Jump to content

ஐ.பி.எல் 2024 - செய்திகள்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

கண்களில் பட்டாலும் கண்டுக்காமல் விட்டிருப்பார்கள்.......!  😴

Link to comment
Share on other sites

  • Replies 257
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்?

ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்?

17 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது.

வருகிற 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் திகதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஏப்ரல் 7 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது.

பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2 ஆவது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2 ஆவது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2 ஆவது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014 இல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021 இல் 2 ஆவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது.

https://tamil.adaderana.lk/news.php?nid=185234

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, nunavilan said:

ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்?

ஐ.பி.எல் தொடர் துபாய்க்கு மாற்றம்?

17 ஆவது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டிக்கான முதல்கட்ட அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் வெளியிட்டது.

வருகிற 22 ஆம் திகதி முதல் ஏப்ரல் 7 ஆம் திகதி வரை 17 நாட்களுக்கான 21 போட்டிகள் விவரம் வெளியாகி இருந்தது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் 22 ஆம் திகதி நடைபெறும் தொடக்க ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன.

ஏப்ரல் 7 ஆம் திகதி லக்னோவில் நடைபெறும் ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன. பாராளுமன்ற தேர்தல் காரணமாக முதல் கட்ட அட்டவணையை மட்டுமே வெளியிடப்பட்டு இருந்தது.

பாராளுமன்ற தேர்தல் திகதி இன்று பிற்பகல் அறிவிக்கப்படுகிறது. இதனால் 2 ஆவது கட்ட ஐ.பி.எல். அட்டவணையை கிரிக்கெட் வாரியம் விரைவில் அறிவிக்கும் என்று தெரிகிறது.

இந்நிலையில் பாராளுமன்ற தேர்தல் காரணமாக ஐ.பி.எல். 2 ஆவது கட்ட போட்டிகளை ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துபாய்க்கு மாற்ற கிரிக்கெட் வாரியம் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கிரிக்கெட் வாரியத்தின் சில நிர்வாகிகள் துபாய் சென்றுள்ளனர். 2 ஆவது கட்ட போட்டிகளை இந்தியாவில் இருந்து துபாய்க்கு மாற்றலாமா? என்பது குறித்து அவர்கள் ஆய்வு மேற்கொண்டு வருவதாக அந்த தகவல் தெரிவிக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் காரணமாக 2009 ஆம் ஆண்டு ஐ.பி.எல். போட்டி தென் ஆப்பிரிக்காவிலும், 2014 இல் முதல் கட்ட ஆட்டங்கள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடத்தப்பட்டது. 2020 ஆம் ஆண்டு கொரோனா காரணமாக ஐ.பி.எல். முழுமையாகவும் 2021 இல் 2 ஆவது கட்ட போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்சிலும் நடைபெற்றது.

https://tamil.adaderana.lk/news.php?nid=185234

ஒவ்வொரு பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லின் போது ஜ‌பிஎல்ல‌ 
வேறு நாடுக‌ளில் ந‌ட‌த்தி இருக்கின‌ம் இந்த‌ முறையும் ச‌ரியான‌ போட்டி அட்ட‌வ‌னைய‌ த‌யார் செய்து டுபாயில் ந‌ட‌த்தி இருக்க‌லாம்...........

2014 ஜ‌பிஎல் தென் ஆபிரிக்காவில் ந‌ட‌ந்த‌து என்று நினைக்கிறேன்.............இந்த‌ தேர்த‌ல் ஒவ்வொரு மானில‌த்தில் வெவ்வேறு திக‌திக‌ளில் ந‌ட‌த்தின‌ம் ஆன‌ ப‌டியால் முழு போட்டியையும் அய‌ல் நாட்டில் ந‌ட‌த்தி இருக்க‌லாம்.............கோமாளி சென்னை ர‌சிக‌ர்க‌ள் இந்த‌ முறை வீட்டுக்குள் இருந்த‌ ப‌டியே விசில‌ அடிக்க‌ட்டும் ஹா ஹா😁😁😁😁😁........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோகித் சர்மாவுடன் 2 மாதங்களாக பேசாத புதிய கேப்டன் ஹர்திக்; மும்பை இந்தியன்ஸ் அணியில் என்ன நடக்கிறது?

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 19 மார்ச் 2024
    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

மும்பை இந்தியன்ஸ் அணி இந்த ஐபிஎல் டி20 சீசனை மாறுபட்ட கோணத்தில் அணுக இருக்கிறது. புதிய வீரர்கள், திறமையை வெளிக்காட்டாத பல வீரர்கள் வெளியேற்றம், பல கோடி ரூபாய் பரிமாற்றத்துக்குப்பின் கிடைத்த புதிய கேப்டன் ஆகிய அம்சங்களுடன் அணுக இருக்கிறது.

ரோஹித் சர்மா தலைமையில் 5 முறை பட்டம் வென்றுள்ள அந்த அணி, 2020ம் ஆண்டுக்குப் பின் சாம்பியன்ஷிப் பட்டம் வெல்ல முடியாமல் தடுமாறுகிறது. அதனால்தான் என்னவோ மும்பை இந்தியன்ஸ் அணியிலிருந்து வெளியேற்றப்பட்டு குஜராத் டைட்டன்ஸ் அணிக்குச் சென்று அந்த அணிக்கு சாம்பியன்ஷிப் பெற்றுக் கொடுத்த ஹர்திக் பாண்டியாவை மும்பை இந்தியன்ஸ் நிர்வாகம் மீண்டும் அழைத்து வந்துள்ளது.

வைரலாகும் பேட்டி

மும்பை இந்தியன்ஸ் அணியின் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியா அளித்த பேட்டிக்குப் பின், ஹர்திக் பெயரும், மும்பை இந்தியன்ஸ் பெயரும் எக்ஸ் தளத்தில் டிரண்டாகியுள்ளது.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு புதிய கேப்டனாக ஹர்திக் பாண்டியா நியமிக்கப்பட்டபின் முதல்முறையாக ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது ரோஹித் சர்மா தலைமையின் கீழ் விளையாடிவிட்டு, அவர் தற்போது உங்கள் தலைமையின் கீழ் விளையாடுவதால் ஏதேனும் “ஈகோ” பிரச்சினை வருமா என்று கேட்டனர்.

"தோளோடு தோள் சேர்ந்து பயணிப்பேன்"

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

அதற்கு ஹர்திக் பாண்டியா அளித்த பதிலில் “ அனைத்து சீசன்களிலும் ரோஹித் சர்மா என் தோள் மீது கைபோட்டு வர வேண்டும் என்று விரும்புகிறேன். கேப்டன் ரோஹித், சாதாரண வீரர் ரோஹித் என்ற வேறுபாடு இன்றி பழகுவார். எனக்கு எந்த உதவி தேவைப்பட்டாலும் அவரிடம் கேட்பேன்.

அவர்தானே இந்திய அணியின் கேப்டன். அவரின் ஆலோசனை எனக்கு எப்போதும் உதவியாக இருக்கும். ஏனென்றால், மும்பை அணி அவரின் தலைமையில்தான் சாதித்துள்ளது. அவர் சென்ற பாதையில் நானும் செல்வேன், இதில் கூச்சப்பட என்ன இருக்கிறது, ரோஹித் பாய் தலைமையில் 10 ஆண்டுகள் விளையாடி இருக்கிறேன்." என்றார்.

"2 மாதங்களாக இருவரும் பேசவில்லை"

மேலும் தொடர்ந்த ஹர்திக், "ரோஹித் சர்மா இந்திய அணிக்காக விளையாடுவதில் பரபரப்பாக இருந்ததால், கடந்த 2 மாதங்களாக இருவரும் பார்த்துப் பேசிக் கொள்ளவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் வியூகம் பற்றிக்கூட இருவரும் பேசவில்லை. ஆனால் ஐபிஎல் தொடருக்கு அனைவரும் ஒன்று சேரும்போது, ஓய்வறையில் நிச்சயம் இருவரும் பேசிக் கொள்வோம்” எனத் தெரிவித்தார்.

 
ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

வெற்றிக் கேப்டனுக்கு இந்த நிலையா?

ஒரு பக்கம் இந்திய அணியின் கேப்டன் என்ற பெருமை, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் என்ற அடையாளத்துடன் ரோஹித் சர்மா, ஹர்திக் பாண்டியா தலைமையின் கீழ் ஐபிஎல் தொடரை எதிர்நோக்கியுள்ளார்.

மும்பை அணி நிர்வாகம், தனக்குக் கீழ் பல சீசன்கள் ஆடிய ஹர்திக் பாண்டியாவை அழைத்துவந்து அவருக்கு கீழ் தன்னை விளையாட வைத்துவிட்டது என்று ரோஹித் சர்மா நினைக்கவும் வாய்ப்புண்டு.

உலக கிரிக்கெட்டில் இந்திய அணியை டி20, ஒருநாள், டெஸ்ட் ஆகிய 3 ஃபார்மெட்டிலும் சிறப்பாக செயல்பட வைத்து சபாஷ் வாங்கி வருபவர் ரோஹித் சர்மா. வெற்றிகரமான கேப்டனாக உலக கிரிக்கெட் அணிகளால் ஏற்றுக்கொள்ளப்பட்ட ரோஹித் சர்மாவை, மும்பை இந்தியன்ஸ் அணி ஏற்கவில்லையா என்ற கேள்வி கேப்டன் மாற்றத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

ரசிகர்களின் போட்டி

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒருபுறம் ரோஹித் சர்மாவுக்கான பெரும் ரசிகர்கள் பட்டாளம், மற்றொரு புறம் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு என ரசிகர்கள் என்று ரசிகர்கள் மத்தியில் பிரிவினையோடு மும்பை இந்தியன்ஸ் இந்த முறை களம் காண்கிறது.

ரசிகர்கள் ஆதங்கப்படுவதைப் போல் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 2013ம் ஆண்டு ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்ற பின்புதான் அந்த அணியால் முதல் சாம்பியன்ஷிப் பட்டத்தை முத்தமிட முடிந்தது. அதற்கு முன்புவரை மும்பை அணியில் சச்சின், ரிக்கி பாண்டிங், ஜெயசூர்யா உள்ளிட்ட ஏராளமான ஜாம்பவான் வீரர்கள் இருந்தும், ஒருவராலும் கோப்பைக்கு அருகே அழைத்துச் செல்ல முடியவில்லை என்பதே நிதர்சனம்.

ஆனால், 2013ல் ரோஹித் சர்மா கேப்டன் பொறுப்பேற்றபின், ஒருமுறை அல்ல 2013, 2015, 2017, 2019, 2020 என 5 முறை சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கோப்பையை வெல்லும் ஆட்டத்துக்கு வீரர்களின் தனிப்பட்ட பங்களிப்புகள் இருந்தாலும், அதை வெளிக்கொணரும் வகையில் செயல்பட்ட ரோஹித் சர்மாவின் கேப்டன்ஷிக்கு சபாஷ் கூறியாக வேண்டும். ஐபிஎல் தொடரில் அனைத்து அணிகளுக்கும் எதிராகவும் 50 சதவீதத்துக்கு மேல் வெற்றி சதவீதத்தை ரோஹித் சர்மா தனது கேப்டன்சியில் வைத்துள்ளார் என்கிறது புள்ளிவிவரம்.

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஒரு உறைக்குள் இரு கத்தி

ஆனாலும், ஒரே உறையில் இரு கத்திகள் இருக்க முடியுமா என்ற கேள்வி எழுகிறது. ஏன் இதற்கு முன் தோனி கேப்டன்சியில் சச்சின் விளையாடவில்லை, கோலி கேப்டன்சியில் தோனி விளையாடவில்லையா என்று கேட்கலாம். ஆனால் அப்போதெல்லாம் ஒருவர் இந்திய அணிக் கேப்டனாக இருக்கும்போது, ஐபிஎல் தொடரில் அவரது கேப்டன் பதவியை பறித்துவிட்டு, தனக்கு கீழ் ஆடிய ஒரு வீரரின் கேப்டன்சியில் விளையாடும் நிலை வரவில்லை என்ற உண்மையை உணர வேண்டும்.

தோனி கேப்டனாக இருந்தபோது, சச்சின் எந்த அணியிலும் கேப்டனாக இல்லை. கோலி கேப்டனாக இருந்தபோது, சிஎஸ்கே அணியில் மட்டும்தான் தோனி கேப்டனாக இருந்தார். இந்திய அணி கேப்டன் என்பது மிகப்பெரிய கவுரவ அடையாளம், அந்த கவுரவத்தை சுமந்திருக்கும் ஒருவரை, ஐபிஎல் அணி நிர்வாகம் திடீரென நீக்கிவிட்டு, வேறு ஒரு வீரரை நியமித்திருப்பது சற்று அதிர்ச்சிக்குரியதுதான்.

இந்த மாற்றம் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எத்தகைய சவால்களை வரும் சீசனில் உருவாக்கும், புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு எத்தகைய பிரச்னைகள், சவால்கள் இருக்கின்றன என்பது குறித்து கிரிக்கெட் வல்லுநர்கள் பகிர்ந்துள்ளனர்.

"பிரச்னை வராது"

எம்ஆர்எஃப் பவுண்டேஷனில் பந்துவீச்சு துணை பயிற்சியாளராக இருந்துவரும் எட்வின் கென்னடி பிபிசி செய்திகளிடம் பேசுகையில் “ ரோஹித் சர்மாவிடம் இருந்து கேப்டன் பதவியை பறித்து, ஹர்திக் பாண்டியாவிடம் கொடுத்ததால் மும்பை இந்தியன்ஸ் அணியின் செயல்பாடு எந்தவிதத்திலும் குறையாது. இந்த பக்கம் இந்திய அணியின் கேப்டன், அந்தப் பக்கம் மும்பை அணியின் கேப்டன் என்ற குழப்பத்துடன் வீரர்கள் விளையாட மாட்டார்கள்.

ஒருவீரரின் திறமைதான் அவரை அடுத்தக் கட்டத்துக்கு எடுத்துச் செல்லும். ஆதலால், ரோஹித் சர்மாவுக்கு ஆதரவாகச் செயல்பட வேண்டும், ஹர்திக் பாண்டியாவுக்கு சார்பாக நடக்க வேண்டும் என்ற சார்புநிலை அணிக்குள் இருக்காது, வீரர்களிடத்திலும் இருக்காது என்பது எனது கருத்து. ரோஹித் சர்மா, சூர்யகுமார், பும்ரா தவிர மற்ற வீரர்கள் இளம் வீரர்கள் என்பதால், ஹர்திக் பாண்டியாவுக்கு அவர்களை கையாள்வதில் சிரமம் இருக்காது.

 
ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

"ரோஹித் பேட்டிங் இனி பட்டையை கிளப்பும்"

என்னைப் பொருத்தவரை ரோஹித் சர்மா இனிமேல்தான் சுமையின்றி, அழுத்தமின்றி பேட் செய்வார். இதற்கு முன்புவரை கேப்டன் பதவி என்ற கிரீடம் இருந்தது, அதை கழற்றிவிட்டு இனிமேல் சுதந்திரமாக பேட் செய்யும்போது, அவரின் பேட்டிங் வேறுவிதத்தில் மாறும். அது மும்பை அணிக்கு பலமாக இருக்கும்” எனத் தெரிவித்தார்.

"ரோஹித்தை நீக்கியது தவறான முடிவு"

விளையாட்டுத்துறையில் மூத்த பத்திரிகையாளர் முத்துக்குமார் பிபிசி செய்திகளிடம் கூறுகையில் “ மும்பை இந்தியன்ஸ் அணி இந்த சீசனில் ரோஹித் சர்மாவை நீக்கிவிட்டு, ஹர்திக் பாண்டியாவை கேப்டனாக நியமித்தது தவறான உதாரணம். இந்திய அணிக்கு மோசமான கேப்டனாக ரோஹித் செயல்பட்டால் ஐபிஎல் தொடரில் அவரை நீக்கிவிட்டு மும்பை அணி புதிய கேப்டனை கொண்டுவரலாம். ஆனால், வெற்றிகரமான கேப்டனாக ரோஹித் வலம் வரும்போது, மும்பை அணி கேப்டனை மாற்ற வேண்டிய அவசியம் என்ன இருக்கிறது.

ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

”ஒய்வறை பிரச்னை”

இந்த சீசனில் மும்பை அணி வித்தியாசமான பிரச்னைகளை சந்திக்கும் என எனக்குத் தெரிகிறது. அதிலும் ஒய்வறை தொடர்பான சிக்கல்களை சந்திக்கலாம். ஏனென்றால், சூர்யகுமார் யாதவ், ரோஹித் சர்மா இருவருமே அனுபவ வீரர்கள். அவர்கள் புதிய கேப்டன் ஹர்திக் பாண்டியாவுக்கு குடைச்சல் கொடுக்க நினைத்தாலே பிரச்னைகள் கிளம்பிவிடும். அதிலும் இம்பாக்ட் பிளேயராக விளையாடுவேன் என சூர்யகுமார் அல்லது ரோஹித் முரண்டு செய்தால், ஹர்திக் பாண்டியாவுக்கு சிக்கலாகிவிடும்." என்றார்.

"ஈகோ சிக்கல் வரலாம்"

மேலும் தொடர்ந்த அவர், மும்பை இந்தியன்ஸ் அணிக்குள் ஈகோ சிக்கல் வரலாம் என்றார். "அதிலும் சூர்யகுமார் யாதவ் ஏற்கெனவே தன்னை இந்திய அணியில் எடுக்காத விராட் கோலி கேப்டன்சியை சமூக வலைத்தளங்களில் விமர்சித்து சிக்கலில் சிக்கியவர். மும்பை அணிக்கு ரோஹித் சர்மா கேப்டனாக இல்லாத நிலையில் ஹர்திக் பாண்டியாவும் சென்றுவிட்டநிலையில் அடுத்த கேப்டனாக தன்னை நிர்வாகம் தேர்ந்தெடுக்கலாம் என சூர்யகுமார் நினைத்திருக்கலாம். அதை அனைத்தையும் ஹர்திக் பாண்டியா அணிக்குள் வந்ததன் மூலம் உடைந்துவிட்டதால் மறைமுகமாக சூர்யகுமார் தனது எதிர்ப்பைத் தெரிவிக்கலாம். இது களத்தில் ஒவ்வொரு வீரரின் பேட்டிங் திறமை, பந்துவீச்சை பார்த்தாலே தெரிந்துவிடும்.

அது மட்டுமல்ல, ஈகோ பார்ப்பது மனிதர்களின் இயல்பு. இதில் கிரிக்கெட் மட்டும் விதிவிலக்கல்ல. மும்பை அணிக்கு ஹர்திக் பாண்டியா கேப்டனாக இருக்கலாம், ஆனால், இந்திய அணிக்கு நான்தானே கேப்டன், ப்ளேயி்ங் லெவனில் நான்தானே உன்னைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ரோஹித் சர்மா நினைக்கவும் வாய்ப்புண்டு.

 
ரோகித் - ஹர்திக் ஈகோ பிரச்னையா?

பட மூலாதாரம்,GETTY IMAGES

ஹர்திக் மனநிலை எப்படி?

ஹர்திக் பாண்டியா அவ்வப்போது வீரர்களிடம் கடிந்து பேசக்கூடியவர் என்ற குற்றசாட்டு இருக்கிறது. அணியில் ஒரு பேட்டர் 3வது வரிசையில் களமிறங்கி வருகிறார் என்றால், திடீரென அந்த வரிசையில் ஹர்திக் பாண்டியா முன் அறிவிப்பின்றி களமிறங்கக் கூடியவர். இது அணிக்குள் வீரர்களிடத்தில் மனக்கசப்பை ஏற்படுத்தும். குஜராத் டைட்டன்ஸ் அணியில் இந்தச் சிக்கல் வந்தது. அதேபோல, மும்பை அணியில் சூர்யகுமார் களமிறங்கும் வரிசையை மாற்றலாம், முன்வரிசையில் ஹர்திக் பாண்டியா களமிறங்கினாலும் வியப்பில்லை.

ஆதலால் இந்த சீசனில் மும்பை அணியில் ஓய்வறை தொடர்பான பிரச்னைகள் மறைமுகமாக வெடிக்கலாம். இதையெல்லாம் ஹர்திக் பாண்டியா எவ்வாறு கையாளப் போகிறார் என்பதில்தான் அவரின் கேப்டன்சி வெற்றி இருக்கிறது” எனத் தெரிவித்தார்.

https://www.bbc.com/tamil/articles/cyxz055zv6ro

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சி.எஸ்.கே vs ஆர்.சி.பி: சென்னையை அச்சுறுத்தும் மிகப்பெரிய பலவீனம் - தோனி என்ன செய்யப் போகிறார்?

CSK vs RCB

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 திருவிழா ஆர்சிபி அணிக்கும், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான முதல் ஆட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது.

ஒருபுறம் தோனி, மற்றொரு அணியில் விராட் கோலி என்ற இரு துருவங்கள் மோதிக்கொள்வதால் முதல் ஆட்டமே அனல் பறக்கும். அதிலும் சிஎஸ்கே அணி சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் முதல் ஆட்டம் நடப்பது அந்த அணிக்கு கூடுதலாக வலு சேர்க்கும். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் வரவேற்பு அளவுக்கு கோலிக்கும், ஆர்சிபிக்கும் வரவேற்பை சென்னை ரசிகர்கள் வழங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

தனிச்சிறப்பு வாய்ந்த சென்னை ரசிகர்கள்

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் தரமான கிரிக்கெட்டை எந்த அணி விளையாடியும் அதை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, ரசிக்கக் கூடியவர்கள். உலகக் கோப்பை ஆட்டம் நடந்தபோது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்டத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தது.

ஆதலால், தோனியின் சிஎஸ்கே ஆக இருந்தாலும் சரி, கோலி இருக்கும் ஆர்சிபியாக இருந்தாலும் சரி தரமான கிரிக்கெட்டை சென்னை ரசிகர்கள் சிலாகிப்பார்கள் என்பது உறுதி.

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

16 சீசன்கள், 241 போட்டிகள் விளையாடியும் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப் கூட ஆடவர் ஆர்சிபி அணி வெற்றி பெறவில்லை.

கோலியின் 16 ஆண்டு தாகம் தணியுமா?

மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிகள் தொடங்கப்பட்ட இரண்டாவது சீசனிலேயே ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன்ஷிப் பட்டம் அசத்தியுள்ளது. ஆனால், 16 சீசன்கள் விளையாடியும் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப் கூட வெல்ல முடியாமல் ஆர்சிபி ஆடவர் அணி தவிக்கிறது.

இந்த முறையாவது கோப்பையை வெல்லும் தீர்மானத்துடன் முதல் ஆட்டத்தை அணுகுகிறது. ஐபிஎல் ஏலத்தில் பல வீரர்களை கழற்றிவிட்டு வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து அணியை ஆர்சிபி தேர்ந்தெடுத்துள்ளது. பேட்டிங்கில் வலுவாகத் திகழும் ஆர்சிபி பந்துவீச்சை வலுப்படுத்தி களம் காண்கிறது.

ஸ்மிரிதி மந்தனா அணி இரண்டாவது சீசனிலேயே சாதித்துக் காட்டியுள்ள நிலையில், விராட் கோலிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விராட் கோலியின் கோப்பைக் கனவு 16 ஆண்டுகளாக நனவாகாமல் கனவாகவே நீடிக்கறிது. கோலியின் அந்த 16 ஆண்டு தாகம் இம்முறை தணியுமா?

வயது மூப்பு, தரமற்ற வேகப்பந்துவீச்சு

அதேநேரம், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயது காரணமாக இந்த சீசன் அவருக்கு கடைசியாகக் கூட அமையலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த சீசனில் அவரை எதிர்பார்ப்பது கடினம் என்பதால், வெற்றியுடன் வழியனுப்ப சிஎஸ்கே அணி தீவிரமாகப் போராடும். ஐபிஎல் ஏலத்தில் பேட்டர்களையும், ஆல்ரவுண்டர்களையும் ஏலம் எடுப்பதில் கவனம் செலுத்திய சிஎஸ்கே அணி தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

இதனால், ஆர்சிபியின் வலுவான வேகப்பந்துவீச்சை எவ்வாறு சந்திக்கப் போகிறது சிஎஸ்கே என்ற கேள்வியும், எதிரணியை அச்சுறுத்தும் அளவுக்கு பெரிதாக பந்துவீச்சு இல்லாத சிஎஸ்கே என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடர்களில் இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 10 முறையும், சிஎஸ்கே அணி 20 முறையும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் ஆதிக்கம்தான் இருக்கிறது. இருப்பினும், ஐபிஎல் ஏலத்துக்குப் பின் வீரர்கள் மாற்றத்தால் அணியின் பலம், பலவீனத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 
ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,BCCI/IPL

படக்குறிப்பு,

சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றது.

ஒரு வெற்றிக்காக 16 ஆண்டுகள் காத்திருப்பு

சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் 2019ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் மோதியுள்ளனர். அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறார்கள் என்பதால் இரு அணி ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமையும். இதுவரை 9 போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 8 ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் கடைசியாக 2008ம் ஆண்டு மே 20ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றது. அதன்பின் ஏறக்குறைய 16 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை.

இந்த ஆட்டத்துக்குப்பின, 2010, 2011(3ஆட்டம்), 2012,2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்பிசி மோதினாலும் அனைத்து ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. ஆதலால், முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையிலான கவுரப்போராக அமையும்.

16 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றியைப் பெறுவதற்காக ஆர்சிபி அணியும் கடுமையாகப் போராடும், அதேநேரம், வெற்றியுடன் தொடங்க சிஎஸ்கே அணியும் முயலும் என்பதால் முதல் ஆட்டத்திலேயே அனல் பறக்கும்.

ஒரு ரன்னில் கோலி மைல்கல்

சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்பிசி நட்சத்திர வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 999 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் ஒரு ரன் எடுத்தாலே சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். 2வது இடத்தில் தோனி 751 ரன்களுடன் உள்ளார்.

 
ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிஎஸ்கே அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவால் விடுக்கம் வகையில் வலுவாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் பலவீனம்

சிஎஸ்கே அணியின் பலமே 42 வயதான கேப்டன் தோனியும், அவரின் வியூகமும்தான். கூல் கேப்டன் தோனி, எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துகிறார், எந்த பேட்டரை களமிறக்குகிறார் என்ற வியூகமே எதிரணிக்கு பெரிய கிலியை ஏற்படுத்தும்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவால் விடும் வகையில் வலுவாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணமாக முதல் பாதி விளையாடமாட்டார் என்று அறிவித்திருப்பது பலவீனம்தான். இருப்பினும் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கலாம்.

சிஎஸ்கே அணியின் தூண்களாக இருந்த சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் விலகிவிட்ட நிலையில் நடுவரிசைக்கு வலுவான பேட்டர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏலத்தில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல் நடு வரிசையில் களமிறங்கலாம்.

சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே மிட்ஷெல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில், ரச்சின் ரவீ்ந்திராவை சிஎஸ்கே வாங்கியது வியப்பாக இருக்கலாம். ஆனால், ரச்சின் ரவீந்திரா போன்ற இளம் வீரர்களை தோனி மிகவும் சாதுர்யமாக கையாள்வார் என்பது வரும் போட்டிகளில் தெரியவரும்.

இது தவிர உத்தரபிரதேச இளம் வீரர் சமீர் ரிஸ்வி எனும் பேட்டரை நடுவரிசைக்காக சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது. அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இடத்தில் ரிஸ்வி அல்லது ரஹானேவை களமிறக்கி பரிசோதிக்கலாம். இது தவிர ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா என பேட்டர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் உள்ளனர்.

 
ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,SAMEER RIZVI / INSTAGRAM

படக்குறிப்பு,

உத்தரப்பிரதேச இளம் வீரர் சமீர் ரிஸ்வி

இந்த முறை ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை வாங்கி, மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது சிஎஸ்கே அணி. தோனியின் செல்லப்பிள்ளைகளான ஷர்துல், தீபக் சஹர் இருவரும் தோனிக்கு துருப்புச்சீட்டாக இருக்கலாம். முக்கியமாக வங்கதேசம் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மானை சிஎஸ்கே வாங்கியுள்ளது. டெத் ஓவர்களில் பந்துவீச்சு வேகத்தை மாற்றி வீசக் கூடியதில் ரஹ்மான் வல்லவர் என்பதால் சிஎஸ்கே கேப்டன் தோனி அவரை சிறப்பாகப் பயன்படுத்துவார்.

தோனியைப் பொறுத்தவரை கடந்த இரு சீசன்களிலும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. தோனியின் பெரிய ஸ்கோரைப் பார்க்க ரசிகர்கள் கடந்த இரு சீசன்களாக காத்திருந்தும் முடியவில்லை. தோனியின் பேட்டிங் ஃபார்ம் சிஎஸ்கே அணிக்கு பெரிய கவலை தரும் விஷயமாக இருக்கிறது. ஆனாலும் தோனி களமிறங்காதவரை சிஎஸ்கேவுக்கு பலமாகவும், எதிரணிக்கு பலவீனமாகவும் இருக்கும்.

வேகப்பந்துவீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் மட்டுமே சர்வதேச அனுபவம் அதிகம் கொண்டவர். ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் பந்துவீச்சு எதிரணிகளுக்கு பெரிதாக தொந்தரவு கொடுக்காது என்பது கடந்த காலங்களில் தெரிந்தது.

டெத்ஓவர்களில் இருவரையும் தோனி நன்றாகப் பயன்படுத்துவாரே தவிர இருவரும் தேர்ந்த, திறமையான பந்துவீச்சாளர்கள் என கூற முடியாது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் டி20 போட்டிகளில் தீபக் சஹர் பந்துவீச்சு சராசரி 13.21 ஆகவும், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சு சராசரி 11.24 ஆகவும் இருக்கிறது.

சுழற்பந்துவீச்சில் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் பங்களிப்பு பெரிய அளவுக்கு வெற்றிக்கு கை கைடுக்கும். இந்த 3 பேரும், நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிட்ட பங்காற்றுவர். மற்ற வகையில் பவர் ப்ளேயிலும், டெத் ஓவர்களிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சிஎஸ்கே இருக்கிறது.

 
ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆர்சிபி அணி இந்த முறை பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பெர்குஷன், கேமரூன் க்ரீன், அல்சாரி ஜோஸப் என வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது

ஆர்சிபியின் பலம்

ஆர்சிபி அணி ஏறக்குறைய 16 சீசன்களாக விளையாடியும் இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாதது அந்த அணிக்கு மனரீதியாக சோர்வை அளிக்கும். ஆனாலும், அந்த அணி ஒவ்வொரு முறையும் வீரர்களை மாற்றிப் பயணித்தாலும் கோப்பையை வெல்லமுடியாமல் தவிக்கிறது.

இந்த முறை ஐபிஎல் தொடரில் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பெர்குஷன், கேமரூன் க்ரீன், அல்சாரி ஜோஸப் என வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது. ஏற்கெனவே பேட்டிங்கில் டூபிளெசிஸ், விராட் கோலி, பட்டிதார், மகிபால் லாம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் என வலுவாக இருக்கிறது.

வேகப்பந்துவீச்சில் ரீஸ் டாப்ளி, சிராஜ், அல்சாரி ஜோஸப், பெர்குஷன், யாஷ் தயால், வைஷாக், ரஞ்சன் குமார் என 7 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதில் 4 மட்டுமே நல்ல அனுபவம் கொண்டவர்கள்.

ஆர்சிபி அணி வலுவான வேகப் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து களமிறக்கினால், நிச்சயமாக சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். குறிப்பாக டெத் ஓவர்கள் ஸ்பெஷலிஸ்ட் அல்ஜாரி ஜோஸப், சிராஜ், பெர்குஷன், விஜயகுமார் என சரியான கலவையை உருவாக்க வேண்டும்.

நடுப்பகுதி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து, 3வது பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

சுழற்பந்துவீச்சில் ஹசரங்கா இல்லாதது பெரிய பலவீனம்தான். இருப்பினும் கரன் ஷர்மா, மேக்ஸ்வெல், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மயங்க் தாக்கர், ஸ்வப்னில் சிங் உள்ளனர். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு பலமுள்ளதாக இருக்கிறது எனக் கூற இயலாது. ஏனென்றால், கரண் ஷர்மா, மேக்ஸ்வெல் தவிர்த்து மற்றவர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள், ஐபிஎல் அனுபவமும் பெரிதாக இல்லாதவர்கள்.

 
ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பேட்டிங்கில் டூபிளசிஸ், விராட் கோலி, பட்டிதார், மகிபால் லாம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் என வலுவாக இருக்கிறது.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் உள்நாட்டைச் சேர்ந்த லாம்ரோர், ஆகாஷ் தீப், பிரபுதேசாய் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் மேக்ஸ்வெல், டாம் கரண், கேமரூன் கிரீன், வில் ஜேக்ஸ், என அனைவருமே வெளிநாட்டு வீரர்கள்.

ஒரு போட்டிக்கு 4 வெளிநாட்டு வீரர்கள்தான் சேர்க்க முடியும். இதில் டூப்ளசிஸ், மேக்ஸ்வெல், கிரீன் 3 பேர் இடம் உறுதியாகும் நிலையில் ஒருவர் மட்டுமே சேர்க்க முடியும் என்பதால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய குழப்பமாக இருக்கும்.

நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் கேமரூன் கிரீன் தேவை கண்டிப்பாக வேண்டும். இது தவிர்த்து வேகப்பந்துவீச்சில் ஒரு போட்டியில் அல்ஜாரி ஜோஸப் அல்லது பெர்குஷன் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடியும். அதேபோல 3வது வேகப்பந்துவீச்சாளருக்கு யாஷ் தயால், அல்லது விஜயகுமாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன் இருவரையும் ப்ளேயிங் லெவனில் எடுத்தால் கேமரூன் கிரீனை கைவிட வேண்டும். கிரீன் அணிக்குள் வந்தால் அல்ஜாரி அல்லது பெர்குஷன் அமர வேண்டும் என்பதால் ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப கேப்டனுக்கு முடிவெடுக்க வேண்டும்.

ஆர்சிபி அணியில் திறமையான வெளிநாட்டு வீரர்கள் இருப்பது அதன் பெரிய பலமாகும். ஆடுகளத்துக்கு ஏற்ப தகுதியான வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம்.

டெத்ஓவர்களுக்கு அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன், விஜயகுமார், சிராஜ் என 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இது தவிர டாம் கரண், டாப்ளி, வில் ஜேக்ஸ், கேமரூன் கிரீன் என ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் சரியான வெற்றிக் கூட்டணியை அமைத்தால் ஆர்சிபியின் பயணம் சிறப்பாக அமையும்.

 
ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த இரு சீசன்களிலும் டி.கே. பெரிய ஸ்கோரை அணிக்காக அடிக்கவில்லை என்பது நிதர்சனம்.

ஃபார்முக்கு வருவாரா டி.கே.?

ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரோடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஓர் ஆண்டாக விளையாடுவதில் கவனம் செலுத்தாமல் வர்ணனைப் பணியில் தினேஷ் கார்த்திக் ஈடுபட்டதால் அவரின் பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது.

கடந்த இரு சீசன்களிலும் டி.கே. பெரிய ஸ்கோரை அணிக்காக அடிக்கவில்லை என்பது நிதர்சனம். அதேபோல கேப்டன் டூபிளசிஸும் பெரிதாக ஃபார்மில் இல்லை. அதேபோல விராட் கோலியும் ஜனவரியிலிருந்து கிரிக்கெட் விளையாடவில்லை.

இதுபோன்ற நட்சத்திர பேட்டர்களின் ஃபார்மின்றி இருந்து வருவது ஆர்சிபியின் கோப்பைக் கனவை தகர்த்துவிடும். இவர்கள் ஃபார்முக்கு வராவிட்டால், ஆர்சிபியின் கோப்பை கனவு இந்த முறையும் கனவாகவே இருந்துவிடும்.

https://www.bbc.com/tamil/articles/c88x77d5n23o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பம்!

2024.jpg

2024 ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் நாளை ஆரம்பமாகவுள்ளது.

குறித்த தொடரின் முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு ஆகிய அணிகள் மோதவுள்ளன.

இந்த போட்டி சென்னையில் நாளை இரவு 8 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.

அத்துடன் நாளைய முதலாவது போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் மதீஷ பத்திரன விளையாடுவதில் சந்தேகம் எழுந்துள்ளது.

உபாதையில் இருந்து மதீஷ பத்திரன இன்னும் முழுமையாக குணமடையாத காரணத்தினால், அவர் நாளைய போட்டியில் இடம்பெறமாட்டார் என கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://thinakkural.lk/article/296585

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ருதுராஜ் கெய்க்வாட்: சிஎஸ்கே கேப்டனாக தோனியின் இடத்தை அவரால் நிரப்ப முடியுமா?

ஐபிஎல் 2024: தோனியின் சகாப்தம் முடிந்தது! சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,IPL/TWITTER

42 நிமிடங்களுக்கு முன்னர்

சிஎஸ்கே அணிக்காக 5 முறை (2010, 2011, 2018, 2021, 2023) சாம்பியன்ஷிப் பட்டம், 5 முறை 2வது இடம் என பெற்றுக் கொடுத்த ரசிகர்களால் செல்லமாக ‘தல’ என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி, கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.

2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 தொடரை சிஎஸ்கே அணி 27வயதான ருதுராஜ் கெய்க்வாட் தலைமையில் சந்திக்க இருக்கிறது.

தோனி களமிறங்குவாரா?

42 வயதாகும் தோனி, வயது மூப்பு காரணமாகவும், கடந்த ஆண்டு முழங்காலில் செய்துகொண்ட அறுவை சிகிச்சையாலும், களமிறங்குவாரா, பேட் செய்வாரா என்பதை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

ஐபிஎல் டி20 தொடரில் வெற்றிகரமான கேப்டன் என்றாலே அது சிஎஸ்கே கேப்டன் எம்எஸ் தோனி, மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா என்று விமர்சகர்கள் தரப்பில் கூறப்படுகிறது.

இருவருமே தாங்கள் சார்ந்த அணிக்கு 5 முறை சாம்பியன்ஷிப் பட்டம் பெற்றுக் கொடுத்தாலும் இந்த ஐபிஎல் தொடரில் இருவருமே அணிக்கு தலைமை ஏற்கவில்லை என்பது சற்று ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் செய்திதான்.

 

மாற்றத்தைத் தவிர்க்க முடியாது

ஐபிஎல் 2024: தோனியின் சகாப்தம் முடிந்தது! சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,IPL/TWITTER

எதிர்காலம் இளைஞர்களுக்கே என்பதால் எதிர்கால கேப்டன்களை உருவாக்கும் முயற்சியில், தலைமுறை மாற்றத்துக்கு சிஎஸ்கே அணியும் தயாராகிவிட்டது. தோனியை தவிர சிஎஸ்கே அணியை வழிநடத்த தகுதியான வீரர் யார் இருக்கிறார் என்று ரசிகர்களால் சமூக ஊடகங்களில் பெரிய விவாதமே, ஜடேஜா நியமனத்தின்போது நடந்தது.

சிஎஸ்கே அணியும் தலைமுறை மாற்றத்துக்குத் தயாராகி, ரெய்னா, ஜடேஜாவை கேப்டனாக நியமித்து கையைச் சுட்டுக்கொண்டது. சிஎஸ்கே அணிக்கு தோனி தலைமை ஏற்கும் வரை அணியின் வெற்றிப் பயணம் சீராக இருந்தது.

ருதுராஜ் மீது எதிர்பார்ப்பு

இந்த முறை புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமிக்கப்பட்டுள்ளது பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சிஎஸ்கே அணி நிர்வாகம் தொலைநோக்குப் பார்வையுடன் இந்த முடிவை எடுத்துள்ளது எனக் கூறப்பட்டாலும், தோனி அளவுக்கு கெய்க்வாட்டால் அழுத்தம் தரும் கேப்டன் பதவியை சீராகச் செய்ய முடியுமா என்ற கேள்வி எழுகிறது.

ஐபிஎல் டி20 தொடர் என்பது வெறும் விளையாட்டாக இருந்தால் பரவாயில்லை. இது அணிகளுக்கு இடையே கோடிக்கணக்கில் பணம் புழங்கும் விளையாட்டு என்பதால் ஒவ்வொரு போட்டிக்கும் வெற்றி பெறும் வரை கேப்டன் பெரிய அழுத்தத்தை தாங்கித்தான் விளையாட வேண்டியதிருக்கும்.

இதுபோன்ற ஹைபிரஷர் தொடர்களில் ருதுராஜ் சாதாரண பேட்டராக விளையாடி இருக்கலாம். ஆனால், கேப்டனாக இப்போதுதான் முதல் முறையாகக் களம் காண்கிறார். இதுகுறித்து கிரிக்கெட் விமர்சகர்கள் கூறுகையில், “கெய்க்வாட் கேப்டனாக பெயரளவுக்கு இருந்தாலும், பேக்சீட் டிரைவராக இருந்து அணியை நடத்தப்போவது தோனியாகத்தான் இருக்கும். களத்தில் இருந்து கொண்டு கெய்க்வாட்டுக்கு சாரதியாக தோனி செயல்படுவார்,” என்று தெரிவித்தனர்.

 

ஜடேஜா கற்றுக்கொடுத்த பாடம்

ஐபிஎல் 2024: தோனியின் சகாப்தம் முடிந்தது! சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

புதிய கேப்டனாக ஜடேஜா நியமிக்கப்பட்ட பின் சிஎஸ்கே அணியின் வெற்றிகளில் திடீரென சறுக்கல் ஏற்பட்டது, புள்ளிப் பட்டியலிலும் பின்தங்கியது.

ஆனால், தொடரின் பாதியிலேயே 8 போட்டிகளுக்குப் பின் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் தோனி கேப்டனாக வந்ததும், சிஎஸ்கே சர்ரென தரவரிசையில் மேலே ஏறியது. ஆதலால், கெய்க்வாட் போன்ற இளம் வீரர்கள் கேப்டன்ஷிப் என்னும் கிரீடத்தின் சுமையை எவ்வாறு சுமந்து பேட் செய்யப் போகிறார்கள் என்பது பெரிய எதிர்பார்ப்பாக இருக்கிறது.

தோனியின் சாதனை

சிஎஸ்கே அணிக்கு 212 போட்டிகளில் தோனி கேப்டனாக இருந்துள்ளார். அதில் 128 போட்டிகளில் வெற்றியும், 82 ஆட்டங்களில் தோல்வியையும் சிஎஸ்கே அணி சந்தித்துள்ளது. தோனி கேப்டன்ஷிப்பில் 60 சதவீதத்துக்கும் மேலான வெற்றி சதவீதத்தை சிஎஸ்கே வைத்துள்ளது.

அதிலும் சொந்த மைதானமான சேப்பாக்கம் மைதானத்தில் தோனி தலைமையில் சிஎஸ்கே அணி 64 போட்டிகளில் விளையாடி 45 ஆட்டங்களில் வென்று, 19 தோல்விகளையே சந்தித்துள்ளது. சிஎஸ்கே வெற்றி சதவீதம் சேப்பாக்கம் மைதானத்தில் 70.31%ஆக இருக்கிறது.

சிஎஸ்கே அணிக்கு எப்போதுமே தோனி வெற்றிகரமான கேப்டனாகவே வலம் வந்துள்ளார். தோனியின் வயது மூப்பு, அணியின் எதிர்காலம், உடல்நிலை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு கேப்டன் பொறுப்பை கெய்க்வாட்டிடம் சிஎஸ்கே நிர்வாகம் வழங்கியுள்ளது.

கெய்க்வாட்டும் - சிஎஸ்கேவும்

ஐபிஎல் டி20 தொடர் தொடங்கும் முன் அணிகளின் கேப்டன்களை நிற்க வைத்து முறைப்படி புகைப்படம் எடுக்கப்படும். அந்த நிகழ்ச்சியில் சிஎஸ்கே அணிக்காக ருதுராஜ் கெய்க்வாட் நின்ற புகைப்படம் ஐபிஎல் இணையதளத்தில் பதிவிடப்பட்டது வைரலானது.

இந்தப் புகைப்படத்தைத் தொடர்ந்து, சிஎஸ்கே நிர்வாகமும், முறைப்படி கேப்டன்சி மாற்றத்தை எக்ஸ் தளத்தில் அறிவித்தது.

ருதுராஜ் கெய்க்வாட்டை பொறுத்தவரை 2019ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்குள் வந்த ருதுராஜ் 52 போட்டிகளில் விளையாடி, 1,797 ரன்கள் குவித்துள்ளார்.

டி20 போட்டிகளில் சராசரியாக 39 ரன்களும், ஸ்ட்ரைக் ரேட்135 ஆகவும் வைத்துள்ளார். 2021ஆம் ஆண்டு ஐபிஎல் சீசன்தான் கெய்க்வாட்டுக்கு சிறப்பாக இருந்தது. அந்த சீசனில் கெய்க்வாட் 16 போட்டிகளில் 635 ரன்கள் குவித்தார்.

 

யார் இந்த கெய்க்வாட்

ஐபிஎல் 2024: தோனியின் சகாப்தம் முடிந்தது! சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள சஸ்வாத் பகுதியில் உள்ள பர்ஹான் மெமானே எனும் சிறிய கிராமத்தில் கடந்த 1997, ஜனவரி 31ஆம் தேதி ருதுராஜ் கெய்க்வாட் பிறந்தார். கெய்க்வாட்டின் தந்தை தசரத் கெய்க்வாட் மத்திய பாதுகாப்புத் துறையின் டிஆர்டிஓ பிரிவில் பணியாற்றி வருகிறார். தாய் சவிதா கெய்க்வாட் நகராட்சிப் பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

புனேவின் காட்கி பகுதியில் புனித ஜோசப் பள்ளியில் படித்த கெய்க்வாட், மாரத்வாடா மித்ரா மண்டல் பாலிடெக்னிக்கில் கல்லூரிப் படிப்பை முடித்தார். கெய்க்வாட் 13 வயதாகும்போதே, திலீப் வெங்கசர்க்கார் கிரிக்கெட் அகாடமியில் சேர்ந்து முறைப்படி கிரிக்கெட் பயிற்சி பெற்றார்.

கடந்த 2010ஆம் ஆண்டு நடந்த கேடென்ஸ் கோப்பைத் தொடரில் மும்பையின் எம்ஐஜி அணிக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட் 71 ரன்கள் குவித்து ஆட்டநாயகன் விருது வென்றார். 2016-17ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பையில் முதல்முறையாக முதல்தரப் போட்டியில் மகாராஷ்டிரா அணிக்காக கெய்க்வாட் களமிறங்கினார். அதே ஆண்டில் டி20 சசீனிலும் கெய்க்வாட் பங்கேற்று விளையாடினார்.

கடந்த 2019ஆம் ஆண்டு ரஞ்சி கோப்பைத் தொடரில் புனேவில் நடந்த சத்தீஸ்கருக்கு எதிரான ஆட்டத்தில் கெய்க்வாட் முதல் இன்னிங்ஸில் சதமும்(108) 2வது இன்னிங்ஸில் 76 ரன்களும் குவித்தார். 2017ஆம் ஆண்டில் லிஸ்ட்-ஏ பிரிவில் விஜய் ஹசாரோ கோப்பையில் கெய்க்வாட் அறிமுகமாகினார். இந்தத் தொடரில் கெய்க்வாட் 444 ரன்கள் குவித்து ரன் குவிப்பில் 3வது இடத்தைப் பிடித்தார்.

உள்நாட்டுப் போட்டிகளில் இந்தியா ஏ, பி, இந்தியன் நீலம், மகாராஷ்டிரா, 23 வயதுக்கு உட்பட்டோருக்கான அணி எனப் பல பிரிவுகளில் கெய்க்வாட் விளையாடியுள்ளார். 2018-19ஆம் ஆண்டு நடந்த தியோதர் கோப்பையில் முதல்முறையாக இந்தியா-பி அணியில் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார். அதன்பின் 2018ஆம் ஆண்டில் நடந்த வளர்ந்து வரும் ஆசிய கோப்பைக்கான அணியில் இந்திய அணியில் கெய்க்வாட் சேர்க்கப்பட்டார்.

 

கோலியின் சாதனை சமன்

ஐபிஎல் 2024: தோனியின் சகாப்தம் முடிந்தது! சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கடந்த 2021ஆம் ஆண்டில் முஸ்டாக் அலி கோப்பைத் தொடரில் மகாராஷ்டிரா அணிக்கு கெய்க்வாட் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

இந்தத் தொடரில் 5 போட்டிகளில் 259 ரன்கள் குவித்து கெய்க்வாட் அசத்தினார். அதே ஆண்டில் நடந்த விஜய் ஹசாரே கோப்பைத் தொடரில் ஒரே சீசனில் 4 சதங்கள் அடித்து விராட் கோலியின் சாதனையை கெய்க்வாட் சமன் செய்தார்.

கெய்க்வாட்டுக்கு ரூ.14 கோடி விலை

தமிழகத்தில் நடக்கும் டிஎன்பிஎல் தொடரைப் போன்று மகாராஷ்டிராவிலும் மகாராஷ்டிரா பிஎல் என்ற டி20 தொடர் நடக்க இருக்கிறது. இந்தத் தொடருக்கான ஏலம் 2023ஆம் ஆண்டு நடந்தது. இதில் புனே அணியால் ரூ.14.80 கோடிக்கு ருதுராஜ் கெய்க்வாட் வாங்கப்பட்டு, அந்த அணிக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.

சர்வதேச அறிமுகம்

கடந்த 2021ஆம் ஆண்டு ஜூன் மாதம் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 தொடரில் கெய்க்வாட் இந்திய அணிக்குள் அறிமுகமானார்.

ஆனாலும், ஒருநாள் போட்டியில் கெய்க்வாட் விளையாடவில்லை. 2022ஆம் ஆண்டில் லக்னௌவில் நடந்த தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் போட்டியில் கெய்க்வாட் அறிமுகமானார். அதே ஆண்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடரிலும் கெய்க்வாட் இந்திய அணியில் சேர்க்கப்பட்டார்.

ஐபிஎல் 2024: தோனியின் சகாப்தம் முடிந்தது! சிஎஸ்கே அணிக்கு புதிய கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட்

பட மூலாதாரம்,GETTY IMAGES

முதல் தங்கப் பதக்கம்

கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரில் களமிறங்கிய கெய்க்வாட் சர்வதேச அரங்கில் தனது முதல் அரைசதத்தை நிறைவு செய்தார். 2022ம் ஆண்டில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்திய அணிக்கு கேப்டனாக கெய்க்வாட் நியமிக்கப்பட்டு வழிநடத்தினார்.

இதில் ஆடவர் பிரிவில் தங்கப் பதக்கத்தை வென்று கெய்க்வாட் தலைமையில் இந்திய அணி நாடு திரும்பியது. ஆடவர் பிரிவிலும் முதல்முறையாக இந்திய அணி தங்கம் வென்றது.

தோனியின் பாதையில் கெய்க்வாட்?

சிஎஸ்கே அணியில் தோனியின் மாபெரும் சகாப்தம் முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்த தலைமுறை மாற்றத்துக்கு சிஎஸ்கே தயாராகிவிட்டது.

பாதையில் சில சறுக்கல்கள் இருந்தாலும், தோனியின் வழிகாட்டலில் சிஎஸ்கேவின் வெற்றிப் பயணம் தொடர வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பு.

https://www.bbc.com/tamil/articles/c9w9jk4v0dwo

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாளை ஜ‌பிஎல் திருவிழா ஆர‌ம்ப‌ம்......................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சென்னை அணிக்கு புதிய‌ க‌ப்ட‌ன்😁...................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, பையன்26 said:

நாளை ஜ‌பிஎல் திருவிழா ஆர‌ம்ப‌ம்......................

பையா

இன்று வெல்லும் அணி RCB.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
52 minutes ago, ஈழப்பிரியன் said:

பையா

இன்று வெல்லும் அணி RCB.

நான் சென்னை வெல்லும் என்று நினைக்கிறேன்..............

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
INNINGS BREAK
1st Match (N), Chennai, March 22, 2024, Indian Premier League
 

RCB chose to bat.

Edited by Eppothum Thamizhan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
LIVE
1st Match (N), Chennai, March 22, 2024, Indian Premier League
 
 

RCB chose to bat.

Current RR: 8.65    • Last 5 ov (RR): 71/1 (14.20)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 20/3/2024 at 16:30, ஏராளன் said:

சி.எஸ்.கே vs ஆர்.சி.பி: சென்னையை அச்சுறுத்தும் மிகப்பெரிய பலவீனம் - தோனி என்ன செய்யப் போகிறார்?

CSK vs RCB

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

2024ம் ஆண்டு ஐபிஎல் டி20 திருவிழா ஆர்சிபி அணிக்கும், நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் இடையிலான முதல் ஆட்டத்துடன் கோலாகலமாகத் தொடங்க இருக்கிறது.

ஒருபுறம் தோனி, மற்றொரு அணியில் விராட் கோலி என்ற இரு துருவங்கள் மோதிக்கொள்வதால் முதல் ஆட்டமே அனல் பறக்கும். அதிலும் சிஎஸ்கே அணி சொந்த மைதானமான சென்னை சேப்பாக்கத்தில் முதல் ஆட்டம் நடப்பது அந்த அணிக்கு கூடுதலாக வலு சேர்க்கும். சிஎஸ்கே அணிக்கு இருக்கும் வரவேற்பு அளவுக்கு கோலிக்கும், ஆர்சிபிக்கும் வரவேற்பை சென்னை ரசிகர்கள் வழங்குவார்கள் என்பதிலும் சந்தேகமில்லை.

தனிச்சிறப்பு வாய்ந்த சென்னை ரசிகர்கள்

சென்னை கிரிக்கெட் ரசிகர்கள் தரமான கிரிக்கெட்டை எந்த அணி விளையாடியும் அதை ஆதரித்து, ஊக்கப்படுத்தி, ரசிக்கக் கூடியவர்கள். உலகக் கோப்பை ஆட்டம் நடந்தபோது, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆட்டத்துக்கு நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு ரசிகர்கள் கூட்டம் சேப்பாக்கம் மைதானத்துக்கு வந்தது.

ஆதலால், தோனியின் சிஎஸ்கே ஆக இருந்தாலும் சரி, கோலி இருக்கும் ஆர்சிபியாக இருந்தாலும் சரி தரமான கிரிக்கெட்டை சென்னை ரசிகர்கள் சிலாகிப்பார்கள் என்பது உறுதி.

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

16 சீசன்கள், 241 போட்டிகள் விளையாடியும் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப் கூட ஆடவர் ஆர்சிபி அணி வெற்றி பெறவில்லை.

கோலியின் 16 ஆண்டு தாகம் தணியுமா?

மகளிர் ஐ.பி.எல். டி20 போட்டிகள் தொடங்கப்பட்ட இரண்டாவது சீசனிலேயே ஸ்மிரிதி மந்தனா தலைமையிலான ஆர்சிபி அணி சாம்பியன்ஷிப் பட்டம் அசத்தியுள்ளது. ஆனால், 16 சீசன்கள் விளையாடியும் இதுவரை ஒரு சாம்பியன்ஷிப் கூட வெல்ல முடியாமல் ஆர்சிபி ஆடவர் அணி தவிக்கிறது.

இந்த முறையாவது கோப்பையை வெல்லும் தீர்மானத்துடன் முதல் ஆட்டத்தை அணுகுகிறது. ஐபிஎல் ஏலத்தில் பல வீரர்களை கழற்றிவிட்டு வேகப்பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து அணியை ஆர்சிபி தேர்ந்தெடுத்துள்ளது. பேட்டிங்கில் வலுவாகத் திகழும் ஆர்சிபி பந்துவீச்சை வலுப்படுத்தி களம் காண்கிறது.

ஸ்மிரிதி மந்தனா அணி இரண்டாவது சீசனிலேயே சாதித்துக் காட்டியுள்ள நிலையில், விராட் கோலிக்கு நெருக்கடி அதிகரித்துள்ளது. விராட் கோலியின் கோப்பைக் கனவு 16 ஆண்டுகளாக நனவாகாமல் கனவாகவே நீடிக்கறிது. கோலியின் அந்த 16 ஆண்டு தாகம் இம்முறை தணியுமா?

வயது மூப்பு, தரமற்ற வேகப்பந்துவீச்சு

அதேநேரம், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் வயது காரணமாக இந்த சீசன் அவருக்கு கடைசியாகக் கூட அமையலாம் என்று கூறப்படுகிறது. அடுத்த சீசனில் அவரை எதிர்பார்ப்பது கடினம் என்பதால், வெற்றியுடன் வழியனுப்ப சிஎஸ்கே அணி தீவிரமாகப் போராடும். ஐபிஎல் ஏலத்தில் பேட்டர்களையும், ஆல்ரவுண்டர்களையும் ஏலம் எடுப்பதில் கவனம் செலுத்திய சிஎஸ்கே அணி தரமான வேகப்பந்து வீச்சாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கவில்லை.

இதனால், ஆர்சிபியின் வலுவான வேகப்பந்துவீச்சை எவ்வாறு சந்திக்கப் போகிறது சிஎஸ்கே என்ற கேள்வியும், எதிரணியை அச்சுறுத்தும் அளவுக்கு பெரிதாக பந்துவீச்சு இல்லாத சிஎஸ்கே என்ன செய்யப்போகிறது என்ற கேள்வியும் எழுகிறது.

இதுவரை நடந்த ஐபிஎல் டி20 தொடர்களில் இரு அணிகளும் 31 முறை மோதியுள்ளன. இதில் ஆர்சிபி அணி 10 முறையும், சிஎஸ்கே அணி 20 முறையும் வெற்றி பெற்றுள்ளன. புள்ளிவிவரங்கள் அடிப்படையில் பார்த்தால் சிஎஸ்கே அணியின் ஆதிக்கம்தான் இருக்கிறது. இருப்பினும், ஐபிஎல் ஏலத்துக்குப் பின் வீரர்கள் மாற்றத்தால் அணியின் பலம், பலவீனத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,BCCI/IPL

படக்குறிப்பு,

சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் கடைசியாக மோதிய ஆட்டத்தில் 14 ரன் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றது.

ஒரு வெற்றிக்காக 16 ஆண்டுகள் காத்திருப்பு

சிஎஸ்கே அணியும், ஆர்சிபி அணியும் கடைசியாக சேப்பாக்கம் மைதானத்தில் 2019ம் ஆண்டு நடந்த ஆட்டத்தில் மோதியுள்ளனர். அதன்பின் 5 ஆண்டுகளுக்குப்பின் இரு அணிகளும் சேப்பாக்கம் மைதானத்தில் களம் காண்கிறார்கள் என்பதால் இரு அணி ரசிகர்களுக்கும் பெரிய விருந்தாக அமையும். இதுவரை 9 போட்டிகளில் சேப்பாக்கம் மைதானத்தில் இரு அணிகளும் மோதியுள்ளன. அதில் 8 ஆட்டங்களில் சிஎஸ்கே வென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் கடைசியாக 2008ம் ஆண்டு மே 20ம் தேதி சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த ஆட்டத்தில் சிஎஸ்கே அணியை 14 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வென்றது. அதன்பின் ஏறக்குறைய 16 ஆண்டுகளாக சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை ஆர்சிபி அணியால் வெல்ல முடியவில்லை.

இந்த ஆட்டத்துக்குப்பின, 2010, 2011(3ஆட்டம்), 2012,2013, 2016, 2019 ஆகிய ஆண்டுகளில் சேப்பாக்கம் மைதானத்தில் சிஎஸ்கே அணியை எதிர்த்து ஆர்பிசி மோதினாலும் அனைத்து ஆட்டங்களிலும் தோற்றுள்ளது. ஆதலால், முதல் ஆட்டமே இரு அணிகளுக்கும் இடையிலான கவுரப்போராக அமையும்.

16 ஆண்டுகளுக்குப்பின் சேப்பாக்கம் மைதானத்தில் வெற்றியைப் பெறுவதற்காக ஆர்சிபி அணியும் கடுமையாகப் போராடும், அதேநேரம், வெற்றியுடன் தொடங்க சிஎஸ்கே அணியும் முயலும் என்பதால் முதல் ஆட்டத்திலேயே அனல் பறக்கும்.

ஒரு ரன்னில் கோலி மைல்கல்

சிஎஸ்கே அணிக்கு எதிராக ஆர்பிசி நட்சத்திர வீரர் விராட் கோலி அதிகபட்சமாக 999 ரன்கள் குவித்துள்ளார். முதல் போட்டியில் ஒரு ரன் எடுத்தாலே சிஎஸ்கே அணிக்கு எதிராக 1000 ரன்களைக் குவித்த வீரர் என்ற பெருமையை கோலி பெறுவார். 2வது இடத்தில் தோனி 751 ரன்களுடன் உள்ளார்.

 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

சிஎஸ்கே அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவால் விடுக்கம் வகையில் வலுவாக இருக்கிறது.

சிஎஸ்கே அணியின் பலவீனம்

சிஎஸ்கே அணியின் பலமே 42 வயதான கேப்டன் தோனியும், அவரின் வியூகமும்தான். கூல் கேப்டன் தோனி, எந்த நேரத்தில் எந்த பந்துவீச்சாளரைப் பயன்படுத்துகிறார், எந்த பேட்டரை களமிறக்குகிறார் என்ற வியூகமே எதிரணிக்கு பெரிய கிலியை ஏற்படுத்தும்.

சிஎஸ்கே அணியின் பேட்டிங் எதிரணிக்கு சவால் விடும் வகையில் வலுவாக இருக்கிறது. தொடக்க ஆட்டக்காரர் டெவோன் கான்வே காயம் காரணமாக முதல் பாதி விளையாடமாட்டார் என்று அறிவித்திருப்பது பலவீனம்தான். இருப்பினும் ஏலத்தில் எடுக்கப்பட்ட ரச்சின் ரவீந்திரா, ருதுராஜ் கெய்க்வாட்டுடன் சேர்ந்து தொடக்க வீரராக களமிறங்கலாம்.

சிஎஸ்கே அணியின் தூண்களாக இருந்த சுரேஷ் ரெய்னா, அம்பத்தி ராயுடு ஆகிய இருவரும் விலகிவிட்ட நிலையில் நடுவரிசைக்கு வலுவான பேட்டர்களை தேர்ந்தெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. ஏலத்தில் ரூ.14 கோடிக்கு வாங்கப்பட்ட நியூசிலாந்து வீரர் டேரல் மிட்ஷெல் நடு வரிசையில் களமிறங்கலாம்.

சிஎஸ்கே அணியில் ஏற்கெனவே மிட்ஷெல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா இருக்கும் நிலையில், ரச்சின் ரவீ்ந்திராவை சிஎஸ்கே வாங்கியது வியப்பாக இருக்கலாம். ஆனால், ரச்சின் ரவீந்திரா போன்ற இளம் வீரர்களை தோனி மிகவும் சாதுர்யமாக கையாள்வார் என்பது வரும் போட்டிகளில் தெரியவரும்.

இது தவிர உத்தரபிரதேச இளம் வீரர் சமீர் ரிஸ்வி எனும் பேட்டரை நடுவரிசைக்காக சிஎஸ்கே அணி ரூ.8.40 கோடிக்கு வாங்கியுள்ளது. அவர் மீது பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது. அம்பத்தி ராயுடு இடத்தில் ரிஸ்வி அல்லது ரஹானேவை களமிறக்கி பரிசோதிக்கலாம். இது தவிர ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா என பேட்டர்கள் தேவைக்கு ஏற்றாற்போல் உள்ளனர்.

 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,SAMEER RIZVI / INSTAGRAM

படக்குறிப்பு,

உத்தரப்பிரதேச இளம் வீரர் சமீர் ரிஸ்வி

இந்த முறை ஏலத்தில் ஷர்துல் தாக்கூரை வாங்கி, மீண்டும் அணிக்குள் கொண்டு வந்துள்ளது சிஎஸ்கே அணி. தோனியின் செல்லப்பிள்ளைகளான ஷர்துல், தீபக் சஹர் இருவரும் தோனிக்கு துருப்புச்சீட்டாக இருக்கலாம். முக்கியமாக வங்கதேசம் வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிஜூர் ரஹ்மானை சிஎஸ்கே வாங்கியுள்ளது. டெத் ஓவர்களில் பந்துவீச்சு வேகத்தை மாற்றி வீசக் கூடியதில் ரஹ்மான் வல்லவர் என்பதால் சிஎஸ்கே கேப்டன் தோனி அவரை சிறப்பாகப் பயன்படுத்துவார்.

தோனியைப் பொறுத்தவரை கடந்த இரு சீசன்களிலும் பேட்டிங்கில் பெரிதாக சோபிக்கவில்லை. தோனியின் பெரிய ஸ்கோரைப் பார்க்க ரசிகர்கள் கடந்த இரு சீசன்களாக காத்திருந்தும் முடியவில்லை. தோனியின் பேட்டிங் ஃபார்ம் சிஎஸ்கே அணிக்கு பெரிய கவலை தரும் விஷயமாக இருக்கிறது. ஆனாலும் தோனி களமிறங்காதவரை சிஎஸ்கேவுக்கு பலமாகவும், எதிரணிக்கு பலவீனமாகவும் இருக்கும்.

வேகப்பந்துவீச்சில் முஸ்தாபிஜூர் ரஹ்மான் மட்டுமே சர்வதேச அனுபவம் அதிகம் கொண்டவர். ஷர்துல் தாக்கூர், தீபக் சஹர் பந்துவீச்சு எதிரணிகளுக்கு பெரிதாக தொந்தரவு கொடுக்காது என்பது கடந்த காலங்களில் தெரிந்தது.

டெத்ஓவர்களில் இருவரையும் தோனி நன்றாகப் பயன்படுத்துவாரே தவிர இருவரும் தேர்ந்த, திறமையான பந்துவீச்சாளர்கள் என கூற முடியாது என்பது கிரிக்கெட் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். ஏனென்றால் டி20 போட்டிகளில் தீபக் சஹர் பந்துவீச்சு சராசரி 13.21 ஆகவும், ஷர்துல் தாக்கூர் பந்துவீச்சு சராசரி 11.24 ஆகவும் இருக்கிறது.

சுழற்பந்துவீச்சில் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, ரச்சின் ரவீந்திரா ஆகியோரின் பங்களிப்பு பெரிய அளவுக்கு வெற்றிக்கு கை கைடுக்கும். இந்த 3 பேரும், நடுப்பகுதி ஓவர்களில் எதிரணியின் ரன் ரேட்டைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிட்ட பங்காற்றுவர். மற்ற வகையில் பவர் ப்ளேயிலும், டெத் ஓவர்களிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இல்லாத நிலையில் சிஎஸ்கே இருக்கிறது.

 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

ஆர்சிபி அணி இந்த முறை பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பெர்குஷன், கேமரூன் க்ரீன், அல்சாரி ஜோஸப் என வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது

ஆர்சிபியின் பலம்

ஆர்சிபி அணி ஏறக்குறைய 16 சீசன்களாக விளையாடியும் இதுவரை ஒருமுறைகூட கோப்பையை வெல்லாதது அந்த அணிக்கு மனரீதியாக சோர்வை அளிக்கும். ஆனாலும், அந்த அணி ஒவ்வொரு முறையும் வீரர்களை மாற்றிப் பயணித்தாலும் கோப்பையை வெல்லமுடியாமல் தவிக்கிறது.

இந்த முறை ஐபிஎல் தொடரில் பந்துவீச்சுக்கு முக்கியத்துவம் அளித்து பெர்குஷன், கேமரூன் க்ரீன், அல்சாரி ஜோஸப் என வேகப்பந்து வீச்சாளர்களை வாங்கியுள்ளது. ஏற்கெனவே பேட்டிங்கில் டூபிளெசிஸ், விராட் கோலி, பட்டிதார், மகிபால் லாம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் என வலுவாக இருக்கிறது.

வேகப்பந்துவீச்சில் ரீஸ் டாப்ளி, சிராஜ், அல்சாரி ஜோஸப், பெர்குஷன், யாஷ் தயால், வைஷாக், ரஞ்சன் குமார் என 7 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இதில் 4 மட்டுமே நல்ல அனுபவம் கொண்டவர்கள்.

ஆர்சிபி அணி வலுவான வேகப் பந்துவீச்சாளர்களைத் தேர்ந்தெடுத்து களமிறக்கினால், நிச்சயமாக சிஎஸ்கே அணிக்கு நெருக்கடி கொடுக்கலாம். குறிப்பாக டெத் ஓவர்கள் ஸ்பெஷலிஸ்ட் அல்ஜாரி ஜோஸப், சிராஜ், பெர்குஷன், விஜயகுமார் என சரியான கலவையை உருவாக்க வேண்டும்.

நடுப்பகுதி ஓவர்களில் ரன்களைக் கட்டுப்படுத்தும் வகையில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து, 3வது பந்துவீச்சாளரை தேர்ந்தெடுப்பது அவசியமாகும்.

சுழற்பந்துவீச்சில் ஹசரங்கா இல்லாதது பெரிய பலவீனம்தான். இருப்பினும் கரன் ஷர்மா, மேக்ஸ்வெல், இடதுகை சுழற்பந்துவீச்சாளர் மயங்க் தாக்கர், ஸ்வப்னில் சிங் உள்ளனர். சுழற்பந்துவீச்சைப் பொறுத்தவரை பெரிய அளவுக்கு பலமுள்ளதாக இருக்கிறது எனக் கூற இயலாது. ஏனென்றால், கரண் ஷர்மா, மேக்ஸ்வெல் தவிர்த்து மற்றவர்கள் சர்வதேச அனுபவம் இல்லாதவர்கள், ஐபிஎல் அனுபவமும் பெரிதாக இல்லாதவர்கள்.

 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

பேட்டிங்கில் டூபிளசிஸ், விராட் கோலி, பட்டிதார், மகிபால் லாம்ரோர், கேமரூன் கிரீன், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் என வலுவாக இருக்கிறது.

ஆல்ரவுண்டர்கள் வரிசையில் உள்நாட்டைச் சேர்ந்த லாம்ரோர், ஆகாஷ் தீப், பிரபுதேசாய் ஆகியோரைத் தவிர்த்து மற்றவர்கள் மேக்ஸ்வெல், டாம் கரண், கேமரூன் கிரீன், வில் ஜேக்ஸ், என அனைவருமே வெளிநாட்டு வீரர்கள்.

ஒரு போட்டிக்கு 4 வெளிநாட்டு வீரர்கள்தான் சேர்க்க முடியும். இதில் டூப்ளசிஸ், மேக்ஸ்வெல், கிரீன் 3 பேர் இடம் உறுதியாகும் நிலையில் ஒருவர் மட்டுமே சேர்க்க முடியும் என்பதால், யாரைத் தேர்ந்தெடுப்பது என்பது பெரிய குழப்பமாக இருக்கும்.

நடுப்பகுதி ஓவர்களில் பந்துவீச மேக்ஸ்வெல், கரண் ஷர்மா தவிர்த்து கூடுதல் பந்துவீச்சாளர் தேவை என்பதால் கேமரூன் கிரீன் தேவை கண்டிப்பாக வேண்டும். இது தவிர்த்து வேகப்பந்துவீச்சில் ஒரு போட்டியில் அல்ஜாரி ஜோஸப் அல்லது பெர்குஷன் இருவரில் ஒருவருக்கு மட்டுமே வாய்ப்பு அளிக்க முடியும். அதேபோல 3வது வேகப்பந்துவீச்சாளருக்கு யாஷ் தயால், அல்லது விஜயகுமாரைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இதில் அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன் இருவரையும் ப்ளேயிங் லெவனில் எடுத்தால் கேமரூன் கிரீனை கைவிட வேண்டும். கிரீன் அணிக்குள் வந்தால் அல்ஜாரி அல்லது பெர்குஷன் அமர வேண்டும் என்பதால் ஆடுகளத்தின் சூழலுக்கு ஏற்ப கேப்டனுக்கு முடிவெடுக்க வேண்டும்.

ஆர்சிபி அணியில் திறமையான வெளிநாட்டு வீரர்கள் இருப்பது அதன் பெரிய பலமாகும். ஆடுகளத்துக்கு ஏற்ப தகுதியான வெளிநாட்டு வீரர்களை தேர்ந்தெடுத்து பயன்படுத்தினால் எளிதாக வெற்றி பெறலாம்.

டெத்ஓவர்களுக்கு அல்ஜாரி ஜோஸப், பெர்குஷன், விஜயகுமார், சிராஜ் என 4 பந்துவீச்சாளர்கள் உள்ளனர். இது தவிர டாம் கரண், டாப்ளி, வில் ஜேக்ஸ், கேமரூன் கிரீன் என ஆல்ரவுண்டர்கள் இருப்பதால் சரியான வெற்றிக் கூட்டணியை அமைத்தால் ஆர்சிபியின் பயணம் சிறப்பாக அமையும்.

 

ஐபிஎல் டி20

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,

கடந்த இரு சீசன்களிலும் டி.கே. பெரிய ஸ்கோரை அணிக்காக அடிக்கவில்லை என்பது நிதர்சனம்.

ஃபார்முக்கு வருவாரா டி.கே.?

ஆர்சிபி அணியின் விக்கெட் கீப்பர் தினேஷ் கார்த்திக் இந்த ஐபிஎல் தொடரோடு ஒட்டுமொத்த கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறப் போவதாக திட்டமிட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார். கடந்த ஓர் ஆண்டாக விளையாடுவதில் கவனம் செலுத்தாமல் வர்ணனைப் பணியில் தினேஷ் கார்த்திக் ஈடுபட்டதால் அவரின் பேட்டிங் ஃபார்ம் கவலைக்குரியதாக இருக்கிறது.

கடந்த இரு சீசன்களிலும் டி.கே. பெரிய ஸ்கோரை அணிக்காக அடிக்கவில்லை என்பது நிதர்சனம். அதேபோல கேப்டன் டூபிளசிஸும் பெரிதாக ஃபார்மில் இல்லை. அதேபோல விராட் கோலியும் ஜனவரியிலிருந்து கிரிக்கெட் விளையாடவில்லை.

இதுபோன்ற நட்சத்திர பேட்டர்களின் ஃபார்மின்றி இருந்து வருவது ஆர்சிபியின் கோப்பைக் கனவை தகர்த்துவிடும். இவர்கள் ஃபார்முக்கு வராவிட்டால், ஆர்சிபியின் கோப்பை கனவு இந்த முறையும் கனவாகவே இருந்துவிடும்.

https://www.bbc.com/tamil/articles/c88x77d5n23o

RCB இற்கு பக்கச் சார்பான ஆக்கம் இது…

ஆனாலும் CSK 💪💪💪💪

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, ஈழப்பிரியன் said:

பையா

இன்று வெல்லும் அணி RCB.

RCBய‌ சென்னையில் இருந்து விர‌ட்டி அடிச்சாச்சு

நியுசிலாந் அறிமுக‌ தொட‌க்க‌ இள‌ம் வீர‌ர் க‌ல‌க்க‌ள் ஆட்ட‌ம்.................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, MEERA said:

RCB இற்கு பக்கச் சார்பான ஆக்கம் இது…

ஆனாலும் CSK 💪💪💪💪

இந்த‌ போட்டி ப‌க‌ல் பொழுதில் ந‌ட‌ந்து இருந்தா ர‌ன் அடிப்ப‌து சிர‌ம‌ம் இர‌வு நேர‌ போட்டி என்ர‌ ப‌டியால் அதிக‌ ர‌ன் அடிக்க‌லாம் கார‌ண‌ம் பிச்சின் த‌ன்மை

 

சுட்டெரிக்கும் வெய்யிலில் சென்னை மைதான‌த்தில் ர‌ன் அடிப்ப‌து சிர‌ம‌ம்..........என‌க்கு சென்னை அணிய‌ பிடிக்காது நியுசில்லாந் வீர‌ர்களுக்காக‌ பார்த்தேன்..................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பையன்26 said:

RCBய‌ சென்னையில் இருந்து விர‌ட்டி அடிச்சாச்சு

நியுசிலாந் அறிமுக‌ தொட‌க்க‌ இள‌ம் வீர‌ர் க‌ல‌க்க‌ள் ஆட்ட‌ம்.................

இந்த போட்டியை கிருபன் நடத்தியிருந்தால் முதல்நாளே எனக்கு முட்டை தான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, ஈழப்பிரியன் said:

இந்த போட்டியை கிருபன் நடத்தியிருந்தால் முதல்நாளே எனக்கு முட்டை தான்.

வயசாளி டோனியின் அணி வென்றது நமக்கும் கடுப்புத்தான்!

 

ஒரு மினி போட்டி (கடைசி நாலு போட்டிகளையும் மட்டும் வைத்து) நடாத்தலாம் என்று நினைக்கின்றேன்.

ஆனால் அடுத்த வார இறுதிதான் தயாரிக்கமுடியும்!

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, கிருபன் said:

வயசாளி டோனியின் அணி வென்றது நமக்கும் கடுப்புத்தான்!

 

ஒரு மினி போட்டி (கடைசி நாலு போட்டிகளையும் மட்டும் வைத்து) நடாத்தலாம் என்று நினைக்கின்றேன்.

ஆனால் அடுத்த வார இறுதிதான் தயாரிக்கமுடியும்!

பரவாயில்லை எதுவென்றாலும் ஒரு போட்டி.

நன்றி கிருபன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே: ஆர்சிபி-யின் ஓட்டைகளைப் பயன்படுத்திய கேப்டன் ருதுராஜ்

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

கட்டுரை தகவல்
  • எழுதியவர், போத்திராஜ்
  • பதவி, பிபிசி தமிழுக்காக
  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளைய, புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் தனது பயணத்தை வெற்றிகரமாகத் தொடங்கியுள்ளார். அவரது கேப்டன்சி வெற்றிகரமாக அமைந்ததற்கு அறிமுக வீரர்கள் முஸ்தபிசுர் ரஹ்மான், ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோர் முக்கியக் காரணங்களாக அமைந்தனர்.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடந்த 2024ஆம் ஆண்டு சீசனுக்கான ஐபிஎல் டி20 தொடரின் முதல் ஆட்டம் தொடங்கியது. அதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தியது.

முதலில் பேட் செய்த ஆர்சிபி அணி 6 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்தது. 174 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய சிஎஸ்கே அணி 6 பந்துகள் மீதமிருக்கையில் 4 விக்கெட் இழப்புக்கு 176 ரன்கள் சேர்த்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

கேப்டன் யார்?

சிஎஸ்கே அணியின் நம்பிக்கை நட்சத்திரம் தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிய நிலையில் புதிய கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் எவ்வாறு செயல்படப் போகிறார் என்ற பதற்றம் ரசிகர்கள் மத்தியில் இருந்தது.

ஆனால், அவ்வப்போது ருதுராஜுக்கு தேவையான அறிவுரைகளை வழங்கிய தோனி, ஃபீல்டிங் செட் செய்வதிலும் உதவினார்.

கேப்டனாக முதல் போட்டி என்ற பதற்றமின்றி கெய்க்வாட் செயல்பட்டார். டிகே, ராவத் கூட்டணி திடீரென விளாசலில் ஈடுபட்டபோது அடுத்து எவ்வாறு பந்துவீச்சாளர்களை மாற்றுவது என்றபோது, தோனி வந்து ஆலோசனை கூறியது, இன்னும் சிஎஸ்கே கேப்டன் தோனிதான் என்பதை நினைவூட்டியது.

 

ஆர்சிபியை துரத்தும் தோல்வி - சிஎஸ்கே சாதனை

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணியின் தோல்வி 17வது ஆண்டாகத் தொடர்கிறது. 2008ஆம் ஆண்டுக்குப் பின் சேப்பாக்கத்தில் ஆர்சிபியால் இன்னமும் வெற்றி பெற முடியவில்லை என்ற அவப்பெயர் நீடிக்கிறது.

அதேநேரம், சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி அணிக்கு எதிராக 8வது வெற்றியை சிஎஸ்கே அணி பதிவு செய்தது. ஐபிஎல் வரலாற்றில் ஒரு மைதானத்தில் ஒரு அணிக்கு எதிராக அதிகபட்ச வெற்றியைப் பெற்றது சிஎஸ்கே அணியாகத்தான் இருக்கும்.

ஆட்டம் முடிந்தபின் மைதானத்தில் “இது எங்க ஏரியா உள்ள வராதே” என்ற பாடல் ஒலித்தபோது, ஆர்சிபி அணிக்கு சிஎஸ்கே கூறுவதுபோல் இருந்தது. டிஜே-வின் சமயோஜித பாடலை ரசிகர்கள் ஏகத்துக்கும் ரசித்தனர்.

முஸ்தபிசுர் ‘முறுக்குப்பிழிதல்’ நுட்பம்

சிஎஸ்கே அணியின் வெற்றிக்கு பந்துவீச்சில் அறிமுக வேகப்பந்துவீச்சாளர் வங்கதேச வீரர் முஸ்தபிசுர் ரஹ்மான், அறிமுக வீரர் ரச்சின் ரவீந்திரா, ரஹானே ஆகியோரின் பேட்டிங் முக்கியக் காரணங்கள். அதிலும் முஸ்தபிசுர் ரஹ்மானின் ஸ்லோ-பால் நுட்பம் முதல் போட்டியிலேயே நன்கு பலன் அளித்தது.

“முறுக்குப் பிழிதல்” போல் கையை மடக்கி வைத்து பேட்டர்களை ஏமாற்றும் அந்த ஸ்லோ-பால் நுட்பம் அவருக்கு பவர்ப்ளேவில் 2 விக்கெட்டுகளை பெற்றுக் கொடுத்தது. 2வது ஸ்பெலில் பந்துவீச வரும்போது, கோலி, கிரீன் என இரு பெரிய விக்கெட்டுகளையும் வீழ்த்தி சிஎஸ்கே பணியைச் சுலபமாக்கினார்.

சிஎஸ்கே அணியின் அறிமுக பந்துவீச்சாளர் “ஃபிஸ்(Fiz)” எனப்படும் முஸ்தபிசுர் ரஹ்மான் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தும், அதை மற்ற பந்துவீச்சாளர்கள் பயன்படுத்தவில்லை.

இதனால்தான் ஆர்சிபியை 100 ரன்களுக்குள் சுருட்ட முடியாமல் கூடுதலாக 95 ரன்களை சேர்க்க முடிந்தது. அறிமுக ஆட்டத்திலேயே 4 விக்கெட்டுகளை வீழ்த்திய முஸ்தபிசுர்(ஃபிஸ்) ரஹ்மானுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.

 

பட்டையைக் கிளப்பிய ரவீந்திரா

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

அதேபோல மற்றொரு அறிமுக வீரர், தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்திரா அறிமுக ஆட்டத்தைப் போல் பேட் செய்யாமல் பட்டையைக் கிளப்பிவிட்டார்.

அவரின் ஸ்ட்ரைக் ரேட் நேற்று 246 என்று மிரட்டலாக இருந்தது. 15 பந்துகளில் 37 ரன்கள் குவித்த ரவீந்திரா கணக்கில் 3 சிக்ஸர்களும், 3 பவுண்டர்களும் அடங்கும். தொடக்கத்தில் ரவீந்திரா, ரஹானே அமைத்துக் கொடுத்த அடித்தளம்தான் சிஎஸ்கேவின் வெற்றியை எளிதாக்கியது.

‘என்னுடன் தோனி இருக்கிறார்’

கேப்டனாக முதல் வெற்றியை ருசித்த கெய்க்வாட் பேசுகையில், “தொடக்கத்திலேயே கட்டுக்கோப்பாகச் செயல்பட்டோம், முதல் 3 ஓவர்கள் முடிந்து, சுழற்பந்துவீச்சாளர்கள் வந்தபின் ஆட்டம் எங்கள் வசம் வந்தது. இன்னும் 15 ரன்கள் குறைவாகக் கொடுத்திருக்கலாம்.

ஆர்சிபியும் கடைசி நேரத்தில் சிறப்பாக விளையாடியது. மேக்ஸ்வெல், டூப்ளெஸிஸ் விரைவாக ஆட்டமிழந்தது எங்களுக்கு திருப்புமுனையாக இருந்தது. இதனால்தான் அடுத்த 5 ஓவர்களை கட்டுப்படுத்த முடிந்தது.

கேப்டன்சியை மிகவும் ரசித்துச் செய்கிறேன், கூடுதலாக எந்த அழுத்தமும் இல்லை. ஒருமுறைகூட அழுத்தமாக இருப்பதாக நினைக்கவில்லை ஏனென்றால் என்னுடன் தோனி இருக்கிறார்.

பேட்டர்களுக்கு அவர்களின் பணி என்பது தெளிவாகத் தெரிந்திருப்பது வெற்றியைச் சுலபமாக்குகிறது, சேஸிங்கை எளிதாக்குகிறது,” எனத் தெரிவித்தார்.

சிக்ஸர் முக்கியம்

டி20 போட்டிகளைப் பொறுத்தவரை ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்து, ஓடி ஓடி ரன்கள் சேர்ப்பது என்பது வெற்றிக்குப் பெரிதாக உதவாது. அது ஸ்ட்ரைக்கை தக்கவைக்க உதவுமே தவிர வெற்றியின் பாதையை கடினமாக்கிவிடும்.

மாறாக, அவ்வப்போது அடிக்கும் சிக்ஸர்கள், பவுண்டரிகள்தான் வெற்றியின் அருகே கொண்டு செல்லும். இந்த ஆட்டத்தில் ஆர்சிபி அணி 6 சிக்ஸர்கள் அடித்த நிலையில், சிஎஸ்கே அணி ஒட்டுமொத்தமாக 9 சிக்ஸர்களை விளாசியது, 10 பவுண்டரிகள் எடுத்தது. ஆர்சிபி அணி 14 பவுண்டரிகளும், 6 சிக்ஸர்களும் அடிக்க முடிந்தது.

 

ஆர்சிபி-யின் ‘ஓட்டைகள்’

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

பவர்ப்ளே ஓவர்களை எந்த அளவுக்கு அதிகமாகப் பயன்படுத்த முடியுமோ அதை சிஎஸ்கே பேட்டர்கள் சிறப்பாகப் பயன்படுத்தினர். ஆர்சிபி அணி அதிரடியான தொடக்கத்தை அளித்து 4 ஓவர்களில் 37 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி பயணித்தது.

ஆனால், அடுத்த 2 ஓவர்களில் திடீரென 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளே ஓவர்கள் முடிவதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்தது, ஆர்சிபியின் தோல்விக்கு முக்கியக் காரணம். ஆர்சிபி அணியில் நடுவரிசை பேட்டர்கள் ஜொலிக்கவில்லை. ஆனால், சிஎஸ்கே அணியில் அனைத்து பேட்டர்களும் பங்களிப்பு செய்ததுதான் வெற்றி, தோல்விக்கான வேறுபாடு.

அதிலும் ரஹானே, டேரல் மிட்ஷெல் என அடுத்தடுத்து வந்த பேட்டர்கள் பவுண்டரி அடிப்பதைவிட, சிக்ஸர்கள் அடிப்பதிலேயே கவனம் செலுத்தியதன் நுட்பம் ஆர்சிபிக்கு புரியவில்லை. வெற்றியை எளிதாக நெருங்கும் வழியை சிஎஸ்கே கையில் எடுத்தபோது, அதைத் தடுக்கும் வகையில் பந்துவீச்சை ஆர்சிபி பலப்படுத்தவில்லை.

ஆர்சிபி அணியின் பேட்டிங் வரிசையோடு ஒப்பிடும்போது சிஎஸ்கே அணியின் பேட்டிங் வரிசை வலிமையாக இருக்கிறது. சிஎஸ்கே அணியில் தீக்சனா வரை ஓரளவுக்கு நன்கு பேட்டிங் செய்யக்கூடிய வீரர்கள் இருக்கிறார்கள்.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

ஆனால், 9 பேட்டர்களை அல்லது 10 விக்கெட்டுகளை வீழ்த்தும் அளவுக்கு ஆர்சிபியில் பந்துவீச்சு பலம் பொருந்தியதாக இல்லை என்பதா இருக்கின்ற பந்துவீச்சாளர்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவில்லை என்பதா எனத் தெரியவில்லை.

ஏனென்றால், அல்சாரி ஜோஸப், கேமரூன் கிரீன் நடுப்பகுதி ஓவர்களில் சிறப்பாகச் செயல்பட்டு சிஎஸ்கே ரன்ரேட்டை இழுத்துப் பிடித்தனர். கேமரூன் கிரீன் பயன்படுத்திய “ஸ்லோவர் கட் பால்”, ஜோஸப்பின் அதிவேகம், “ஷார்ட்பால் பவுன்சர்” ஆகியவை நன்கு பலன் கொடுத்தது.

“ஷார்ட் பால்” உத்தியை இன்னும் திட்டமிட்டுக் கையாண்டிருந்தால், சிஎஸ்கே ரன்ரேட்டை தொடக்கத்திலேயே மட்டுப்படுத்தி இருக்க முடியும். மேலும், சுழற்பந்துவீச்சாளர் மயங்க் டாகர் அற்புதமாகப் பந்துவீசி 2 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

மேஸ்க்வெலுக்கு ஒரு ஓவர் மட்டும் வழங்கி அவரின் திறமையை டூப்ளெஸ்ஸிஸ் வீணடித்துவிட்டார். இருவருக்கும் தொடர்ந்து வாய்ப்பளிக்காமல் வேகப்பந்துவீச்சாளர்களையே டூப்ளெஸ்ஸிஸ் நம்பியது ரன்கள் எளிதாகக் குவியக் காரணமாக அமைந்தது.

‘சேஸிங் கிங்’ ஜடேஜா

சிஎஸ்கே அணிக்கு ரச்சின் ரவீந்திரா, ரஹானே, மிட்ஷெல் நல்ல அடித்தளம் அமைத்துக் கொடுத்தனர். ஆனால், துபே களமிறங்கியபோது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தாலும் அவரின் பேட்டிங் 13 பந்துகளுக்கு 7 ரன்கள் என மந்தமாகவே இருந்தது.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

துபே ஷார்ட் பந்துகளுக்கு திணறுகிறார் எனத் தெரிந்து கேமரூனும், ஜோஸப்பும் நெருக்கடி கொடுத்தனர். ஆனால், தன்னை நிலைப்படுத்திய துபே, வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி 28 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ரவீந்திர ஜடேஜா 17 பந்துகளில் 25 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜடேஜா பேட்டிங்கில் 2 டாட் பந்துகளை மட்டுமே சந்தித்தார், பெரும்பாலான பந்துகளில் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் ரன்களை சேர்த்தது சிஎஸ்கேவின் நெருக்கடியைக் குறைத்தது.

ஐபிஎல் தொடரில் சேஸிங்கில் ரவீந்திர ஜடேஜா ஆட்டமிழக்காமல் இருந்து 27வது முறையாக வெற்றியைப் பெற்றுக் கொடுத்துள்ளார். இதுவரை தோனியுடன் சேர்ந்து எந்த பேட்டரும் சேஸிங்கில் இதுபோன்று வெற்றிகரமாகச் செயல்பட்டதில்லை.

ஆர்சிபி அணிக்கு டூப்ளெஸ்ஸிஸ், கோலி நல்ல தொடக்கத்தை அளித்தனர். தேஷ்பாண்டே, சஹர் ஓவர்களில் பவுண்டரிகளாக டுப்ளெஸ்ஸிஸ் வெளுத்ததால், 4 ஓவர்களில் ரன்ரேட் 10க்கு உயர்ந்தது. ஆனால், முஸ்தபிசுர் 5வது ஓவரை வீச வந்தவுடன் ஆட்டத்தில் திருப்பம் ஏற்பட்டது.

அதிரடியாக ஆடிய டூப்பளசிஸ் 21 பந்துகளில் 35 ரன்கள் சேர்த்த நிலையில் முஸ்தபிசுர் பந்துவீச்சில் ரவீந்திராவிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அதே ஓவரில் சிறிது கூடுதல் பவுன்ஸரை வீசியவுடன் வந்த வேகத்தில் பட்டிதாரும் டக்-அவுட்டில் க்ளீன் போல்டாகி வெளியேறினார்.

அடுத்துவந்த அதிரடி பேட்டர் மேக்ஸ்வெல் ரன் ஏதும் சேர்க்காமல் தீபக் சஹர் ஓவரில் விக்கெட்டை இழந்தார். 41 ரன்களுக்கு விக்கெட் இழப்பின்றி இருந்த ஆர்சிபி அடுத்த ஒரு ரன் சேர்ப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

கோலியின் மந்தமான பேட்டிங்

நான்காவது விக்கெட்டுக்கு கோலி, க்ரீன் ஓரளவுக்கு ரன்களை சேர்த்து அணியைக் கொண்டு சென்றனர்.

இதுபோன்ற நேரத்தில் “ஆங்கர்ரோல்” செய்கிறேன் எனக் கூறிக் கொண்டு ஆமைவேகத்தில் கோலி ரன்களை சேர்ப்பதுதான் அவர் மீது கிரிக்கெட் விமர்சர்கள் வைக்கும் பெரிய விமர்சனத்துக்கு காரணமாக இருக்கிறது. கோலி சேர்த்த 20 ரன்களில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடங்கும்.

ஆர்சிபி தடுமாறிய பின் கோலியின் மந்தமான ஆட்டத்தால், ரன்ரேட் வீதம் கடுமையாகக் குறைந்தது. கோலி ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யும் விதத்தில் விளையாடியதற்குப் பதிலாக பவுண்டரி, சிக்ஸர் அடித்து சிறிய கேமியோ ஆடிச் சென்றிருக்கலாம்.

டிகே, ராவத் அதிரடி

பன்னிரண்டாவது ஓவரை முஸ்தபிசுர் பந்துவீச வந்தபோது அந்த ஓவரில் விராட் கோலி(20) விக்கெட்டையும், கிரீன்(18)விக்கெட்டையும் வீழ்த்தி ஆர்சிபிக்கு நெருக்கடி கொடுத்தார்.

CSK vs RCB: 'இது எங்க ஏரியா' எனக் காட்டிய சிஎஸ்கே - ஆர்சிபியின் தோல்விக்கு என்ன காரணம்??

பட மூலாதாரம்,IPL/TWITTER

ஆர்சிபி அணி 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 79 ரன்கள் சேர்த்து தடுமாறியது. 6வது விக்கெட்டுக்கு தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத் இருவரும் ஜோடி சேர்ந்தனர். 15 ஓவர்கள் முடிவில் ஆர்சிபி அணி 100 ரன்களை கடந்தது.

ஆனால், 15வது ஓவர்களுக்குப் பின் ராவத், டிகே இருவரும் கியரை மாற்றி ரன்வேகத்தை அதிகரித்தனர். தீக்சனா வீசிய 16வது ஓவரில் டிகே ஒரு சிக்ஸர், பவுண்டரி விளாசினார். தேஷ்பாண்டே வீசிய 18வது ஓவரில் ராவத் 2 சிக்ஸர், ஒரு பவுண்டரி, டிகே ஒரு சிக்ஸர் என 25 ரன்கள் சேர்த்தனர். இந்த ஓவர்தான் ஆர்சிபி அணிக்குப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

அதன்பின் ராவத், டிகே இருவரும் சிஎஸ்கே பந்துவீச்சை வெளுத்தனர். முஸ்தபிசுர் வீசிய 19வது ஓவரில் ராவத் ஒரு சிக்ஸரும், டிகே ஒரு பவுண்டரியும் விளாசி 16 ரன்கள் சேர்த்தனர். ராவத் 48 ரன்னில் தோனியால் ரன்அவுட் ஆனார். டிகே 38 ரன்னில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

இருவரும் 6வது விக்கெட்டுக்கு 57 பந்துகளில் 95 ரன்கள் சேர்த்து ஆர்சிபி அணியைத் தூக்கி நிறுத்தினர். கடந்த ஓர் ஆண்டில் பெரிதாக கிரிக்கெட் விளையாடாமல் இருந்த டிகே நேற்று அருமையான ஃபினிஷர் ரோலை செய்தார். அவர் கடந்த சீசனில் மோசமாக ஆடிய குறையை முதல் போட்டியிலேயே நிவர்த்தி செய்துள்ளார்.

https://www.bbc.com/tamil/articles/c515xjyjv4po

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கண்கவர் தொடக்க விழாவுடன் ஐபிஎல் 17ஆவது அத்தியாயம் ஆரம்பம்

23 MAR, 2024 | 09:36 AM
image

(நெவில் அன்தனி)
இண்டியன் பிறீமியர் லீக் 17ஆவது அத்தியாயம் சென்னை சேப்பாக்கம் விளையாட்டரங்கில் நடைபெற்ற கண்கவர் தொடக்க விழாவுடன் பிரமாண்டமாக ஆரம்பமானது.


வெள்ளிக்கிழமை மாலை 6.30க்கு தொடங்கிய ஆரம்ப விழா சுமார் அரை மணித்தியாலமாக அரங்கில் குழுமியிருந்த இரசிகர்களை மகிழ்ச்சிவெள்ளத்தில் மிதக்கச் செய்தது.


தொடக்க விழாவின்போது தேசிய கொடியுடன் பொலிவூட் நடிகர் அக்சய் குமார் கம்பியில் தொங்கியவாறு மிதந்து வந்தார்.

அவரிடம் இருந்து மற்றொரு பொலிவூட்  நடிகர்   டைகர் ஷெரொப் தேசிய கொடியைப் பெற்றுக்கொண்டு அதனை மேடையின் உயரமான இடத்தில் நாட்டினார்.


தேசிய கொடி நாட்டப்பட்டதும் பொலிவூட் நடிகர்கள் இருவரும் ஹிந்தி பாடலுக்கு நடனமாடி இரசிகர்களை குதூலிக்கச் செய்தனர்.


அவர்களைத் தொடர்ந்து தனது மகன் அமீனுடன் மேடையில் தோன்றிய இசை அமைப்பாளர் ஏ. ஆர். ரகுமான் இனிமையான பாடல் ஒன்றைப் பாடி இரசிகர்களையும் பாட வைத்தார். ரகுமான், அவரது மகன் மற்றும் சுவேதா மோகன் ஆகியோர் மற்றொரு பாடலை இணைந்து வழங்கினர்.


இதனைத் தொடர்ந்து இந்திய சினிமா நட்சத்திரங்களால் நடத்தப்பட்ட இந்திய கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் அரங்கில் நிரம்பி வழிந்த இரசிகர்களை மட்டுமல்லாமல் தொலைக்காட்சி இரசிகர்களையும் பிரமிக்க வைத்தன.

opening_ceremony.png

opening_ceremony_14.png

opening_ceremony_13.png

opening_ceremony_12.png

opening_ceremony_11.png

opening_ceremony_8.png

opening_ceremony_7.png

opening_ceremony_6.png

opening_ceremony_5.png

opening_ceremony_4.png

opening_ceremony_2.png

opening_ceremony_3.png

opening_ceremony_1.png

opening_ceremony...png

opening_ceremony.....png

opening_ceremony_16.png

opening_ceremony_17.png

opening_ceremony....png

https://www.virakesari.lk/article/179469

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

டெல்லி அணியில் முத‌ல் முறையாக‌ வெஸ்ண்டீஸ் வீர‌ர் சேய் கோப் ஜ‌பிஎல்ல‌ அவ‌ருக்கு இது முத‌லாவ‌து போட்டி..........கிடைத்த‌ வாய்ப்பை ச‌ரியா ப‌ய‌ண் ப‌டுத்தி விட்டார்🙏💪.........................

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)
LIVE
3rd Match (N), Eden Gardens, March 23, 2024, Indian Premier League
Kolkata Knight Riders FlagKolkata Knight Riders     208/7
Sunrisers Hyderabad FlagSunrisers Hyderabad     (3.1/20 ov, T:209) 28/0

SRH need 181 runs in 101 balls.

Current RR: 8.80    • Required RR: 10.68
Win Probability:SRH 17.62%  KKR 82.38%
 
 
நடராஜன் 4 விக்கெட் சன்ரைசர்ஸ் அணிக்காக பந்துவீசி எடுத்திருக்கிறார்.
4 0 32 3 8.00 9 3 1 3 0
Edited by ஏராளன்
து
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

IPL 2024: 'டிஆர்எஸ் முறை நீக்கம்'.. புது தொழில்நுட்பம் அறிமுகம்: இதுவரை யாரும் செய்யாத டெக்னிக்!

இனி டிஆர்எஸ் முறை இருக்காது. அதற்கு மாற்றாக, தரமான தொழில்நுட்பத்தை ஐபிஎல் நிர்வாகம் அறிமுகம் செய்ய உள்ளது.

ipl introduces smart replay system for quicker more accurate reviews the new system will have the tv
IPL 2024: 'டிஆர்எஸ் முறை நீக்கம்'.. புது தொழில்நுட்பம் அறிமுகம்: இதுவரை யாரும் செய்யாத டெக்னிக்!
 
டிவி அம்பயர்ஸ் டூ டிரைக்டர்ஸ் என்ற வாசகத்தை இனி கேட்க முடியாது. ஆம், டிஆர்எஸ் முறையை ஒழித்து, புது விதிமுறையை ஐபிஎல் நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.

ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்:

ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம்:

டிஆர்எஸ் எடுக்கும்போது, அது சிலமுறை தவறான முடிவுகளை காட்டுகிறது. மூன்றாவது நடுவர் தெளிவாக ஆராய்ந்தாலும், சிலமுறை தவறான முடிவுகள் எடுக்கப்படுகிறது. இந்த குறைகளை போக்க, ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் கொண்டு வரப்படுகிறது.

 

டிவி அம்பயர் கிடையாது:

டிவி அம்பயர் கிடையாது:

ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் கொண்டு வரப்படுவதால், இனி 'டிவி அம்பயர் டூ டிரைக்டர்' என்ற வார்த்தையை கேட்க முடியாது. டிஆர்எஸ் முறை தொலைக்காட்சி நிறுவனத்தின் உதவியோடு எடுக்கப்படும். ஆனால், தற்போது ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டம் அப்படி கிடையாது.

 

இடையில் வர மாட்டார்கள்:

இடையில் வர மாட்டார்கள்:
டிஆர்எஸ் முறையை கணிக்க மூன்றாம் நடுவர், ஹக்ஐ வல்லுநர்கள் இருவரும், தொலைக்காட்சி உதவியை நாடுவார்கள். தொலைக்காட்சி காட்சிகளை வைத்து, ஹக்ஐ தொழில்நுட்ப வல்லுநர் டிஆர்எஸை உருவாக்குவார்கள். அதனை பார்த்து, மூன்றாவது நடுவர் அவுட், நாட் அவுட் என்பதை கணித்து கூறுவார். இனி அப்படி நடக்காது.

தொலைக்காட்சி தேவையில்லை:

தொலைக்காட்சி தேவையில்லை:

ஸ்மார்ட் ரீப்ளே சிஸ்டத்திற்கு, தொலைக்காட்சி உதவி தேவையில்லை. மூன்றாம் நடுவர் மற்றும் ஹக்ஐ வல்லுநர்கள் ஆகியோர் ஒரே அறையில் அமர்ந்து, ஒரு நிமிடத்திற்குள் அவுட், நாட்அவுட்டை துல்லியமாக தீர்மானிப்பார்கள்.

எப்படி சாத்தியம்?

எப்படி சாத்தியம்?

ஹக்ஐ வல்லுநர்கள் மொத்தம் 8 கேமராக்களை பொறுத்துவார்கள். பௌலர்கள் என்ட், பேட்டர்கள் என்ட் என இதில் 8 கேமராக்கள் இருக்கும். இதை வைத்து, ஹக்ஐ வல்லுநர்கள் உடனே, டிஆர்எஸ் போன்ற ஒன்றை கொண்டு வந்துவிடுவார்கள். இதற்கு 30 நொடிகள் கூட ஆகாதாம். அடுத்து, மூன்றாம் நடுவர் உடனே அதை பார்த்து, அவுட், நாட்அவுட்டை தீர்மானிப்பார்.

10 நொடிகளிலும் தீர்ப்பு:

10 நொடிகளிலும் தீர்ப்பு:

LBW ரிவியூ எடுத்தால், அதிக நேரம் பிடிக்கும். ஆனால், ஸ்மார்ட் ரிவியூ சிஸ்டத்தில் அப்படி நடக்காது. பந்து லெக் சைடில் பிட்ச் ஆனால், அதனை 10 நொடிகளில் கணித்துவிட முடியும். உடனே, நாட் அவுட் என மூன்றாம் நடுவர் அறிவித்துவிடுவார்.

8 கேமராக்களிலும் பார்க்க முடியும்:

8 கேமராக்கில் பார்க்க முடியும்:
 
முன்புபோல் இல்லாமல், ஸ்மார்ட் ரிவியூ சிஸ்டம் மூலம், 8 கேமராக்களில் ரிவியூவை பார்க்க முடியும். இதனை ஒளிபரப்பவும் செய்வார்கள். ரிவியூ எடுக்கும் போது, 8 கேமராக்களில் பதிவான காட்சிகள் ஒரு சில நொடிகளில் திரைக்கு வந்துவிடும். உடனே தீர்ப்பும் வந்துவிடும். இதனால், நேரம் மிச்சமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இது வெட்டி ஒட்டினதுதான்....இந்த ...விமர்சனம் எனக்குப் பிடித்திருக்கு..
 
நேற்றைய மேட்ச் பற்றி...!
IPL ஆரம்ப போட்டியே பெரிய போட்டியா அமைந்தது!
டாஸ் வென்ற RCB கேப்டன் பாஃப் பேட்டிங் செய்வதா சொன்னார்! சேப்பாக்கத்துல பேட்டிங் தேர்ந்து எடுப்பது சரியான முடிவா இருக்குமா? என யோசித்தேன்!
சீக்கா ஏற்கனவே பேட்டிங் பிட்ச் என சொல்ல, சேஸிங் பண்ணுவதே நல்லது!
RCB க்கு நல்ல தொடக்கம் கிடைக்க தீபக் சஹரும், துஷாரும் உதவினர்!
பேட்டிங் பிட்ச்ல பந்து தெரித்து ஓடியது! டூ ப்ளஸி ஆள் இல்லாத இடத்தில் தூக்கி தூக்கி அடித்தார்! கடைசில அதுவே அவரது விக்கெட்டுக்கு காரணமா அமைந்தது!
அடுத்து ரஜாத் பட்டிதார்! மூன்றாவது வரிசைக்கு விக்கெட்டை தடுத்து நிறுத்தும் ஆள் வேணும்.அது இவர் இல்லை! மாற்று வீரரை தேடுங்க! இவரது அவுட் தான் திருப்புமுனை!
மேக்ஸிக்கு முதல் பந்துலேயே அவுட் ஆகும் யோகம் காலங்காலமா இருக்குது! அதை கொடுத்ததே ஆர்சிபி தான்!
3 விக்கெட் போன பின் க்ரீன் வந்தார்.பொறுமையா ஆடினார்.அவருடைய 20 ரன்னை எடுத்துட்டு போய்ட்டார்! 2 கோடிக்கு வாங்கி இருக்க கூடிய வீரர்! பல கோடிக்கு வாங்கபட்டு இருக்கிறார்!
கிங் கோலியின் அவுட் எதிர்பாராதது! எனக்கு வருத்தம் தான்!
அடுத்து கீப்பர்கள் கார்த்திக் மற்றும் ரவாத் இருவரும் இணைந்து கீப்பரா அணிக்கு என்ன செய்யனுமோ அதை செய்தனர்!
CSK பவுலிங் பற்றி...!சுழலுக்கு விக்கெட் கிடைக்காதது ஆச்சர்யம்!
வங்க தேச வீரர் FIZZ தன் இயல்பா தான் பந்து வீசினார்! அவருக்கு விக்கெட்களை பெங்களுர் வீரர்கள் பரிசா வழங்கினர்!
சஹர் மற்றும் துஷார் ஆகியோக்கு பயிற்சி வேண்டும்.இருவரின் ஒருவருக்கு பதில் ஷார்துல் அடுத்த மேட்ச்ல ஆடலாம்!
ரச்சினுக்கு 2 ஓவர் கொடுத்து இருக்கலாம்!
இலக்கு 174 என இருக்க ...!CSK சேஸிங்கை தொடங்கியது!
வாவ்! ரச்சின் ரவிந்திரா...!பந்துகளை வீணாக்காம ஒரு தொடக்க வீரரா என்ன செய்யனுமோ அதை செய்தார்.கான்வே கொஞ்சம் நிதானமா விளையாடுவார்.ஆனா ரச்சின் அதற்கு நேர்எதிர்! இந்த தொடரில் நல்லா விளையாடுவார் போல! வாழ்த்துக்கள்!
ருதுராஜ் அடிச்ச சில ஷாட்களும் அருமை! ஆனா அவர் அவுட்டான விதம் சரியில்லை!
மூன்றாவது வரிசையில் ஜிங்க்ஸ்! எப்படி மூன்றாவது வரிசையில் ஆடனும் என பட்டிதாக்கு பாடம் எடுத்து போனார்!
மிச்சேல் கர்ண் சர்மா பந்தீல் நேரா ரெண்டு சிக்ஸர்கள் அடித்தார்.தினேஷ் கார்த்திகும் இதே போல அடித்தார்.ஆனா மிச்சேல் அடிச்சது தான் சூப்பரா இருந்தது!
இம்பேக்ட் பிளேயராக வந்த டூபே ஐந்தாவது வரிசையில் எப்படி பேட்டிங் பண்ணனும் என தோனியிடம் பாடம் கற்று இருப்பார் போல!
நிதானமா ஆரம்பித்து இலக்கை அடைவது தான் ஐந்தாவது வரிசை வீரரின் கடமை! அதை சரியா செய்து முடித்தார்.
ஆறாவது வரிசையில் களம் இறங்கிய ஜடேஜா வந்ததும் ஒரு சிக்ஸர் அடித்து, நான் போன வருஷம் பைனல்ல எப்படி போனேனோ அப்படியே வந்து இருக்கேன் என சொன்னார்!
எளிதாக வெற்றி பெற்றது CSK!
இரு அணி வீரர்களில் யாரும் 50+ அடிக்காம அதிக ரன்கள் வந்தது இந்த மேட்ச்ல தான்!
RCB பவுலர்கள் பற்றி...!வேகத்தில் விவேகம் இல்லை! சுழலில் தாகருக்கு 2 ஓவர்கள் மட்டுமே கொடுத்தார்கள்.ஏன்னு தெரியலை!
CSK 5 பவுலர்களை மட்டுமே யூஸ் பண்ணுனாங்க! ஆனா RCB சிராஜ், அல்ஜாரி வாரி வழங்க, உடனே பார்ட்டைம் பவுலரிடம் போனாங்க! தோனி இப்படி பண்ணவே மாட்டார்.கேப்டனா அவர் ஜெயிக்க இது ஒரு காரணம்!
கடைசில வாரிவழங்கிய வேகங்கள் 4 ஓவர்கள் வீச, 2 ஓவர்ல 6 ரன்கள் மட்டுமே கொடுத்த தாகருக்கு வாய்ப்பு கிடைக்காம போச்சி! டூ ப்ளஸி உட்பட அனைத்து கேப்டன்களும் தோனியிடம் பாடம் கற்று கொள்ளுங்கள்!
நேற்று காலை நான் சொன்னது போல பேட்டிங் மற்றும் பவுலிங் ரெண்டிலும் சமபலம் வாய்ந்த CSK விடம் பேட்டிங்கை மட்டும் நம்பி களம் இறங்கிய RCB தோற்றது!
கடைசிவரை என் தோனி பேட்டிங் பண்ண வராதது எனக்கு ஏமாற்றம் தான்!
வரும் போட்டிகளில் எதிரணி அதிக ரன்களை (200+)அடிக்க ஆசைபடுகிறேன்.அப்போதான் அந்த ஏழாம் நம்பர் வீரரின் சிக்ஸரை நான் பார்க்க முடியும்!
கேப்டனா ருதுராஜ் பெற்ற முதல் வெற்றிக்கு என் வாழ்த்துக்கள்!
எனக்கு தோனி தான் எப்போதும் கேப்டன்!
ஆட்ட நாயகன் முஸ்தபிசூர் ரஹ்மானுக்கும் என் வாழ்த்துக்கள்!
Link to comment
Share on other sites




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 👍....... முன் அனுபவம் தேவையில்லை என்று சில வேலைக்கான விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டிருக்கும். அப்படித்தான் இங்கேயும் நினைத்து உள்ளே வருகின்றார்கள். ஒரு துறையில் சிறப்புத் தேர்ச்சியும், திறமையும், ஆளுமையும் இருப்பவர்கள் எல்லா துறைகளிலும் அப்படியே சிறப்பாக வருவார்கள், செய்வார்கள் என்று கருதுவது முதிர்ச்சி அடையாத ஜனநாயகத்தின் ஒரு இயல்பு என்று சமீபத்தில் ஒரு இடத்தில் வாசித்திருந்தேன். அப்படியே பொருந்துகின்றது.
    • என் நேர்மையான பதில் இது: புலிகளை நான் நேரடியாகவும், நாசூக்காகவும் தாக்குவதில்லை. ஆனால், புலிகள் செய்த தவறுகள் என்று நான் கருதுபவற்றை நான் நேரடியாகவே எழுதி "இது முட்டாள் தனம், இது தூர நோக்கில்லாத செயல், இது தவறு" என்று எழுதியிருக்கிறேன். இதை, சில வருடங்கள் முன்பு வரை உரிய திரிகளில் எழுதி வந்திருக்கிறேன். யாழ் நிர்வாகம் பகிரங்கமாக "புலிகளை குறை சொல்வது தேசியத்தை நலிவுறச் செய்யும்" என்று இதற்கு மறைமுகத் தடை விதித்த பின்னர் - அந்தக் கருத்தோடு உடன்பாடில்லா விட்டாலும் - தீவிரமாக புலிகளின் செயல்களை பற்றி நானாக எதுவும் எழுதவில்லை. ஆனால், புலிகள் பற்றி எழுத வேண்டிய தேவையை தமிழ் மக்களின் தற்போதைய நிலைக்கு காரணமாக 196 நாடுகளையும், சம்பந்தரையும்  இன்ன பிற தரப்புகளையும் மட்டும் குற்றம் சாட்டும் "மடை மாற்றும்" உறவுகள் ஏற்படுத்துகிறார்கள். நேர்மை பற்றிப் பேசுகிறீர்கள், இதே நேர்மையை அந்த மடை மாற்றும் கள உறவுகளிடமும் எதிர்பாருங்கள், விளக்கம் கேளுங்கள். உதாரணமாக, இங்கே சம்பந்தன் செய்தது (இந்தியாவில் போய் நின்றது) வன்னி மக்களின் உயிரைப் பறித்ததா அல்லது தடுத்து வைக்கப் பட்டதும், அவர்கள் மேல் சிங்களவன் குண்டு போட்டதும் உயிரைப் பறித்ததா? இது ஒரு எளிமையான காரண காரியக் கேள்வி. இதற்கு நேரடியாகப் பதில் சொல்ல முடியாமல் , "சம்பந்தன் ஆயுதங்களை விட அழிவு செய்தார்"என்று எழுதும் விசுகரிடம், இதே நேர்மையான பதிலை எதிர்பாருங்கள். கிடைக்கிறதா என்று பாருங்கள். என்னுடைய அபிப்பிராயம்: புலிகளின் legacy இனை அடுத்த சந்ததிக்கு அப்படியே கடத்த வேண்டியதில்லை. அப்படிச் செய்வது முட்டாள் தனம். புலிகளின் தியாகம், நிர்வாகம், போர் ஓர்மம் எல்லாம் கடத்தப் பட வேண்டிய நல்ல விடயங்கள். தூர நோக்க அரசியல் உணர்வின்மை, ஒரு பிரச்சினைக்கு ஒற்றைப் படைத் தன்மையான தீர்வை மட்டும் நாடல், ஆகிய விடயங்கள் கடத்தப் படக் கூடாது. பி.கு: இந்தப் பதில் நீங்களும் ஏனைய சில புலிகளின் பக்தியாளர்களும் விரும்பிய மாதிரி இல்லாமல் இருந்தால் மன்னியுங்கள். ஏனெனில், அவர்களைப் பொறுத்த வரை "முன்னாள் மாற்று இயக்கக் காரர், புலிகளிடம் தண்டனை பெற்றவர்கள், இந்திய/சிறிலங்கன் தரப்பிடம் கூலி வாங்குவோர்" ஆக நான் இருந்தால் அவர்களுக்கு திருப்தியாக இருக்கும்😎.
    • வடமாகாணசபையின் உத்தியோகபூர்வ இணையத் தளத்தில் இந்த இல்லங்களை மூடும் உத்தரவு தெளிவாக தெரிவிக்கப்டட நிலையில் இதை பொய்செய்தி என்று  கூற ஏன்  இப்படி கஷ்டப்பட வேண்டும்.  வட்சப் தகவல்களும் முகநூல் தகவல்களும் நம்பக தன்மை அற்றவை.  https://np.gov.lk/ta/யாழ்ப்பாணம்-தெல்லிப்பள-4/
    • ஈழத் தமிழர் அரசியலின் சீர்கேட்டுக்கு முக்கிய காரணகர்த்தாக்கள் அறம் பிறழ்ந்த ஊடகவியலாளர்கள். 1961 சத்தியாகிரகத்தின் போது ஈழநாடு பத்திரிகை ஆரம்பிக்கப்பட்ட போது,  யோகர் சுவாமிகள் ஆசி வழங்கி பேசும் போது சொன்னாராம், ஏசுவார்கள் எரிப்பார்கள் “ உண்மையை “ எழுதுங்கள், “உண்மையாய் “ எழுதுங்கள் என …. பெரும்பாலான ஊடகவியலாளர்கள் “உண்மையாய் “ எழுதுவதில்லை என்பதற்கு இது ஓர் மிகசிறந்த உதாரணம்.   Yoga Valavan Thiya 
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
        • Like
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.