Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kapithan said:

 வட்டுக்கோட்டைக்கு வழி கேட்டால், துட்டுக்கு ரெண்டு கொட்டைப்பாக்கு - பதில்கள் தங்களிடமிருந்து வருகிறது. 

ஈழத்தமிழர் விசயத்தில் இதுதான் உங்கள்  வழி...எதுவோ பீரபாகரன் என்ற நினைப்பில் ..உங்கடை அட்வைஸ்.. உங்கள்  முகமூடி..யாழ்களம் முழுவதும் தெரியும்...தடவி குத்தி ஒரு இனத்தை அழிக்க உதவி செய்வது என் வேலையில்லை அய்யா...காசுக்காக மோசம் செய்வதும் என் தொழிலல..நல்லவனாக நடிப்பது நம் தொழிலல்ல...

  • Replies 148
  • Views 11.2k
  • Created
  • Last Reply

Top Posters In This Topic

Most Popular Posts

  • காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர் சங்கம் எனப்படுவோர் தமது பிள்ளைகளை தேடுவது என்ற கோரிக்கையை மட்டும் எழுப்புவதும் அதற்காக மட்டும் போராடுவதுமே  ஶ்ரீலங்கா அரசுக்கு காத்திரமான அழுத்தத்தைக் கொடுக்கும். அதை வ

  • பகிடி
    பகிடி

    இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவ

  • வணக்கம், முதலில் இதில் என்ன இருக்கிறது என இந்த இமாலய பிரகடனத்துக்கு இத்தனை முக்கியத்துவம் கொடுத்து, சமஸ்டி தீர்வின் முதல் படி என இதை கருத முடியும் என விளங்கப்படுத்த முடியுமா? இமாலய பிரகடனத்த

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, alvayan said:

ஈழத்தமிழர் விசயத்தில் இதுதான் உங்கள்  வழி...எதுவோ பீரபாகரன் என்ற நினைப்பில் ..உங்கடை அட்வைஸ்.. உங்கள்  முகமூடி..யாழ்களம் முழுவதும் தெரியும்...தடவி குத்தி ஒரு இனத்தை அழிக்க உதவி செய்வது என் வேலையில்லை அய்யா...காசுக்காக மோசம் செய்வதும் என் தொழிலல..நல்லவனாக நடிப்பது நம் தொழிலல்ல...

(நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பது புரிகிறது.  நாள் முழுவதும் computer முன்னால் குந்தியிருந்து எப்படித்தான் குத்தினாலும்மிஞ்சி மிஞ்சிப் போனால் துரோகி என்று கூறுவீர்கள். அவ்வளவுதான் உங்களால் முடியும்  😁)

ஆனால்  ஈழத் தமிழருக்கு ஆகக் குறைந்த தீர்வு தொடர்பாக தாங்கள் எதனையும்  கூறவில்லை.  அத்துடன் எம்  மக்களுக்கு ஏதேனும் நன்மை நடைபெற வேண்டும் என்று விரும்பி  அதற்காக உழைப்பவர்களையும்  குறை சொல்லிக்கொண்டிருக்கிறீர்கள். 

காரணம் கேட்டால் பதில் இல்லை? 

ஏன்?

பிரச்சனை தீர்ந்தால் தாங்கள் அனுபவிக்கும் நன்மைகள்  எதனையும் இழந்துவிடுவோம் என்கிற பயமா ? 

45 minutes ago, பகிடி said:

இலங்கையில் உள்ள பல தமிழர்களுக்கு புலம் பெயர் தமிழர்களின் பலம் பற்றிய அதீத கற்பனை உண்டு. ஆனால் நடைமுறை உண்மையோ வேறு.இன்னும் பத்து ஆண்டுகளில் புலம் பெயர் தமிழர்களிடம் இருக்கும் குறைந்த பட்ச பலமும் முடிவுக்கு வந்து விடும். இங்கே நாட்டில் உள்ள மக்களுக்காக கவலைப் படும், அமைப்புக்களில் இணைந்து செயல்படும் நபர்களின் வயது அறுபது ஆகின்றது. அவர்களின் பிள்ளைகளோ அல்லது கடந்த 10 ஆண்டுகளில் புலம் பெயர்ந்தோரோ இந்த அமைப்புகளில்  இல்லை, அதே நேரம் பலர் இன்னும் முழுமையாக இங்கு வீடு வாசல் வேலை என்று செட்டில் ஆகவும் இல்லை. இந்த நிலையில் இலங்கையில் உள்ள தமிழ் மக்களின் தீர்வுக்கான குறைந்த பட்ச வாய்ப்பு இப்போது உள்ள எங்களின் குறைந்த பட்சப் பலத்தைப் பயன் படுத்தி ஏதாவது ஒன்றைப் தமிழ் மக்களுக்குப் பெற்றுக் கொடுப்பது தான்.
காலமும் சூழலும் மாறட்டும். அதற்கு இன்னும் 100 ஆண்டுகள் கூட ஆகலாம். அது வரைக்கும் இயன்ற வரைக்கும் எமது மொழியையும், நிலத்தையும், அடுத்து வரும் இளம் சந்ததியையும்  பாதுகாப்பதே புத்திசாலித்தனம்.
விரும்பாத தீர்வு ஒன்று கொடுக்கப்பட்டாலும் அதை ஏற்பது நீண்ட காலத்துக்கு பயனளிக்கும் எனில் அதை ஏற்போம்.
எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு

இலங்கைத் தமிழர்களின் உரிமைக்கான பிரச்சனையில் தடையாக இருப்பது அருகில் உள்ள இந்தியா என்கின்ற நாடு. இதை இலங்கை தமிழரில் பலர் முற்றாய் உணர்ந்து தெளிந்ததாக தெரியவில்லை.
தமிழர்களை தனி நாடு அடைய விடாமல் தடுப்பதும் இந்தியா தான்,அதேநேரம் இலங்கை அரசோடு ஒன்றிணைந்து நாம் ஒரு தீர்வுத் திட்டத்திற்கு வர முடியாமல் பார்த்துக் கொள்ளும் நாடும் அதுதான். இலங்கையை கையாள தமிழர்களை பயன்படுத்திக் கொள்வது தான் இந்தியாவின் வெளிநாட்டு கொள்கை. நிலைமை இப்படி இருக்கும் பொழுது எப்படி தனி நாட்டைப் பெறுவது?

 சரி பிரிக்க முடியாத நாட்டுக்குள் சுய நிர்ணய உரிமை தமிழர்களுக்கு கொடுக்கப்பட்டாலும் அதைப் பயன்படுத்தி( அதிகாரம் கொடுக்கப்பட்ட தமிழர்களை பயன்படுத்தி ) எவ்வாறாயினும் இலங்கை அரசுக்கு குடைச்சல் கொடுப்பதே இந்தியக் கொள்கை வகுப்பாளர்களின் யுக்தியாக இருக்கும்.

 ஏற்கனவே ஒரு சில தடவை குறிப்பிட்டது போல கடந்த மைத்திரி ரனில் அரசாங்கத்தில் இனப்பிரச்சனைத்தீர்வுக்கான ஒரு முஸ்தீவு எடுக்கப்பட்ட பொழுது அதை ஈஸ்டர்குண்டு வெடிப்பை நடத்தி குலைத்த பெருமை இந்தியாவையே சாரும்.
 இந்தியா,தமிழர்கள் தனி நாட்டை அடைய விடுவதுமில்லை, சிங்களவர்களோடு   இணைந்து தமிழர்கள் நல்லதொரு தீர்வை பெற்று வாழ விருப்பமும் இல்லை. இரண்டும் கெட்டான் நிலையில் நாங்கள் நின்று தடுமாறி இலங்கைக்குள் இந்தியாவின் கைப்பாவையாக செயல்படவேண்டும் என்பதுதான் அவர்களின் விருப்பம்.
 இந்த நிலையில் இலங்கை அரசோடு   ஏதேனும் ஒரு வகையிலான ஒரு இணக்கப்பாட்டுக்கு வந்து இந்தியாவின் தலையீடு இல்லாமல் இலங்கைக்குள் நிம்மதியாக வாழக்கூடிய வகையில் ஈழத் தமிழர்களுக்கு எப்பேற்பட்ட ஒரு தீர்வு வந்தாலும் நான் அதை வரவேற்பேன்.

அந்த வகையில் உலகத் தமிழர் பேரவை எடுத்து இருக்கும் இந்த முயற்சி பலனளிக்க வாழ்த்துக்கள்.


 இந்தியா என்கின்ற நாடு எங்களுக்கு அருகில் ஒரு வல்லரசாக இருக்கும் வரை எம்மால் தனித்து சுய நிர்ணய உரிமையோடு இயங்க முடியாது. இந்தியா உடைந்து  சிறு நாடுகளாக சிதறும் போது மட்டும் தான் எமக்கான வாய்ப்புக்கான கதவு திறக்கும். அதுவரை எமது கலாச்சாரங்களையும் அடையாளங்களையும் இயன்றவரை பாதுகாத்துக் கொள்வது தான் தூர நோக்கோடு சிந்திக்கும் ஒருவரால் எடுக்கப்படக்கூடிய முடிவு.

 கடும் பசியிலும் தாகத்திலும் வாடும் ஒருவர் பிரியாணி தான் வேண்டும் என்று அடம்பிடித்தால் நலிந்து சாக வேண்டி வருலாம் .மாறாக கிடைக்கும் சோற்றையும் நீரையும் பருகி உயிர் தப்பினால் பின்னோரு காலத்தில் பிரியாணிக் கடைக்கே ஓனர் ஆகலாம்.

 

எந்தத் தீர்வும் இறுதித் தீர்வு அல்ல. சிதைக்கப் பட முடியாத பலம் மட்டுமே இறுதித் தீர்வு. 

100%

  • கருத்துக்கள உறவுகள்
 

 

பிரச்சனை தீர்ந்தால் தாங்கள் அனுபவிக்கும் நன்மைகள்  எதனையும் இழந்துவிடுவோம் என்கிற பயமா ? 

இது எனக்கல்ல உங்களுக்குத்தான்....இங்குள்ள அனைவருக்கும் தெரியும்... நாடகங்கள்  கனநாள்  நீடிக்காது...தமிழ்மக்களுக்கு தீர்வுவர விரும்புவது ஒவ்வொரு உண்மையானதமிழரின் விருப்பம்மாகும்..ஆணால் தீர்வு வருவதற்கு முன்ன்னோடியாகவரும் புறக்காரணிகளை ...இல்லாது ஒழிப்பதற்கு  உருவாகும் சூழ்நிலையை நல்லவர்போல் நடித்து குழப்பும் நயவஞ்சக கூட்டத்தில் ஒரு சில தமிழர்தான் இருக்கமுடியும்...அதுவும் குத்திக்காட்ட விசயமாகத் தெரியவில்லை...யாழில் பட்டவர்த்தனம்...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

அல்வாயன் யாரையும் முன்மொழியவில்ல. எங்களுக்கு என்ன தேவை என்பதையும் கூறவில்லை. 

தாங்கள் ஏன் சுரேன் பேச்சுவார்த்தையில் ஈடுபடக் கூடாது என்பதையும், வேறு யாரை  முன்மொழிவீர்கள்   என்பதையும் கூறுங்கள்? 

நான் உள்பட எவர் சொல்வதும் நடக்க போவதில்லை நடைமுறைப்படுத்தப்படப்போவதில்லை அப்படி இருக்க ஏன். குறைந்த பட்ச முன்மொழிவுகளை கூறவேண்டும்?? 

  • கருத்துக்கள உறவுகள்

‘இமாலய துரோகிகள்’ எனத் தெரிவித்து புகைப்படங்கள் மீது முட்டை வீச்சு

image_e3caf7a312.jpg

க. அகரன்

 வவுனியாவில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் போராட்டம் ஆரம்பித்து 2500 ஆவது நாளான திங்கட்கிழமை (25) உலகத் தமிழர் பேரவையின் உறுப்பினர்களின் புகைப்படம் தாங்கிய பதாகையின் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினை வெளிப்படுத்தி இருந்தனர். 

அவர்களுடைய போராட்ட கொட்டகைக்கு முன்பாக கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்ட காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் உலகத் தமிழர் பேரவையினரின் செயற்பாடு தமிழ் மக்களுக்கு விரோதமானது எனவும் அவர்கள் இமாலய துரோகிகள் எனவும் தெரிவித்திருந்ததோடு தமிழ் மக்களுடைய அபிலாசைகளையும் இறைமையும் பாதுகாப்பதற்கு பொதுவாக்கெடுப்பு ஒன்றே உரிய தீர்வு எனவும் தெரிவித்திருந்தனர். 

இதனை அடுத்து அவர்கள் அங்கு மரம் ஒன்றில் கட்டப்பட்டிருந்த உலகத் தமிழர் பேரவை உறுப்பினர்களின் புகைப்படம் மீது முட்டை வீசி தமது எதிர்ப்பினையும் வெளிப்படுத்தி இருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த தமிழர் தாயகத்தில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கத்தின் செயலாளர் கோ. ராஜ்குமார், 

“நல்லிணக்கம் என்ற கருத்து சிங்கள சமூகத்தின் நம்பிக்கைகளுக்கு இணையானதல்ல; மாறாக, தமிழ் மக்களின் அபிலாஷைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துவதாகும்” என்றார்.

கடந்த 14 ஆண்டுகளில், இனப் போர் முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து, LLRC, UNHRC தீர்மானம் மற்றும் நல்லிணக்கம் போன்ற வார்த்தைகள் அதிகளவில் பிரபலமடைந்து வருவதை தமிழர்கள் கண்டறிந்துள்ளனர். இருப்பினும், உண்மையில், நடைபெறும் நிகழ்வுகள் நல்லிணக்கக் கொள்கைகளுக்கு முரணானதாகவே தெரிகிறது.

தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

 பலவந்தமாக காணாமல் ஆக்கப்பட்ட எமது தமிழ் மக்களின் அபிலாஷை தமிழ் இறையாண்மையாகும், அதனை பொதுவாக்கெடுப்பு மூலம் தீர்மானிக்க முடியும்.

1. தமிழ் பிள்ளைகளின் இருப்பிடத்தை வெளிப்படுத்துவதும் இந்த அநீதிக்கு காரணமான நபர்களை அம்பலப்படுத்துவதும் நல்லிணக்கத்திற்கான முதல் படியாகும்.

அக்கறையுள்ள தாய்மார்களாக, நாங்கள் எங்கள் குழந்தைகளுடன் மீண்டும் ஒன்றிணைவதற்கு ஏங்குகிறோம். எங்கள் அன்புக்குரியவர்களை சட்டவிரோதமாக கைப்பற்றுவதற்கு பொறுப்பான நபர்களின் விரிவான பட்டியலை நாங்கள் கோருகிறோம். அவர்களில் சிலர் நாட்டிற்கு வெளியே கடத்தப்பட்டுள்ளனர், மற்றவை இலங்கைக்குள் இருப்பதை நாங்கள் அறிவோம். நீதியை உறுதி செய்வதற்காக, இந்த நபர்கள் பொறுப்புக் கூறுவது கட்டாயமாகும், ஏனெனில் அவர்களின் தண்டனை எதிர்காலத்தில் பலவந்தமாக காணாமல் ஆக்கப்படுவதைத் தடுக்கும்.

2. நல்லிணக்கத்தை நோக்கிய முதல் படி "மணலாறு" தமிழர்களுக்கு திரும்பக் கொடுப்பதாகும்.

சிங்களவர்களால் ஆக்கிரமிக்கப்பட்டு குடியேற்றப்பட்ட "மணலாறு" எனப்படும் அவர்களின் நிலத்தை மீட்பதற்கான உரிமையை தமிழர்களுக்கு வழங்க வேண்டும். நல்லிணக்கம், வடக்கு கிழக்கு தாயகத்தை துண்டு போடக் கூடாது.

3. 1948ல் ஆங்கிலேயர்கள் வெளியேறிய பின், ஒற்றையாட்சியின் கீழ் அபகரிக்கப்பட்ட நிலத்தை, திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

தமிழர்களுக்குச் சொந்தமான அனைத்துக் காணிகளும் சிங்களவர்கள் சுதந்திரம் பெற்ற 1948 ஆம் ஆண்டுக்கு முன்னரோ அல்லது அதற்குள்ளோ சிங்கள அரசால் திருப்பிக் கொடுக்கப்பட வேண்டும். மேலும், அனைத்து சிங்களக் குடியேற்றவாசிகளும் அவர்களது வீடுகளுக்கு திருப்பி அனுப்பப்பட வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் நல்லிணக்கத்தை வளர்க்க முடியும்.

4. தமிழ் இனத்தின் நலனுக்காக வடகிழக்கு தமிழ் பல்கலைக்கழகங்களுக்கு முன்னுரிமை அளிப்பது அவசியமாகும்.

இந்தப் பல்கலைக்கழகம் வடகிழக்கு தாயகத்தில் குறிப்பாக உள்ளூர் தமிழ் மக்களைப் பூர்த்தி செய்யும் வகையில் கட்டப்பட்டது. இது ஸ்ரீமாவோவால் நடைமுறைப்படுத்தப்பட்ட தரப்படுத்தல் கொள்கையின் பிரதிபலிப்பாகும், இது தமிழர்கள் பல்கலைக்கழகங்களில் சேர்க்கை பெறுவதை கடினமாக்கியது. இதனால் பல தமிழ் இளைஞர்கள் தமது சொந்த மண்ணில் உயர்கல்வி கற்க முடியாத நிலை ஏற்பட்டது. தமிழ் பல்கலைக்கழகங்களில் கணிசமான எண்ணிக்கையில் சிங்கள மாணவர்கள் உள்ளனர். இது தமிழ் கல்விக்கழகப் பகுதியை சிங்கள மையமாக உருவாக்கும் மற்றொரு முறையாகும்.

5. இனப்படுகொலையாளர்களான இலங்கை ஆயுதப்படையினரால் எமது நிலத்தை ஆக்கிரமித்துள்ளதை நிறுத்துமாறு கோருகின்றோம்.

2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு, போர் பற்றிய எந்த அறிகுறியும் இல்லை. எனவே, அனைத்து இராணுவ முகாம்களையும் அகற்றிவிட்டு, தமிழர்கள் தங்கள் சொந்த மண்ணில் நிம்மதியாக வாழ அனுமதிக்க வேண்டும்.

6. அனைத்து சிங்கள பௌத்த சின்னங்களையும் தெற்கே திரும்பப் பெறுங்கள்

வரலாற்றுத் துல்லியத்தை நிவர்த்தி செய்வதற்கு, வடக்கு கிழக்கில் உள்ள எந்தவொரு பௌத்த சின்னங்களையும் அகற்றுவது முக்கியம், அவை சிங்களத்தின் தொல்பொருள் புனைகதைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. அனைத்து புத்த சின்னங்களையும் தெற்கே திருப்பி விடுங்கள்.

7. தயவு செய்து வடக்கு கிழக்கு தாயகத்தில் தலையிடுவதை தவிர்க்கவும்.

சிங்களவர்கள் வடக்கு கிழக்கு தாயகத்தில் ஆக்கிரமிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். சிங்கள தென்னிலங்கையில் வாழும் தமிழர்கள் சிங்களவர்களினால் எத்தகைய அச்சுறுத்தலுக்கும் பயப்படுகிறார்கள் என்பதை சிங்களவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இது நடக்கும் போதெல்லாம் சிங்கள தெற்கிலிருந்து மக்கள் வடக்கு கிழக்கில் உள்ள தமிழர் தாயகத்திற்கு ஓடிவிடுவார்கள். சிங்களக் குடியேற்றங்களிலிருந்து வடக்கு கிழக்குப் தாயகத்தின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதே எமது நோக்கமாகும். இலங்கையின் தெற்குப் பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான தமிழர்கள் இறுதியில் நாட்டை விட்டு வெளியேறுகிறார்கள் அல்லது வடக்கு-கிழக்குக்குத் திரும்புவதைத் தேர்வு செய்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுவது முக்கியம்.

8. இந்தத் தீவின் வரலாற்றை சிங்களவர்கள் பொய்யாக்கக் கூடாது.

மகா பாரதத்தின் கூற்றுப்படி, இந்த தீவு 5000 ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் இந்து மன்னர் ராவணனின் ஆட்சியின் கீழ் இருந்தது. மறுபுறம் சிங்கள மக்களின் வரலாறு 500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. எனவே, மகா வம்சம் முழுத் தீவையும் பௌத்த தேசமாக மாற்ற வேண்டும் என்று முன்மொழிந்த போது, ஆசிரியர் மஹாநாம மகா தேரர் அதை குறிப்பிட்ட வகையில் பக்கச்சார்பாக மற்றும் இனவாத முறையில் எழுதியதாக வாதிடலாம்.

நாம் குறிப்பிட்டுள்ள அனைத்தையும் சிங்களவர்கள் செய்யத் தயாராக இருந்தால், அது ஒரு நேர்மையான நல்லிணக்கமாக கருதப்படும். இல்லையேல், கடந்த 75 வருடங்களின் தொடர் கதையாகும்.

கடந்த 14 வருடங்களாக இலங்கையின் நடவடிக்கைகள் மன்னிக்க முடியாதவை என்பதை வலியுறுத்துவது முக்கியமானது. , எமது காணிகளை அபகரிக்க தமது அரச திணைக்களத்தின் ஊடாக பொய்யான கதைகளை பிரயோகித்து எம்மை ஏமாற்றுகின்றனர்.

அபகரிக்கப்பட்ட காணிகளில் சிங்களக் குடியேற்றங்களை ஏற்படுத்துதல், எமது இந்து வழிபாட்டுத் தலங்களை வலுக்கட்டாயமாக அபகரித்து பௌத்த மதத்துடன் தொடர்புடைய சின்னங்கள் மற்றும் விகாரைகளை நிறுவுதல். இந்த நடவடிக்கைகள் வடக்கை சிங்களமயமாக்கும் அடக்குமுறை மற்றும் ஆக்கிரமிப்பு முயற்சிகளாகவே பார்க்க முடியும். 

மேலும் முக்கியமாக, வடக்கு கிழக்கில் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு கட்டுப்பாடற்ற நடமாட்டத்தை அனுமதிப்பதன் மூலம் எமது இளைஞர்கள் மற்றும் சிறுமிகளுக்கு போதைப்பொருள் கொடுப்பது. இந்த போதைப் பொருட்கள் கேரளாவில் இருந்து கடல் வழியாக கடத்தப்படுகிறது. டீலர்கள் சிங்களப் பொலிசுக்கும் இராணுவத்திற்கும் கமிஷன் கொடுத்து, அவற்றைத் தங்கள் சொந்த வியாபார நடவடிக்கைகளாக மாற்றுகிறார்கள்.

இந்த மருந்துகள் தெருக்களிலும் கடைகளிலும் விற்கப்படுகின்றன, பெரும்பாலும் மற்ற பொருட்களாக மாறுவேடமிட்டு வருகின்றன. துரதிர்ஷ்டவசமாக, இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் பள்ளிகளுக்குள்ளும் கூட நடக்கின்றன.

துன்பங்களுக்கு தீர்வு காணும் வகையில், நல்லிணக்கம் என்ற கருத்தாக்கத்தில் தமிழர்கள் வாக்கெடுப்பு நடத்துவதற்கான வாய்ப்பை உள்ளடக்கியிருப்பது முக்கியமானது. இது அவர்கள் சிங்களவர்களுடன் வாழ விரும்புகின்றார்களா அல்லது தமது சொந்த இறையாண்மையை நிலைநாட்ட விரும்புகின்றார்களா என்பதை தீர்மானிக்க அவர்களுக்கு அதிகாரம் அளிக்கும். இந்த வாக்கெடுப்பில் வடக்கு கிழக்கில் வசிக்கும் தமிழர்கள் மற்றும் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

image_8db5963019.jpg

 

https://www.tamilmirror.lk/வன்னி/இமாலய-துரோகிகள்-எனத்-தெரிவித்து-புகைப்படங்கள்-மீது-முட்டை-வீச்சு/72-330387

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, Kandiah57 said:

நான் உள்பட எவர் சொல்வதும் நடக்க போவதில்லை நடைமுறைப்படுத்தப்படப்போவதில்லை அப்படி இருக்க ஏன். குறைந்த பட்ச முன்மொழிவுகளை கூறவேண்டும்?? 

அப்படியென்றால், கந்தையரும் அல்வாயனும் குறை கூறிக்கொண்டு இருப்பீர்களே தவிர அதற்கான காரணங்களைச் சொல்லப்  போவதில்லை? 

நீங்களும்  செய்யப்போவதில்லை, யாரவது நன்மை செய்ய முனைந்தால் அவர்களையும் விடப் போவதில்லை. 

இதற்கு தமிழில் அழகான சொல்லடை ஒன்று உண்டு,......

 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Kapithan said:

அப்படியென்றால், கந்தையரும் அல்வாயனும் குறை கூறிக்கொண்டு இருப்பீர்களே தவிர அதற்கான காரணங்களைச் சொல்லப்  போவதில்லை? 

நீங்களும்  செய்யப்போவதில்லை, யாரவது நன்மை செய்ய முனைந்தால் அவர்களையும் விடப் போவதில்லை. 

இதற்கு தமிழில் அழகான சொல்லடை ஒன்று உண்டு,......

 

எமக்கு முன்னமே தெரியும் ..பேச்சுவார்த்தையில் பேசப்படும் எந்த விடையமும்..நடைமுறைப்படுத்த சிங்களம் தயாரில்லை.. ஆனால் உலகப்பந்திலெமக்கான குறைந்தளவு தீர்வுக்கான ,அல்லதுசட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்படும் சூழ்நிலை வரும்போது..அரசின் கைக்கூலிகள் ..இலங்கைநோக்கிப் படைய்டுப்பார்கள்...நடைபெறும் ஆலாபனையில்..உள்ளதும் இல்லாமல் போகும்...இதற்கு யாழில் உள்ள ஒத்தூதி தொடக்கம் முதலே மூளைச்சலவை செய்யத்தொடங்கிவிடுவார்..எனெனில் அவரி ன்  தொழிலே அதுதான்..இந்த யாழில் இவர் முன்மொழியாத பேச்சுவார்த்தை நாடகம் ஏதாவது உண்டா என்று யாராவது கூறட்டும் பார்க்கலாம்...எனெனில் அவரின் டிசைனே அப்படி..கனடா ,அவுச்திரேலிய ,லண்டன் பொது அமைப்புக்களே.. இதற்கு கண்டனம் தெரிவிக்கும்போது..யாழில் ஒருவர் மட்டும் ஊதிப்பெருப்பித்து ஆரவாரம்..செய்வதன் நோக்கம் என்ன..பொது சனங்களே  உங்கள்  தீர்ப்புக்கு விட்டுள்ளேன்..

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, alvayan said:

எமக்கு முன்னமே தெரியும் ..பேச்சுவார்த்தையில் பேசப்படும் எந்த விடையமும்..நடைமுறைப்படுத்த சிங்களம் தயாரில்லை.. ஆனால் உலகப்பந்திலெமக்கான குறைந்தளவு தீர்வுக்கான ,அல்லதுசட்ட நடவடிக்கைகள்  எடுக்கப்படும் சூழ்நிலை வரும்போது..அரசின் கைக்கூலிகள் ..இலங்கைநோக்கிப் படைய்டுப்பார்கள்...நடைபெறும் ஆலாபனையில்..உள்ளதும் இல்லாமல் போகும்...இதற்கு யாழில் உள்ள ஒத்தூதி தொடக்கம் முதலே மூளைச்சலவை செய்யத்தொடங்கிவிடுவார்..எனெனில் அவரி ன்  தொழிலே அதுதான்..இந்த யாழில் இவர் முன்மொழியாத பேச்சுவார்த்தை நாடகம் ஏதாவது உண்டா என்று யாராவது கூறட்டும் பார்க்கலாம்...எனெனில் அவரின் டிசைனே அப்படி..கனடா ,அவுச்திரேலிய ,லண்டன் பொது அமைப்புக்களே.. இதற்கு கண்டனம் தெரிவிக்கும்போது..யாழில் ஒருவர் மட்டும் ஊதிப்பெருப்பித்து ஆரவாரம்..செய்வதன் நோக்கம் என்ன..பொது சனங்களே  உங்கள்  தீர்ப்புக்கு விட்டுள்ளேன்..

என்னைத் திட்டித் தீர்த்தது ஒருபக்கம் கிடக்கட்டும் அல்வாயன், 

அவுஸ், கனடா, UK நாடுகளில் உள்ள பொது அமைப்புக்கள் எதிர்ப்பதனால் தாங்களும் எதிர்க்கிறீர்கள? ஏன் தங்களுக்கு சொந்தப் புத்தி இருக்கிறது அல்லவா? இழுத்து விடுவது ஒன்று ரெண்டை,....

இந்த முயற்சிகளை முன்னெடுப்பதனை தாங்கள் எதிர்ப்பதற்கு தங்களிடம் தக்க விளக்கமோ அல்லது மாற்றுத் திட்டமோ இல்லை. 

ஆனால் எந்த முயற்சிக்கும் நந்தி மாதிரி குறுக்கே நிற்பீர்கள். 

😏

  • கருத்துக்கள உறவுகள்
55 minutes ago, Kapithan said:

என்னைத் திட்டித் தீர்த்தது ஒருபக்கம் கிடக்கட்டும் அல்வாயன், 

அவுஸ், கனடா, UK நாடுகளில் உள்ள பொது அமைப்புக்கள் எதிர்ப்பதனால் தாங்களும் எதிர்க்கிறீர்கள? ஏன் தங்களுக்கு சொந்தப் புத்தி இருக்கிறது அல்லவா? இழுத்து விடுவது ஒன்று ரெண்டை,....

இந்த முயற்சிகளை முன்னெடுப்பதனை தாங்கள் எதிர்ப்பதற்கு தங்களிடம் தக்க விளக்கமோ அல்லது மாற்றுத் திட்டமோ இல்லை. 

ஆனால் எந்த முயற்சிக்கும் நந்தி மாதிரி குறுக்கே நிற்பீர்கள். 

😏

யாரை பார்த்து நந்தி என்கிறீர்கள்...தமிழருக்கு நீதியான  தீர்வு கிடைக்கக்கூடாது என்றகூட்டத்துடன் நின்று குழைக்கடிக்கும் உங்களையா சொல்கிறீர்கள்...சூடு சொரணையில்லாமல் உப்புச் சப்பற்ற..இல்லாதஒன்றிற்கு வற்புறுத்தும் உங்களையா சொல்கிறீர்கள்...இதற் கு தமிழரை இணங்கவைத்துவிட்டல் இலட்சாதிபதி கனவுடன் இருக்கும் உங்களையா சொல்கிறீர்கள்....றோட்டிலை போறவன் வாறவன் எல்லோரையும் சிங்களவன்கூப்பிட்டு அப்பமும் ..சாராயமும் கொடுத்து பார்ட்டி  வைத்து அறிக்கையு ம் விட்டவுடன் ...ஆலவட்டம் சாமரை வீசும் உங்களையா சொல்கிறீர்கள்....இன்னமும் எடுத்துவிடவா....இதிலை எந்த முயற்சி கிடக்கிறது குறுக்கே வந்து படுப்பதற்கு...தயவு செய்து தமிழினத்தை வாழவிடுங்கள்...உங்கள் சுயலாபத்திற்காக..மற்றவரை காட்டிக்கொடுக்க வேண்டாம்...கோடரியில் இருந்து காம்பை கழட்டிவிடவும் ..அதன்பின்பு  கோடரி என்ன செய்கிறது என்பது பார்ப்போம்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

யாரை பார்த்து நந்தி என்கிறீர்கள்...தமிழருக்கு நீதியான  தீர்வு கிடைக்கக்கூடாது என்றகூட்டத்துடன் நின்று குழைக்கடிக்கும் உங்களையா சொல்கிறீர்கள்...சூடு சொரணையில்லாமல் உப்புச் சப்பற்ற..இல்லாதஒன்றிற்கு வற்புறுத்தும் உங்களையா சொல்கிறீர்கள்...இதற் கு தமிழரை இணங்கவைத்துவிட்டல் இலட்சாதிபதி கனவுடன் இருக்கும் உங்களையா சொல்கிறீர்கள்....றோட்டிலை போறவன் வாறவன் எல்லோரையும் சிங்களவன்கூப்பிட்டு அப்பமும் ..சாராயமும் கொடுத்து பார்ட்டி  வைத்து அறிக்கையு ம் விட்டவுடன் ...ஆலவட்டம் சாமரை வீசும் உங்களையா சொல்கிறீர்கள்....இன்னமும் எடுத்துவிடவா....இதிலை எந்த முயற்சி கிடக்கிறது குறுக்கே வந்து படுப்பதற்கு...தயவு செய்து தமிழினத்தை வாழவிடுங்கள்...உங்கள் சுயலாபத்திற்காக..மற்றவரை காட்டிக்கொடுக்க வேண்டாம்...கோடரியில் இருந்து காம்பை கழட்டிவிடவும் ..அதன்பின்பு  கோடரி என்ன செய்கிறது என்பது பார்ப்போம்

என்னைத் திட்டித் தீர்த்தது ஒருபக்கம் கிடக்கட்டும் அல்வாயன், 

அவுஸ், கனடா, UK நாடுகளில் உள்ள பொதுஅமைப்புக்கள் எதிர்ப்பதனால் தாங்களும் எதிர்க்கிறீர்கள? ஏன் தங்களுக்கு சொந்தப் புத்தி இருக்கிறது அல்லவா? இழுத்து விடுவது ஒன்றுரெண்டை,....

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, Kapithan said:

 

என்னைத் திட்டித் தீர்த்தது ஒருபக்கம் கிடக்கட்டும் அல்வாயன், 

அவுஸ், கனடா, UK நாடுகளில் உள்ள பொதுஅமைப்புக்கள் எதிர்ப்பதனால் தாங்களும் எதிர்க்கிறீர்கள? ஏன் தங்களுக்கு சொந்தப் புத்தி இருக்கிறது அல்லவா? இழுத்து விடுவது ஒன்றுரெண்டை,....

அந்த நாட்டு உண்மையான விவாசிகள் இருக்கின்றார்கள்...அவர்கள் வேதனை அடைவ்தில் 100 வீத நியாயம் உண்டு...உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்துகொண்டு...நியாயவாதிநாந்தான் என்று காட்ட அவர்கள்  உங்களைப் போலல்ல... அதனைவிட நல்லதொரு தீர்வை நாங்கள்  சொன்னாலும் ...பூசிமெழுகி நீர்த்துப்போகச் செய்யும் உங்களைப் போன்றோர்  இருக்கும்வரை தமிழினத்துக்கு..விமோசனமும் கிடையாது...ஒன்றுமே இல்லாத ஒரு பிரகடனத்துக்கு உச்சத்தில் காவடி எடுத்து உலக்கும் நீங்கள் இருக்கும்வர விமோசனம் இல்லை..ஆனால் கிடைக்கும் பங்கில் நீங்கள் என்சோய் பண்ண முடியும்...என்சாய்..

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, alvayan said:

அந்த நாட்டு உண்மையான விவாசிகள் இருக்கின்றார்கள்...அவர்கள் வேதனை அடைவ்தில் 100 வீத நியாயம் உண்டு...உண்டவீட்டுக்கு இரண்டகம் செய்துகொண்டு...நியாயவாதிநாந்தான் என்று காட்ட அவர்கள்  உங்களைப் போலல்ல... அதனைவிட நல்லதொரு தீர்வை நாங்கள்  சொன்னாலும் ...பூசிமெழுகி நீர்த்துப்போகச் செய்யும் உங்களைப் போன்றோர்  இருக்கும்வரை தமிழினத்துக்கு..விமோசனமும் கிடையாது...ஒன்றுமே இல்லாத ஒரு பிரகடனத்துக்கு உச்சத்தில் காவடி எடுத்து உலக்கும் நீங்கள் இருக்கும்வர விமோசனம் இல்லை..ஆனால் கிடைக்கும் பங்கில் நீங்கள் என்சோய் பண்ண முடியும்...என்சாய்..

““அதனைவிடநல்லதொரு தீர்வை நாங்கள்  சொன்னாலும்“”

சொல்லுறது,......

  • கருத்துக்கள உறவுகள்
On 25/12/2023 at 12:42, goshan_che said:

முட்டை விக்கிற விலைக்கு இதென்ன விசர் வேலை…..

மாட்டு சாணி….இப்பவும் free தானே?

உரம் விக்கிற விலையில மாட்டுச்சாணியை இவர்களுக்கு வேஸ்ட் பண்ணக்குடாது வேணுமெண்டால்......

  • கருத்துக்கள உறவுகள்
18 hours ago, Cruso said:

எனவே இங்குள்ள தமிழ் அரசியல்வாதிங்கள் ஒற்றுமைப்படா விடடாள் எப்போதும் உறங்கு நிலைதான். 

வருகின்ற நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளையும்  எதிர்பதை பார்த்தால்  உறங்கு நிலை உறுதி போல் உள்ளது ☹️

  • கருத்துக்கள உறவுகள்
17 minutes ago, Kapithan said:

““அதனைவிடநல்லதொரு தீர்வை நாங்கள்  சொன்னாலும்“”

சொல்லுறது,......

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

இவர்தான் நீங்கள்  என்பதை உறுதிப்படுத்துகின்றேன்..யாழ்கள உறவுகளும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்...வள  வளா கேள்விகள்  இத்துடன் முடியும் என நினைக்கின்றேன்

  • கருத்துக்கள உறவுகள்
32 minutes ago, alvayan said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

இவர்தான் நீங்கள்  என்பதை உறுதிப்படுத்துகின்றேன்..யாழ்கள உறவுகளும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்...வள  வளா கேள்விகள்  இத்துடன் முடியும் என நினைக்கின்றேன்

இதுதான் உங்கள் முன்மொழிவா? 

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!

இவர்தான் நீங்கள்  என்பதை உறுதிப்படுத்துகின்றேன்..யாழ்கள உறவுகளும் ஏற்றுக்கொள்ளும்படி வேண்டுகின்றேன்...வள  வளா கேள்விகள்  இத்துடன் முடியும் என நினைக்கின்றேன்

தயவுசெய்து ""இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன்."" என்கிற தலைப்பின் கீழ், நுணாவிலான் இணைத்துள்ள கனேடியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை வாசிக்கவும். 

ஆடறுக்க முன்னர் ......... விலை பேசக்கூடாது” என்பது இதற்காகத்தான்,...  

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, விளங்க நினைப்பவன் said:

வருகின்ற நல்ல நோக்கம் கொண்ட முயற்சிகளையும்  எதிர்பதை பார்த்தால்  உறங்கு நிலை உறுதி போல் உள்ளது ☹️

 

ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு கிட்டத்தட்ட 15 வருடங்கள் ஆகின்றது. இன்னும் இதே அளவு காலம் சென்றால் 30 வருடங்கள். 

இனி வரும் தலைமுறை பிரச்சனைகளை எப்படி கையாளுமோ. 

  • கருத்துக்கள உறவுகள்

ஒடுக்கப்படும் மக்கள் அதிலிருந்து வெளியே வராமல் இருக்க ஒரு அதி தீவிர தலைமையையே கொண்டு இருக்க வேண்டும் என அம் மக்களை ஒடுக்க வேண்டும் என நினைக்கும் அரசுகள் நினைக்கின்றன

 

ஆகவே அனுமதிக்கப்பட்ட அல்லது வழங்கப்பட்ட நிபந்தனைகளுள் அந்த ஒடுக்கப்பட்ட மக்கள் தமக்கான ஒரு அதிதீவிரத் தலைமையை தேர்வுசெய்வதே உண்மையில் நடக்கிறது. இது அம்மக்களை பரிதாபகரமானதும் நம்பிக்கை இழந்ததுமான நிலைக்குள் தள்ளவிடுகின்றது

ஹமாசை உருவாக்கி பலஸ்தீனியர்களை அதி தீவிர தன்மைக்குள் தள்ளிய இஸ்ரேலும், போராளிகளை உருவாக்கி எம்மை அதி தீவிர நிலைக்கு தள்ளிய இந்தியாவுக்கும் நோக்கம் ஒன்று தான்.

தூர நோக்கும் கூரிய சிந்தனையும் கொண்ட மக்கள் கூட்டம் என உரிமை பாராட்டும் நாம் மீண்டும் மீண்டும் அதி தீவிர நிலையை எடுத்து,எமக்கு நாமே கொள்ளிக் கட்டையால் சூடு போட்டுக்கொள்வது ஏனோ தெரியவில்லை.

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

தயவுசெய்து ""இமாலயப் பிரகடனமும் மகா சங்கமும் – நிலாந்தன்."" என்கிற தலைப்பின் கீழ், நுணாவிலான் இணைத்துள்ள கனேடியத் தமிழர் பேரவை வெளியிட்டுள்ள அறிக்கையை வாசிக்கவும். 

ஆடறுக்க முன்னர் ......... விலை பேசக்கூடாது” என்பது இதற்காகத்தான்,...  

பணத்துக்காக பிணத்தையும் தின்னக்கூடியவைக்குத்தான்  உது பொருந்தும்...மற்றவர்களுக்கு அல்ல...மரத்துப்போனதுகளுக்கு என்ன சொன்னாலும் ஏறாதுதானே...இந்தப் பிரகடனத்தில்..சோன்னதில் ஒன்றையாவது சணாதிபதியோ...சிங்களவனோ ஏற்றுக்கொண்டதாக ஒரு வசனம் விட்டதாக நீங்கள்  கைநீட்டி கையுறை பெறும் ஒருவரிடம் கேட்டுச்  சொல்லலாமே...இப்படியான ஆட்களுக்குத்தான் ஆடறுக்க முன் அது தெரியும்...

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, புலவர் said:

உரம் விக்கிற விலையில மாட்டுச்சாணியை இவர்களுக்கு வேஸ்ட் பண்ணக்குடாது வேணுமெண்டால்......

 

 

Edited by goshan_che

  • கருத்துக்கள உறவுகள்
51 minutes ago, alvayan said:

1) பணத்துக்காக பிணத்தையும் தின்னக்கூடியவைக்குத்தான்  உது பொருந்தும்...மற்றவர்களுக்கு அல்ல...மரத்துப்போனதுகளுக்கு என்ன சொன்னாலும் ஏறாதுதானே...

2) இந்தப்பிரகடனத்தில்..சோன்னதில் ஒன்றையாவது சணாதிபதியோ...சிங்களவனோ ஏற்றுக்கொண்டதாக ஒரு வசனம் விட்டதாக

3) நீங்கள்  கைநீட்டி கையுறை பெறும்

ஒருவரிடம் கேட்டுச்  சொல்லலாமே...இப்படியான ஆட்களுக்குத்தான் ஆடறுக்க முன் அது தெரியும்...

 

48 minutes ago, alvayan said:

34) வாங்கின கூலிக்கு இந்தவருச கோட்டா இன்னும் முடியவில்லைபோல் உள்ளது...கூவுங்க..

1) பணத்துக்காக பிணத்தை உண்ணுபவர்களென்று CTC யை சொல்லுகிறீர்களோ - ஐயா, Alfred Thuraiyappaa வுக்கு வெடி விழ முன்னமே நாட்டை விட்டு  வெளியேறியதாக தாங்கள் சொன்னதாக நினைவு.  உதைக் கூறுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? 

2) இமயமலை பிரகடனம் என்றால் என்னவென்றும் அதன் நோக்கம் என்னவென்றும்  CTC தனது அறிக்கையில்  தெளிவாகக் கூறியுள்ளது. அது தங்களுக்குப் புரியாவிட்டால்  அதிகம் படித்தவர்களிடம் விளக்கம் கேட்கப் பரிந்துரைக்கிறேன். 

3) நாங்கள் யார்? 4மாற்றுக் கருத்தாளர், புதிய சிந்தனையாளர்,  வேகமாக வளர்ந்து வருபவன, தங்களுக்குப் பிடிக்காதவன் என எல்லோரையும் துரோகிப் பட்டம் சூட்டி  மண்டையில் போட்ட ஆட்கள்தானே. தங்கள் சிந்தனை முறையும் இன்னொருவனை  துரோகி, காட்டிக் கொடுப்பவன் எனச் சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

4) பிறக்கப்போகும் புதிய வருடம் தங்களுக்கும் தங்கள்  ஆசிரியருக்கும் புதிய, ஆரோக்கியமான  சிந்தனையைக் கொடுக்கட்டும் என வாழ்த்துகிறேன். 

👍

  • கருத்துக்கள உறவுகள்
13 minutes ago, Kapithan said:

 

1) பணத்துக்காக பிணத்தை உண்ணுபவர்களென்று CTC யை சொல்லுகிறீர்களோ - ஐயா, Alfred Thuraiyappaa வுக்கு வெடி விழ முன்னமே நாட்டை விட்டு  வெளியேறியதாக தாங்கள் சொன்னதாக நினைவு.  உதைக் கூறுவதற்கு உங்களுக்கு அருகதை இருக்கிறதா? 

2) இமயமலை பிரகடனம் என்றால் என்னவென்றும் அதன் நோக்கம் என்னவென்றும்  CTC தனது அறிக்கையில்  தெளிவாகக் கூறியுள்ளது. அது தங்களுக்குப் புரியாவிட்டால்  அதிகம் படித்தவர்களிடம் விளக்கம் கேட்கப் பரிந்துரைக்கிறேன். 

3) நாங்கள் யார்? 4மாற்றுக் கருத்தாளர், புதிய சிந்தனையாளர்,  வேகமாக வளர்ந்து வருபவன, தங்களுக்குப் பிடிக்காதவன் என எல்லோரையும் துரோகிப் பட்டம் சூட்டி  மண்டையில் போட்ட ஆட்கள்தானே. தங்கள் சிந்தனை முறையும் இன்னொருவனை  துரோகி, காட்டிக் கொடுப்பவன் எனச் சொல்வதில் ஆச்சரியம் எதுவும் இல்லை.

4) பிறக்கப்போகும் புதிய வருடம் தங்களுக்கும் தங்கள்  ஆசிரியருக்கும் புதிய, ஆரோக்கியமான  சிந்தனையைக் கொடுக்கட்டும் என வாழ்த்துகிறேன். 

👍

மர மண்டைகளுக்கு தலையில் ஒன்றுமே ஏறா து என்பதற்கு உதாரணம்...பழையகால ஊசி மழுங்கின ரெக்கோட் பிளேயர் இது...கொடுத்த ராக்கெட்டுக்கு கூவிக்கொண்டே இருக்கும்...பதில் எழுதும்போது..உம்மிடம் எவ்வளவு அவதானமாயிருப்போம் என்பதை இன்னும் உணரத்தெரியாத அப்பாவிதானே....பணம் பாதாளம் வரையும் பாயும் என்பதற்கு ஒரு உதாரணம்..உப்பிடி எத்தனை உருட்டுக்கட்டைகளை யாழில் கண்டிருக்கிறேன்..அதிலை ஒன்றுமட்டும் பிசின் போலை ...

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, goshan_che said:

 

 

நல்ல இடத்தில் நல்ல கருத்துப்பாருங்கோ...சூப்பர்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, alvayan said:

மர மண்டைகளுக்கு தலையில் ஒன்றுமே ஏறா து என்பதற்கு உதாரணம்...பழையகால ஊசி மழுங்கின ரெக்கோட் பிளேயர் இது...கொடுத்த ராக்கெட்டுக்கு கூவிக்கொண்டே இருக்கும்...பதில் எழுதும்போது..உம்மிடம் எவ்வளவு அவதானமாயிருப்போம் என்பதை இன்னும் உணரத்தெரியாத அப்பாவிதானே....பணம் பாதாளம் வரையும் பாயும் என்பதற்கு ஒரு உதாரணம்..உப்பிடி எத்தனை உருட்டுக்கட்டைகளை யாழில் கண்டிருக்கிறேன்..அதிலை ஒன்றுமட்டும் பிசின் போலை ...

 ஆத்திரக் காறனுக்கு புத்தி மட்டு. 

59 minutes ago, alvayan said:

நல்ல இடத்தில் நல்ல கருத்துப்பாருங்கோ...சூப்பர்

ஒரே சிந்தனை. 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.