Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

“ என்னை அழைத்தது ஒரு முரண்நகை” - சட்டத்தரணி சுவஸ்திகா அருள்லிங்கம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக துணைவேந்தருக்கு பகிரங்க கடிதம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சின்னவர் வந்து ஆலமரம் பற்றி உலகுக்கு விளக்கி எழுத 
பெரியவர் வந்து அப்படியே விழுதுகளில் தொங்கிக்கொண்டே புகழாரம் பாட 

ச்சா ச்சா 
இப்படியொரு தமிழ் ரசத்தை நான் இதற்கு முன்பு எங்கும் குடித்ததில்லை 
எதோ போன ஜென்மத்து புண்ணியம் ஒன்று கொண்டுவந்து யாழ் களத்தில் என்னை 
சேர்த்திருக்கும் என்று எண்ணுகிறேன் 

  • Replies 69
  • Views 5.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
On 5/11/2023 at 06:55, நியாயம் said:

1- 

இங்கே எழுதப்பட்ட எழுத்துக்களின் படி

நான் ஒரு பாசிச தகப்பன்.

ஆனால் என் பிள்ளைகள் நால்வரும் என்னை உலகின் முதல் தர தகப்பன் என்று சொல்கிறார்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விசுகு said:

இங்கே எழுதப்பட்ட எழுத்துக்களின் படி

நான் ஒரு பாசிச தகப்பன்.

ஆனால் என் பிள்ளைகள் நால்வரும் என்னை உலகின் முதல் தர தகப்பன் என்று சொல்கிறார்கள். 

அண்ணை பாசிஸ்ட் என்பதால் பதற வேண்டிய அவசியம் இல்லை.

முசோலினி பாசிசத்தை ஒரு நாட்டை ஆளும் முறை ஆக்கிய பின்புதான் அது கெட்ட வார்த்தை போல் ஆகிவிட்டது.

பாசிஸ்டின் கூறுகள் இல்லாமல் எந்த விடுதலை அமைப்பும் இல்லை.

இங்கிலாந்தின் குரொம்வெல், அமெரிக்காவின்  ஜோர் வாசிங்டன் தொடங்கி, சேகுவாரா, கஸ்டிரோ, மண்டேலா… ஏன் எதிர் கருத்தை முன்வைத்த நேதாஜியை காங்கிரசில் இருந்து விலக வைத்த காந்தி வரை பாசிசத்தின் கூறுகளை வெளிக்காட்டியோர் தான்.

நானும் ஒரு பாசிச தந்தைதான். 

எனது தந்தையோ நாஜி 🤣 ( @Maruthankerny மருதர் இது பகிடி, பிறகு  தலை கீழாக குழந்தையை பிடித்து கொண்டு, இந்த குழந்தைக்கு தலையில் நகம் வளருது என்ற ரீதியில் கருத்து எழுத கூடாது).

15 hours ago, Maruthankerny said:

சின்னவர் வந்து ஆலமரம் பற்றி உலகுக்கு விளக்கி எழுத 
பெரியவர் வந்து அப்படியே விழுதுகளில் தொங்கிக்கொண்டே புகழாரம் பாட 

ச்சா ச்சா 
இப்படியொரு தமிழ் ரசத்தை நான் இதற்கு முன்பு எங்கும் குடித்ததில்லை 
எதோ போன ஜென்மத்து புண்ணியம் ஒன்று கொண்டுவந்து யாழ் களத்தில் என்னை 
சேர்த்திருக்கும் என்று எண்ணுகிறேன் 

நாம் இப்படி எழுதுவதை சிலாகிக்க ஆள் இல்லையே….

கொஞ்சம் பத்தி பிரிச்சு, விளங்கிறமாரி எழுதினால் ஆரும் கிடைக்கலாம்.

ஆனால் குத்துமதிப்பாய் சிரிப்பு போட ஒரு அடிபொடியையாவது தேத்தி கொண்டதே ஒரு சாதனைதான்.

  • கருத்துக்கள உறவுகள்

எழுதப் பட்டிருக்கும் கருத்துகளுக்கும்  தொடர்பில்லாமல், தலைப்பிற்கும் தொடர்பில்லாமல் ஏனையோரின் திரியை ஒட்டிய கருத்துக்களை "எள்ளல்"  செய்யவும் ஒரு தெனாவெட்டு வேணும் கண்டியளோ, இது எல்லாருக்கும் வராது!

எனவே, யாழ் களம் "எல்லா வகையான"😎 ஆட்களையும் அரவணைப்பதில் வெற்றி பெற்றிருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்!

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவஸ்திகாவை யாழ்.பல்கலையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும்

adminNovember 8, 2023
swasthika.jpg?fit=1024%2C576&ssl=1

 

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்களின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பிலான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.

இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது. இதற்கு மாணவர்களினால் சொல்லப்பட்ட காரணம் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் தென்னிலங்கையில் ஒரு நிகழ்ச்சியிலே பேசும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பாசிஸ அமைப்பு என விபரித்தமையே ஆகும்.

ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையில் பதிவிடுகிறது.

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும்.

பல்கலைக்கழகத்தினுள் கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பவற்றினைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுடனும், பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புக்களுடனும் உரையாடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செயற்பாடுகளில் நாம் விரைவில் ஈடுபடுவோம் என்றுள்ளது.
 
  • கருத்துக்கள உறவுகள்
10 hours ago, கிருபன் said:

சுவஸ்திகாவை யாழ்.பல்கலையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும்

adminNovember 8, 2023
swasthika.jpg?fit=1024%2C576&ssl=1

 

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிர்வாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்களின் உரை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலே கடந்த 31ஆம் திகதி நிறுத்தப்பட்டமை தொடர்பிலான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் அறிக்கையில் இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அந்த அறிக்கையில்,

கடந்த அக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் அவர்கள் “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார்.

இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது. இதற்கு மாணவர்களினால் சொல்லப்பட்ட காரணம் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் தென்னிலங்கையில் ஒரு நிகழ்ச்சியிலே பேசும் போது தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினை பாசிஸ அமைப்பு என விபரித்தமையே ஆகும்.

ஒருவர் வெளியிட்ட தனிப்பட அரசியற் கருத்தின் அடிப்படையில் அவரைப் பல்கலைக்கழகத்திலே பேச அனுமதிக்கக் கூடாது எனப் பல்கலைக்கழக மாணவர்கள் நிர்வாகத்துக்கு நெருக்குவாரம் கொடுத்தமை மிகவும் தவறான ஒரு செயல் என்பதனை யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் இந்த அறிக்கையில் பதிவிடுகிறது.

சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும்.

பல்கலைக்கழகத்தினுள் கருத்துச் சுதந்திரம், கல்விச் சுதந்திரம், மாற்றுக் கருத்துக்களுக்கான இடம் என்பவற்றினைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளில் ஈடுபடுவது தொடர்பாக மாணவர்களுடனும், பல்கலைக்கழகத்தின் மாணவர் அமைப்புக்களுடனும் உரையாடுவதற்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இது தொடர்பான செயற்பாடுகளில் நாம் விரைவில் ஈடுபடுவோம் என்றுள்ளது.
 

ஏன் இவா தன்னுடைய உரையை ஒன்லைனில் செய்யக்கூடாது ?
யாழ் பல்கலைக்கழகம் சென்று அங்குதான் செய்யவேண்டும் எனில் 

இப்போது உரைக்குள் சரக்கு இருக்கா? 
அல்லது அங்கே செய்து முடிப்பதில் ஏதும் லாபம் இருக்கா? 

இந்த கேள்வி வந்து போகிறது 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Maruthankerny said:

ஏன் இவா தன்னுடைய உரையை ஒன்லைனில் செய்யக்கூடாது ?

ஒரு திறந்த உரையாடல் செய்ய ஒன்லைனில் வாய்ப்புக்கள் குறைவாக இருக்கலாம்.

 

யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டம்!

adminNovember 9, 2023
IMG-20231109-WA0016.jpg?fit=1170%2C878&s

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் வெளியிட்ட அறிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக விஞ்ஞான பீட வளாகத்தில், இன்றைய தினம் வியாழக்கிழமை ஒன்றுகூடிய பல்கலைக்கழக மாணவர்கள் குறித்த போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடந்த ஒக்டோபர் 31ஆம் திகதி அன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட நிகழ்ச்சி ஒன்றிலே கலந்து கொண்டு சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம்  “நெருக்கடியான காலத்தில் நீதித்துறையின் சுதந்திரம்” என்ற தலையங்கத்திலே உரையாற்ற இருந்தார். இந்த உரையாடல் இறுதி நேரத்தில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்களில் ஒரு பிரிவினரின் நெருக்கதலின் காரணமாக கைவிடப்பட்டது.

இந்நிலையில் சட்டத்தரணி சுவாஸ்திகா அருளிங்கம் மீளவும் அழைக்கப்பட்டு சட்டத்துறையிலே தனது உரையினை வழங்குவதற்குரிய சந்தர்ப்பத்தினை உருவாக்க‌ யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், ஆசிரியர்கள், பல்கலைக்கழக நிருவாகம் ஆகியன இணைந்து உடனடியாக நடவடிக்கைகளை மேற்கொள்ள‌ வேண்டும் என யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கம் நேற்று கோரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

spacer.png

 

https://globaltamilnews.net/2023/197058/

  • கருத்துக்கள உறவுகள்+

திரியோடு தொடர்புடையது

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, நன்னிச் சோழன் said:

திரியோடு தொடர்புடையது

 

இளம்பிறைக்கு பாசிசத்திற்கான வரைவிலக்கணம் என்ன என்று  தெரியுமோ? 

தெரிந்திருந்தால் அவருடன் நேருக்கு நேர் உரையாடலாமே? 

 

  • கருத்துக்கள உறவுகள்
On 8/11/2023 at 12:46, கிருபன் said:

சுவஸ்திகாவை யாழ்.பல்கலையில் உரையாற்ற அனுமதிக்க வேண்டும்

21 hours ago, கிருபன் said:

ஒரு திறந்த உரையாடல் செய்ய ஒன்லைனில் வாய்ப்புக்கள் குறைவாக இருக்கலாம்.

 

உரையாற்ற வருகிறார் என்று சொல்லிகிறார்கள் 
நீங்கள் உரையாட வருகிறார் என்று சொல்கிறீர்கள் 

யாழ் பல்கலைக்கழ மானவர்கள் இவரின் உரையோ உரையாடலோ எதுவும் வேண்டாம் என்கிறார்கள் 
அவர்களுக்கு பேச்சு சுதந்திரம் இருக்க கூடாதா? 

பிடிக்காத ஒருவரின் கருத்துருவாக்கத்தை கொண்டு சென்று திணிப்பது 
பாசிசமோ எதோ என்று யாழ்களத்தில் குசு குசுப்பார்களே அதற்குள் வராதா? 

இவர்கள் கொழும்பில் எடுத்த அறக்கலையோ அரைகுறையோ என்று ஒரு போராடத்தில் 
எத்தனை அரசியல்வாதிகள் வீடுகளை தீ மூட்டினார்கள்? சில அரசியல்வாதிகளை பிடித்து அடித்தார்கள் ... நிர்வாணம் ஆக்கினார்கள் 

அதெல்லாம் அக்காவிற்கு வன்முறை என்று தெரியவில்லையா? 
இப்போ ஞானம் பெற்று யாழ் மக்களுக்கு அகிம்சையை போதிக்க வருகிறாவா?
அதெல்லாம் யாழ் மக்கள்  30 வருடம் முன்னாடியே செய்து முடித்தவர்கள் என்று அவருக்கு தெரியவில்லை போல 

  • கருத்துக்கள உறவுகள்

சட்டத்தரணி சுவஸ்திகாவிற்கு ஆதரவாக இராணுவ புலனாய்வு பிரிவே யாழ் பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கம் என்ற பெயரில் அறிக்கை வெளியிட்டதாக தெரிவித்து யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பிரதான வாயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

 

  • கருத்துக்கள உறவுகள்

F-fN8uQXcAAWvPX?format=jpg&name=900x900

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு உரைக்குப் பின்னர் திறந்த உரையாடல் நிகழ்வது வழமை. இல்லாவிட்டால் உரையாற்றுபவர் வெறும் பிரசங்கம்தான் செய்யமுடியும். 

பல்கலைக்கழகங்கள் அறிவார்ந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும் இடங்கள். அங்கே ஒருவரது கருத்தை தர்க்கபூர்வமாக நியாயப்படுத்தவும், மறுதலிக்கவும் வாய்ப்புக்கள் இருக்கவேண்டும். 

 

வாபஸ் அறிக்கைவிட்ட ஆசிரியர் சங்கத்தில் அகிலன் கதிர்காமரும் இருக்கின்றார்!

  • கருத்துக்கள உறவுகள்

பாவம். கல்வியில் புகழ் படைத்த ஆசிரியர் சமுதாயமே குழம்பி போய் இருக்குது. ஒரு நாளைக்கு ஓர் அறிக்கை. அவரை ஏன் கூப்பிடுவான் பின்னர் ஏன் கூப்பாடு போடுவான். வேலை மினக்கெடட வேலை. 

  • கருத்துக்கள உறவுகள்
20 hours ago, கிருபன் said:

ஒரு உரைக்குப் பின்னர் திறந்த உரையாடல் நிகழ்வது வழமை. இல்லாவிட்டால் உரையாற்றுபவர் வெறும் பிரசங்கம்தான் செய்யமுடியும். 

பல்கலைக்கழகங்கள் அறிவார்ந்த செயற்பாடுகளை ஊக்குவிக்கும் இடங்கள். அங்கே ஒருவரது கருத்தை தர்க்கபூர்வமாக நியாயப்படுத்தவும், மறுதலிக்கவும் வாய்ப்புக்கள் இருக்கவேண்டும். 

 

வாபஸ் அறிக்கைவிட்ட ஆசிரியர் சங்கத்தில் அகிலன் கதிர்காமரும் இருக்கின்றார்!

அதுதானே இப்போ செய்யப்பட்டு இருக்கு .........
மீண்டும் மீண்டு சென்று திணிப்போம் என்றால் 
அது என்ன வகை ? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, Maruthankerny said:

அதுதானே இப்போ செய்யப்பட்டு இருக்கு .........
மீண்டும் மீண்டு சென்று திணிப்போம் என்றால் 
அது என்ன வகை ? 

உரையைக் கேட்ட பின்னர் கருத்தை தர்க்கபூர்வமாக மறுதலிப்பதுதான் சொற்போர் புரியும் கற்றோருக்கு மாண்பு!

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, கிருபன் said:

உரையைக் கேட்ட பின்னர் கருத்தை தர்க்கபூர்வமாக மறுதலிப்பதுதான் சொற்போர் புரியும் கற்றோருக்கு மாண்பு!

இனஅழிப்பிற்கு எதிராக போராடிய ஒரு இனத்தை பற்றிய அவரின் வார்த்தைகளை கேட்ட பின்னர்தான் இந்த முடிவை எடுத்திருக்கிறார்கள். 

மீண்டும் மீண்டும் கேட்க அதில் அப்படி என்ன இருக்கிறது?
அப்படி ஏதாவது இருப்பின் அதை ஒன்லைனில் செய்யலாமே என்று நான் முன்பே எழுதி இருக்கிறேன். 

சொற்போர் புரிவத்துக்கு இது என்ன கவியரங்கமா?
கொழும்பு வாழ் எலைட் ஒருவர் சுயவிளம்பரத்துக்கு இனத்தையே விற்பார் 
நாங்கள் கூடிவந்து சொற்பொழிவு கேட்க அவரிடம் என்ன தகுதி இருக்கிறது?

இனத்துக்காக எம்மக்களுக்கா இவர் செய்து கிழித்தது என்ன? 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நிக்ஸனின் இன்னோர் பத்தி..

 

யாரும் யாரையும் பாசிவாதிகள் என்றும் சொல்லாம்,  ஐனநாயக தூண்கள் என்றும் சொல்லலாம். 

பிரச்னை என்னவென்றால், புலிகளை பற்றி ஏதாவது நல்லது முகப்புத்தகத்தில் யாரோ ஒருவர் எழுதியதை லைக் பண்ணினாலோ அல்லது பகிர்ந்தாலோ பயங்கரவாத  சட்டம் பாய்கின்ற இலங்கையில்: தமிழர்  பிரதேசத்தில், யாரோ ஒருவர் வந்து புலிகளை பற்றி அவதூறு சொன்னால் அதற்க்கு எதிர்வாதம் செய்ய சந்தர்ப்பம் கிடைக்கும் என்று சொல்லுபவர்களை என்ன செய்யலாம்?

இந்த பெண்மணிக்கு ஊடக அனுசரணை வழங்கிக்கொண்டு இருக்கும் காலைக்கதிர்/மாலைக்கதிர்/காலைமுரசு/மாலைமுரசு போன்ற பத்திரிகைகளே யாழ் பல்கலைக்கழக ஊழியர்கள் வெளியிட்ட மாணவர்களுக்கு சார்பான அறிக்கையை முழுமையாக பிரசுரிக்க முடியாத நிலையில்தான் இலங்கையில் பத்திரிக்கைச் சுதந்திரம் உள்ளது. அல்லது அது அவர்களின் சுயதணிக்க்கையோ என்றும் தெரியவில்லை.

ஆனால், விடுதலைப்புலிகளை குறைசொல்லுவது என்பது "ஒரு அரசியல் துரும்பு சீட்டாக" மாறுவதை அனுமதிப்பது என்பது எங்களது போராட்டத்தை மேலும் மேலும் நலிவுபடுத்தும்.

  

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.