Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார்.

 

வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில்

வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி | Tension Over Lands In Sl Question In Uk Parliament

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

யார் செய்வது?

இங்கு பொதுவெளியில் எழுதும் பலர் உண்மை நிலவரங்கள் தெரிந்தும் ஊமைகளாய்…….

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

யார் செய்வது?

இங்கு பொதுவெளியில் எழுதும் பலர் உண்மை நிலவரங்கள் தெரிந்தும் ஊமைகளாய்…….

இங்கு மெத்தப் படித்தவர்கள் பலர் இருந்தும் இப்படியான எமது மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்ய முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை.

பதிலுக்கு சீமானின் திரியைக் கண்டால் போதும் இரவு பகலாக அதுக்குள் படுத்திருந்து காவல் காப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் எல்லாரும் கிழிச்சு தொங்க விட்டுடினம்🤣.

 

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

மிச்சம் எல்லாரும் கிழிச்சு தொங்க விட்டுடினம்🤣.

 

நிச்சயம் கிழிச்சு தொங்கவிடுவதாலேயே இந்த திரி இங்கு வந்துள்ளது😂

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

நிச்சயம் கிழிச்சு தொங்கவிடுவதாலேயே இந்த திரி இங்கு வந்துள்ளது😂

நல்லது.  வரவேற்புக்குரியதும்.

இதை போலவே படித்தவர்களும், சீமான் திரியில் காவல் இருப்பவர்களும் தமக்கு முடிந்த வழிகளில் முயலுவார்கள் என்பதை புரிந்து கொண்டால், திரிக்கு வந்த பின்னூட்டங்கள் வந்திராது🤣.

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நல்லது.  வரவேற்புக்குரியதும்.

இதை போலவே படித்தவர்களும், சீமான் திரியில் காவல் இருப்பவர்களும் தமக்கு முடிந்த வழிகளில் முயலுவார்கள் என்பதை புரிந்து கொண்டால், திரிக்கு வந்த பின்னூட்டங்கள் வந்திராது🤣.

“முதலில் உன்னைத் திருத்திக் கொள் சமூகம் தானாக திருந்தும் “ 

என்பதற்கு இணங்க எமது அரசியலில் எவ்வளவோ விடயங்கள் தொக்கி நிற்கும் போது இந்திய அரசியலை நாடுவதில்லை

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

“முதலில் உன்னைத் திருத்திக் கொள் சமூகம் தானாக திருந்தும் “ 

என்பதற்கு இணங்க எமது அரசியலில் எவ்வளவோ விடயங்கள் தொக்கி நிற்கும் போது இந்திய அரசியலை நாடுவதில்லை

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு இலங்கை அரசியலிலும், யூகே அரசியலிலும் இருப்பது ஈடுபாடு.

தமிழக, இந்திய, ஜேர்மன், பிரான்சு, உக்ரேன், ரஸ்ய, தென்னாபிரிக்க, அமெரிக்க, பிரேசில், அவுஸ்ரேலிய அரசியலில் இருப்பது ஆர்வம்.

ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கி கொண்டால் இந்த குழப்பம் வராது.

சிலருக்கு சமையலில் ஆர்வம், மீராவுக்கு கிரிகெட்டில் ஆர்வம், சிலருக்கு கவிதை எழுதுவது ஆர்வம், இன்னும் சிலருக்கு internet trolls ஆக இருப்பதில் ஆர்வம்.

அதே போல் சிலருக்கு உலக, அண்டை நாட்டு அரசியலில் ஆர்வம்.

எமது அரசியலில் விடயங்கள் தொக்கி நிற்பதால் மீரா கிரிகெட் பார்க்காமல் விடுவதில்லை.

அதே போல் கோஷானும் தன் அரசியல் ஆர்வத்தை விட தேவையில்லை.

யாழ் களம் கூட - ஊர் புதினத்துடன், தமிழக, இந்திய, உலக அரசியலுக்கு என ஏன் தனி பகுதிகளை வைத்துள்ளது?

ஊரில் அரசியலில் தொக்கி நிற்கும் விடயங்கள் தீரும் மட்டும் ஏனைய பகுதிகளை மூடலாமே🤣.

புலம்பெயர் நாட்டில் சிலருக்கு இருக்கும், ஏதோ நாம் மட்டும்தான் வெட்டி புடுங்கிறோம், என்ற இந்த வகையான அட்டிடியூட் - 2009 பும், இப்போதும் பல பிரச்சனைகளிற்கு காரணம்.

நீங்கள் செய்கிறீர்களா? சந்தோசம்.

மற்றயவன் என்ன செய்கிறான்/செய்யவில்லை என்பது பற்றி ஒரு துளி கூட தெரியாமல் - அதை பற்றி எழுதுவது மடத்தனம்.

 

இன்னும் கனக்க எழுதலாம்.

பலரின் மனதை நோகடிக்க விரும்பாமையால் விட்டு விலகுகிறேன்.

#மெச்சூரிட்டி

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:
15 hours ago, goshan_che said:

மிச்சம் எல்லாரும் கிழிச்சு தொங்க விட்டுடினம்🤣.

 

 

7 hours ago, goshan_che said:

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு இலங்கை அரசியலிலும், யூகே அரசியலிலும் இருப்பது ஈடுபாடு.

தமிழக, இந்திய, ஜேர்மன், பிரான்சு, உக்ரேன், ரஸ்ய, தென்னாபிரிக்க, அமெரிக்க, பிரேசில், அவுஸ்ரேலிய அரசியலில் இருப்பது ஆர்வம்.

ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கி கொண்டால் இந்த குழப்பம் வராது.

சிலருக்கு சமையலில் ஆர்வம், மீராவுக்கு கிரிகெட்டில் ஆர்வம், சிலருக்கு கவிதை எழுதுவது ஆர்வம், இன்னும் சிலருக்கு internet trolls ஆக இருப்பதில் ஆர்வம்.

அதே போல் சிலருக்கு உலக, அண்டை நாட்டு அரசியலில் ஆர்வம்.

எமது அரசியலில் விடயங்கள் தொக்கி நிற்பதால் மீரா கிரிகெட் பார்க்காமல் விடுவதில்லை.

அதே போல் கோஷானும் தன் அரசியல் ஆர்வத்தை விட தேவையில்லை.

யாழ் களம் கூட - ஊர் புதினத்துடன், தமிழக, இந்திய, உலக அரசியலுக்கு என ஏன் தனி பகுதிகளை வைத்துள்ளது?

ஊரில் அரசியலில் தொக்கி நிற்கும் விடயங்கள் தீரும் மட்டும் ஏனைய பகுதிகளை மூடலாமே🤣.

புலம்பெயர் நாட்டில் சிலருக்கு இருக்கும், ஏதோ நாம் மட்டும்தான் வெட்டி புடுங்கிறோம், என்ற இந்த வகையான அட்டிடியூட் - 2009 பும், இப்போதும் பல பிரச்சனைகளிற்கு காரணம்.

நீங்கள் செய்கிறீர்களா? சந்தோசம்.

மற்றயவன் என்ன செய்கிறான்/செய்யவில்லை என்பது பற்றி ஒரு துளி கூட தெரியாமல் - அதை பற்றி எழுதுவது மடத்தனம்.

 

இன்னும் கனக்க எழுதலாம்.

பலரின் மனதை நோகடிக்க விரும்பாமையால் விட்டு விலகுகிறேன்.

#மெச்சூரிட்டி

 

7 hours ago, goshan_che said:

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு இலங்கை அரசியலிலும், யூகே அரசியலிலும் இருப்பது ஈடுபாடு.

தமிழக, இந்திய, ஜேர்மன், பிரான்சு, உக்ரேன், ரஸ்ய, தென்னாபிரிக்க, அமெரிக்க, பிரேசில், அவுஸ்ரேலிய அரசியலில் இருப்பது ஆர்வம்.

ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கி கொண்டால் இந்த குழப்பம் வராது.

சிலருக்கு சமையலில் ஆர்வம், மீராவுக்கு கிரிகெட்டில் ஆர்வம், சிலருக்கு கவிதை எழுதுவது ஆர்வம், இன்னும் சிலருக்கு internet trolls ஆக இருப்பதில் ஆர்வம்.

அதே போல் சிலருக்கு உலக, அண்டை நாட்டு அரசியலில் ஆர்வம்.

எமது அரசியலில் விடயங்கள் தொக்கி நிற்பதால் மீரா கிரிகெட் பார்க்காமல் விடுவதில்லை.

அதே போல் கோஷானும் தன் அரசியல் ஆர்வத்தை விட தேவையில்லை.

யாழ் களம் கூட - ஊர் புதினத்துடன், தமிழக, இந்திய, உலக அரசியலுக்கு என ஏன் தனி பகுதிகளை வைத்துள்ளது?

ஊரில் அரசியலில் தொக்கி நிற்கும் விடயங்கள் தீரும் மட்டும் ஏனைய பகுதிகளை மூடலாமே🤣.

புலம்பெயர் நாட்டில் சிலருக்கு இருக்கும், ஏதோ நாம் மட்டும்தான் வெட்டி புடுங்கிறோம், என்ற இந்த வகையான அட்டிடியூட் - 2009 பும், இப்போதும் பல பிரச்சனைகளிற்கு காரணம்.

நீங்கள் செய்கிறீர்களா? சந்தோசம்.

மற்றயவன் என்ன செய்கிறான்/செய்யவில்லை என்பது பற்றி ஒரு துளி கூட தெரியாமல் - அதை பற்றி எழுதுவது மடத்தனம்.

 

இன்னும் கனக்க எழுதலாம்.

பலரின் மனதை நோகடிக்க விரும்பாமையால் விட்டு விலகுகிறேன்.

#மெச்சூரிட்டி

 

ஆகா…..

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

 

ஆகா…..

யம் போல் வாழ்பவன்….😎

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2024 at 02:54, satan said:

பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.

பெரிய பிரித்தானியாவை. மற்றைய நாடுகளுடன். எப்படி ஒப்பிட முடியும்??  ஜேர்மன் பாராளுமன்றத்தில்  இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும்  இப்படி கேள்வி எழுப்ப முடியாது   ஆனால் இங்கிலாந்து   ஒவ்வொரு நாளும் கேள்வி எழுப்ப வேண்டும்  முடியும்  தமிழர்கள்  அமைச்சர்கள் பிரதமராக வரக்கூடிய நிலையில்  இங்கிலாந்து அரசியல் உள்ளது  🤣🤣🤣

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.