Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழர்கள் தமிழுடன் இந்தியையும் கற்க வேண்டும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தல்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 AUG, 2023 | 10:02 AM
image
 

புதுடெல்லி: தமிழர்கள் தம் தாய்மொழியான தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வலியுறுத்தி உள்ளார். குஜராத்தின் அகமதாபாத்திலுள்ள இந்திய ஆசிரியர்கள் கல்வி நிறுவனத்தின் (ஐஐடிஇ) பட்டமளிப்பு விழாவில் பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

 

கடந்த 2010-ல் குஜராத்தின் முதல்வராக இருந்த நரேந்திரமோடி, காந்திநகரில் சிறப்பு பல்கலைகழகமாக ஐஐடிஇயை நிறுவினார். இதன் பட்டமளிப்பு விழாவில் மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா கலந்து கொண்டார்.மொத்தம் 2,927 மாணவர்கள் இந்த விழாவில் பட்டம் பெற்றனர். இந்த விழாவில் உள்துறை அமைச்சர் பேசியது: நான் ஆங்கிலத்துக்கு எதிரானவன் அல்ல. ஏனெனில், எந்தவகையிலான அறிவையும் புறக்கணிக்காத நாடாக இந்தியா உள்ளது.

நம் வரலாறு, இலக்கணம், இலக்கியங்கள் தாங்கியுள்ள தாய்மொழியை பாதுகாப்பது மாணவர்களாகிய உங்களின் கடமை. இதனால், புதிய கல்விக் கொள்கை 2020-ல் தாய்மொழியை குழந்தைகளுக்கு புகட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.ஆங்கிலத்துடன் சேர்த்து ஜெர்மன், பிரெஞ்ச் போன்ற மொழிகளை குழந்தைகள் கற்றுக் கொள்ள வேண்டும். ஆனால், குஜராத்தின் குழந்தைகள் குஜராத்தியுடன் இந்தியையும் கற்க வேண்டும்.

 

அசாமியர்கள் அசாம் மொழியுடன் இந்தியை கற்க வேண்டும். தமிழர்கள் தமிழுடன் சேர்த்து இந்தியையும் கற்பது அவசியம். இது நடந்தால் நம் நாடு முன்னேறுவதை எவராலும் தடுக்க முடியாது. இங்கு நான்கு பாடங்களில் ஒன்றாக சம்ஸ்கிருத மொழியும் கற்றுத்தரப்படுகிறது. இங்கு கிடைக்கும் அடிப்படை சம்ஸ்கிருதக் கல்வியை கூடுதலாகக் கற்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். இந்த உலகம் முழுவதிலுமாக ஒரு அறிவுக்களஞ்சியம் உள்ளதென்றால் அது, நம் உபநிடதங்களும், வேதங்கள் மற்றும் சம்ஸ்கிருதம் மட்டுமே. இதை கற்பவர்கள் வாழ்க்கையில் எந்த பிரச்சினைகளும் ஒரு பிரச்சினையாகவே இருக்காது.

அறிவு எங்கிருந்து வந்தது என்பதைப் பற்றி சிந்திக்காமல் நல்ல எண்ணங்களை உள்வாங்க வேண்டும் என வேதங்கள் போதிக்கின்றன. அறிவு எங்கிருந்து வந்தாலும் அது நம் சமூதாயம், மக்கள், உலகம் மற்றும் பிரபஞ்சத்தின் நலனுக்கானதா எனப் பார்க்க வேண்டும்.அதில் நவீன பரிமாணத்தையும் சேர்க்க வேண்டும். அறிவு மற்றும் அறிவியல் துறையில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இந்த மாற்றங்களைப் புரிந்துகொண்டு இரண்டையும் ஒருங்கிணைத்து முழுமையானக் கல்வி முறையை உருவாக்க வேண்டும். கல்வியின் பொருள் என்பது குழந்தைக்கு சரியான பாதையை காட்டி, வழிகாட்டியாக மாறுவது ஆகும், என்று அவர் பேசினார்.

https://www.virakesari.lk/article/162379

  • கருத்துக்கள உறவுகள்

அவர்களுக்கு எப்படியாவது தமிழ் நாட்டில் இந்தியை வலுகடடயமாக புகுத்தி விட வேண்டும் என்பதுதான் திடடம். மற்ற மாநிலம் எல்லாம் ஆமாம் சாமி போடடாலும் , தமிழ் நாட்டில் அது ஈடுபடுவதில்லை என்பதுதான் சங்கிகளின் பிரச்சினை. இங்கிருந்து வடக்குக்கு போவதை  விட அங்கிருந்துதான் தமிழ் நாட்டுக்கு வேலைக்கு வருகிறார்கள். அதை உணர்ந்து சங்கிகள் தமிழை படிப்பது நல்லது. 

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, Cruso said:

 மற்ற மாநிலம் எல்லாம் ஆமாம் சாமி போடடாலும்🤣

சரியாக சொன்னீர்கள், தமிழர்களில் இவர்களுக்கு இருக்கும் வன்ம ம் வெளிப்படையாக தெரிவித்துக்கொண்டிருக்கின்றார்கள்👍,

 

10 hours ago, Cruso said:

அதை உணர்ந்து சங்கிகள் தமிழை படிப்பது நல்லது. 

அவர்கள் ஏன் தமிழ் கற்க கூடாது

நான் தமிழகத்தில் பிறந்து இருந்தால், கண்டிப்பாக இந்தி மொழியை கற்று இருப்பேன். நான் பிற மொழிகளான ஆங்கிலம் மற்றும் சிங்களம் (கதைக்கும் அளவுக்கு) கற்றமையால் எனக்கு என் மொழி மீதான விருப்பம் குறையவும் இல்லை, வெறுப்பு ஏற்படவும் இல்லை. அதே நேரத்தில் வாழ்வில் முன்னேற பிற மொழிகளை கற்றது உதவியாக இருந்தது.

கட்டாயமாக்கப்பட்டு, வேண்டும் என்றே திணிக்கப்பட்டால், அவ்வாறான திணிக்கும் முயற்சிகளை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். ஆனால் அந்த மொழியை அல்ல.

திராவிடக் கட்சிகள், இந்தியை எதிர்க்கின்றோம் என்று கூவி விட்டு, தாம் நிர்வகிக்கும் மற்றும் தம்மால் நடாத்தப்படும் அத்தனை கல்வி நிறுவனங்களிலும் இந்தியை பாடமாக வைத்து இருக்கின்றார்கள். இந்தியை வைத்து பா.ஜ.க அரசியல் செய்தற்கு நிகராக திராவிடக் கட்சிகளும் செய்கின்றன. 

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, Cruso said:

அதை உணர்ந்து சங்கிகள் தமிழை படிப்பது நல்லது. 

வேணாம் சாமி, மோடி ஜி பேசிய தமிழை கேட்டு, நிலவில் ஜாலியா குந்தி இருந்த ஒளவையார், பிச்சு பறந்தோடி செவ்வாய் கிரகத்தில அசைலம் அடிச்சுட்டாவாம்.

மொத்த சங்கியும் தமிழ் பேசினா, தமிழ் காலி ஹேய்🤣.

  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, goshan_che said:

வேணாம் சாமி, மோடி ஜி பேசிய தமிழை கேட்டு, நிலவில் ஜாலியா குந்தி இருந்த ஒளவையார், பிச்சு பறந்தோடி செவ்வாய் கிரகத்தில அசைலம் அடிச்சுட்டாவாம்.

மொத்த சங்கியும் தமிழ் பேசினா, தமிழ் காலி ஹேய்🤣.

ஹிந்தி தோடா தோடா மாலுமே. கியா போல்தாகே?😜

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, நிழலி said:

 

கட்டாயமாக்கப்பட்டு, வேண்டும் என்றே திணிக்கப்பட்டால், அவ்வாறான திணிக்கும் முயற்சிகளை கண்டிப்பாக எதிர்க்க வேண்டும். ஆனால் அந்த மொழியை அல்ல.

 

நீங்கள் சொல்லுவது சரிதான். மேலதிகமாக  ஒரு மொழியை கற்றுக்கொள்ளும்போது அதனால்  பலன்கள் கிடைக்குமே ஒழிய நஷ்டம் ஒன்றும் இல்லை. ஆனால், இந்தியையும் சிங்களத்தையும் வலு கடடாயமாக இங்கு புகுத்துகிறார்கள். அதுதான் பிரச்சினை.

தனிப்படட ரீதியில் இலங்கையிலோ , இந்தியாவிலோ வேற்று மொழி கட்பத்தை யாருமே தடை செய்யவில்லை. இப்போது இலங்கையில் பொதுவாக எல்லா தமிழர்களும் ஓரளவு சிங்களம் பேசுவார்கள். தமிழ் நாட்டிலும் இந்தி பேசக்கூடியவர்கள் நிறைய இருக்கிறார்கள்.

என்னை பொறுத்த வரைக்கும் திணிக்கப்படும் மொழியை எதிர்க்க வேண்டும். அப்பபோதுதான் திணிப்பவர்களுக்கும் அது புரியும். 

  • கருத்துக்கள உறவுகள்
40 minutes ago, Cruso said:

கியா போல்தாகே?😜

போத்தல் எங்க சார் தாராங்க? வெறும் டீ, பிஸ்கெட்தான்🤣

  • கருத்துக்கள உறவுகள்

கற்றுக் கொள்ளலாம். ஆனால், பிரெஞ்சுக் காரர்கள் போல இருக்க வேண்டும்: ஆங்கிலம் தெரிந்தாலும் தேவையில்லாமல் பேசக் கூடாது, பிரெஞ்சு மட்டும் தான் நாக்கில் வரவேண்டும் 😂 (நான் 2008 இல் பரிசில் அனுபவப் பட்டது, இப்போதும் அப்படியா தெரியாது!)

மற்றபடி, கற்றுக் கொள்ளும் ஒவ்வொரு மொழியும் ஒரு புதுச் சாளரத்தைத் திறப்பது போன்றது, புதிய பார்வை, வாசிப்பு அனுபவம் என்பன உள்ளே வரும்! நமக்குத் தனிப்பட்ட ரீதியில் நட்டமில்லை!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.