Jump to content

“யாழ் நிலா” ரயில் சேவையில் 27 ஆம் திகதி பயணித்தவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பு !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
30 OCT, 2023 | 10:10 AM
image

“யாழ் நிலா” ரயில் சேவையில், கடந்த வெள்ளிக்கிழமை (27) பயணித்த பயணிகளுக்கு முக்கிய அறிவிப்பொன்று ரயில்வே திணைக்களத்தின் பொது முகாமையாளரால் விடுக்கப்பட்டுள்ளது.

வார இறுதிச் சேவையை விசேடமாக வழங்கவென கொழும்பு - காங்கேசன்துறைக்கு இடையில் 'யாழ் நிலா' என்ற பெயரில் ஒரு ரயில் சேவையைத் திணக்களம் ஆரம்பித்தது.

ஒருவருக்கு ஒருவழி கட்டணம் 4,000 ரூபாவாகும். வெள்ளிக்கிழமை (27) இரவு 10 மணிக்கு கல்கிஸையில் இருந்து புறப்படும் ரயில் சனிக்கிழமை காலையில் காங்கேசன்துறையை சென்றடையும்.

அதுபோல காங்கேசன் துறையிலிருந்து ஞாயிறு மாலை 9.30 மணிக்கு புறப்பட்டு திங்கள் காலை கல்கிஸை வரைப் பயணிக்கும்.

ரயிலின் என்ஜினில் ஏதோ திருத்தப்படுகின்றது என வௌ்ளிக்கிழமை (27) இரவு 10 மணியளவில் கூறப்பட்டுள்ளது.

சுமார் மூன்றரை மணி நேரத்தின் பின்னர் அதிகாலை 1.30 மணிக்கு ரயில் வந்தது. புறப்பட்ட ரயில் நீண்ட இழுபறிக்கு பின்னர் காலை 7.30 மணியளவில் வவுனியாவுக்குச் சற்று தொலைவில் செயலிழந்தது. ஒருவாறு நகர்ந்து வவுனியா ரயில் நிலையத்தை காலை 8:30 மணிக்குச் சென்றடைந்துள்ளது. அத்தோடு சேவை தடைப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

அந்த ரயிலில் வெள்ளவத்தையில் இருந்து பயணித்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வவுனியா நகருக்குப் போய், அங்கிருந்து இன்னொரு வாகனத்தில் யாழ் பயணமாகியுள்ளார்.

இதற்கிடையில் ரயில்வே பொது முகாமையாளர் டப்ளியு.ஏ.எஸ்.குணசிங்கவுடன் தொடர்புகொண்டு பயணிகள் அவலத்தை சுமந்திரன் எம்.பி எடுத்துரைத்துள்ளார்.

ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பொது முகாமையாளர் 'யாழ் நிலா'வில் அன்றையதினம் பயணித்த அனைவருக்கும் அவர்களது டிக்கெட் கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168038

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

எதுக்கும், @goshan_che இந்தப் பக்கம் வந்தா விசாரியுங்க, புத்தி சொல்லுவார்.

நானும் கண்டா கேக்கிறன்.

1 hour ago, ஏராளன் said:
30 OCT, 2023 | 10:10 AM
 

ஏற்பட்ட அசௌகரியங்களுக்கு மன்னிப்பு கேட்டுக்கொண்ட பொது முகாமையாளர் 'யாழ் நிலா'வில் அன்றையதினம் பயணித்த அனைவருக்கும் அவர்களது டிக்கெட் கட்டணமான 4 ஆயிரம் ரூபாய் திரும்ப வழங்கப்படும் என்று உறுதியளித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/168038

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

இப்படி அவசரபட்டு நீங்கள் டிக்கெட்டை கிழித்திருக்க கூடாது..

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

எதுக்கும், @goshan_che இந்தப் பக்கம் வந்தா விசாரியுங்க, புத்தி சொல்லுவார்.

நானும் கண்டா கேக்கிறன்.

 

4000ரூபா போய்ச்சா?!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஏராளன் said:

4000ரூபா போய்ச்சா?!

@Nathamuni ஆள் கருணாநிதி மாரி வலு சுழியன்🤣. எடுத்தாதானே கிழிக்க🤣

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

 நாதம்! என்ன பழக்கம் இது? ரிக்கற்ற கிழிக்கிறது....பாஸ்போர்ட்ட கிழிக்கிறது? ஆரிட்ட பழகின பழக்கம் ஆ....? 🤣

Maamannan Faces Backlash As Netizens Praise Fahadh Faasil's 'Casteist'  Character - News18

  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, குமாரசாமி said:

 நாதம்! என்ன பழக்கம் இது? ரிக்கற்ற கிழிக்கிறது....பாஸ்போர்ட்ட கிழிக்கிறது? ஆரிட்ட பழகின பழக்கம் ஆ....? 🤣

Maamannan Faces Backlash As Netizens Praise Fahadh Faasil's 'Casteist'  Character - News18

எல்லாம், எங்கண்ட சாமியார், உடான்சு சாமியார் அருளுரைகளை கேட்டு பெற்ற தெளிவுதான்.🤣

Edited by Nathamuni
Link to comment
Share on other sites

வெளிவந்ததும் கதவில் வைத்து ரிக்கற் வாங்கி விடுவார்கள் அல்லவா. 

Edited by appan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, appan said:

வெளிவந்ததும் கதவில் வைத்து ரிக்கற் வாங்கி விடுவார்கள் அல்லவா. 

ஓ அந்த நம்பிக்கையில்த் தான் பணம் திரும்ப தரலாம் என்கிறார்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
58 minutes ago, Nathamuni said:

எல்லாம், எங்கண்ட சாமியார், உடான்சு சாமியார் அருளுரைகளை கேட்டு பெற்ற தெளிவுதான்.🤣

சாமியார் அவர்கள் கூறியதை நீங்கள் வன்முறையாக விளங்கி கொண்டு, அடிப்படை வாதமாக செயல்பட்டுவிட்டு சாமியின் போதனைகளை குறை சொல்லக்கூடாது.

சாமியார் அமைதி வழியையே போதித்தார்🤣

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
29 minutes ago, ஈழப்பிரியன் said:

ஓ அந்த நம்பிக்கையில்த் தான் பணம் திரும்ப தரலாம் என்கிறார்களா?

இப்ப எல்லாம் ஒன்லைன் புக்கிங்.

காசும், கட்டின விதமாகவே, திரும்புமாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, விளங்க நினைப்பவன் said:

இப்படி அவசரபட்டு நீங்கள் டிக்கெட்டை கிழித்திருக்க கூடாது..

நீங்க வேற??😂

7 hours ago, Nathamuni said:

நான், ரிக்கற்ற கோவத்தில கிழிச்செறிஞ்சு போட்டன்.

இப்ப என்ன செய்யிறது?

எதுக்கும், @goshan_che இந்தப் பக்கம் வந்தா விசாரியுங்க, புத்தி சொல்லுவார்.

நானும் கண்டா கேக்கிறன்.

நீங்க கிழிச்சு எறிஞ்சீங்க???🤣

நம்பிட்டம் அப்புறம்??

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, விசுகு said:

நீங்க வேற??😂

நீங்க கிழிச்சு எறிஞ்சீங்க???🤣

நம்பிட்டம் அப்புறம்??

பிறகென்ன, கிளிச்சதை தேடியெடுத்து பசை போட்டு ஒட்டிக் கொண்டு போய் நிப்பமல்ல!! 😁

  • Haha 1
Link to comment
Share on other sites



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.