Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ்ப்பாணத்தில் இப்படியும் ஒரு அறிவிப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

பக்கத்தில் சாட்டி இஸ்லாமிய பாடசாலையில் (அண்மைக் குடியேறிகள்) இருந்து உயர் வகுப்புக்கு விரைவில் இஸ்லாமிய மாணவரும் வரும் போது இஸ்லாமிய அதிபர் வரக்கூடியதாக இருக்க வேண்டுமே என்பதே கொழும்பான் இணைத்த பத்திரிகையின் கவலை.

இது சம்பந்தமாக ஒரு வருடம் முன்பே யாழில் குறிப்பு எழுதி இருந்தேன்.....இது ஒரு கான்சர் வியாதி...ஊழல் அதிகாரிகளல் நாம் நாட்டையே இழப்போம்..

  • Replies 161
  • Views 11.7k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, alvayan said:

பக்கத்தில் சாட்டி இஸ்லாமிய பாடசாலையில் (அண்மைக் குடியேறிகள்) இருந்து உயர் வகுப்புக்கு விரைவில் இஸ்லாமிய மாணவரும் வரும் போது இஸ்லாமிய அதிபர் வரக்கூடியதாக இருக்க வேண்டுமே என்பதே கொழும்பான் இணைத்த பத்திரிகையின் கவலை.

இது சம்பந்தமாக ஒரு வருடம் முன்பே யாழில் குறிப்பு எழுதி இருந்தேன்.....இது ஒரு கான்சர் வியாதி...ஊழல் அதிகாரிகளல் நாம் நாட்டையே இழப்போம்..

லண்டனில், பாரிசில், ரொரொண்டோவில் தமிழர் குடியேறியதும் கோவில் கட்டி தெருவெங்கும் தேர் இழுத்ததும் கான்சர்  வியாதியா? 

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, island said:

லண்டனில், பாரிசில், ரொரொண்டோவில் தமிழர் குடியேறியதும் கோவில் கட்டி தெருவெங்கும் தேர் இழுத்ததும் கான்சர்  வியாதியா? 

   இன்ன்கு நம்மினம்தான் படிக்க வேண்டும்..நாம்தான் ஆசிரியராக இருக்க  வேண்டும் ...நம்ம உடைதான் போடவேண்டும் என்று கேட்கலையே ....பெய்ரே  ஐலன்ட் தானே..அப்ப                               இது இன்னொருவகை கான்சர் போல கிடக்கு...😁

Edited by alvayan

  • கருத்துக்கள உறவுகள்
18 minutes ago, alvayan said:

   இன்ன்கு நம்மினம்தான் படிக்க வேண்டும்..நாம்தான் ஆசிரியராக இருக்க  வேண்டும் ...நம்ம உடைதான் போடவேண்டும் என்று கேட்கலையே ....பெய்ரே  ஐலன்ட் தானே..அப்ப                               இது இன்னொருவகை கான்சர் போல கிடக்கு...😁

ஐலண்ட் கான்சர் என்றால் அல்வாயனும் கான்சராக தான் இருக்கும். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

சிலருக்கு நாரந்தனை, கந்தசாமி கோவிலடி, புளியங்கூடல் எல்லாம் அத்துப்படி.

கள்ள மாடு பிடிக்க வந்திருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
15 minutes ago, புலவர் said:

கள்ள மாடு பிடிக்க வந்திருப்பார்கள்.

கற்பூரம் ஐயா நீங்கள்👏🏾

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

ஐலண்ட் ப்ரோ!

தெளிவாகி வாருங்கள்!! பேசலாம்!!!

சீதைக்கு ராவணன் என்ன முறை கதை வேண்டாமே!!!

நாதம், எல்லாரும் இங்கே "குழம்பிப் போய்" இருக்கிறார்கள் - நீங்கள் மட்டும் தான் "தெளிவாக" இன்னும் திரியின் இரண்டாம் பக்கத்திலேயே நிக்கிறீங்கள்😂! ஒரு ஸ்பின் டொக்ரர் வேலையில் கூட இப்படி "ஆரம்ப நிலையிலேயே" நிற்பது கவலையளிக்கிறது நாதம்!

ஒரு ஸ்பின் டொக்ரர், ஒரே குதிரையில் (அல்லது கழுதையில்😎!) மீண்டும் மீண்டும் ஏறி விழுந்து கொண்டிருக்கக் கூடாது. ஏனையோர் கொண்டு வந்து விடும் குதிரையில் ஏறியும் ஓட வேணும், குதிரயில்லாமலும் ஓட வேணும், ஏன் சில நேரம் குதிரையைத் தானே தலையில் தூக்கிக் கொண்டும் ஓட வேணும்! இப்படி விரைவாக இசைவாக்கமாக முடியாவிட்டால் விட்டால்..ஸ்பின் டொக்ரர் வேலையை ஆரம்பிக்கவே கூடாது!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2023 at 22:08, விசுகு said:

உந்த பள்ளிக்கூடத்தில் சமயப் பிரச்சினை ஓடிக் கொண்டிருக்கு. அதன் தாக்கம் தான் இதுவும்.

எங்க நம்ம @நந்தன்

ஓஓ......  இவர்தான் இது எல்லாத்துக்கும் காரணமா?

6 hours ago, Nathamuni said:

 சமூக பிரச்சணைகளை பேசிக் கொண்டு கிளம்பி வருவது யார் எண்டு பார்க்க மாட்டீர்களா?

இணைக்கப்பட்ட செய்தி வந்தது இஸ்லாமிய பத்திரிகையில்.

பாடசாலை சைவச்சாப்பாடு மட்டும் என்று சொன்னது அதன் கிறிஸ்தவ அதிபர்.இருப்பினும், பாடசாலை, தரம் ஒன்று அதிபரை பெற்றதுடன் கதை முடிந்தது.

ஆனால், அவர் கிறிஸ்தவர் எண்டதால.... சாதிய தூக்கினார்கள் என்று பல்லாயிரம் மைல்களுக்கு அப்பால், நின்று மடை மாத்துவது சரியா? தேவையானதா?

பக்கத்தில் சாட்டி இஸ்லாமிய பாடசாலையில் (அண்மைக் குடியேறிகள்) இருந்து உயர் வகுப்புக்கு விரைவில் இஸ்லாமிய மாணவரும் வரும் போது இஸ்லாமிய அதிபர் வரக்கூடியதாக இருக்க வேண்டுமே என்பதே கொழும்பான் இணைத்த பத்திரிகையின் கவலை.

இப்போது பாடசாலையின் சைவ சாப்பாடு மட்டுமே அறிவிப்பு குறித்து பத்திரிகையின் கவலை ஏன் என்று புரிகிறதா?

சாதீயத்தை, வேறு விடயங்களில் கலந்து குழப்பவதை அனுமதிக்க கூடாது. சரத் வீரசேகர, விமல்வீரவன்ச போன்றோர், தமிழர்களின் சாதீயம் காரணமாக அதிகார பகிர்வுத் தீர்வு கொடாமல் அதிகாரம் சிங்களவரிடம் தான் இருக்க வேண்டுமாம்.

சாதீயம் இருக்கிறது தான். அதை பிறர், எங்கே லாவகமாக பயன்படுத்துகிறார்கள் என்பது கவனிக்கப்பட வேண்டும்.

 

ம்ம்.... நான் சொன்னா யார் கேக்கிறா? ஏற்கெனவே எச்சரித்தேன்! சரத்  சேகர வேற, தமிழர் அங்குள்ள வெள்ளாளருக்கு எதிராக போராட வேண்டும் என்று அறைகூவல் விடுத்தார். எப்போ தெரியுமா? தையிட்டியில் விகாரைக்கு எதிராக மக்கள் போராடும்போது. அதை லாவகமாக சாதீயம் நோக்கி திசை திருப்பினார் முகவர்களை கொண்டு. அந்த தந்திரத்தை , அவர்களின் கூடவே திரியும் நிழல்களும் பாவிக்கின்றன. சிங்கத்தின் பின்னால் கடவே திரியும் நரிபோல, அவர்களுக்கு காட்டிக்கொடுத்து அவர்கள் விடும் மிச்சத்தை எதிர்ப்பில்லாமல் அடைவதற்கு. சமயம், சாதியம், பிரதேசவாதம், ஏழை, பணக்காரன், படித்தவன், பாமரன் எங்களுக்குள் உள்ள வியாதிகள். அவற்றை கிளறி விட்டு, அதை சொறிய நம்மை தூண்டி விட்டு, தாங்கள்  அதை வேடிக்கை பாத்தபடியே எங்களது எல்லாத்தையும் உருவி விடுவார்கள். பிறகு நாம் சேர்ந்து போராடுவதால் என்ன பயன்?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

நாதம், எல்லாரும் இங்கே "குழம்பிப் போய்" இருக்கிறார்கள் - நீங்கள் மட்டும் தான் "தெளிவாக" இன்னும் திரியின் இரண்டாம் பக்கத்திலேயே நிக்கிறீங்கள்😂! ஒரு ஸ்பின் டொக்ரர் வேலையில் கூட இப்படி "ஆரம்ப நிலையிலேயே" நிற்பது கவலையளிக்கிறது நாதம்!

ஒரு ஸ்பின் டொக்ரர், ஒரே குதிரையில் (அல்லது கழுதையில்😎!) மீண்டும் மீண்டும் ஏறி விழுந்து கொண்டிருக்கக் கூடாது. ஏனையோர் கொண்டு வந்து விடும் குதிரையில் ஏறியும் ஓட வேணும், குதிரயில்லாமலும் ஓட வேணும், ஏன் சில நேரம் குதிரையைத் தானே தலையில் தூக்கிக் கொண்டும் ஓட வேணும்! இப்படி விரைவாக இசைவாக்கமாக முடியாவிட்டால் விட்டால்..ஸ்பின் டொக்ரர் வேலையை ஆரம்பிக்கவே கூடாது!

சாப்பாட்டுப் பிரச்சனைக்குள் சாதியை கொண்டு வந்து மடை மாத்தியது நீங்கள் தான்.

காரணம் அதிபர் கிறிஸ்தவர். அதுவரை யாருமே அதுகுறித்து கவலை கொள்ளவில்லை.

உங்கள் நோக்கம், எல்லோருக்கும் தெளிவானது. இந்த சில்லெடுப்பு வேலை வேணாமே.

  • கருத்துக்கள உறவுகள்

நான் இன்று அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருடன் கதைத்த பொழுது இது சாதாரண உள்ளக அறிவித்தல் என்றும்.ஆதற்காக கடுமையான விதிமுறைகள் அமுல்படுத்தப்படாது என்றும் தெரிவித்தார். மீறிக் கொண்டு வந்தால் அதற்காக அந்த பிள்ளைகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது.தவிர்க்கும்படி ஒரு அறிவித்தல்தான். ஆனால் சமூக ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.எந்த கிறிஸ்தவ அதிபர் வந்தால் வசவசமய விழுமியங்களுக்கு ஆபத்து என்று சொன்னார்களோ அந்த அதிபரின் நிர்வாகம் சைவசமய விழுமியங்களை பின்பற்ற முயற்சிக்கும் பொழுது ஊடகங்கள் அதனை விமர்சிக்கின்றன. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது சுத்த பத்தமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.ஆனால் ஒருவர் அசைவ உணவை உண்டு விட்டு சென்றால் அவரைப் பரிசோதித்துப் பார்பதில்லை. ஒரு மீனவர் காலையில் தொழிலுக்குச் சென்று விட்டு மாலையில் கோவிலுக்குச் செல்வதை தடுக்க முடியுமா? இது பொதுவான நடைமுறை அவ்வளவுதான்.சைவ சமயத்தில் விதிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை கடுமையாக அமுல்படுத்தப்படுவதில்லை. முஸ்லிம் கிறிஸ்தவ சமயங்களில்  விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் .இதை  பெரிதுபடுத்தாமல்கடந்து போவது எல்லோருக்கும் நல்லது .

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, புலவர் said:

நான் இன்று அங்கு கற்பிக்கும் ஆசிரியர் ஒருவருடன் கதைத்த பொழுது இது சாதாரண உள்ளக அறிவித்தல் என்றும்.ஆதற்காக கடுமையான விதிமுறைகள் அமுல்படுத்தப்படாது என்றும் தெரிவித்தார். மீறிக் கொண்டு வந்தால் அதற்காக அந்த பிள்ளைகளின் மேல் நடவடிக்கைகள் எடுக்கப்படமாட்டாது.தவிர்க்கும்படி ஒரு அறிவித்தல்தான். ஆனால் சமூக ஊடகங்கள் பெரிதுபடுத்துகின்றன.எந்த கிறிஸ்தவ அதிபர் வந்தால் வசவசமய விழுமியங்களுக்கு ஆபத்து என்று சொன்னார்களோ அந்த அதிபரின் நிர்வாகம் சைவசமய விழுமியங்களை பின்பற்ற முயற்சிக்கும் பொழுது ஊடகங்கள் அதனை விமர்சிக்கின்றன. உதாரணமாக ஆலயத்திற்குள் போகும் போது சுத்த பத்தமாக செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்படுகிறது.ஆனால் ஒருவர் அசைவ உணவை உண்டு விட்டு சென்றால் அவரைப் பரிசோதித்துப் பார்பதில்லை. ஒரு மீனவர் காலையில் தொழிலுக்குச் சென்று விட்டு மாலையில் கோவிலுக்குச் செல்வதை தடுக்க முடியுமா? இது பொதுவான நடைமுறை அவ்வளவுதான்.சைவ சமயத்தில் விதிமுறைகள் இருக்கின்றன ஆனால் அவை கடுமையாக அமுல்படுத்தப்படுவதில்லை. முஸ்லிம் கிறிஸ்தவ சமயங்களில்  விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் .இதை  பெரிதுபடுத்தாமல்கடந்து போவது எல்லோருக்கும் நல்லது .


அப்படியானால், ஒரு பொது நிறுவனமான அரச பாடசாலையை உள்ளக அறிவித்தல் மூலம் ஒரு மதம் சார்பான நடவடிக்கைகளுக்கு மாற்றும் ஒரு அறிவித்தல் தான் என்கிறீர்கள். இதைத் தானே பலரும் சொல்லியிருக்கிறார்கள் கடந்த பக்கங்களில்?

இதைப் பெரிது படுத்தாமல் கடந்து போவது "யாருக்கு" நல்லது எனப்தையும் சொல்லி விடுங்கள்😎!

  • கருத்துக்கள உறவுகள்
On 21/9/2023 at 22:16, goshan_che said:

எனக்கு ஒரு சந்தேகம் - யாழில் கருத்தெழுதுவோரில் 80% க்கும் மேல் தீவகத்தை சார்ந்தோராய் இருக்கும் போல ?

தீவான் இல்லாத தேசமுண்டோ
காற்றும் கரிக்கும் கானல் முகம் கருக்கும் ஊற்றும் சுருங்கி உண்ணா நீர் உவர்ப்பெடுக்கும்
சேற்று வயலும் சோழகத்தால் நீறாகும் ஆனாலும்
ஆடி கடந்து ஐப்பசியைக் கண்டோமேல்
தேடிமழை சோவென்று தீவகத்தின் உடல் நனைக்கும் - பின்
பச்சை வயலழகு பனங்கூடல் இசை அழகு
கட்டாந்தரை நிறைந்த காட்டாற்று நீரழகு
கொக்கழகு கொடியழகு கூட்டாய் பறந்து
கோலமிடும் குருகழகு - வெள்ளத்துள்
நெட்டாய் வளர்ந்தலர்ந்த
கொட்டியோடாம்பல் கொள்ளை அழகு
முட்கிழுவைத்துளிர் அழகு முசுட்டைக்கொடியால் முக்காடு போட்டு நிற்கும்
வடலி அழகு வலைகாயும் கரையழகு
வானம் பொய்த்தாலும் வரண்டு நிலம் காய்ந்தாலும்
தானம் தவமிரண்டும் தடையின்றி இயற்றிடுவான்
தீவான் இல்லாத தேசமுண்டோ என்பதெல்லாம் - அவன்
தீ, வான் இரண்டோடும் சேர்ந்திசைவான் என்பதுவே!
ஆக்கம்: திரு சிவபாலசுந்தரன் அம்பலவாணர் (சுருவில் பாலன்)
இந்தக் கவிதையை எழுதியவர் தற்போதைய யாழ் அரசாங்க அதிபர்.இவரும் இந்தப் பாடசாலையில்தான் படித்தார்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.