Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
27 FEB, 2024 | 03:49 PM
image

தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால், அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். 

குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது  கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும்.

2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர்.

என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன். அதற்காக எனது அமைச்சு பதவியை துறந்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177432

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:
27 FEB, 2024 | 03:49 PM
image

தமிழக கடற்தொழிலாளர்கள் விடயத்தில் தனக்கு அழுத்தங்கள் அதிகரித்தால், அமைச்சு பதவியை துறந்து விட்டு எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராட்டத்தில் குதிப்பேன் என கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். 

யாழ்ப்பாணம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் செவ்வாய்க்கிழமை (27) இலங்கை சமூக பாதுகாப்புச் சபையின் ஏற்பாட்டில் நடைபெற்ற நிகழ்வின் பின்னர்  ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். 

இந்திய தூதுவருடனான சந்திப்பின் போது தமிழக கடற்தொழிலாளர்களின் அத்துமீறிய சட்டவிரோத கடல் நடவடிக்கைகள் தொடர்பில் எடுத்துக் கூறியிருந்ததுடன் அதனால் எமது கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடியிருந்தேன். 

குறிப்பாக எமது கடல் வளங்கள் சுறண்டப்படுவது தொடர்பிலும் எமது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரம் அழிக்கப்படுவது தொடர்பிலும் சுட்டிக்காட்டி அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தியிருந்தேன்.

இலங்கை எல்லைக்குள் நுழைந்து சட்டவிரோத தொழில் நடவடிக்கையின்போது  கைது செய்யப்பட்ட மீனவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டமை தொடர்பில் தமிழகத்தில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. 

போராட்டம் செய்வது அவர்களது உரிமை. அதேநேரம் அவர்கள் தமது கோரிக்கையை முன்வைத்துள்ளார்கள். ஆனால் சட்டரீதியாக இதை பார்க்க வேண்டும்.

2018 இல் இது தொடர்பான சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதில் ஒரு தடவை எல்லை மீறியிருந்தால் எச்சரிக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்படுவர் என்றும் அதற்கு மேல் மீண்டும் எல்லை தாண்டியிருந்தால் சட்டரீதியான தண்டனை வழங்கப்படும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கேற்ப தற்போது ஒன்றுக்கு மேற்பட்ட சந்தர்ப்பத்தில் எல்லைதாண்டி உள்நுழைந்த வந்தவர்கள் சட்டரீதியாக தண்டிக்கப்பட்டுள்ளனர். இதில் படகு ஓட்டி உரிமையாளர்கள், தண்டிக்கப்பட்டுள்ளனர்.

என்னைப் பொறுத்தளவில் எமது நாடு, எமது கடல், எமது மக்கள் அதற்கே எனது முன்னுரிமை என்பதாகும். அதுவே நியாயம் என்றும் கருதுகின்றேன். அதற்காக எனது அமைச்சு பதவியை துறந்து எமது கடற்றொழிலாளர்களுடன் இணைந்து போராடுவேன் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/177432

வேளைக்கு செய்யுங்கோ எனக்குநிறைய வேலை கிடக்கு உங்கடை பதவிலகலைப் பார்த்திட்டு தான் போக வேணும் என்றுநிக்கிறன்

  • கருத்துக்கள உறவுகள்
7 minutes ago, வாதவூரான் said:

வேளைக்கு செய்யுங்கோ எனக்குநிறைய வேலை கிடக்கு உங்கடை பதவிலகலைப் பார்த்திட்டு தான் போக வேணும் என்றுநிக்கிறன்

அவருக்கு இரண்டு பக்கங்களிலும் இருந்து வரும் சூட்கேஸ் வருவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது போலத்தான் தெரிகிறது 

  • கருத்துக்கள உறவுகள்

இவராவது பதவி விலகிறதாவது. அமைச்சர் பதவிக்காக கட்சி மாறும் இவர் பதவியும் விலக மாட்டார்.  பிரச்சனையும் தீர்க்க மாட்டார். பக்கா அரசியல்வாதி ஆகி விட்டார்.

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணை இப்ப பதவியை துறந்து போராடுவார்..

IMG-20240227-213703.jpg

  • கருத்துக்கள உறவுகள்

பனங்காட்டு நரி,ஈழத்து எம்.ஜி.ஆர்  ,இராவணின் வாரிசு வாழ்க....
😇

  • கருத்துக்கள உறவுகள்+
7 hours ago, வாதவூரான் said:

வேளைக்கு செய்யுங்கோ எனக்குநிறைய வேலை கிடக்கு உங்கடை பதவிலகலைப் பார்த்திட்டு தான் போக வேணும் என்றுநிக்கிறன்

அப்ப நீங்கள் போன மாதிரித்தான்😂

  • கருத்துக்கள உறவுகள்
8 hours ago, nunavilan said:

இவராவது பதவி விலகிறதாவது. அமைச்சர் பதவிக்காக கட்சி மாறும் இவர் பதவியும் விலக மாட்டார்.  பிரச்சனையும் தீர்க்க மாட்டார். பக்கா அரசியல்வாதி ஆகி விட்டார்.

யாருக்கா ?அது யாருக்கா?
அது மக்களுக்கா மக்களுக்காக
அமைச்சு பதவியே போ போ
ஜனநாயகமே வா வா 
சேவை எனும் தூது வந்தது
அது அமைச்சு பதவி என்ற வடிவில் வந்தது

  • கருத்துக்கள உறவுகள்

டக்ளஸ்தாண்டா தமிழன். கடைசி வரைக்கும் களத்தில் நின்று  போராடும் தலைவன். கடலில் சென்றும் போராட துணிந்த தலைவன். தன்னை கொலை செய்ய முயன்றவர்களையே மன்னித்த மாமனிதன். தமிழ் மக்களுக்காக பதவியையும் துறக்க துணிந்த தலைவன். டக்லசின் நல்ல பக்கத்தையும் கொஞ்சம் பாருங்க அண்ணே.😜

  • கருத்துக்கள உறவுகள்

அய்யா இந்தப் போராடத்தில் நீங்கள் தலையிடாவிட்டாலே காணும்...சமரசத் தீர்வு வந்துவிடும்...இதுக்குப்போய் கஸ்டப்பட்டு எடுத்த அமைச்சர் வேலையை..விடுகிறியள்...

  • கருத்துக்கள உறவுகள்

இடக்கிட இந்தியாவில் நின்று போராடினாலும் அவரும் சிங்க தமிழன் 

  • கருத்துக்கள உறவுகள்
23 hours ago, alvayan said:

அய்யா இந்தப் போராடத்தில் நீங்கள் தலையிடாவிட்டாலே காணும்...சமரசத் தீர்வு வந்துவிடும்...இதுக்குப்போய் கஸ்டப்பட்டு எடுத்த அமைச்சர் வேலையை..விடுகிறியள்...

தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான கடும் அறிக்கைகள் எல்லாம் வரும் . அரசியலில் இதெல்லாம் சகஜம் பாருங்கோ . 

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.