Jump to content
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையின் வடக்கு - கிழக்கில் உள்ள காணிகள் தொடர்பில் அதிகரித்துள்ள பதற்றம் குறித்து பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வவுனியா வெடுக்குநாறி மலைக் கோவிலில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் 8 தமிழர்கள் கைது செய்யப்பட்டமை குறித்து ஸ்கொட்லாந்து தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் பேட்ரிக் கிரேடி (Patrick Grady) கேள்வி எழுப்பியுள்ளார்.

இதற்கு பதிலளிக்கும்போதே, வெளியுறவு, பொதுநலவாய மற்றும் மேம்பாட்டு அலுவலகத்தின் இராஜாங்க அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன் (Anne-Marie Trevelyan)இதனை தெரிவித்துள்ளார்.

 

வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில்

வவுனியாவில் உள்ள வெடுக்குநாறி ஆதி சிவன் கோயில் உட்பட இலங்கையில் காணிவிடயங்களில் பதற்றம் அதிகரித்து வருவது குறித்து இங்கிலாந்து அரசாங்கம் கரிசனைக் கொண்டுள்ளது.

வெடுக்குநாறி ஆதி சிவன் ஆலய விவகாரம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றில் கேள்வி | Tension Over Lands In Sl Question In Uk Parliament

இந்தநிலையில் கைது செய்யப்பட்ட எட்டு இந்து வழிபாட்டாளர்களின் விடுதலையை வரவேற்பதாக கூறிய அமைச்சர் ஆன்-மேரி ட்ரெவெலியன், இந்த கைது சம்பவம் மதம் மற்றும் நம்பிக்கையின் சுதந்திரத்தில் தாக்கங்களைக் கொண்டுள்ளது என்பதை நினைவில் கொள்ளவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மதம் அல்லது நம்பிக்கையின் சுதந்திரத்தை ஊக்குவிப்பது இங்கிலாந்து அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும், இலங்கை அரசாங்கத்துடன் தொடர்ந்து மனித உரிமைகளுக்காக இங்கிலாந்து அரசாங்கம் ஊக்குவிப்புக்களை மேற்கொள்வதாகவும் ட்ரெவெலியன் தெரிவித்துள்ளார். 

https://tamilwin.com/article/tension-over-lands-in-sl-question-in-uk-parliament-1714201879?itm_source=parsely-api

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

யார் செய்வது?

இங்கு பொதுவெளியில் எழுதும் பலர் உண்மை நிலவரங்கள் தெரிந்தும் ஊமைகளாய்…….

  • Like 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, MEERA said:

யார் செய்வது?

இங்கு பொதுவெளியில் எழுதும் பலர் உண்மை நிலவரங்கள் தெரிந்தும் ஊமைகளாய்…….

இங்கு மெத்தப் படித்தவர்கள் பலர் இருந்தும் இப்படியான எமது மக்களுக்கும் மண்ணுக்கும் சேவை செய்ய முன்வருவதில்லை என்பது கசப்பான உண்மை.

பதிலுக்கு சீமானின் திரியைக் கண்டால் போதும் இரவு பகலாக அதுக்குள் படுத்திருந்து காவல் காப்பார்கள்.

  • Like 1
  • Haha 2
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மிச்சம் எல்லாரும் கிழிச்சு தொங்க விட்டுடினம்🤣.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, goshan_che said:

மிச்சம் எல்லாரும் கிழிச்சு தொங்க விட்டுடினம்🤣.

 

நிச்சயம் கிழிச்சு தொங்கவிடுவதாலேயே இந்த திரி இங்கு வந்துள்ளது😂

  • Haha 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 minutes ago, MEERA said:

நிச்சயம் கிழிச்சு தொங்கவிடுவதாலேயே இந்த திரி இங்கு வந்துள்ளது😂

நல்லது.  வரவேற்புக்குரியதும்.

இதை போலவே படித்தவர்களும், சீமான் திரியில் காவல் இருப்பவர்களும் தமக்கு முடிந்த வழிகளில் முயலுவார்கள் என்பதை புரிந்து கொண்டால், திரிக்கு வந்த பின்னூட்டங்கள் வந்திராது🤣.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

நல்லது.  வரவேற்புக்குரியதும்.

இதை போலவே படித்தவர்களும், சீமான் திரியில் காவல் இருப்பவர்களும் தமக்கு முடிந்த வழிகளில் முயலுவார்கள் என்பதை புரிந்து கொண்டால், திரிக்கு வந்த பின்னூட்டங்கள் வந்திராது🤣.

“முதலில் உன்னைத் திருத்திக் கொள் சமூகம் தானாக திருந்தும் “ 

என்பதற்கு இணங்க எமது அரசியலில் எவ்வளவோ விடயங்கள் தொக்கி நிற்கும் போது இந்திய அரசியலை நாடுவதில்லை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, MEERA said:

“முதலில் உன்னைத் திருத்திக் கொள் சமூகம் தானாக திருந்தும் “ 

என்பதற்கு இணங்க எமது அரசியலில் எவ்வளவோ விடயங்கள் தொக்கி நிற்கும் போது இந்திய அரசியலை நாடுவதில்லை

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு இலங்கை அரசியலிலும், யூகே அரசியலிலும் இருப்பது ஈடுபாடு.

தமிழக, இந்திய, ஜேர்மன், பிரான்சு, உக்ரேன், ரஸ்ய, தென்னாபிரிக்க, அமெரிக்க, பிரேசில், அவுஸ்ரேலிய அரசியலில் இருப்பது ஆர்வம்.

ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கி கொண்டால் இந்த குழப்பம் வராது.

சிலருக்கு சமையலில் ஆர்வம், மீராவுக்கு கிரிகெட்டில் ஆர்வம், சிலருக்கு கவிதை எழுதுவது ஆர்வம், இன்னும் சிலருக்கு internet trolls ஆக இருப்பதில் ஆர்வம்.

அதே போல் சிலருக்கு உலக, அண்டை நாட்டு அரசியலில் ஆர்வம்.

எமது அரசியலில் விடயங்கள் தொக்கி நிற்பதால் மீரா கிரிகெட் பார்க்காமல் விடுவதில்லை.

அதே போல் கோஷானும் தன் அரசியல் ஆர்வத்தை விட தேவையில்லை.

யாழ் களம் கூட - ஊர் புதினத்துடன், தமிழக, இந்திய, உலக அரசியலுக்கு என ஏன் தனி பகுதிகளை வைத்துள்ளது?

ஊரில் அரசியலில் தொக்கி நிற்கும் விடயங்கள் தீரும் மட்டும் ஏனைய பகுதிகளை மூடலாமே🤣.

புலம்பெயர் நாட்டில் சிலருக்கு இருக்கும், ஏதோ நாம் மட்டும்தான் வெட்டி புடுங்கிறோம், என்ற இந்த வகையான அட்டிடியூட் - 2009 பும், இப்போதும் பல பிரச்சனைகளிற்கு காரணம்.

நீங்கள் செய்கிறீர்களா? சந்தோசம்.

மற்றயவன் என்ன செய்கிறான்/செய்யவில்லை என்பது பற்றி ஒரு துளி கூட தெரியாமல் - அதை பற்றி எழுதுவது மடத்தனம்.

 

இன்னும் கனக்க எழுதலாம்.

பலரின் மனதை நோகடிக்க விரும்பாமையால் விட்டு விலகுகிறேன்.

#மெச்சூரிட்டி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, MEERA said:
15 hours ago, goshan_che said:

மிச்சம் எல்லாரும் கிழிச்சு தொங்க விட்டுடினம்🤣.

 

 

7 hours ago, goshan_che said:

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு இலங்கை அரசியலிலும், யூகே அரசியலிலும் இருப்பது ஈடுபாடு.

தமிழக, இந்திய, ஜேர்மன், பிரான்சு, உக்ரேன், ரஸ்ய, தென்னாபிரிக்க, அமெரிக்க, பிரேசில், அவுஸ்ரேலிய அரசியலில் இருப்பது ஆர்வம்.

ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கி கொண்டால் இந்த குழப்பம் வராது.

சிலருக்கு சமையலில் ஆர்வம், மீராவுக்கு கிரிகெட்டில் ஆர்வம், சிலருக்கு கவிதை எழுதுவது ஆர்வம், இன்னும் சிலருக்கு internet trolls ஆக இருப்பதில் ஆர்வம்.

அதே போல் சிலருக்கு உலக, அண்டை நாட்டு அரசியலில் ஆர்வம்.

எமது அரசியலில் விடயங்கள் தொக்கி நிற்பதால் மீரா கிரிகெட் பார்க்காமல் விடுவதில்லை.

அதே போல் கோஷானும் தன் அரசியல் ஆர்வத்தை விட தேவையில்லை.

யாழ் களம் கூட - ஊர் புதினத்துடன், தமிழக, இந்திய, உலக அரசியலுக்கு என ஏன் தனி பகுதிகளை வைத்துள்ளது?

ஊரில் அரசியலில் தொக்கி நிற்கும் விடயங்கள் தீரும் மட்டும் ஏனைய பகுதிகளை மூடலாமே🤣.

புலம்பெயர் நாட்டில் சிலருக்கு இருக்கும், ஏதோ நாம் மட்டும்தான் வெட்டி புடுங்கிறோம், என்ற இந்த வகையான அட்டிடியூட் - 2009 பும், இப்போதும் பல பிரச்சனைகளிற்கு காரணம்.

நீங்கள் செய்கிறீர்களா? சந்தோசம்.

மற்றயவன் என்ன செய்கிறான்/செய்யவில்லை என்பது பற்றி ஒரு துளி கூட தெரியாமல் - அதை பற்றி எழுதுவது மடத்தனம்.

 

இன்னும் கனக்க எழுதலாம்.

பலரின் மனதை நோகடிக்க விரும்பாமையால் விட்டு விலகுகிறேன்.

#மெச்சூரிட்டி

 

7 hours ago, goshan_che said:

மொட்டந்தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போட வேண்டிய அவசியம் இல்லை.

எனக்கு இலங்கை அரசியலிலும், யூகே அரசியலிலும் இருப்பது ஈடுபாடு.

தமிழக, இந்திய, ஜேர்மன், பிரான்சு, உக்ரேன், ரஸ்ய, தென்னாபிரிக்க, அமெரிக்க, பிரேசில், அவுஸ்ரேலிய அரசியலில் இருப்பது ஆர்வம்.

ஆர்வத்துக்கும், ஈடுபாட்டுக்கும் உள்ள வேறுபாட்டை விளங்கி கொண்டால் இந்த குழப்பம் வராது.

சிலருக்கு சமையலில் ஆர்வம், மீராவுக்கு கிரிகெட்டில் ஆர்வம், சிலருக்கு கவிதை எழுதுவது ஆர்வம், இன்னும் சிலருக்கு internet trolls ஆக இருப்பதில் ஆர்வம்.

அதே போல் சிலருக்கு உலக, அண்டை நாட்டு அரசியலில் ஆர்வம்.

எமது அரசியலில் விடயங்கள் தொக்கி நிற்பதால் மீரா கிரிகெட் பார்க்காமல் விடுவதில்லை.

அதே போல் கோஷானும் தன் அரசியல் ஆர்வத்தை விட தேவையில்லை.

யாழ் களம் கூட - ஊர் புதினத்துடன், தமிழக, இந்திய, உலக அரசியலுக்கு என ஏன் தனி பகுதிகளை வைத்துள்ளது?

ஊரில் அரசியலில் தொக்கி நிற்கும் விடயங்கள் தீரும் மட்டும் ஏனைய பகுதிகளை மூடலாமே🤣.

புலம்பெயர் நாட்டில் சிலருக்கு இருக்கும், ஏதோ நாம் மட்டும்தான் வெட்டி புடுங்கிறோம், என்ற இந்த வகையான அட்டிடியூட் - 2009 பும், இப்போதும் பல பிரச்சனைகளிற்கு காரணம்.

நீங்கள் செய்கிறீர்களா? சந்தோசம்.

மற்றயவன் என்ன செய்கிறான்/செய்யவில்லை என்பது பற்றி ஒரு துளி கூட தெரியாமல் - அதை பற்றி எழுதுவது மடத்தனம்.

 

இன்னும் கனக்க எழுதலாம்.

பலரின் மனதை நோகடிக்க விரும்பாமையால் விட்டு விலகுகிறேன்.

#மெச்சூரிட்டி

 

ஆகா…..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, MEERA said:

 

ஆகா…..

யம் போல் வாழ்பவன்….😎

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 28/4/2024 at 02:54, satan said:

பிரித்தானிய நாடாளுமன்றில் மட்டுமல்ல உலகில் தமிழர் வாழும் எல்லா நாடாளுமன்றிலும் கேள்வி எழுப்பச்செய்ய வேண்டும்.

பெரிய பிரித்தானியாவை. மற்றைய நாடுகளுடன். எப்படி ஒப்பிட முடியும்??  ஜேர்மன் பாராளுமன்றத்தில்  இன்னும் 100 ஆண்டுகள் சென்றாலும்  இப்படி கேள்வி எழுப்ப முடியாது   ஆனால் இங்கிலாந்து   ஒவ்வொரு நாளும் கேள்வி எழுப்ப வேண்டும்  முடியும்  தமிழர்கள்  அமைச்சர்கள் பிரதமராக வரக்கூடிய நிலையில்  இங்கிலாந்து அரசியல் உள்ளது  🤣🤣🤣

Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இந்த பதில் உங்களுக்கும், கூடவே நிண்டு குஷியாகியோருக்கும். 1. கோஷான் ஒரு ஊடகம் அல்ல. ஊடகரும் அல்ல. ஊடகம் என்றால் குறைந்த பட்சம் நெஞ்சில் மஞ்சா இருக்க வேண்டும். கோஷான் அப்படி அல்ல, அவர் பயந்தாங்கொள்ளி. இப்படி சொல்வதற்கு மன்னிக்கவும். உங்கள் ஒப்பீடு கொஞ்சம் “மொக்கு தனமாக” உள்ளதாக எனக்குப்படுகிறது. ஒரு தனி நபருக்கும், ஊடகத்துக்கும் உள்ள வேறுபட்ட கூடவா உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை?  தமிழ் வின்னுடன் யாழை ஒப்பிட்டால் அது நியாயம். பிஸ்கோத்து பயந்தாங்கொள்ளி கருத்தாளர் என்னைப்போய்…… 2. நான் பெயரை மறைக்க  மூன்று காரணங்கள்.  அ. இலங்கையில் எனக்கு எதுவும் ஆகிவிடுமோ (தமிழர் தரப்பால் அல்ல) என்ற பயமும்,  ஆ.பெயரை சொன்னால், இன்னார் என இனம் கண்டு புலம்பெயர் தேசத்தில் சொறிச்சேட்டை விடும் ஆட்களின் அலுப்பு இருக்கும் என்பதும் இரெண்டாம் காரணம். மகனின் கராட்டி கிளாசுக்கு வருகிறோம் என யாழில் சொன்னவர்கள் யார் என உங்களுக்கு நினைவு நிச்சயம் இருக்கும்.🤣. அதே போல் இன்னொருவர் நான் என நினைத்து இன்று வரை யாரோ ஒரு லூஸ் கேசோடு இரவிரவாக கதைக்கிறார்🤣. பெயரை சொல்லாமல் கதைக்கும் போதே இந்த நிலை, சொல்லி கதைத்தால் நிலமை? இ. மூன்றாவது காரணம் முகமன். யாழில் எழுதுவோரை நேரிலும் கண்டு பழகினால் பின்னர் யாழில் சுதந்திரமாக எழுத முடியாது. இங்கே பலர் கருத்து வேறு பாடு கனமாக வரும் போதும் “அண்ணை, தம்பி, தாத்தா” என குருசேத்திரத்து அர்ஜுனன் போல் கலங்கி நிற்பார்கள். இன்னும் சிலர் அவர்களுக்காக வக்காலத்து வாங்க போய், தம் வாழ்நாள் கொள்கையையே எதிர்த்து எழுதி மொக்கேனப்பட்டு நிற்பார்கள். இப்போ பாருங்கள் உங்கள் ஒப்பீட்டை “மொக்குதனமானது” என சொல்லும் சுதந்திரம் எனக்கு இருக்கிறது. இதுவே கானா ரெஸ்டூரண்டில் உங்களுடன் கூட இருந்து சாப்பிட்டால் ? அப்படி சுதந்திரமாக எழுத முடியாது அல்லவா? ஆனால் இப்படியான கட்டுப்பாடுகள் எதுவும் தமிழ் வின்னுக்கு இல்லை. அப்படி இருந்தால் - அது ஊடகமாக இருக்க முடியாது. விளங்கி இருக்கும் என்ற நம்பிக்கையுடன்.  
    • மேற்குலகு சீனாவை விட ரஷ்யாவுடன் வியாபாரமாகவும்,நட்புறவுடனும் கை குலுக்கினால் பலன்கள் ஆயிரம் ஆயிரம். தேவையில்லாத உக்ரேன் பல அழிவுகளை தரும்.
    • க‌ட‌ந்த‌ முறை சிறைக்குள் வ‌ந்தாப் பிற‌க்கு இவ‌ரின் சொத்து ப‌ல‌ கோடியாம்.................இவ‌ர் தான் உண்மையை வெளியில் கொண்டு வ‌ரும் புல‌னாய்வு புலி விலாக்மேல் ப‌ண்ணி ப‌ல‌ரிட‌ம் காசு வேண்டி இருக்கிறார்...........................இதை ச‌வுக்குவின் ம‌னைவி சொல்லி இருக்கிறா இவ‌ர் காசு வேண்டாத‌ ஆட்க‌ளே இல்லை  அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளிட‌ம் காசு வேண்டி இருக்கிறார்  இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ரிட‌ம் நேர்மையை எதிர் பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம்............................    
    • பல கதைகளை சொல்லி நிற்கின்றது உங்கள் ஆக்கம். 🙏
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.