Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சாவகச்சேரியில் தேவாலய ஆராதனைக்கு செல்லாததால் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி; மருத்துவமனையில் அனுமதி!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

எழிலன்.

யாழ்ப்பாணம் - சாவகச்சேரியில் உள்ள தேவாலயத்திற்கு ஞாயிறு ஆராதனைக்கு செல்லவில்லை எனப் பங்குத் தந்தை ஒருவரால் தாக்கப்பட்ட சிறுமி ஒருவர் சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொடிகாமம்  பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றின் பங்குத் தந்தையே இவ்வாறு சிறுமியைத் தாக்கியதாக கொடிகாமம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிறுமியின் தந்தை கத்தோலிக்கராக உள்ளபோதும் தாயார் சைவ சமயத்தைச் சேர்ந்தவர் என்ற வகையில் சிறுமி தேவாலயத்திற்குச் செல்வது கிடையாது. தந்தையாருடன் சில சமயம் தேவாலயம் சென்று வரும் பழக்கம் உடையவர் என்றும் இருந்தபோதும் கடந்த சில நாட்கள் தேவாலயம் செல்லாத சிறுமியை அழைத்து தாக்கியதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன் காரணமாக சாவகச்சேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியை இன்று மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. (ச)

தேவாலய ஆராதனைக்கு செல்லாததால் பங்குத் தந்தையால் தாக்கப்பட்ட சிறுமி; மருத்துவமனையில் அனுமதி! (newuthayan.com)

  • கருத்துக்கள உறவுகள்

ஜனநாயக சுதந்திரம் உறுதிபடுதபட்ட கிறிஸ்தவ மேற்குலகநாடுகளில் இந்த குற்ற செயலுக்கு தண்டணை கிடைக்கும்.அப்கானிஸ்தான் பாக்கிஸ்தானில் இந்த மதவெறியன் கொண்டாடபடுவார்.

  • கருத்துக்கள உறவுகள்

செய்தியைப் பார்த்தவுடன் கடும்போக்கு மத்வாதிகள் நினைவிற்கு வந்து போகிறார்கள்  🤨

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, விளங்க நினைப்பவன் said:

ஜனநாயக சுதந்திரம் உறுதிபடுதபட்ட கிறிஸ்தவ மேற்குலகநாடுகளில் இந்த குற்ற செயலுக்கு தண்டணை கிடைக்கும்.அப்கானிஸ்தான் பாக்கிஸ்தானில் இந்த மதவெறியன் கொண்டாடபடுவார்.

நம்மட போப்பாண்டவரே ஓரினசேர்க்கை, ஓரினபால் திருமணம், இன்னோரன்ன மதத்துக்கு ஒத்துவராத எல்லாவற்றிர்க்கும் ஓகே சொல்லிவிடடார். விபச்சாரத்துக்கு மட்டும்தான் இன்னும் அனுமதிகொடுக்கப்படவில்லை. அப்படி இருக்கும்போது  பிறகு எதுக்கு ஆலயத்துக்கு வரவில்லை என்று தாக்குவான். சடடம்  தன கடமையை செய்யும். 

Edited by Cruso

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Cruso said:

நம்மட போப்பாண்டவரே ஓரினசேர்க்கை, ஓரினபால் திருமணம், இன்னோரன்ன மதத்துக்கு ஒத்துவராத எல்லாவற்றிர்க்கும் ஓகே சொல்லிவிடடார். பிறகு எதுக்கு ஆலயத்துக்கு வரவில்லை என்று தாக்குவான். சதாம் தன கடமையை செய்யும். 

தங்கள் கூற்றிற்கு  ஆதாரம் இருக்கிறதா ? 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

தங்கள் கூற்றிற்கு  ஆதாரம் இருக்கிறதா ? 

இத்தேட்கெல்லாம் ஆதாரம் தேடுவானேன். வேணுமெண்டால் உங்கள் போப்பாண்டவரிடமே கேட்டு பாருங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
1 minute ago, Cruso said:

இத்தேட்கெல்லாம் ஆதாரம் தேடுவானேன். வேணுமெண்டால் உங்கள் போப்பாண்டவரிடமே கேட்டு பாருங்கள். 

அப்படியானால் தங்களிடம் ஆதாரம் இல்லை. சகட்டுமேனிக்கு அடித்து விடுகிறீர்கள். 

  • கருத்துக்கள உறவுகள்
Just now, Kapithan said:

அப்படியானால் தங்களிடம் ஆதாரம் இல்லை. சகட்டுமேனிக்கு அடித்து விடுகிறீர்கள். 

உலகறிந்த  உண்மை. இன்று அங்கு கர்தினால்கள் மத்தியில் யுத்தமே நடக்குது. இது தெரியாமல் ............................

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, Cruso said:

உலகறிந்த  உண்மை. இன்று அங்கு கர்தினால்கள் மத்தியில் யுத்தமே நடக்குது. இது தெரியாமல் ............................

ஊரில் வேலிக்கு மேலால் கதக்கும் ஆட்களது பேச்சுப் போன்று இருக்கிறது. தங்களின் பதில்.

தங்களிடம் ஆதாரம் இல்லை  என்பதுதான் உண்மை நிலவரம். 🤣🤣👋

  • கருத்துக்கள உறவுகள்

எந்த மதத்தை மத அனுட்டானங்களை பின்பற்ற வேண்டும் என்பதும்.. அதை தொடர்வதா விடுவதா என்பதும்.. அவரவர் சொந்த உரிமை.

இதில் பாதிரியார் கை வைக்க அதுவும் சிறுமி மீது கை வைக்க.. ஜே சுவே அனுமதி அளிக்கமாட்டார். இதில..

உவரை பிடிச்சு உள்ள வைக்கிறதை விட்டிட்டு.. செய்தியாக்கி ரைம் வேஸ்ட் பண்ணுறாங்கள். 

  • கருத்துக்கள உறவுகள்

பாதிரிகள் எல்லோரும் பரிசுத்தமானவர்கள்! ஏன் சேர்ச்சுக்கு வரேல்லை எண்டுதானே அடிச்சவர். அந்தச் சிறுமியை இந்தப் பரிசுத்தவான் அடிக்கேக்கை தாய்தேப்பன் என்ன செய்தவையள். நானெண்டால் செவிள்ல இரண்டு சாத்துச் சாத்தியிருப்பன்!

  • கருத்துக்கள உறவுகள்

போகாததுக்கே இந்த அடி எண்டா காணிக்கை வைக்காட்டி நிலமை..?😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

போகாததுக்கே இந்த அடி எண்டா காணிக்கை வைக்காட்டி நிலமை..?😂

காணிக்கை கொடுக்காவிட்டால் தாய் தகப்பனுக்கே அடி விழுந்திருக்கும். 

🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
29 minutes ago, Kapithan said:

காணிக்கை கொடுக்காவிட்டால் தாய் தகப்பனுக்கே அடி விழுந்திருக்கும். 

🤣

1 hour ago, பாலபத்ர ஓணாண்டி said:

போகாததுக்கே இந்த அடி எண்டா காணிக்கை வைக்காட்டி நிலமை..?😂

2 hours ago, nedukkalapoovan said:

எந்த மதத்தை மத அனுட்டானங்களை பின்பற்ற வேண்டும் என்பதும்.. அதை தொடர்வதா விடுவதா என்பதும்.. அவரவர் சொந்த உரிமை.

இதில் பாதிரியார் கை வைக்க அதுவும் சிறுமி மீது கை வைக்க.. ஜே சுவே அனுமதி அளிக்கமாட்டார். இதில..

உவரை பிடிச்சு உள்ள வைக்கிறதை விட்டிட்டு.. செய்தியாக்கி ரைம் வேஸ்ட் பண்ணுறாங்கள். 

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு 5:39 

 

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, Kapithan said:

ஊரில் வேலிக்கு மேலால் கதக்கும் ஆட்களது பேச்சுப் போன்று இருக்கிறது. தங்களின் பதில்.

தங்களிடம் ஆதாரம் இல்லை  என்பதுதான் உண்மை நிலவரம். 🤣🤣👋

ஆதாரம்? கோவிலுக்குவாராவிடடாள் மட்டும் அடிக்க வேண்டுமென்று ஆதாரம் இருக்குதா? உங்கள் கேள்வியும் அப்படிதான்.😜

  • கருத்துக்கள உறவுகள்

நம்மளுக்கு எல்லாம் இது ரொம்ப அந்நியமான விடயம். ஐயர் பிள்ளையை அடிக்க நினைத்தாலே மொகரையை பிச்சு போடுவம்.

ஆனால் மதகுருமார் குடும்பங்கள் மீது செலுத்தும் ஆளுமை கத்தோலிக்கரில் மிக அதிகம். பிரெட்டஸ்தாந்து மதத்தில் இப்படி இல்லை.

இலங்கையில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் மிக கொடுமையான பாலியல் வன்முறை உட்பட பலதை கத்தோலிக்க பாதிரிகள் செய்வது இதனால்தான்.

அதுவும் இந்த பிள்ளை ஒரு மத-கலப்பு  குடும்பத்தின் பிள்ளை. அதை கூப்பிட்டு அடிப்பது என்பது, கட்டாய மத போதனை, மத முறுகலை தோற்றல் என பல முகங்களை உடையது.

பாதிரிக்கு தக்க கிரிமினல் தண்டனை கொடுப்பதோடு, இந்தாளை திருச்சபை பாதிரியார் தொழிலில் இருந்து துரத்தியும் விட வேண்டும்.

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
Just now, goshan_che said:

நம்மளுக்கு எல்லாம் இது ரொம்ப அந்நியமான விடயம். ஐயர் பிள்ளையை அடிக்க நினைத்தாலே மொகரையை பிச்சு போடுவம்.

ஆனால் மதகுருமார் குடும்பங்கள் மீது செலுத்தும் ஆளுமை கத்தோலிக்கரில் மிக அதிகம். பிரெட்டஸ்தாந்து மதத்தில் இப்படி இல்லை.

இலங்கையில் மட்டும் அல்ல, உலகம் முழுவதும் மிக கொடுமையான பாலியல் வன்முறை உட்பட பலதை கத்தோலிக்க பாதிரிகள் செய்வது இதனால்தான்.

அதுவும் இந்த பிள்ளை ஒரு மத-கலப்பு  குடும்பத்தின் பிள்ளை. அதை கூப்பிட்டு அடிப்பது என்பது, கட்டாய மத போதனை, மத முறுகலை தோற்றல் என பல முகங்களை உடையது.

பாதிரிக்கு தக்க கிரிமினல் தண்டனை கொடுப்பதோடு, இந்தாளை திருச்சபை பாதிரியார் தொழிலில் இருந்து துரத்தியும் விட வேண்டும்.

இவருக்கு பிள்ளைகளை எப்படி நடத்த வேண்டும் என்று சரியாக சொல்லி கொடுக்கவில்லையே தெரியவில்லை. நீங்கள் சொல்வதை பார்த்தல் நிறைய பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டி வரும். 

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, குமாரசாமி said:

ஒருவன் உன்னை வலது கன்னத்தில் அறைந்தால், அவனுக்கு மறுகன்னத்தையும் திருப்பிக் கொடு. மத்தேயு 5:39 

 

நல்லகாலம் ஜேசுநாதர் அறைதலுக்குப் பதிலாக கொஞ்சினால் என்று சொல்லவில்லை  🤣,.....

??????? 😉

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, goshan_che said:

மதகுருமார் குடும்பங்கள் மீது செலுத்தும் ஆளுமை கத்தோலிக்கரில் மிக அதிகம். பிரெட்டஸ்தாந்து மதத்தில் இப்படி இல்லை.

அங்கேயேயும் அதே மாதிரியான ஆதிக்கத்தை இலங்கை தமிழர்கள் சிங்களவர்ககள், இந்தியர்களிடம் கொண்டுவர மதபோதகர்கள் முயற்ச்சிப்பதாக அறிய முடிகின்றது.  ஹோலி பைபிள் படிக்க வகுப்பிற்கு கட்டாயம் போக வேண்டும் அது தான் நல்லவர்க்கு அழகு அப்படி.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

அங்கேயேயும் அதே மாதிரியான ஆதிக்கத்தை இலங்கை தமிழர்கள் சிங்களவர்ககள், இந்தியர்களிடம் கொண்டுவர மதபோதகர்கள் முயற்ச்சிப்பதாக அறிய முடிகின்றது.  ஹோலி பைபிள் படிக்க வகுப்பிற்கு கட்டாயம் போக வேண்டும் அது தான் நல்லவர்க்கு அழகு அப்படி.

என்னைப்பொறுத்த வரைக்கும் அவரவர் மதத்தை பின் பற்றுவதோ போதிப்பதோ பிரச்சினை இல்லை. ஏற்றுகொள்ளுவதும் ஏற்றுக்கொள்ளாததும் அவரவரை பொறுத்தது. ஆனால் கடடயப்படுத்தி, அடித்து துன்புறுத்தி செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது. 

9 hours ago, Kapithan said:

நல்லகாலம் ஜேசுநாதர் அறைதலுக்குப் பதிலாக கொஞ்சினால் என்று சொல்லவில்லை  🤣,.....

??????? 😉

போப்பாண்டவர் எனா சொல்லி இருக்கிறார் எண்டு தெரிந்து கொள்ளலாமா? ஆதாரம் இருக்கா? 🤣

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.