-
Tell a friend
-
Topics
-
0
தமிழ் சிறி · தொடங்கப்பட்டது
-
Posts
-
இலங்கைத் தமிழர்களுக்கு ஏதாவது நன்மை நடக்க வேண்டும் என்றால் அது பெரும்பான்மை சிங்கள பௌத்த மக்களால் ஆதரிக்கப் படும் ஒரு ஜனாதிபதியாலேயே/ கட்சியாலேயே முடியும்
-
நற்பேறு ஜெயம் ரவி சொல்வது உண்மையாக இருக்கும்பட்சத்தில் இது மிகப் பரிதாபமானது. அதுவும் அவர் தன்னிடம் மிச்சமாக இருப்பது வெறும் கார் தான் எனும்போது வருத்தமாக இருக்கிறது. இதுவே ஒரு நடிகைக்கு நடந்திருந்தால்? நயந்தாராவோ திரிஷவோ தான் நடித்து சம்பாதித்த பணத்தையெல்லாம் ஒரு தயாரிப்பாளர் சுருட்டி தன்னைத் தெருவில் விட்டுவிட்டார் என்று சொன்னால் அவரை ஊரே சேர்ந்து பந்தாடியிருக்கும். ஆணுக்கு நடந்தால் கண்டும்காணாமல் விட்டுவிடுவார்கள். ஆண்களால் அழுதுகாட்டவும் முடியாது. ஜெயம் ரவிக்கும் விவாகரத்தாகும் வேறு மத்திய, மேல்மத்திய வர்க்க ஆண்களுக்குமான வித்தியாசம் பின்னவர்களின் பணத்தையும் சொத்தையும் மொத்தமாக செட்டில்மெண்டின் போது பிடுங்கியிருப்பார்கள். ஜெயம் ரவிக்கு அது விவாகரத்தாகு முன்பே நடந்திருக்கிறது. என்ன கொடுமையென்றால் நம் சமூகமே இதுதான் சரியெனும் நம்பிக்கை கொண்டிருப்பது தான் - ஆண்களின் உழைப்பு, பணம், சொத்தெல்லாம் அவர்களுடையது அல்ல, அதை யாராவது பயன்படுத்தவேண்டும், பிடுங்கவேண்டும், அதுவே கடமையாற்றுவது, கண்ணியமாக பாசமாக இருப்பது என சமூகம் நம்புகிறது. அக்கா, தங்கை, அம்மாவுக்காக கொடுப்பது, மனைவி, பிள்ளைக்கு கொடுப்பது என இளமை முதல் வயோதிகம் வரை ஆண்கள் தம் உழைப்பை பணமாகவும் சொத்தாகவும் கொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். நாம் எப்போதுமே இதைச் சுரண்டலாகப் பார்ப்பதில்லை - வரதட்சிணையை எடுத்துக்கொள்ளுங்கள். கொடுக்க முடியாததால் துன்பப்பட்ட பெண்ணுக்காக இரக்கப்பட்ட அளவுக்கு நாம் அதைக்கொடுக்க தன் ஒட்டுமொத்த சேமிப்பையும் செலவழித்து போண்டியாகும் அப்பாவுக்காக வருந்துவதில்லை. சொத்து, பணம், பண்பாடு, சட்டம், நடைமுறையென்று வந்துவிட்டால் உண்மையில் இது ஒருவிதத்தில் பெண்ணாதிக்க சமூகம்தான். ஆண்களுக்குப் பேசத் தெரியாது, அவர்கள் அடிப்படையில் முட்டாள்கள் என்பதால் இதை உணரவோ, பிறருக்கு உணர்த்தி நியாயம் கேட்கவோ அவர்களுக்குத் தெரியாது. ஓரமாகப் போய் உட்கார்ந்து அழுதுகொண்டிருப்பார்கள். நான் கடந்த சில ஆண்டுகளில் நான் இத்தகைய ஆண்களை ஏகத்துக்குப் பார்த்திருக்கிறேன் - என் நண்பர் ஒருவருக்கு விவாகரத்தானபோது அவரது ஊடகவியலாளர் மனைவி அவர் தான் இருபதாண்டுகளாக நிகழ்ச்சித் தயாரிப்பிலும் திரைக்கதை எழுத்திலும் சம்பாதித்த பணத்தைக் கொடுத்தால் மட்டுமே குழந்தையைத் தருவதாக பேரம் பேசிப் பெற்றுக்கொண்டார். இதையே அவர் அப்பெண்ணுக்கு செய்திருந்தால் சிறையில் தள்ளியிருப்பார்கள். நம்மூர் சட்டம் சொல்வதென்னவென்றால் குழந்தை பெறுவது, கூட வாழ்வது போன்ற பெண்கள் ஆற்றும் சேவைகளுக்காக ஆண்கள் தம் ஒட்டுமொத்த சொத்தை பணத்தை மொத்தமாகவோ பாதியோ கொடுத்து சரணடைய வேண்டும் என்று. இதுவரையிலும் இது மறைமுகமாக பேரமாக நடக்கிறது. இனிமேல் விரைவில் இது சட்டமாகப் போகிறது என்று சட்டமறிந்த என் நண்பர் ஒருவர் சொன்னார். அப்போது உண்மையிலே ஜாலியாக இருக்கும் - இப்போது பெண்ணிய கொடி தூக்கும் பல ஆண்களுக்கு ஆசனத்தில் நெருப்பு வைத்து ஓடவிடுவார்கள். பல மோசடித் திருமணங்கள் இதற்காகவே நிகழும். சரி ஜெயம் ரவி விவகாரத்துக்கு திரும்ப வருவோம் - ஒருவிதத்தில் அவருக்கு அதிர்ஷ்டம் உண்டு. அவரது மனைவி நினைத்தால் மாதத்திற்கு சில லட்சங்கள் கேட்டு குடும்பநல நீதிமன்றத்திற்குப் போகலாம். நீதிபதியும் நிச்சயமாக அத்தொகையை அனுமதித்து ஆணையிடுவார். ஆனால் ஜெயம் ரவி தரப்பு தன்னை படத்தயாரிப்பின் பேரில் ஏமாற்றிச் சுரண்டியதாக மனைவி, மாமியார் மீது வழக்குப் போடுவார். இந்த வழக்கு வருடக்கணக்கில் நடக்கும். கடைசியில் சமரசம் பண்ணிக்கொள்வார்கள். ஜெயம் ரவி மீதமிருக்கும் காரையும், குடும்ப சொத்தையும் விற்றுக்கொடுக்க வேண்டியிருக்கும். அது நடக்கவில்லை என்பது அவரது நற்பேறு. Posted Yesterday by ஆர். அபிலாஷ் http://thiruttusavi.blogspot.com/2024/09/blog-post_26.html
-
இதை சிரிப்போடு சிந்திக்கவும் . ...... இப் பதிவை எங்கு பதிந்தால் எல்லோரையும் சென்றடையும் என்று யோசித்து இங்கு பதிவிடுகிறேன் . .......ஒரு வைத்தியரின் நகைச்சுவையுடன் கூடிய பொருள் பொதிந்த பேச்சு . ........ உங்களின் செலவில்லாத ஆரோக்கியத்திற்காக சில நிமிசம் ஒதுக்கி பார்க்கலாம் . ........ 😂
-
பெய்ரூட்டில் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகத்தின் மீது தாக்குதல் - இஸ்ரேல் Published By: RAJEEBAN 27 SEP, 2024 | 09:47 PM லெபனான் தலைநகர் பெய்ரூட்டின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹெஸ்புல்லா அமைப்பின் மத்தியகட்டளை தலைமையகத்தின் மீது வான்வெளி தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பெய்ரூட்டை இந்த தாக்குதல் உலுக்கியுள்ளது பாரிய புகைமண்டலத்தை காணமுடிகின்றது என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதல் காரணமாக நான்கு கட்டிடங்கள் அழிக்கப்பட்டன பலர் கொல்லப்பட்டுள்ளனர் என ஹெஸ்புல்லா அமைப்பின் அல்மனார் தொலைக்காட்சி தெரிவித்துள்ளது. பொதுமக்கள் வாழும் பகுதிகளிற்குள் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைமையகம் காணப்பட்டது என இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பாரிய புகைமண்டலம் எழுவதை தொலைக்காட்சி காண்பித்துள்ளது. https://www.virakesari.lk/article/194954
-
By தமிழ் சிறி · பதியப்பட்டது
புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டம் – ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்து! அமெரிக்காவில் துப்பாக்கி வன்முறைக்குத் தீர்வு காணும் விதமாக உருவாக்கப்பட்டுள்ள புதிய துப்பாக்கிக் கட்டுப்பாட்டு சட்டத்தில் ஜனாதிபதி ஜோ பைடன் கையெழுத்திட்டார். இப் புதிய சட்டப்படி, பாடசாலைகளில் மாணவர்களுக்கான துப்பாக்கிச் சுடும் பயிற்சி மேம்படுத்தப்படும் எனவும், சட்டவிரோதமான துப்பாக்கிகள், ஸ்கேனர்கள் மற்றும் மெட்டல் டிடெக்டர்களால் கண்டுபிடிக்க முடியாத 3-டி முறையில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கிகள் உள்ளிட்ட ஆயுதங்களை கண்டறிந்து அழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். அத்துடன் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களின் விற்பனையையும், கண்மூடித்தனமான பயன்பாட்டையும் கண்காணிக்க அதிரடிப் படை அமைக்கப்படும் எனவும் பைடன் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1401465
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
- 1 reply
Picked By
மோகன், -
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.- 1 reply
Picked By
மோகன், -
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.- 1 reply
Picked By
மோகன், -
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.- 20 replies
Picked By
மோகன், -
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.- 7 replies
Picked By
மோகன்,
-
Recommended Posts
Join the conversation
You can post now and register later. If you have an account, sign in now to post with your account.