Jump to content

நெத்தியடி


mathanarasa

Recommended Posts

ராஜா தமிழில் விவாதம் புரியலாம் வாருங்கள் என்று கருணாநிதிக்கு சவால் விட்டிருப்பதை அறியாதவரா நீங்கள். அதற்கு, நான் இராமன் மீது அவதூறு ஒன்றும் சொல்லவில்லையே என்று கருணாநிதி பின் வாங்கி கொண்டதை நீங்கள் இன்னும் அறியவில்லையா?

இந்தச் செய்தியை உண்மையிலே நான் அறியவில்லை. எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

Link to comment
Share on other sites

  • Replies 59
  • Created
  • Last Reply

சமஸ்கிருதம் படித்த நீங்கள், வான்மீகி ராமாயணம் படித்த நீங்கள் இந்த இடங்களில் வான்மீகி ராமாயணத்தில் என்ன இருக்கிறது என்று சொல்வீர்களா?

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் சுலோகம் 8.1

Link to comment
Share on other sites

இந்தச் செய்தியை உண்மையிலே நான் அறியவில்லை. எங்கே இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

அது இந்த களத்திலேயே உள்ளது

Link to comment
Share on other sites

சமஸ்கிருதம் படித்த நீங்கள், வான்மீகி ராமாயணம் படித்த நீங்கள் இந்த இடங்களில் வான்மீகி ராமாயணத்தில் என்ன இருக்கிறது என்று சொல்வீர்களா?

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் சுலோகம் 8.1

நீங்கள் மற்றவர் எழுதும் பதில் கருத்துக்களை வாசிப்பதில்லை போல் இருக்கிறது. நான் வசிக்கும் நாட்டில் வால்மீகி இராமயணத்தின் பிரதி பெறும் வாய்ப்பு இல்லை என்று பதில் கருத்தில் முன்பே எழுதி இருந்தேனே.

இருந்தாலும் தேடி எடுக்க முயற்சி செய்கிறேன். சில நாட்கள் ஆகலாம். சில முக்கிய வேலைகள் வேறு இருக்கிறது

அது தவிர நான் ஒன்றும் ராமாயணத்தில் கதாகலாட்சேபம் செய்பவன் இல்லை. வடமொழியில் உள்ள சுலோகங்களை வாசித்து புரிந்து கொள்ள முடியும். அவ்வளவு தான். சில வருடங்களின் முன்னால் இந்தியாவில் வைத்து ஒரு ஆராய்ச்சி நோக்குடன் படித்திருக்கின்றேன். அதனால் தான் நீங்கள் சொன்ன தகவல்கள் தவறு என்று தெரியும். அப்படி தவறு இருந்து, அதை மூடி மறைத்து இராமனை காப்பாற்ற வேண்டிய தேவை எதுவும் எனக்கு இல்லை.

அது தவிர பாலகாண்டமும், உத்தரகாண்டமும் வால்மீகி இராமாயணத்துடன் பின்னாளில் இணைக்கப்பட்டவை என்பதை அறிவீர்களா? இராம + அயணம் என்பது இராமனின் பயணங்கள் என்று அர்த்தம் வரும்

Link to comment
Share on other sites

என்னால் வான்மீகி ராமாயணத்தின் குறிப்பிட்ட சுலோகங்களைப் பெற முடியுமா என்று முயற்சிக்கிறேன். நீங்களும் தயவுசெய்து முயற்சியுங்கள்.

உங்களுக்கோ, எனக்கோ யாருக்கு என்றாலும் தெளிவு ஏற்படுவது நல்லது.

கலைஞர் சம்பந்தப்பட்ட அந்த செய்தியின் இணைப்பை தயவுசெய்து தரமுடியுமா?

Link to comment
Share on other sites

என்னால் வான்மீகி ராமாயணத்தின் குறிப்பிட்ட சுலோகங்களைப் பெற முடியுமா என்று முயற்சிக்கிறேன். நீங்களும் தயவுசெய்து முயற்சியுங்கள்.

உங்களுக்கோ, எனக்கோ யாருக்கு என்றாலும் தெளிவு ஏற்படுவது நல்லது.

கலைஞர் சம்பந்தப்பட்ட அந்த செய்தியின் இணைப்பை தயவுசெய்து தரமுடியுமா?

http://www.yarl.com/forum3/index.php?showtopic=28655

Link to comment
Share on other sites

நீங்கள் சொன்னது போன்று செய்தி அங்கு இல்லை. ராஜா கலைஞருக்க சவால் விட்டுள்ளது பற்றிய செய்திதான் அதில் இருக்கிறது.

கலைஞர் தான் ராமரைப் பற்றி அவதூறாக எதுவும் பேசவில்லை என்று பின்வாங்கியதாக ஒரு செய்தி அதில் இல்லை. நீங்கள் தவறான தகவலை தந்திருக்கிறீர்கள்.

கலைஞர் ராமர் விடயத்தில் பின்வாங்குவார் என்று நான் நினைக்கவில்லை.

Link to comment
Share on other sites

விவாதம் நடத்த தயார் முதல்வருக்கு சவால்

சென்னை: ராமர் மற்றும் ராமாயணம் குறித்து விவாதம் நடத்த தயாரா? என முதல்வர் கருணாநிதிக்கு உடுப்பி பெஜாவர் மடாதிபதி விஸ்வேஷதீர்த்த சுவாமிகள் அழைப்பு விடுத்துள்ளார்.

சென்னையில் நேற்று அவர் கூறியதாவது: முதல்வர் கருணாநிதி மூத்த அரசியல்வாதி. அவருக்கு தனிப்பட்ட முறையில் கடவுள் மீதும், ராமாயணம் மீதும் நம்பிக்கை இல்லாமல் இருக்கலாம். ஆனால், மக்களின் மனதை புண்படுத்தும் வகையில் கருத்துக்களை கூறுவது சரியல்ல. கருணாநிதிக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்பதற்காக, நாட்டில் உள்ள கோவில்கள், மசூதிகள் மற்றும் சர்ச்சுகளை இடித்து விட்டு அந்த இடத்தில் தொழிற்சாலைகள் அமைக்க முன்வருவாரா?

ராமர், ராமர் பாலம் கற்பனையானவை என கருணாநிதி நினைக்கலாம். அதற்காக கோடிக்கணக்கான இந்துக்களின் நம்பிக்கையான ராமர் பாலத்தை இடிக்க நினைப்பது சரியா? சேதுசமுத்திர திட்டத்தை நாங்கள் எதிர்க்கவில்லை.

மாற்றுப் பாதையில் திட்டத்தை நிறைவேற்றுங்கள் என்றே கூறுகிறோம்.

ராமர் மற்றும் ராமாயணம் குறித்து என்னுடன் முதல்வர் கருணாநிதி விவாதம் நடத்த தயாரா என அழைப்பு விடுக்கிறேன். முதல்வர் கருணாநிதியுடன் அமைதியான, நட்பு ரீதியான விவாதம் நடத்த தயாராக இருக்கிறேன்.

இதுகுறித்து கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ளேன். ராமர் குடிகாரன் என முதல்வர் கூறியுள்ளார்.

ராமாயணத்தில் கூறப்படும் மது என்பது கள் அல்ல. மது என்றால் தேன். சோமபானம் அருந்தியதாகவும் கூறியுள்ளார். சோமபானம் என்பது கொடியிலிருந்து எடுக்கப்படும் புனிதமான சாறு. இவ்வாறு விஸ்வேஷதீர்த்த சுவாமிகள் கூறினார்.

Link to comment
Share on other sites

அப்பாடா! ஒருவர் ராமன் சோமபானம் குடித்ததாக ஒத்துக் கொண்டுவிட்டார்.

ஆனால் இப்பொழுது சோமபானத்தை தேன் என்று மாற்ற முயற்சிக்கிறார்கள். இவர்கள் பெரிய கில்லாடிகள்தான் :lol::lol::lol:

Link to comment
Share on other sites

அப்பாடா! ஒருவர் ராமன் சோமபானம் குடித்ததாக ஒத்துக் கொண்டுவிட்டார்.

ஆனால் இப்பொழுது சோமபானத்தை தேன் என்று மாற்ற முயற்சிக்கிறார்கள். இவர்கள் பெரிய கில்லாடிகள்தான் :o:o:o

ம்! "மதுவுண்ணும் வண்டு" என்றால் Bar இல் போய் வண்டு Scotch அடித்தது என்றா சொல்வீர்கள்? :D கவிநயத்துடன் எழுதப்படுவது தான் கவிதைகளும் காவியமும். அவை ஆராய்ச்சி கட்டுரைகள் அல்ல

Link to comment
Share on other sites

வண்டு என்பதால்தான் மது தேனாக மாறுகிறது.

இந்த இடத்தில் மது உண்ணும் ஜெயேந்திரன் என்று இருந்தால், அங்கே அது மதுதான். தேன் அல்ல.

இந்து மத வேதங்கள், புராணங்கள் என்று எல்லா இடங்களிலும் சோமபானம் என்பதற்கு மது என்று அர்த்தம் வருகின்ற போது, ராமாயணத்தில் மட்டும் அது தேனாக மாறி விடுகிறதா?

Link to comment
Share on other sites

வண்டு என்பதால்தான் மது தேனாக மாறுகிறது.

இந்த இடத்தில் மது உண்ணும் ஜெயேந்திரன் என்று இருந்தால், அங்கே அது மதுதான். தேன் அல்ல.

இந்து மத வேதங்கள், புராணங்கள் என்று எல்லா இடங்களிலும் சோமபானம் என்பதற்கு மது என்று அர்த்தம் வருகின்ற போது, ராமாயணத்தில் மட்டும் அது தேனாக மாறி விடுகிறதா?

ஆஹா!

சோம + பானம் என்றால் இனிய பானம் என்று அர்த்தம். சோம் என்றால் இனிமை என்று அர்த்தம். அதில் இருந்து தோன்றிய சொல் தான் சுஹம்.

பார்வைக்கு இனிமையான நிலாவுக்கு அதனால் தான் சோமன் என்று ஒரு பெயர் உண்டு. அதை தான் நாமும் தேனிலவு (தேன் போல் இனிமை :o:D ) என்று அழைத்துக் கொண்டிருக்கிறோம் ஐயா!

சோம பானம் (இனிய பானம்) என்பது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொன்றாக இருக்கலாம். யார் கண்டது? உங்களுக்கு பியர் ஆக இருக்கலாம். இன்னொருவருக்கு தேனாக இருக்கலாம் என்றும் விவாதம் செய்யலாம். 20 பக்கங்கள் கடந்தாலும் முடிவு தான் வராது சபேசன்.

ஆனால் வடமொழியில் சோமபானம் என்பதற்கு போதை தரும் பானம் என்ற அர்த்தம் வராது என்று என்னால் உறுதியாக சொல்ல முடியும்

Link to comment
Share on other sites

வாதத்தை விடுவோம் வாழ்ந்து காட்டுவோம்

சோலை

சேது சமுத்திரத் திட்டம் தமிழகத்தின் நெடுநாளையக் கனவு. கடந்த பொதுத் தேர்தலுக்குப் பின்னர் மத்தியிலும், தமிழகத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் அந்தத் திட்டம் செயலுக்கு வந்தது. ஆனால், அந்தத் திட்டத்தைச் சீர்குலைப்பதில் இந்துத்வா சக்திகளும் அ.தி.மு.கழகம் போன்ற அதன் துணை சக்திகளும் முனைந்து செயல்படுகின்றன.

‘இராமர் பாலத்தை இடித்தால் பூகம்பம் வரும்!’ என்றார் இராம கோபாலன். அரசியல் நடத்த அந்த இல்லாத பாலத்தை பி.ஜே.பி. ஆயுதமாகப் பயன்படுத்துகிறது.

அது என்னய்யா இராமர் பாலம்? பதினேழு இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் சீதையை இராவணன் சிறை எடுத்துச் சென்றானாம். அந்த தேவியை மீட்க இலங்கைக்கு ராமன் பாலம் அமைத்தானாம். அந்தப் பாலத்தை இடிக்கக் கூடாது என்று இந்த சக்திகள் போர்க்கோலம் பூணுகின்றன.

இலட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் மனிதன் மலைக் குகைகளிலும் புதர்களிலும்தான் வாழ்ந்தான். குடும்பமாகக் கூடி வாழும் நாகரிகமே துளிர்க்கவில்லை. இந்த நிலையில், இராமர் பாலத்தை எந்த இன்ஜினீயர்கள் கட்டினார்கள்? அணில்களும், வானரங்களும் கட்டியதாக வாதம் செய்கிறார்கள். இந்தச் சொற்கோலம் அவர்களுடைய இதயங்களில் படிந்துவிட்ட அழுக்குப் படிவங்கள்.

விஞ்ஞானம் என்ன சொல்கிறது? கடல் நீரோட்டங்களாலும், அலைகளாலும் ஏழு மலைத் திட்டுக்கள் உருவாகி இருக்கின்றன. அந்தத் திட்டுக்களில் ஒன்றுதான் ஆதம் பாலம் என்று வரலாறு கூறும் மணல் மேடு. அதற்குத்தான் இராமர் பாலம் என்று பெயர் சூட்டி இந்துத்வா சக்திகள் உருத்திர தாண்டவம் ஆடுகின்றன.

‘இராமர் பாலம் என்பது இயற்கையாக உருவான ஒரு புவியியல் அமைப்பு’ என்று கடல் ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். இயற்கையின் விளையாட்டால் எழுந்த மணல் மேடு என்று ஆறு ஆண்டுகளுக்கு முன்னரே இந்தியப் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் அறுதியிட்டுக் கூறியிருக்கிறார்கள். இதே முடிவினை ஏற்கெனவே இந்திய அகழ்வாராய்ச்சித் துறையும் வடித்து வைத்திருக்கிறது.

இன்றைக்கு இந்தப் பிரச்னை உச்சநீதிமன்றம் சென்றிருக்கிறது. ‘இராமர் பாலத்தை இடிக்கக் கூடாது’ என்று சுப்பிரமணிய சுவாமி வழக்குத் தொடர்ந்தார். இதில் தங்கள் தரப்பு வாதத்தை மத்திய அரசு தாக்கல் செய்தது.

‘இராமரோ, வேறு இராமாயணக் கதாபாத்திரங்களோ பூமியில் வாழ்ந்ததற்கான எந்த ஆதாரமும் இல்லை. எனவே பாலத்தை இராமர் கட்டினார் என்பதற்கும் எந்த ஆதாரமும் இல்லை’ என்று மத்திய அரசு தெரிவித்தது. அதுவே உண்மை.

ஆனால், இராமர் இருந்தார் என்பது கோடானு கோடி மக்களின் நம்பிக்கை. அதனை கருத்தில் கொள்ள வேண்டாமா என்று உச்சநீதிமன்றத்தில் கேள்வி எழுந்தது.

மக்களின் மத உணர்வுகளோடு எவரும் விளையாடக் கூடாது. ஏற்றுக் கொள்வோம். அதே சமயத்தில் மக்களின் மத உணர்வுகளைக் கிளப்பி, கால் முளைக்காத கதைகளைச் சொல்லி சேது சமுத்திரத் திட்டம் போன்ற சிறப்பான தேவையான திட்டங்களைச் சீர் குலைக்கலாமா??

‘இராமேஸ்வரம் அருகே மனிதனால் கட்டப்பட்ட எந்தப் பாலமும் இல்லை’ என்று அண்மையில் நாசா விண்வெளி ஆராய்ச்சி நிலையம் அறிந்து அறிவித்தது. இத்தகைய அறிவு சார்ந்த விஞ்ஞான முடிவுகளையெல்லாம் ஓரம் கட்டிவிட்டு புராண கால நம்பிக்கையை சபை ஏற்றுங்கள் என்றால் என்ன நியாயம்??

‘இராமர் பாலம் இல்லை’ என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்தது, கோடானு கோடி இந்துக்களின் மனதைப் புண்படுத்திவிட்டதாம். அதனால் மன்மோகன் சிங்கும் சோனியா காந்தியும் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று அத்வானி குரல் எழுப்பினார். இருநூறு ஆண்டுகளாக இருக்கின்ற பாபர் மசூதியை படை திரட்டிச் சென்று அவர் இடிக்கிறார். இல்லாத இராமர் பாலத்தை ‘இடிக்காதே. எங்கள் மனம் புண்படும்’ என்கிறார்.

அத்வானியின் வாதத்திற்கு மத்திய சட்ட அமைச்சர் பரத்வாஜ் ரொம்ப நன்றாகவே தாளம் போடுகிறார். ‘இந்துக்களின் வாழ்வில் இராமர் பிரிக்க முடியாத ஓர் அங்கம். அதனை விவாதிக்கத் தேவையில்லை. ஏனெனில், அது நம்பிக்கைத் தொடர்பானது. சேது சமுத்திரத் திட்டம் பற்றி எதுவும் சொல்ல விரும்ப வில்லை’ என்கிறார்.

இராமரையோ அவர் மீது இவர்கள் வைத்திருக்கின்ற நம்பிக்கையையோ யாரும் குறை சொல்லவில்லை. முயலுக்கு மூன்று கால்கள்தான் என்று அடித்துச் சொல்வது போல இராமர் கட்டியதுதான் பாலம் என்ற இவர்களின் முடக்குவாதத்தைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை..

இராவணனுக்குப் பத்துத் தலை என்கிறார்கள். அப்படியானால், அவன் எந்தப் பக்கம் தலை வைத்து, எப்படிப் படுப்பான் என்று இன்றைய பள்ளி மாணவன் கேட்கிறான். அதுவும் நம்பிக்கை. அதன் மீது விவாதம் கூடாது என்கிறாரா பரத்வாஜ்??

இராமன் வனவாசம் சென்ற பின்னர், பதினான்கு ஆண்டுகள் அவருடைய காலணிகள்தான் அயோத்தியை ஆண்டன என்று இராமாயணம் கூறுகிறது. அதனைக் கணினி யுகத்து மாணவன் ஏற்றுக் கொள்வானா?

‘இராமர் பாலமே இல்லை என்று உச்சநீதிமன்றத்தில் தெரிவித்ததற்காக அகழ்வாராய்ச்சித் துறையை நிர்வகிக்கும் அம்பிகாசோனி, அமைச்சர் பதவியை இராஜினாமா செய்ய வேண்டும்’ என்று இன்னொரு அமைச்சர் ஜெய்ராம் இரமேஷ் சுடு சொற்களால் சுட்டிருக்கிறார். இந்துத்வா சக்திகள் காவிக் கூடாரத்தில் மட்டுமல்ல, காங்கிரஸ் கூடாரத்திலும் பதுங்கியிருக்கின்றன என்பதனை அவர் மெய்ப்பித்திருக்கிறார்.

உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவைத் தயார் செய்த அகழ்வாராய்ச்சி அதிகாரிகள் இருவர் தாற்காலிகப் பதவி நீக்கம் செய்யப்பட்டிருக்கின்றனர். அந்த மனுவில் ‘இராமர் பற்றிய கருத்துக்களை மட்டும் திரும்பப் பெறுவோம்’ என்று சொன்ன மத்திய அரசு, இரண்டு மனுக்களையும் அப்படியே திரும்பப் பெற்றிருக்கிறது. மதவாத சக்திகளின் காட்டுக் கூச்சலுக்கு மத்திய அரசு பணிந்து விட்டதா??

‘இராமர் பாலம் என்பதே இல்லை’ என்ற எல்லா விஞ்ஞான முடிவுகளுக்காக மத்திய அரசு உறுதியாக நின்றிருக்க வேண்டும். மத உணர்வுகளைக் கிளப்பி இரத்த ஆறுகளை ஓட விட்டு அரசியல் குளிர் காய்வதுதான் இந்துத்வா சக்திகளின் இலட்சியம். நாட்டின் பிரதான பிரச்னைகளில் மத உணர்வுகளைக் கலந்து, முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுவதற்கு அந்த சக்திகள் வெட்கப்பட்டதே இல்லை.

அம்பிகாசோனி ஏன் ராஜினாமா செய்ய வேண்டும்? அகழ்வாராய்ச்சி அதிகாரிகளைத் தண்டிப்பது என்ன நியாயம்? அவர்கள் நிரபராதிகள். உண்மையை உலகிற்கு உரைத்தவர்கள். மத்திய அரசிடம் இருக்கும் பல்வேறு ஆய்வுகளைத் தொகுத்து விஞ்ஞானம் என்ன சொல்கிறது என்பதனை எடுத்துக் கூறியவர்கள். இராமர் பாலமே இல்லை என்ற ஆராய்ச்சி முடிவுகளை இனி மத்திய அரசு இலங்கா தகனம் செய்யப்போகிறதா?

இராமருக்கும் சேது சமுத்திரத் திட்டத்திற்கும் என்ன சம்பந்தம்? நாடாளுமன்றத்தையே நடக்க விடாமல் தொடர்ந்து முடக்கி வரும் பி.ஜே.பி., மத உணர்வுகளைக் கிளறி சேது சமுத்திரத் திட்டத்தை முடக்க முயல்கிறது. இதற்கு மத்திய அரசு அடிபணியலாமா? மூலையில் குவித்துக் கொளுத்த வேண்டிய பழைமை வாதத்திலா முகம் பார்த்து சிங்காரித்துக் கொள்ள வேண்டும்?

‘இராமாயணமும் மகாபாரதமும் இந்தியக் கவிஞர்களின் கற்பனை’ என்றார் காந்தியடிகள். அதே சமயத்தில், ‘இராமனை நற்குணங்களின் நாயகன் என்று அந்த இதிகாசங்கள் சித்திரிப்பதால், அந்த தெய்வீக மைந்தனை வணங்குகிறேன்’ என்றும் அவர் சொன்னார்.

‘இராமாயணம் என்பது ஆரிய திராவிடப் போராட்டங்களை அடி நாதமாகக் கொண்ட கற்பனைக் களஞ்சியம்’ என்றார் நேரு.

தமிழகத்திற்கு சக்கரவர்த்தி திருமகனாக இராமனை அறிமுகம் செய்த இராஜாஜி என்ன சொன்னார்? ‘இராமன் ஓர் கற்பனைக் கதாநாயகன்’ என்றார்.

இவர்களெல்லாம் இந்துக்களைப் புண்படுத்துவதற்காக இப்படிச் சொன்னார்களா? அவர்கள் உண்மையைச் சொன்னார்கள். இத்தனை தேசபக்தத் தலைவர்களும் ‘இராமனே கற்பனைப் பாத்திரம்’ என்று சொன்ன பின்னர், அவன் எங்கே வந்து எப்படிப் பாலம் கட்டினான்?

வாதம் செய்ய வழியில்லாத போது, விஞ்ஞானத்திற்கு வேலி போட்டு விட்டு ‘மக்களின் பரம்பரை நம்பிக்கையைப் பாருங்கள்’ என்கிறார்கள். அந்த நம்பிக்கை தேசத்தின் வளர்ச்சிக்குத் தீங்கு செய்கிறதா இல்லையா? அதனையும் எண்ணிப் பார்க்க வேண்டும். இவற்றோடு, இராமனைப் பற்றி வாதங்கள் செய்வதை விட்டுவிட்டு, இராமனைப்போல் வாழ்ந்து காட்ட வேண்டும். இதுதான் இராமனுக்குச் செய்கிற நிஜமான மரியாதை. நமது சந்ததியினருக்கு நாம் காட்டுகின்ற ஒழுக்கப் பாதை.

நன்றி குமுதம் ரிப்போர்ட்டர்

Link to comment
Share on other sites

சமஸ்கிருதம் படித்த நீங்கள், வான்மீகி ராமாயணம் படித்த நீங்கள் இந்த இடங்களில் வான்மீகி ராமாயணத்தில் என்ன இருக்கிறது என்று சொல்வீர்களா?

உத்தர காண்டம் சரகம் 42, 43 இல் சுலோகம் 8.1

The first and the last Books (Bala Kanda and Uttara Kanda) of the Ramayana are later additions. The bulk, Valmiki Ramayana consisting of Books II--VI, represents Rama as an ideal hero. In Books I and VII, however Rama is made an avatara or incarnation of Vishnu, and the epic poem is transformed into a Vaishnava text (Tulasi Ramayana). The reference to the Greeks, Parthians, and Sakas show that these Books cannot be earlier than the second century B.C......"[ The cultural Heritage of India, Vol. IV, The Religions, The Ramakrishna Mission, Institute of Culture ].

This confirms my previous quote that the bala kanda and uttara kanda were not originally the part of Valmiki Ramayana.

Link to comment
Share on other sites

ரோம் நகரம் பற்றி எரியும் போது மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிரு ந் தானாம் ************

என்ற மாதிரி

ஈழத்தில் நம்மவர் பட்டினியாலும், படுகொலைகளாலும், பாலியல் வல்லுறவுகளாலும் பாதிக்கப் பட்டுக்கொண்டிருக்கும் போது கண்ணகியும் சீதையும் தேவை தானா????????

45 வயது பெண்னுடன் 14 வயது சிறுவன் பாலியல் துஸ்பிரயோகம் ??????? முதல் பக்கத்தில்

ஆண்டிகள் கூடி மடம் கட்டியது போல் ----------

பாப்பணர்கள் தான் இன்று வரைக்கும் தமிழர்களின் எதிரிகள் அதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது /

நிர்வாகம் ஏன் கண்டுகொள்ளவில்லை

கரிகாலன்

Link to comment
Share on other sites

கரிகாலன் அங்கிள்,

நல்லா கேட்டு இருகிறீங்க யாழ்களம் சார்பாக நான் உங்களுக்கு விருது வழங்கி எங்கள் படையணியில் சேர்த்து கொள்கிறேன் :P ........அது சரி யார் பார்பணர்கள் அங்கிள் சொல்லவே இல்லை........ :D

Link to comment
Share on other sites

திண்ணையில் வெளிவந்த கட்டுரை ஒன்றிலிருந்து:

வேதத்தில் இரு மதுவகைகள் கூறப்பட்டுள்ளன. சோமபானம், சுரபானம் என்பவை அவை. சோமபானம் என்பதற்குச் சோம என்ற ஒரு வகைப் பூண்டின் வேரிலிருந்து எடுக்கப்படும் மது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பூண்டு எதுவென்று இன்றுவரை யாராலும் கண்டுடிக்க முடியவில்லை.

சோம்புதல், சோமை என்பவை செயலற்று, செயலிழந்திருக்கும் நிலையைக் குறிக்கும். மயக்கத்தைக் தருவது நிலா எனப்படும் மதி. ஆங்கிலத்தில் பித்தர்களை Lunatics என்று அழைப்பது வழக்கம். நிலவைக் குறிக்கும் Luna என்பதிலிருந்து இச்சொல் பிறந்தது. அதுபோல் மதி என்பதிலிருந்து மது வந்தது. மயக்கத்தைத் தருவதால் மதியைச் சோமன் (சோம்பலை, சோமையைத் தருபவன்) என்ற அழைத்தனர். எனவே சோமன் என்ற அடியிலிருந்து சோம பானம் பிறந்தது. சோம பானம் என்பதன் நேர்ப்பொருள் மது என்பதே. அதாவது இன்று சிறுதெய்வக் கோயிற்கொடைகளின் போது அரிசி மாவிலிருந்து செய்து படைக்கப்படும் அதே மதுதான்.

அதேபோல் சுரபானம் என்றால் என்னவென்று யாரும் இன்றுவரை கூறவில்லை. சுரக்கின்ற பானம் சுரபானம். பனம்பாளையிலிருந்து சுரக்கும் பனங்கள்ளே சுரபானமாகும். சுரபானம் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதாகவும் சோமபானம் மனிதர்களால் பருகப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன

http://www.thinnai.com/?module=displaystor...ion_id=20060901

Link to comment
Share on other sites

ஒரு சம்பவம்………….

ஒரு குரு இறக்கும் தருவாயில் இருந்தார்.

அவரது சீடர்கள் அவரைச் சுற்றியிருந்தனர்.

அந்தக் குருவுக்கு வந்திருக்கும் நோயோ உயிருடன் கொல்லும் புற்று நோய்.

மரணப் படுக்கையில் அவருக்கு இருமல் வந்தது.

அவர் இருமும் போது சளியுடன் கூடிய எச்சில் வெளியே வந்தது.

அதைத் துப்பும் நோக்கோடு அவர் சுற்றும் முற்றும் பார்க்க அவரது தலைமைச் சீடன்

பாய்ந்து எழுந்து அந்த எச்சிலை தனது கையில் ஏந்துவதற்கு கையை நீட்டினார்.

குருவும் அவரது கையிலேயே தனது எச்சிலைத் துப்பினார்.

என்ன ஆச்சரியம்……………..

சீடனின் கையில் விழுந்தது, குருவின் எச்சிலல்ல.

அழகான ரோஜா மலர்.

அப்படிப்பட்ட அன்பே உருவான குரு அவர்.

அந்தக் குரு இராமகிருஷ்ண பரமஹம்சர். சீடன் விவேகானந்தர்.

இந்தக் கதை உண்மையோ பொய்யோ என்பதல்ல முக்கியம்.

அது சொல்லும் கருத்து……………

அவர் ஒரு மகான் என்பதை.

விவேகானந்தர், இராமகிருஷ்னர் இருவருமே இந்து மதத்தின் இரு தூண்கள்.

நல் வழியை மட்டும் போதித்த மகாத்மாக்கள்.

இன்னுமொரு சம்பவம்………….

ஒரு மிகப் பணக்க்காரரின் மகளின் திருமணம்.

அதற்கு அந்த மூதாட்டி பிரதம விருந்தினராக அழைக்கப்படுகிறார்.

திருமண விருந்து கோலாகலமாக நடைபெறுகிறது.

உணவு அருந்தும் மேசையில் அனைவரும் இருந்து உண்கின்றனர், அந்த மூதாட்டி உட்பட.

உண்டபின்னர் அனைவரும் சாப்பாட்டு மேசையை விட்டு அகல,

அந்த மூதாட்டி மட்டும் அந்த மேசையில் எஞ்சிய உண்வையும் பண்டங்களையும்

தனது பையில் எடுத்துப் போடுகிறார்.

அதைக் கண்ட அந்த பணக்காரர் அதிர்ச்சியடைந்து, அந்த மூதாட்டியை ஏன் அப்படிச் செய்கிறீர்கள் எனக் கேட்க.

தனது ஆச்சிரமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கொண்டு செல்லத்தான் அதைச் சேகரித்ததாகச் சொல்கிறார்.

அந்தப் மூதாட்டி அன்னை தெரேசா.

மதத்தின் மூலம் அன்பை உலகிற்கே புரியவைத்த புனிதத் தாய் அவர்.

அவரது அன்பான நடவடிக்கையைக் கண்டு வத்திக்கான் அவருக்கு செயின்ட் அந்தஸ்து வழங்குகிறது.

மேலுமொரு சம்பவம்…………….

தனது போதனைகள் ஒவ்வொரு மக்களையும் சென்றடைய வேண்டும் என ஒவ்வொரு கிராமங்களுக்கும் நடையாகச் செல்கிறார் ஒரு மகான்.

அவரது போதனைகளை ஏற்றவர்கள் பலர் ஏற்காதவர் சிலர்.

ஒருநாள் தனது பிரதான சீடனுடன் ஒரு கிராமத்திற்கு அவர் செல்கிறார்.

மக்கள் பலர் அவரை வரவேற்று உபசரிக்கின்றனர்.

எல்லாருக்கும் தனது தெய்வீகச் சிரிப்பையே பதிலாக தருகிறார்.

துரதிர்ஷ்ட வசமாக அந்தக் கிராமத்தில் ஒருவர், அவரை மிகவும் மோசமான வார்த்தைகளில் திட்டுகிறார்.

அவரைத் தொடர்ந்து சென்று மிகவும் கேவலமான வார்த்தைகளில் ஏசுகிறார்.

ஆனால் அந்த மகானோ அதற்கும் தனது புன்னகையையே பதிலாகத் தருகிறார்.

எதுவித முகச் சுளிப்பையும் காட்டாமல் உண்டான புன்னகை.

இதை அந்த மகானின் சீடர் பார்க்கிறார்.

அவர் அந்த மகானிடம் கேட்கிறார்,

“ஏன் நீங்கள் அந்த மனிதருக்கு எந்தப் பதிலும் சொல்லவில்லை. உங்களால் அந்த மனிதன் கேட்ட கேள்விக்கோ, அவர் ஏசியதற்கோ,

நிச்சயமாக சரியான பதில் சொல்லியிருக்க முடியுமே”

அதற்கு அந்த மகான்,

“ஆனந்தா, இந்தக் கிராமத்தில் ஒரு பெண்மணி மிகவும் இனிமையான பண்டங்களைக் கொண்டு வந்து எமக்குத் தந்தாளே, அதை நான் பரிவுடன் வேண்டாமென்று மறுத்து அதை ஏற்றுக் கொள்ளவில்லையே. அப்போது அவள் அந்தப் பண்டங்களை என்ன செய்தாள். தன்னிடமே மீண்டும் எடுத்துக் கொண்டு செல்லவில்லையா!

அது போல, அந்த மனிதரின் கடுஞ் சொற்களையும் நாம் பரிவுடன் ஏற்றுக் கொள்ளவில்லை. அவர் என்ன செய்ய முடியும். அதைத் தன்னுடனே திருப்பி எடுத்துக் கொண்டு போக வேண்டுமல்லவா?”

அந்த மகான், புத்தர்.

எதிர்மறையான விசயத்தைக் கூட அன்பாக ஒருவருக்கு எடுத்துச் சொன்ன உன்னதமான வழிகாட்டி.

மதத்தின் பெயரால் மனித குலத்திற்கே செய்தியை அறிவித்தவர்கள் இவர்கள்.

அன்பு, அகிம்சை, மனிதாபிமானம் அனைத்துக்கும் எடுத்துக் காட்டாக வாழ்ந்தவர்கள்.

மதத்தின் மூலமாக அவர்கள் எதைப் பெற்றுக் கொண்டார்களோ தெரியவில்லை.

ஆனால் அதே மதம் மூலமாக எமக்கு பலவற்றைப் பெற்றுக் கொள்ள, காரணமாக இருந்தவர்கள்.

ஆனால்……………

இன்றய செய்தி ஒன்று.

“முன்னால் எம்பியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.”

http://leenaroy.wordpress.com/

Link to comment
Share on other sites

கலைஞர் தலை - கவிஞர்கள் உரை - நன்றி : இட்லிவடை

கவிஞர் வைரமுத்து

முதல்வர் கலைஞர் குறித்து ராம்விலாஸ் வேதாந்தியின் வன்முறைப் பேச்சு எங்களை வருத்தத்திலும் கோபத்திலும் தள்ளி இருக்கிறது.

70 ஆண்டுகளாக ஏந்திவந்த பகுத்தறிவு வாதத்தைத் தான் கலைஞர் மீண்டும் முன்வைத்து இருக்கிறார். அப்படி வாதிட வேண்டிய சந்தர்ப்ப வாசலைக் கூட மதவாதம் தான் முதலில் திறந்து விட்டது.

உலக வரைபடத்தையே சற்று மாற்றி எழுதவிருக்கும் சேது சமுத்திரத் திட்டத்துக்கு மதவாதம் ஊறுவிளைவித்துவிடுமோ என்ற உள்ளார்ந்த தவிப்புதான் முதல்வர் கலைஞரைப் பேச வைத்தது.

கலைஞர் பேசியதும் ஒரு தத்துவ வாதம் தான். இந்து மதத்தின் பெருமையே கடவுள் மறுப்பையும் தனக்குள் ஒரு தத்துவமாய் அங்கீகரித்து வைத்து இருக்கும் பக்குவம் தான்; சாருவாகம் என்ற பிரிவே கடவுள் மறுப்புதான். கடவுள் மறுப்பும் இந்து மதம்தான்.

தத்துவத்தோடு நின்றிருந்தால் தகராறு இல்லை; அது தலைவரின் தலைவரைக்கும் போய்விட்டதால் தான் எங்களைப் போன்றவர்கள் தலையிட வேண்டி இருக்கிறது.

இது எல்லை மீறல். ராம்விலாஸ் வேதாந்தி ஒரு நரபலி சாமியாராய் இருப்பார் என்று நாங்கள் முற்றும் நம்பவில்லை.

ஒரு 80 கிலோ தங்கத்தின் மதிப்புதான் கலைஞரின் தலையும் நாக்கும் என்றால் அதைவிடக் கேவலம் இல்லை. வாராது போல் வந்த எங்கள் மாமணியைத் தோற்றால் நாங்கள் தமிழர்கள் இல்லை. எந்தவிலை கொடுத்தும் கலைஞரையும், சேது சமுத்திரத்தையும் காப்பாற்றுவதற்குத் தமிழர்கள் தயாராக வேண்டும்.

ராமர் பாலம் என்பது ஒரு நம்பிக்கைதானே தவிர அறிவியல் பூர்வமாக அதற்கு ஆதாரம் இல்லையென்று உலக ஆவணங்கள் சொல்கின்றன. வானவில்லைப் பலரும் ராமர்வில் என்று அழைக்கிறார்கள்; வானவில்லுக்கும் ராமருக்கும் எவ்வளவு உறவோ அவ்வளவு உறவுதான் பாலத்துக்கும் ராமருக்குமான உறவு.

வன்முறையால் மதவாதம் வென்றுவிடமுடியாது; சேது சமுத்திரம் நின்றுவிடவும் முடியாது.

கலைஞர் என்பவர் தனிமனிதர் அல்லர்; தமிழினத்தின் மாபெரும் அடையாளம். அந்த அடையாளத்தை அழிக்க நினைக்கும் செயல்கண்டும், தமிழ் உணர்வாளர்கள் போலிப் பொறுமையோடு பூப்பறித்துக்கொண்டு இருக்க மாட்டார்கள்.

* * * * * *

கவிஞர் மு.மேத்தா

தமிழினத்தின் தலையாய்-தலைமையாய்த் திகழும் கலைஞரின், தலைக்கே விலைவைத்த தருக்கரின் ஆணவத்தை நொறுக்க வேண்டும்.

தமிழ்த்தாயின் வாக்காய்த் திகழும் தலைவரின், நாக்கையே துணிக்கச் சொன்ன நாகரீகமற்ற காட்டுமிராண்டித் தனத்தை அடக்கி ஒடுக்கி முடக்க வேண்டும்.

இந்து மதத்துக்கே களங்கம் உண்டாக்கிய கயவனை ராம்விலாஸ் வேதாந்தியை-சமாதான சகவாழ்வை விரும்பும் இந்து மக்கள் அனைவரும் சேர்ந்தே எதிர்க்க வேண்டும். வேதாந்தியின் பேச்சு பாரத தேசத்தையே பதைபதைக்க வைத்துவிட்டது.

பண்பாடு என்றால் அர்த்தம் தெரியாத அந்த மத வெறியனை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து உள்ளே தள்ள வேண்டும். இஸ்லாமிய தீவிரவாத இயக்கங்களைத் தடை செய்தது போல், இந்துமத தீவிரவாத இயக்கங்களையும் தடை செய்ய வேண்டும். இந்தியாவின் ஒருமைப்பாட்டுக்கு சவால் விடும் விஸ்வ இந்து பரிஷத், பஜ்ரங்தள், ஆர்.எஸ்.எஸ்.போன்ற தேச விரோத சக்திகளை-விலாசமே இல்லாமல் வேரறுக்க வேண்டும். அந்த அராஜக அமைப்புகளின் முகமூடியாக விளங்கும் பாரதீய ஜனதா கட்சியைப் பொதுமக்கள் புறக்கணிக்க வேண்டும்.

காற்றுக்கூட-எங்கள் காவலை மீறி கலைஞரின் தோளில் கிடக்கும் துண்டின் நுனியைக் கூடத் தொடமுடியாது. ஆனாலும், உத்தரபிரதேச அரசும், மத்திய அரசும் கைகட்டிக்கொண்டு உட்கார்ந்திருந்தால் வரலாறு ஒரு நாளும் மன்னிக்காது. களம்புகத் தயாராவோம் காளையரே! மதவெறிக் களைநீக்கத் துணியாதோர் கோழையரே!

பிரதமரும், சோனியாகாந்தியும், உத்தரபிரதேச முதல்வரும் தாமதம் இன்றி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Posted by லக்கிலுக் at 3:04 PM

http://kalaignarkarunanidhi.blogspot.com/2...-post_1738.html

Link to comment
Share on other sites

நடுநிசி நேரத்திலே

நாடுறங்கும் வேளையிலே

நாய் போல் இழுத்து போனார்களே! - ஐயகோ!

நம் நல்ல தமிழ் கவிஞர்கள்

எங்கே போனார்கள் அப்போது.

ஆட்சியில் இருப்பவனின்

அடிவருடி பிழைக்க

ஆயிரம் முத்துக்கள் ஆயிரம் மேத்தாக்கள்

ஆச்சரியப்பட இதில் ஒன்றும் இல்லை

Link to comment
Share on other sites

வால்மீகி இராமயணத்தை பற்றி விவாதம் புரிய டெல்லி நோக்கி சவால் விடுகிறது உங்கள் திராவிட வீரம்.

மிகவும் மகிழ்ச்சி.

இதே டெல்லி, வாடும் ஈழத்தமிழனுக்கென, இந்திய தமிழன் சேர்த்த உணவும், மருந்தும் அனுப்ப அனுமதி மறுத்த போது, எந்த மூலையில் முக்காடிட்டு முடங்கி கொண்டது உங்கள் திராவிட வீரம். முடிந்தால் தடுத்துப் பார் என்று நீ டெல்லியை நோக்கி சவால் விட்டு இருந்தால், உன் திராவிட வீரத்தை பாராட்டி நாமும் கவி பாடி இருப்போம்..

தமிழன் தமிழனுக்கு சேர்த்த உணவும் மருந்தும் அனுப்ப ஒரு தமிழ் பெரியார் உண்ணநோன்பு இருக்கும் அளவுக்கு போனதும் உன் ஆட்சியில் தானே? அப்போதெல்லாம் எங்கே போனது உங்கள் டெல்லிக்கு சவால் விடும் போலி வீரம்

Link to comment
Share on other sites

இன்றய செய்தி ஒன்று.

“முன்னால் எம்பியும், விஸ்வ இந்து பரிஷத் தலைவருமான ராம் விலாஸ் வேதாந்தி, ராமர் பற்றி விமர்சனம் செய்த திமுக தலைவரின் தலையையும், நாக்கையும் துண்டிப்பவர்களுக்கு எடைக்கு எடை தங்கம் பரிசு வழங்கப்படும். அயோத்தியில் உள்ள துறவிகள் இந்த பரிசை வழங்குவார்கள் என்றார்.”

http://leenaroy.wordpress.com/

தலையை எடுக்க சொல்லும் வன்முறை தப்பு தான் மறுக்கவில்லை. ஆனால் இவர்கள் எடுத்த தலைகளின் எண்ணிக்கை எத்தனை எத்தனையோ என்றால், இவர்கள் சரித்திரம் தெரிந்த எவரும் மறுக்கமுடியாது.

தலையை கொய்வதானால் ஒரு அப்பாவி நடிகையை பட்டப்பகலில் தூக்கிச்சென்று நாராய் கிழித்த நரியின் தலையை தான் கொய்து இருக்க வேண்டும்

Link to comment
Share on other sites

திண்ணையில் வெளிவந்த கட்டுரை ஒன்றிலிருந்து:

இந்த திண்ணை பேச்சு வீரரிடம் ஒரு கண்ணாய் இருக்கணும் அண்ணாச்சி. நாம (தமிழர்கள்) ஒண்ணா இருக்கணும் அண்ணாச்சி :lol:

வேதத்தில் இரு மதுவகைகள் கூறப்பட்டுள்ளன. சோமபானம், சுரபானம் என்பவை அவை. சோமபானம் என்பதற்குச் சோம என்ற ஒரு வகைப் பூண்டின் வேரிலிருந்து எடுக்கப்படும் மது என்று விளக்கம் கொடுக்கப்படுகிறது. அந்தப் பூண்டு எதுவென்று இன்றுவரை யாராலும் கண்டுடிக்க முடியவில்லை.

வேதங்களில் வேரில் எடுக்கப்படும் மது என்று இல்லை. வேரில் எடுக்கப்படும் சாறு என்று தான் உள்ளது(Extracted Juice). தண்ணி என்பதற்கு பட்டை சாராயம் என்று புது விளக்கம் அழிக்கப்படுவது போல் சாறு என்பதற்கும் பட்டை சாராயம் என்று அர்த்தம் போலிருக்கிறது திராவிட சொல்லகராதியிலே :lol:

சோம்புதல், சோமை என்பவை செயலற்று, செயலிழந்திருக்கும் நிலையைக் குறிக்கும். மயக்கத்தைக் தருவது நிலா எனப்படும் மதி. ஆங்கிலத்தில் பித்தர்களை Lunatics என்று அழைப்பது வழக்கம். நிலவைக் குறிக்கும் Luna என்பதிலிருந்து இச்சொல் பிறந்தது. அதுபோல் மதி என்பதிலிருந்து மது வந்தது. மயக்கத்தைத் தருவதால் மதியைச் சோமன் (சோம்பலை, சோமையைத் தருபவன்) என்ற அழைத்தனர். எனவே சோமன் என்ற அடியிலிருந்து சோம பானம் பிறந்தது. சோம பானம் என்பதன் நேர்ப்பொருள் மது என்பதே. அதாவது இன்று சிறுதெய்வக் கோயிற்கொடைகளின் போது அரிசி மாவிலிருந்து செய்து படைக்கப்படும் அதே மதுதான்.

அதேபோல் சுரபானம் என்றால் என்னவென்று யாரும் இன்றுவரை கூறவில்லை. சுரக்கின்ற பானம் சுரபானம். பனம்பாளையிலிருந்து சுரக்கும் பனங்கள்ளே சுரபானமாகும். சுரபானம் தெய்வங்களுக்குப் படைக்கப்பட்டதாகவும் சோமபானம் மனிதர்களால் பருகப்பட்டதாகவும் வேதங்கள் கூறுகின்றன???!!!

போதையில் இருவகை உண்டு Tranquiliizer (Heroine etc) and Stimulator (LSD etc). இதில் மது Stimulator ஆகும். அதனால் மதுவை உற்சாக பானம் என்று அழைப்பார்களே ஒழிய சோம்பல் பானம் என்று எவரும் அழைப்பதில்லை.

ம்! சோம்பல் என்பதன் மூலச்சொல் சோமன் (?! :lol: ?!) அல்ல. சோம்பல் என்பதன் மூலச்சொல் சூம்புதல் (சூம்பி போதல் அல்லது வாடிப்போதல்). நன்றாகத் தான் முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடுகிறீர்கள்.

விட்டால் "வீடு" என்ற சொல்லில் இருந்து தான் "வீடியோ" வந்தது

"பாட்டா" என்ற சொல்லில் இருந்து தான் சப்பாத்து விற்கும் "BATA" வந்தது என்றும் கரடி விடுவார்கள்

என் நண்பர் ஒருவர் நகைச்சுவையாக சொல்வார் "ஆசை தீரலியா" என்ற சொல்லில் இருந்து தான் ஆஸ்திரேலியா என்ற சொல் வந்தது என்று.

"கிளியை பார்த்தீரா" என்ற சொல்லில் இருந்து தான் கிளியோபாட்ரா வந்தது என்று திண்ணையில் உள்ளவர்கள் ஒரு ஆராய்ச்சி கட்டுரை வெளியிடலாம். ஒரு நூறு தமிழர்கள் ஏமாறுவார்கள் :lol:

Link to comment
Share on other sites

கதிரவேற்பிள்ளையின் அகராதியிலும் சோமபானம் என்பதற்கு மது என்றுதான் அர்த்தம் இருக்கிறது.

googleஇல் "சோமபானம்" என்ற வார்த்தையை தேடுகின்ற போது அனைவரும் "மது" என்ற அர்த்தத்திலேயே சோமபானத்தை உபயோகித்திருப்பதைக் காணக் கூடியதாக இருக்கின்றது.

சோமபானம் என்ற பெயர் வருவதற்கு காரணம் எதுவாக இருப்பினும், அந்தச் சொல் மதுவையே குறிக்கிறது என்றுதான் நானும் நினைக்கிறேன்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • Published By: DIGITAL DESK 3 26 APR, 2024 | 10:28 AM   குரங்குகளின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை பேராதனை பல்கலைக்கழகத்தில் உள்ள கால்நடை மருத்துவ பீடம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கருவி பெண் குரங்களின் கருப்பையில் கருவுறுவதை தடுக்கும் என தெரிவித்துள்ளது. கருவியை ஒருமுறை குட்டி ஈன்ற ஒன்றரை வயது பெண் குரங்கிற்கு சோதனைக்காக பயன்படுத்தப்பட்டது. சோதனையின் பின்னர் மேற்கொள்ளப்பட்ட கதிரியக்க பரிசோதனையில், கருப்பையில் பொருத்தப்பட்ட கருவி வெற்றிகரமாக செயல்பட்டுள்ளதை அவதானித்ததாக பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்தைச் சேர்ந்த சிரேஷ்ட பேராசிரியர் அசோக தங்கொல்ல தெரிவித்தார். பெண்களுக்கு கர்ப்பம் தரிப்பதை தடுக்கும் நடைமுறையிலுள்ள சாதாரண அளவிலான கருவியை பயன்படுத்திய போது அது தோல்லி அடைந்தது. அதனால் சிறிய அளவிலான வளையத்தை உருவாக்க முடிவு செய்தோம் என தெரிவித்துள்ளார்.  பேராதனை போதனா வைத்தியசாலையின் மகப்பேறு மற்றும் நரம்பியல் திணைக்களத்தின் வைத்தியர்களும் பேராதனையிலுள்ள பல் வைத்திய பீடத்தினரும் இந்த முயற்சிக்கு தமது ஒத்துழைப்பை வழங்கியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். “இந்த கருவியை பொறுத்த விலங்கை அமைதிப்படுத்த அரை மணி நேரம் எடுக்கும், அதைத் தொடர்ந்து அறுவை சிகிச்சைக்கு மற்றொரு அரை மணி நேரம் எடுக்கும். இந்த முறை நாட்டில் குரங்குகளின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளைக் கொண்டுள்ளது." என தெரிவித்துள்ளார். இந்த வளையம் வடிவிலான புதிய கருப்பை கருவியை உற்பத்தி செய்ய 2000 ரூபாய் செலவாகும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181987
    • 25 APR, 2024 | 07:33 PM   (எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்) சிரேஷ்ட பிரஜைகளுக்கான வட்டியை 15 வீதமாக வழங்க வேண்டுமானால் அரசாங்கம் மேலும்  40 பில்லியன் ரூபாவை அதற்காகச் செலுத்த நேரிடும். அரசாங்கத்தின் தற்போதைய நிதி நிலைமையைக் கவனத்தில் கொண்டு அது தொடர்பில் உரியக் கவனம் செலுத்தப்படும்  என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய  தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர் தமது கேள்வியின் போது வங்கி வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ள நிலையில் சிரேஷ்ட பிரஜைகளுக்கான வங்கி வைப்புக்கான வட்டி வீதமும் குறைக்கப்பட்டுள்ளது. அதனை நம்பி வாழும் அவர்களின் வட்டி வீதத்தை அதிகரித்து வழங்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார். அது தொடர்பில்  இராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், இக் காலங்களில் வங்கி வட்டி வீதம் தொடர்பில் பிரச்சினைகள் எழுந்துள்ளன. கடனுக்கான வட்டி அதிகரிக்கப்பட்டு வங்கி வைப்புக்கான வட்டியை 16 வீதத்திலிருந்து தற்போது தனி இலக்கத்திற்குக் கொண்டு வந்துள்ளோம். வைப்புக்களுக்கான வட்டியைக் குறைப்பது இயல்பாக இடம்பெறுகின்ற ஒன்று. அது தொடர்பில் சிரேஷ்ட பிரஜைகளும் சில பாதிப்புகளை எதிர்கொள்ள நேர்ந்துள்ளது. அதேவேளை, சிரேஷ்ட பிரஜைகள் முகம் கொடுக்கும் மற்றுமொரு பிரச்சினை ஒரு லட்சம் ரூபாவுக்கு குறைவாகப் பணத்தை வைப்புச் செய்வது. அவ்வாறான பிரச்சினைகளுக்கு நாம் நடவடிக்கை ஒன்றை எடுத்தோம். எனினும் அது சாத்தியப்படவில்லை. சிரேஷ்ட பிரஜைகளின் வங்கி வைப்புகளுக்கு வட்டி அதிகரிக்க வேண்டியது அவசியம். எனினும் அதற்கான நிதியை அரசாங்கமே ஒதுக்க வேண்டியுள்ளது. இவ்வாறான விடயங்களுக்காக ஏற்கனவே வங்கிக்கு அரசாங்கம் வழங்க வேண்டிய நிலுவை இன்னும் தொடர்கிறது.  நீண்ட காலமாக இவ்வாறு சிரேஷ்ட பிரஜைகளுக்கு அதிக வட்டியை வழங்குவதற்கு அரசாங்கமே வங்கிகளுக்கு நிதி வழங்கி வந்துள்ளது.  நூற்றுக்கு 15 வீதமாக அதனை வழங்க வேண்டுமானால் சுமார் 40 பில்லியன் ரூபாவை அரசாங்கம் அதற்காக ஒதுக்க வேண்டியுள்ளது. முன்னரை விட அதிகமான நிதியை இப்போது ஒதுக்க நேர்ந்துள்ளது. அந்த வகையில்  நாட்டின் தற்போதைய நிலையையும் கவனத்திற் கொண்டு எவ்வாறு இந்த நிலைமையைச் சரி செய்வது என்பது தொடர்பில் அரசாங்கம் அதிக கவனம் செலுத்தி வருகிறது என்றார். https://www.virakesari.lk/article/181967
    • அரைச்சதம் அடித்து வென்றபோதும் விமர்சிக்கப்படும் கோலி; ஆர்சிபி கேப்டன் கூறியது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES 26 ஏப்ரல் 2024, 03:06 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கடந்த 6 போட்டிகள் முடிந்தபோதெல்லாம் ஆர்சிபி வீரர்கள் முகத்தில் சோகம், விரக்தி, நம்பிக்கையின்மை, டக்அவுட்டுக்கும் கவலையோடு சென்றனர், ஆர்சிபி ரசிகர்களும் சோகத்தோடு வீட்டுக்குப் புறப்பட்டனர். ஆனால், நிலைமை நேற்று தலைகீழாக மாறியது. ஆர்சிபி வீரர்கள், ரசிகர்கள் முகம் நிறைய மகிழ்ச்சி, புன்னகை மிதந்தது, வீரர்கள் ஒவ்வொருவரும் கட்டிஅணைத்து மிகழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டனர். காரணம், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றி. ஒவ்வொரு ஆட்டத்தின் முடிவிலும் ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் போட்டி முடிந்தபின் பேட்டியளிப்பது வழக்கம். ஆனால், ஒரு மாதத்துக்குப்பின் கிடைத்த வெற்றியால், கொண்டாட்டமனநிலையில் கேப்டன் டூப்பிளசிஸ் பேட்டியளிக்கவே மறந்துவிட்டார். சக வீரர்களுடன் வெற்றிக் கொண்டாட்டத்தை முடித்தபின்புதான் டூப்பிளசிஸ் சேனல்களைச் சந்தித்தார். ஹைதராபாத்தில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 41-ஆவது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 35 ரன்களில் வீழ்த்தி ஒரு மாதத்துக்குப்பின் ஆர்சிபி அணி வெற்றியை ருசித்தது. முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 7 விக்கெட் இழப்புக்கு 206 ரன்கள் சேர்த்தது. 207 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் சேர்த்து 35 ரன்களில் தோல்வி அடைந்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபிக்கு ப்ளே ஆஃப் வாய்ப்பு இன்னும் இருக்கிறதா? ஆர்சிபி அணி தொடர்ந்து 6 தோல்விகளைச் சந்தித்த நிலையில் இந்த வெற்றி அந்த அணிக்கு பெரிய ஊக்கமாகவும், நம்பிக்கையையும் அளித்துள்ளது. இந்த வெற்றியால் புள்ளிப்பட்டியலில் பெரிதாக மாற்றத்தை ஆர்சிபி ஏற்படுத்தவில்லை என்றபோதிலும், வீரர்களின் அணுகுமுறை, நம்பிக்கை, உற்சாகம் ஆகியவை அதிகரிக்கும். ஆர்சிபி அணி 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்விகள் என 4 புள்ளிகளுடன் 10-வது இடத்திலேயே நீடிக்கிறது. நிகர ரன்ரேட்டில் மைனஸ் 0.721 என்ற ரீதியில் இருக்கிறது. இந்த வெற்றியால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்கவைத்துள்ளது. அடுத்துவரும் 5 போட்டிகளிலும் ஆர்சிபி அணி தொடர் வெற்றிகள் பெறும்பட்சத்தில் , பிற அணிகளின் தோல்விகளும் சாதகமாக இருந்தால் ஆர்சிபி அணி ப்ளே ஆஃப் சுற்றுக்கு செல்ல முடியும். அதேசமயம், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி இதுவரை 8 போட்டிகளில் 5 வெற்றி, 3 தோல்விகள் என 10 புள்ளிகளுடன் 3 - ஆவது இடத்திலேயே நீடிக்கிறது, நிகர ரன்ரேட்டில் 0.577 என்ற நிலையில் இருக்கிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆர்சிபியின் வெற்றிக்குக் காரணம் என்ன? ஆர்சிபி அணிக்கு நேற்று கிடைத்த வெற்றி ஒரு தனிநபர் உழைப்பால் கிடைத்ததாகக் கூறமுடியாது. தொடக்கத்தில் ஆர்சிபி அணிக்கு கிடைத்த வாய்ப்பை நழுவவிடாமல் கடைசிவரை சன்ரைசர்ஸ் அணிக்கு கொடுத்த நெருக்கடியால் வெற்றி வசமானது. இதில் ஏதேனும் ஒரு கட்டத்தில் கேப்டன்ஷிப்பில் சுணக்கம் ஏற்பட்டிருந்தாலோ அல்லது, வீரர்களிடையே உற்சாகக் குறைவு ஏற்பட்டிருந்தாலோ ஆட்டம் கைமாறி இருக்கும். ஆர்சிபி அணி தங்களுக்கு கிடைத்த தருணத்தை தவறவிடாமல் கடைசிவரை எடுத்துச் சென்றதே வெற்றிக்கு முக்கியக் காரணம், பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங்கில் ஒவ்வொரு வீரர்களும் தங்களின் அதிகபட்ச பங்களிப்பை அளித்தனர். அதில் குறிப்பாக மெதுவான விக்கெட்டைக் கொண்ட மைதானத்தில் 19 பந்துகளில் அரைசதம் அடித்து ஆட்டமிழந்த ரஜத் பட்டிதார் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரின் கணக்கில் 2 பவுண்டரி, 5 சிக்ஸர்கள் அடங்கும். அதிலும் மயங்க் மார்க்கண்டே வீசிய 11வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை பட்டிதார் பறக்கவிட்டு அரைசத்ததை நிறைவு செய்தார். பட்டிதாரின் ஸ்ட்ரைக் ரேட் 250 ஆக இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பொறுமையாக ஆடிய கோலி விராட் கோலியும் அரைசதம் அடித்தார். ஆனாலும் அவர் மீது சமூக வலைத்தளங்களில் விமர்சனங்கள் எழுந்தன. கோலி ஆட்டமிழந்தபோது 43 பந்துகளில் 51 ரன்கள் சேர்த்திருந்தார். இதில் ஒரு சிக்ஸர், 4 பவுண்டரி, ஸ்ட்ரைக் ரேட் 118.60 ஆக இருந்தது. விராட் கோலி தனது இருப்பை ஆட்டம்முழுவதும் வைத்திருக்கும் நோக்கில் டி20 போட்டி என்பதையே மறந்துவிட்டு பேட் செய்கிறாரா என்று ரசிகர்கள் விமர்சித்தனர். விராட் கோலி பவுண்டரி, சிக்ஸர் அடிக்க வேண்டிய பந்துகளில் கூட ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்கிறேன் எனக் கூறிக்கொண்டு ஒரு ரன், 2 ரன்கள் எடுத்தார் என ரசிகர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் விராட் கோலி வீணாக்கிய பந்துகளால் ஆர்சிபி அணியின் ஸ்கோர் 20 முதல் 30 ரன்கள் குறைந்துவிட்டது என்றும் விமர்சிக்கப்படுகிறது. இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணியில் அரைசதம் அடித்திருந்தபோதிலும் ஸ்ட்ரைக் ரேட் குறைவாக வைத்திருந்த ஒரே பேட்டர் கோலி மட்டும்தான். கேப்டன் டூப்பிளசிஸ் தொடக்கத்தில் சிறிய கேமியோ ஆடி 12 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து 250 ஸ்ட்ரைக் ரேட்டில் பேட் செய்து ஆட்டமிழந்தார். கேமரூன் க்ரீன் 20 பந்துகளில் 37 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இவரின் ஸ்ட்ரைக் ரேட் 185 ஆக இருந்தது. கடைசி வரிசையில் களமிறங்கிய மகிபால் லாம்ரோர், தினேஷ் கார்த்திக், ஸ்வப்னில் சிங் ஆகிய 3 பேரின் ஸ்ட்ரைக் ரேட்டும் 175க்கு அதிகமாகவே இருந்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் பொறுப்புணர்வு ஆர்சிபி அணி பந்துவீச்சாளர்கள் நேற்றைய ஆட்டத்தில் கட்டுக்கோப்பாகப் பந்துவீசினர். முகமது சிராஜ் வழக்கமாக ரன்களை வாரி வழங்கும் நிலையில் 4 ஓவர்கள் வீசி 20 ரன்கள்தான் கொடுத்தார். யாஷ் தயால் 3 ஓவர்கள் வீசி 18 ரன்கள் ஒருவிக்கெட், கரன் ஷர்மா 4 ஓவர்கள் வீசி 29 ரன்கள் கொடுத்து 2 விக்கெட், கேமரூன் க்ரீன் 2 ஓவர்கள் வீசி 12 ரன்களுடன் 2 விக்கெட் என 6 ரன்ரேட்டுக்குள் கட்டுக்கோப்பாக பந்துவீசினர். ஸ்வப்னில் சிங், பெர்குஷன், ஜேக்ஸ் மட்டுமே இரட்டை இலக்க ரன்ரேட் வைத்திருந்தனர். மற்ற பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்புடன் பந்துவீசியது வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்தது. வெற்றி கிடைக்காவிட்டால் என்ன நடந்திருக்கும்? ஆர்சிபி அணியின் கேப்டன் டூப்பிளசிஸ் கூறுகையில் “ ஒவ்வொரு போட்டி முடிந்தபின்பும் பேட்டியளிப்பேன் ஆனால் இன்று மறந்துவிட்டேன். காரணம் 6 போட்டிகள் தோல்விக்குப்பின் கிடைத்த வெற்றிதான். கடந்த போட்டிகளில் எல்லாம் நாங்கள் வெற்றிக்கு அருகே வந்துதான் அதை அடையமுடியாமல் தோற்றோம். கொல்கத்தா அணியுடன் ஒரு ரன்னில் வெற்றியை இழந்தோம். எங்களால் வெற்றி பெற முடியும் கடைசி நேரத்தில் ஏதோ தவறு நடக்கிறது என்பதை புரிந்துகொண்டோம். இதுபோன்ற நெருக்கடியான நேரத்தில் கிடைக்கும் வெற்றிதான் வீரர்களுக்கு நம்பிக்கையளிக்கும். இந்த வெற்றி எங்களுக்கு மகத்தானது.” “இந்தவெற்றி கிடைக்காவிட்டால் வீரர்கள் மனதளவில் பாதிக்கப்பட்டிருப்பார்கள், நம்பிக்கையை ஒட்டுமொத்தமாக குலைத்திருக்கும். நம்பிக்கையை பற்றி ஓய்வறைக்குள் பேசவே முடியாது, போலியான நம்பிக்கையை வீரர்களிடம் செலுத்த முடியாது. களத்தில் நமது செயல்பாடுதான் நம்பிக்கையை ஏற்படுத்தும். போட்டித்தொடரின் முதல்பாதியில் நம்முடைய முழுதிறமைக்கும் விளையாடவில்லை என்று நினைத்தோம். 50சதவீதம் முதல் 60 சதவீதத்தை வெளிப்படுத்தனால், உங்களால் நம்பிக்கையைப் பெற முடியாது. கடந்த வாரம் முழுவதும் நாங்கள் அனைவரும் கடினமாக பயிற்சி செய்தோம், உழைத்தோம், சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த திட்டமிட்டோம்.” “ரஜத் பட்டிதார் தொடர்ந்து இரு அரைசதங்களை விளாசியுள்ளார். கிரீன் தேவையான கேமியோ ஆடினார். சின்னசாமி அரங்கு எங்களுக்கு மிகப்பெரிய மனவேதனையை அளித்தது. அதுபோன்ற சிறிய மைதானத்தில் பந்துவீசுவது பந்துவீச்சாளர்களுக்கு கடினமான பணி. கரன் சர்மா அவரின் திறமையை வெளிப்படுத்த ஒரு தளம் தேவைப்பட்டது, அதற்கு இந்தப் போட்டி உதவியது. எங்களிடம் தற்போது லெக் ஸ்பின்னரும் இருக்கிறார்” எனத் தெரிவித்தார் பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பலவீனத்தை அம்பலமாக்கிய ஆர்சிபி சன்ரைசர்ஸ் அணி இந்த சீசனில் இதற்கு முன் பெற்ற வெற்றிகள் அனைத்தும் முதலில் பேட் செய்து மிகப்பெரிய ஸ்கோரை எட்டி, எதிரணியை திக்குமுக்காடச் செய்து பெற்றவையாகும். சேஸிங் செய்து சன்ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது குறைவுதான். ஆனால், நேற்றைய ஆட்டத்தில் 207 ரன்கள் இலக்கு வைத்து சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்ய அழைத்தபோது அந்த அணியின் பலவீனத்தை ஆர்சிபி அணி வெளிப்படுத்திவிட்டது. அதாவது மிகப்பெரிய இலக்கு நிர்ணயிக்கப்பட்டால், சன்ரைசர்ஸ் பேட்டர்களும் பதற்றத்தில் சொதப்புகிறார்கள் என்பதை வெளிப்படுத்திவிட்டது. ஹைதராபாத் ஆடுகளம் சன்ரைசர்ஸ் அணிக்கு சொந்த மைதானம். பேட்டிங்கிற்கு சொர்க்கபுரியான இந்த மைதானத்தில்தான் சன்ரைசர்ஸ் அணி மிகப்பெரிய ஸ்கோரையும் எட்டியுள்ளது. அப்படி இருந்தும் நேற்றைய ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் அணி தோற்றதற்கு சேஸிங்கை கையில் எடுத்ததுதான் என்று ஆர்சிபி வெளிப்படுத்தியுள்ளது. அடுத்துவரும் ஆட்டங்களில் சன்ரைசர்ஸ் அணி ஒருவேளை டாஸில் தோற்றால், எதிரணிகள் பேட்டிங் செய்து, சன்ரைசர்ஸ் அணியை சேஸிங் செய்யவைத்து நெருக்கடி கொடுக்கும் வியூகத்தை கையில் எடுக்கலாம். பட மூலாதாரம்,GETTY IMAGES சன்ரைசர்ஸ் பேட்டர்களை எவ்வாறு சுருட்டுவது என கேப்டன் டூப்பிளசிஸ் பல உத்திகளைப் பயன்படுத்தினார். முதல் ஓவரிலேயே ஜேக்ஸை பந்துவீசச் செய்து டிராவிஸ் ஹெட் விக்கெட் வீழ்த்தப்பட்டது, அடுத்து ஸ்வப்னில் சிங் மூலம் ஒரே ஓவரில் கிளாசன், மார்க்ரம் என இரு ஆபத்தான பேட்டர்கள் பெவிலியனுக்கு அனுப்பப்பட்டனர். கிளாசன் இமாலய சிக்ஸர் அடித்த நிலையில் அடுத்த பந்தில் விக்கெட்டை இழந்தார். மார்க்ரம் ஃபுல்டாஸ் பந்தில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். அபிஷேக் சர்மா விக்கெட்டை யாஷ் தயாலும், நிதிஷ் ரெட்டி விக்கெட்டை கரண் சர்மாவும் எடுக்கவே சன்ரைசர்ஸ் பேட்டிங் வரிசை ஆட்டம் கண்டது. பவர்ப்ளே ஓவருக்குள் சன்ரைசர்ஸ் அணி 4 விக்கெட்டுகளை இழந்தது, 10 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை சன்ரைசர்ஸ் இழந்து தடுமாறியது. பாட்கம்மின்ஸ் கேமியோ ஆடி 31 ரன்கள் சேர்த்து க்ரீன் பந்துவீச்சிலும், புவனேஷ்வர் குமார் 13 ரன்னில் க்ரீன் பந்துவீச்சிலும் ஆட்டமிழந்தனர். ஷாபாஸ் அகமது மட்டும் 40 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அடுத்தடுத்து விக்கெட் சரிவு, பெரிய இலக்கு ஆகியவை சன்ரைசர்ஸ் அணியை மேலும் நெருக்கடிக்குள் தள்ளி, தோல்வியடையச் செய்தது.   பட மூலாதாரம்,GETTY IMAGES பட்டிதார் அளித்த உத்வேகம் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை எட்டுவோம் என்ற நோக்கத்தில் ஆட்டத்தைத் தொடங்கியது, புவனேஷ்வர், கம்மின்ஸ் வீசிய ஓவர்களை அதிரடியாக அடித்த கேப்டன் டூப்பிளசிஸ் பவுண்டரி, சிக்ஸர் விளாசினார். 3ஓவர்களில் 43 ரன்கள் என பெரிய ஸ்கோர் சென்றது. ஆனால், நடராஜன் பந்துவீச்சில் டூப்பிளசிஸ் 25 ரன்களில் ஆட்டமிழந்தவுடன் ரன்ரேட் குறையத் தொடங்கியது. ஷாபாஸ் சுழற்பந்துவீச்சில் கோலி வழக்கம்போல் மெதுவாக ஆடத் தொடங்கினார். பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் ஆர்சிபி ஒரு விக்கெட் இழப்புக்கு 61 ரன்கள் சேர்த்தது. தொடக்கத்தில் வேகமாக பேட்டை சுழற்றிய கோலி 11 பந்துகளில் 23 ரன்கள் சேர்த்தார், அதன்பின், 32 பந்துகளில் கோலி 28 ரன்கள் மட்டுமே சேர்த்தார். ஜேக்ஸ் 6 ரன்னில் மார்க்கண்டே பந்துவீச்சில் ஆட்டமிழந்தபின் பட்டிதார் களமிறங்கினார். பட்டிதார் களத்துக்கு வந்தபின்புதான் ஆர்சிபியின் ஸ்கோர் எகிறத் தொடங்கியது. வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 125 ஸ்ட்ரைக்ரேட்டிலும், சுழற்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக 197 ஸ்ட்ரைக் ரேட்டிலும் பட்டிதார் ஆடி ரன்களைச் சேர்த்தார். அதிலும் மார்க்கண்டே வீசிய 11-வது ஓவரில் தொடர்ந்து 4 சிக்ஸர்களை விளாசிய பட்டிதார் 19 பந்துகளில் அரைசதம் அடித்தார். கேமரூன் நடுவரிசையில் களமிறங்கி தேவையான ஒரு கேமியோ ஆடி ஸ்கோரை உயர்த்தினார். குறிப்பாக கேப்டன் கம்மின்ஸ் பந்துவீச்சில் கேமரூன் 4 பவுண்டரிகளை விளாசி 20 பந்துகளில் 37ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். இந்த சீசனில் சிறப்பாக பேட் செய்து வரும் டிகே 11 ரன்னில் ஆட்டமிழந்தார். ஸ்வப்னில் சிங் 12 ரன்னில் விக்கெட்டை இழந்தார். https://www.bbc.com/tamil/articles/c80z102przro
    • தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம்! வவுனியாவில் தந்தை செல்வாவின் 47வது நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்பட்டது. குறித்த நிகழ்வானது வவுனியா மணிக்கூட்டு கோபுரத்திற்கு அருகில் உள்ள அன்னாரின் சிலையருகில் இடம்பெற்றிருந்தது. இதன்போது அன்னாரின் திருவுருவச் சிலைக்கு மலர்மாலை அணிவித்து மலர் அஞ்சலியும் செலுத்தப்பட்டதுடன், நினைவு பேருரையும் இடம்பெற்றிருந்தது. தமிழரசு கட்சியின் தந்தை செல்வா நற்பணி மன்றத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கட்சி ஆதரவாளர்கள், பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். https://athavannews.com/2024/1379846
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.