தெரியவில்லை!

எனக்கும் தெரியவில்லை. மாவோ விற்கு பின்னான சீனாவில் பெளத்தத்துக்கு ஒரு வகிபாகம் இல்ல என்பது மட்டும் அல்ல, அதை சிசிபி கண்காணிப்பில் வைத்துள்ளது என்பதே யாதார்த்தம்.

அதே போல் பிஜேபி ஆளும் இந்தியா போலன்றி - சீன வெளியுறவு கொள்கை மதம் சார்ந்து எங்கும் இருந்ததில்லை.

 

  • கருத்துக்கள உறவுகள்

மிக முக்கியமான ஒன்று.

இலங்கையில் சீனாவின் ஆர்வம் 2000 ஆண்டுக்கு பின்னானது.

ஆனால்…

இலங்கை தீவில் தமிழர் நிலத்தில் பெளத்த-சிங்கள சின்னத்தை ஊன்றி விட வேண்டும், சிங்கள மயமாக்கி விட வேண்டும் என்ற “வரலாற்று அரிப்பு” துட்டு கெமுனுவுக்கும் முன்னானது.

சுதந்திர இலங்கையின் முதல் பாரிய திட்டம் என கல்லோயாவில் நிலம் பறித்தது முதல், 1995 இல் யாழ் வீழ்ந்ததும் அவசர அவசரமாக ஜம்புகோள பட்டுனவை கட்டியது வரை - இலங்கையின் பக்கம் சீனாவின் பார்வை திரும்ப பல ஆயிரம் ஆண்டுக்கு முன்பே, நடைமுறையில் இருக்கிறது இந்த “வரலாற்று அரிப்பு”.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 minutes ago, goshan_che said:

 

அதேபோல் மகிந்த என நினைக்கிறேன் புத்த காயா போனபோது - உமா பாரதி உள்ளிட்டோர் - அவரும் இந்துவே என கூவினர்.

உண்மை என்னவென்றால்,

 

 

உண்மை என்னவென்றால்,
 

1. மகிந்த இந்துவுமல்ல, பெளத்தருமல்ல 😁

2. சீனாகாரன் அல்வா கொடுத்து விட்டான். இந்தியாவின் இயலாமை, கையறுநிலை கண்டே அமெரிக்கன் உள்ள வந்து சீன சார்பு கோத்தாவை துரத்தி, இந்தியா விரும்பாத ரணிலை ஏத்திவிட்டார்கள்.

3. ஆக, RSS நிலைப்பாடு நமக்கு முக்கியமல்ல என்று நிணைக்கிறேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

1. அதுதான் சிங்களவனின் கெட்டித்தனம். உமா பாரதிக்கு பெளத மகிந்தன் முகம். போப்பாண்டவருக்கு மகிந்த “பேர்சி” ராஜபக்ச. 

2. சீனாக்காரன், இந்தியாகாரன் எல்லாருக்கும் அல்வா கொடுத்தது சிங்களவன். இன்றைக்கு மேற்க்குக்கு கொடுக்க பாராளுமன்றத்தில் வைத்து அல்வா கிண்டி உள்ளான்🤣.

3. நீங்கள்தானே ஒரு ஆறு மாதம் முதல் - மோடியால்தான் எமக்கு தீர்வு என யாழில் எழுதினது? நான் சீமானுக்கும், திராவிட கட்சிக்கும் ஆதரவில்லை. மோடிதான் என் தெரிவு என எழுதினீர்களே?

இப்ப ஆ எஸ் எஸ் முக்கியம் இல்லை எண்டுறியள்?

 

5 minutes ago, Nathamuni said:

உண்மை என்னவென்றால்,
 

1. மகிந்த இந்துவுமல்ல, பெளத்தருமல்ல 😁

2. சீனாகாரன் அல்வா கொடுத்து விட்டான். இந்தியாவின் இயலாமை, கையறுநிலை கண்டே அமெரிக்கன் உள்ள வந்து சீன சார்பு கோத்தாவை துரத்தி, இந்தியா விரும்பாத ரணிலை ஏத்திவிட்டார்கள்.

3. ஆக, RSS நிலைப்பாடு நமக்கு முக்கியமல்ல என்று நிணைக்கிறேன்.

 

 

  • கருத்துக்கள உறவுகள்
23 minutes ago, goshan_che said:

திரிக்கு சம்பந்தம் இல்லை. ஆனால் இனப்படுகொலை, மலையக உறவு வெளியேற்றம் நடக்காமல் - இயற்கையான இனப்பெருக்கம் நடந்து இருந்தாலும் இலங்கை தீவில் சிஙகளவர்தான் இப்போதும் பெரும்பான்மையாக இருப்பர். இப்போ 75% மாய் இருப்பது 65-70% இருந்திருக்கும்.

15% வெளியே போனபோது, மொத்த சனத்தொகை ஒருகோடிக்கும் குறைவு. 

அவ்வகையில் 1958, 77, 83 பின்னர் யுத்தம் மலையக தமிழர்களை பெருமளவில் தமிழகம் அனுப்பியது. ஈழத்தமிழர் நாமும் இங்கே வந்துவிட்டோம்.
 
ஆக 60 -62% தான் சிங்களம் வந்திருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Nathamuni said:

15% வெளியே போனபோது, மொத்த சனத்தொகை ஒருகோடிக்கும் குறைவு. 

அவ்வகையில் 1958, 77, 83 பின்னர் யுத்தம் மலையக தமிழர்களை பெருமளவில் தமிழகம் அனுப்பியது. ஈழத்தமிழர் நாமும் இங்கே வந்துவிட்டோம்.
 
ஆக 60 -62% தான் சிங்களம் வந்திருக்கும். 

65-70 என நினைக்கிறேன். 

பரவாயில்லை உங்கள் கணிப்பையே எடுப்போம்.

100% இல் 60-62% பெரும்பான்மையா? சிறுபான்மையா?

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, goshan_che said:

3. நீங்கள்தானே ஒரு ஆறு மாதம் முதல் - மோடியால்தான் எமக்கு தீர்வு என யாழில் எழுதினது? நான் சீமானுக்கும், திராவிட கட்சிக்கும் ஆதரவில்லை. மோடிதான் என் தெரிவு என எழுதினீர்களே?

இப்ப ஆ எஸ் எஸ் முக்கியம் இல்லை எண்டுறியள்?

நீங்கள் தானே, சில நாட்கள் முன்னர் திண்ணையில், நாம் ஊகிக்க மட்டுமே முடியும். எதுவுமே புரியவில்லை என்று ஏத்துக்கொண்டீர்கள். 😁

ஆக, இலங்கை அரசியல் வாரத்துக்கு, வாரம் மாறுகிறது. இதில் 6 மாத கதை எங்க அய்யா? 🤪

நாம் ஒன்றை நினைக்க, வேறு ஒன்று அல்லவா நடக்கிறது. 🤦‍♂️

3 minutes ago, goshan_che said:

65-70 என நினைக்கிறேன். 

பரவாயில்லை உங்கள் கணிப்பையே எடுப்போம்.

100% இல் 60-62% பெரும்பான்மையா? சிறுபான்மையா?

இன்று இருப்பதிலும் பார்க்க அதிகமாக இருந்திருப்போம். குறிப்பாக, தீவுப்பகுதி இன்று உள்ளதை போலல்லாமல், மக்களால் நிரம்பி காணித்துண்டே இல்லாமல் இருந்திருக்கும்.

தமிழனை சிறுபான்மையாக்கி, இடத்தினை பறிக்கவே சிங்களவன் முனைந்தான். 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.