Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

Published By: RAJEEBAN    18 DEC, 2023 | 03:40 PM

image
 

இந்தியா ஒரு பிராந்திய தலைவர் மாத்திரமில்லை, அதன் அண்டை நாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச நிறுவனங்கள் உட்பட ஏனைய உலகம் என்ன செய்வது என விவாதித்துக் கொண்டிருந்த வேளை இந்தியாவே உண்மையில் இலங்கைக்கு உதவ முன்வந்தது எனவும் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

இந்தியா சாதித்துள்ள விடயங்கள் எங்களிற்கே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளன.

இதன் மூலம் இயல்பான நன்மையை பெற்றவர்கள் யார் என்றால் எங்களை சுற்றியுள்ள நாடுகளே!

உங்களிற்கு தெரியும் கடந்த சில வருடங்களாக - நாங்களே கொவிட்டினால் நெருக்கடிகளை எதிர்கொண்டோம் என்றால்  எங்களின் அயல்நாடுகள் மிகச் சிறியவை, அவர்களிடம் எங்களை போல கொரோனா தடுப்பூசிகளை உற்பத்தி செய்யும் திறன் இருக்கவில்லை.

நாங்கள் முன்வந்து உதவியிருக்காவிட்டால் கொரோனா தடுப்பூசிகளை பெறும் விடயத்தில் அவர்கள் கைவிடப்பட்டிருப்பார்கள் .

இலங்கை போன்றதொரு நாடு மிகமோசமான ஆழமான பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளப்பட்டது,

உதவி செய்யவேண்டிய உலகமும் உலக நாடுகளும் நிறுவனங்களும் என்ன செய்வது என்ற தங்களிற்குள் விவாதித்துக் கொண்டிருந்த வேளை  இந்தியாவே உதவி வழங்கியது.

எங்களின் நீட்டப்பட்ட கரங்களே இலங்கையின் இருண்ட தருணத்தில் முக்கியமான அவசியமான உதவியை வழங்கியது. நாங்கள் மிக முக்கியமான மாற்றத்தை  ஏற்படுத்தினோம்.

எங்கள் அயல்நாடுகளிற்கு சென்றவர்கள் ஏனைய மாற்றங்களை கட்டமைப்பு மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள் -இடம்பெறுகின்ற ஆழமான மாற்றங்களை அவதானித்திருப்பீர்கள்,

உங்களால் இலகுவாக பயணம் செய்ய முடியும், புகையிரதப் பாதைகள்  ஏற்படுத்தப்பட்டுள்ளன, அதிகளவு வீதிகள் அமைக்கப்பட்டுள்ளன -அவர்களும் எங்களை பயன்படுத்துகின்றனர்.

இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி ஏனைய பிராந்தியம் முழுவதையும் உயர்த்திவிடும் வளர்ச்சிப்பாதையில் செலுத்துவதில் உதவுகின்றது.

நெருக்கடியான தருணங்களில்  உங்களிற்கு இந்தியா உள்ளது என்பதை அயல்நாடுகளிற்கு நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். தடுப்பூசியாகட்டும் உணவாகட்டும் நிதி உதவியாகட்டும அத்தியாவசிய பொருட்கள் ஆகட்டும்.

இது அயல் நாடுகளிற்கு பெரும் செய்தியை சிறந்த செய்தியை சொல்கின்றது.

https://www.virakesari.lk/article/171969

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இந்தியா ஒரு பிராந்திய தலைவர் மாத்திரமில்லை, அதன் அண்டை நாடுகளிற்கு மிக முக்கியமான உயிர் நாடி என தெரிவித்துள்ள இந்திய வெளிவிவகார அமைச்சர் இலங்கை சமீபத்தில் எதிர்கொண்ட பொருளாதார நெருக்கடியின் போது இது வெளிப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.

ஆமா ஆமா

படைத்தல்,காத்தல் , அழித்தல் என்று எல்லாவற்றையும் செய்து கொண்டிருக்கிறீர்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

நெருக்கடியான தருணங்களில்  உங்களிற்கு இந்தியா உள்ளது என்பதை அயல்நாடுகளிற்கு நாங்கள் வெளிப்படுத்தியுள்ளோம். தடுப்பூசியாகட்டும் உணவாகட்டும் நிதி உதவியாகட்டும அத்தியாவசிய பொருட்கள் ஆகட்டும்.

ஒன்றும் மாற்றீடாக பெறா விட்டால் தான் உதவி.

  • கருத்துக்கள உறவுகள்

ஓகே... ஓகே

இந்த முறை புலம்பல் அதிகமா இருக்கே எண்டு உன்னிப்பா அவதானித்த பின்னர் தெரீது:

சீனக்கப்பல், தை மாசம் பொங்கலோட வந்து, ஆற அமர இருந்து வைகாசி விசாகம், வெசாக் முடியத்தான் கெளம்புமாம். 🥺

அப்ப புலம்பாம என்ன செய்யிறதாம்!

 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, Nathamuni said:

ஓகே... ஓகே

இந்த முறை புலம்பல் அதிகமா இருக்கே எண்டு உன்னிப்பா அவதானித்த பின்னர் தெரீது:

சீனக்கப்பல், தை மாசம் பொங்கலோட வந்து, ஆற அமர இருந்து வைகாசி விசாகம், வெசாக் முடியத்தான் கெளம்புமாம். 🥺

அப்ப புலம்பாம என்ன செய்யிறதாம்!

 

வழக்கத்துக்கு மாறா டெல்லியில் இருந்து ஒரே ஊளைசத்தமாய் கேட்குது .

  • கருத்துக்கள உறவுகள்

இந்த வசனத்தை சிங்களவன் எல்லோ சொல்லவேணும்....அதை விட்டிட்டு...

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, alvayan said:

இந்த வசனத்தை சிங்களவன் எல்லோ சொல்லவேணும்....அதை விட்டிட்டு...

சிங்களவன் சொல்லாமலில்லை. ஆனால் சிங்களவனிடம் இந்தியாவுக்கு  நம்பிக்கை இல்லை. முதுகில் குத்துவான் எண்டு நல்லாகவே தெரியும்.

எனவேதான் மீண்டும் மீண்டும் சிங்களவனுக்கு இந்தியா ஞாபகப்படுத்திக்கொண்டு இருக்குது. இல்லாவிட்ட்தால் சீன கப்பலை உள்ளுக்கு விட்டிடுவான்.

கடைசியாக கிடைத்த செய்திகளின்படி சீன கப்பல் இலங்கைக்கு வாக்குவதட்கு அனுமதி இல்லை என்றே சொல்லப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்பம். 

  • கருத்துக்கள உறவுகள்
22 hours ago, Cruso said:

 

கடைசியாக கிடைத்த செய்திகளின்படி சீன கப்பல் இலங்கைக்கு வாக்குவதட்கு அனுமதி இல்லை என்றே சொல்லப்படுகின்றது. பொறுத்திருந்து பார்ப்பம். 

இது இப்போதைக்குத்தான்...நாள் இருக்கு..

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

இது இப்போதைக்குத்தான்...நாள் இருக்கு..

நீங்கள் சொல்லுவது சரி. மாலைதீவு நிச்சயமாக அனுமதி கொடுக்கும். அப்படி வந்த பின்னர் இலங்கை நாரா நிறுவனத்துடன் இணைந்து செய்வோம் என்று சொல்லுவார்கள். இலங்கை அரசும் சீன  கப்பல் தனியாக செல்லாது எண்கள் ஆட்களும் அதில் செல்லுவார்கள் என்று சொல்லும். எனவே சீன கப்பலுக்கு அனுமதி கிடைக்கும். 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.