Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ். செம்மணி வளைவுக்கு அண்மையில் கோர விபத்து : கணவன் பலி, மனைவி காயம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
19 AUG, 2023 | 02:08 PM
யாழ்ப்பாணம், ஏ9 வீதியில் செம்மணி வளைவுக்கு அருகாமையில் இடம்பெற்ற விபத்தில் சிக்கி கணவர் உயிரிழந்ததோடு, மனைவி படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (19) நண்பகல் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

மோட்டார் சைக்கிளும் பொலிஸாரின் தண்ணீர் பௌசரும் மோதியே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

இதில் கணவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அவர் புவனேஸ்வரன் மனோஜ் (31) என்ற கொக்குவில் கிழக்கை சேர்ந்தவர் ஆவார்.

மன்னாரை சேர்ந்த 26 வயதான மனைவி உயிராபத்தான நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/162706

Edited by நிழலி
இறந்தவர்களின் படங்கள் நீக்கம்.

வீரகேசரி ஊடக தர்மம் ஏதும் இல்லாமல் இறந்து கிடப்பவரதும், காயம் அடைந்தவரதும் படங்களை பிரசுரித்து உள்ளது.

 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, நிழலி said:

வீரகேசரி ஊடக தர்மம் ஏதும் இல்லாமல் இறந்து கிடப்பவரதும், காயம் அடைந்தவரதும் படங்களை பிரசுரித்து உள்ளது.

 

 

சோசல் மீடியா: பேஸ்புக், யூரியூப் இத்தியாதிகளுடன் போட்டி போடுவதற்காக இப்படியான வகையில் செய்திகளை பிரசுரம் செய்கின்றார்கள் போலும். 

இன்று பார்த்தேன் தமிழ்வின் தளத்தில் கிளிநொச்சியில் தற்கொலை செய்து இறந்த மாணவனின்  உயர்தர பரீட்சை பெறுபேற்றை சுட்டிலக்கம், முழுப்பெயர், தேசிய அடையாள இலக்கம் என்பனவற்றுடன் பரீட்சை திணைக்களத்தின் நேரடி தகவலை பிரசுரம் செய்துள்ளார்கள். 

ஒருவரின் முழுப்பெயர், சுட்டிலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் எவ்வளவு அந்தரங்கமானது என்பது இவர்களுக்கு தெரியவில்லையா. 

ஒருவர் இறந்துவிட்டாலும் இப்படியாக தனிநபர் தகவலை நாற்சந்தியில் வைத்து காண்பிப்பது எவ்வளவு தவறு!

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நியாயத்தை கதைப்போம் said:

சோசல் மீடியா: பேஸ்புக், யூரியூப் இத்தியாதிகளுடன் போட்டி போடுவதற்காக இப்படியான வகையில் செய்திகளை பிரசுரம் செய்கின்றார்கள் போலும். 

அதே தான்.

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சியில் விபத்து.. யாழில் விபத்து... விபத்தாலேயே தமிழரின் மிச்ச சனத்தொகையும் அழிஞ்சிடும் போல இருக்கே. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கினமா.. அல்லது தொடர நடவடிக்கை எடுக்கினமா..?????!

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, nedukkalapoovan said:

கிளிநொச்சியில் விபத்து.. யாழில் விபத்து... விபத்தாலேயே தமிழரின் மிச்ச சனத்தொகையும் அழிஞ்சிடும் போல இருக்கே. விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுக்கினமா.. அல்லது தொடர நடவடிக்கை எடுக்கினமா..?????!

 

ரயில் விபத்து, பஸ் விபத்து, மோட்டார் சைக்கிள் விபத்து, தற்கொலை, கொலை.. ஒவ்வொரு நாளும் இதே செய்திகள். 

விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு. 

புகையிரத கடவையில் கடவை மூடப்பட்ட பின்னரும் தடையை சுத்தி மோட்டார் சைக்கிள்கள் புகையிரதம் வரும்போது கடந்து செல்வதை அவதானித்துள்ளேன். 

வீதிகளில் கண் மூடித்தனமாக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றார்கள். 

இனி இதற்கும் சிங்களம், இன வாதமே காரணம் என முறைப்பாடு வைக்க வேண்டாம்.  

எனது சகபாடி ஒருவன் இலங்கை சென்றபோது தான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதை வட்ஸப் வீடியோவில் காண்பித்தான். அவன் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டை மீறி ஓட்டுவதை தெளிவாக அவதானிக்க முடிந்தது. 

தங்கள் தங்கள் உயிரை, உடமையை பாதுகாக்க வேண்டும், தங்கள் பாதுகாப்பில் தாங்கள் அக்கறை எடுக்கவேண்டும் என்று நாங்களா அறிவுரை கூறமுடியும்?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
38 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

 

ரயில் விபத்து, பஸ் விபத்து, மோட்டார் சைக்கிள் விபத்து, தற்கொலை, கொலை.. ஒவ்வொரு நாளும் இதே செய்திகள். 

விபத்துக்களை தடுக்க நடவடிக்கை எடுப்பதில் எல்லோருக்கும் பங்கு உண்டு. 

புகையிரத கடவையில் கடவை மூடப்பட்ட பின்னரும் தடையை சுத்தி மோட்டார் சைக்கிள்கள் புகையிரதம் வரும்போது கடந்து செல்வதை அவதானித்துள்ளேன். 

வீதிகளில் கண் மூடித்தனமாக வாகனங்கள், மோட்டார் சைக்கிள்களை ஓட்டுகின்றார்கள். 

இனி இதற்கும் சிங்களம், இன வாதமே காரணம் என முறைப்பாடு வைக்க வேண்டாம்.  

எனது சகபாடி ஒருவன் இலங்கை சென்றபோது தான் கொழும்பில் இருந்து யாழ்ப்பாணம் செல்வதை வட்ஸப் வீடியோவில் காண்பித்தான். அவன் வாகனத்தை வேகக்கட்டுப்பாட்டை மீறி ஓட்டுவதை தெளிவாக அவதானிக்க முடிந்தது. 

தங்கள் தங்கள் உயிரை, உடமையை பாதுகாக்க வேண்டும், தங்கள் பாதுகாப்பில் தாங்கள் அக்கறை எடுக்கவேண்டும் என்று நாங்களா அறிவுரை கூறமுடியும்?

மக்கள் தங்கள் பாதுகாப்பை தாங்களே உறுதிபடுத்திக்கொள்ள பழக வேண்டும். எல்லா சட்டங்களும் மக்களை பாதுகாக்காது.

  • கருத்துக்கள உறவுகள்
On 19/8/2023 at 18:54, நியாயத்தை கதைப்போம் said:

ஒருவரின் முழுப்பெயர், சுட்டிலக்கம், தேசிய அடையாள அட்டை இலக்கம் எல்லாம் எவ்வளவு அந்தரங்கமானது என்பது இவர்களுக்கு 

மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலையில் போடுகிறார்கள்.(bulletin board)

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, nunavilan said:

மாணவர்களின் பெறுபேறுகளை பாடசாலையில் போடுகிறார்கள்.(bulletin board)

பாடசாலையின் அறிவிப்பு பலகையில் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கமும் காண்பிக்கப்படுமா?

  • கருத்துக்கள உறவுகள்
53 minutes ago, நியாயத்தை கதைப்போம் said:

பாடசாலையின் அறிவிப்பு பலகையில் மாணவர்களின் தேசிய அடையாள அட்டை இலக்கமும் காண்பிக்கப்படுமா?

இல்லை.   பெயர், சுட்டிலக்கம், பெறுபேறுகள் என்பன என நினைக்கிறேன். இவையும் தனியுரிமை அல்லவா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.