Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனிமேல் கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான நகர வீதி சமிஞ்சைகளுக்கருகில் காத்திருக்கும் யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
1000215521.jpg

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் பெறுவோருக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

 
 
 
அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.
 
 
 
இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில் இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
 

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம்

2025 ஆம் ஆண்டுக்கான வருடாந்த SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்துவதில்லை என்ற தீர்மானத்தில், கொழும்பில் போக்குவரத்து விளக்குகளில் உள்ள யாசகர்களின் அச்சுறுத்தலான செயற்பாடு தாக்கம் செலுத்தியதாக இலங்கை ஆட்டோமொபைல் சங்கத்தின் செயலாளர் தேவப்பிரிய ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

மேலும் கூறுகையில், 2015 இல் கொழும்பில் SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டுடன் தொடர்புடைய ஆசிய பசுபிக் பிராந்திய II கூட்டத்தை இலங்கை நடத்தியது, இதில் 150 பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

சர்வதேச வாகன உச்சி மாநாடு

2025 ஆம் ஆண்டு SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை நடத்துவதற்கான முயற்சியை இலங்கை சமர்ப்பித்த பொதுக் கூட்டம் ருவாண்டாவில் இடம்பெற்றது.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

 

கூட்டத்தில் கலந்துகொண்ட பிரதிநிதிகள், கொழும்பு நகர எல்லைக்குள் உள்ள போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்கள் கொழும்பில் பல்வேறு இடங்களுக்குச் செல்லும்போது விரும்பத்தகாத அனுபவங்கள் மற்றும் குறிப்பிடத்தக்க போக்குவரத்து இடையூறுகளை ஏற்படுத்துவதை அவதானித்ததாக அவர் கூறினார்.

ஏலத்தில் வெற்றி பெற்றால், இந்நிகழ்வுக்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பிரதிநிதிகள் இலங்கைக்கு வரவழைக்கப்பட்டு, நாட்டிற்கு கணிசமான வெளிநாட்டு வருமானத்தை ஈட்டித்தரும்.

 

 

எவ்வாறாயினும், கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகர்களின் அச்சுறுத்தல் காரணமாக SMMT சர்வதேச வாகன உச்சி மாநாட்டை இலங்கையில் நடத்த முடியாது என ருவாண்டாவில் நடைபெற்ற வருடாந்த பொதுக் கூட்டத்தில் பெறப்பட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டின் நற்பெயருக்குக் களங்கம்

மேலும், நகர எல்லைக்குள் யாசகம் பெறுபவர்களுக்கு உதவித் தொகை வழங்குவது நமது நாட்டின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தும் என்றும் தெரிவித்தனர்.

யாசகர்களால் இலங்கைக்கு வந்த சோதனை! பெரும் வாய்ப்பை இழந்த சோகம் | Intl Summit Avoids Sri Lanka Due To Beggar

எனவே, 2025 ஆம் ஆண்டில் குறிப்பிடத்தக்க வாகனத் தொழிற்துறை கூட்டத்தை இலங்கை நடத்த விரும்பினால், கொழும்பில் இந்த நிலைமையை நிவர்த்தி செய்வதற்கான நடவடிக்கைகளை எடுக்குமாறு அவர்கள் எங்களை வலியுறுத்தினர்.

ஏப்ரல் 2023 இல், திட்டங்கள் வகுக்கப்பட்டன, மேலும் சிக்கலைச் சமாளிக்க ஒரு மூலோபாயக் குழு நிறுவப்பட்டது.

 

 

இறுதியில், நிலைமையைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை நடைமுறைபடுத்த தீர்மானிக்கப்பட்டது.

மேலும் கொழும்பு நகர எல்லைக்குள் போக்குவரத்து விளக்குகளில் யாசகம் பெறுபவர்களுக்கு எந்த உதவியும் வழங்க வேண்டாம் என்று மக்களை வலியுறுத்தியுள்ளார்.

https://tamilwin.com/article/intl-summit-avoids-sri-lanka-due-to-beggar-1714443745

  • கருத்துக்கள உறவுகள்

1661580442-yasaham-2-650x375.jpg

யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு அபராதம்!

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பிரதான சந்திகளின் வீதி விளக்குகளுக்கு அருகில் காத்திருந்து யாசகம் எடுப்பவர்களுக்கு பணம் கொடுப்பவர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

அதன்படி, யாசகர்களுக்கு பணம் கொடுத்தால் அபராதம் விதிக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில், இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://athavannews.com/2024/1380319

  • கருத்துக்கள உறவுகள்

அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂
பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂
பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣

அருமையான ஜோக்🤣.

தனியே செய்தால் கொலை, ஊரே திரண்டு செய்தால் கலவரம் - அதே லொஜிக்தான் போலும்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

அருமையான ஜோக்🤣.

தனியே செய்தால் கொலை, ஊரே திரண்டு செய்தால் கலவரம் - அதே லொஜிக்தான் போலும்.

தனக்கொரு நீதியும், மற்றவனுக்கு ஒரு நீதியும் வைத்திருக்கின்ற  வினோதமான உலகம். 

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, goshan_che said:

அருமையான ஜோக்🤣.

தனியே செய்தால் கொலை, ஊரே திரண்டு செய்தால் கலவரம் - அதே லொஜிக்தான் போலும்.

குஜராத்தில் மோடி சொன்ன மாதிரி இருக்கே?

பொலிசாரே உருமறைத்து வந்து சந்தியில் நின்று அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டப் போகிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
26 minutes ago, ஈழப்பிரியன் said:

பொலிசாரே உருமறைத்து வந்து சந்தியில் நின்று அரசுக்கு பெரும் வருமானம் ஈட்டப் போகிறார்கள்.

அரசுக்கா….கோர்ட்டுக்கு இழு பட்டு 1000 கட்டபோறியா, பையில அதே 1000 ரூபாயை போடுங்க என்பதே அவர்கள் டீல்🤣

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சிக்னல் லைட்டுக்கு பக்கத்திலை நிண்டுதானே பிச்சை எடுக்க வேண்டாம் எண்டு சொல்லீனம்.
மற்றும் படி பிச்சை எடுக்க அரசாங்கம் தடை போடேல்லை எல்லோ?😂

  • கருத்துக்கள உறவுகள்
38 minutes ago, goshan_che said:

அரசுக்கா….கோர்ட்டுக்கு இழு பட்டு 1000 கட்டபோறியா, பையில அதே 1000 ரூபாயை போடுங்க என்பதே அவர்கள் டீல்🤣

இப்ப கமரா பூட்டி இருக்காமே?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஈழப்பிரியன் said:

இப்ப கமரா பூட்டி இருக்காமே?

அதையெல்லாம் வாங்குவோர், கொடுப்போர் “நேக்கா” டீல் பண்ணுவார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
11 hours ago, தமிழ் சிறி said:

அரசாங்கம் மட்டும் பிச்சை எடுக்கலாம். 😂
பிச்சைக்காரன் பிச்சை எடுத்தால்... அரசாங்கத்துக்கு ரோசம் வந்திட்டுது. 🤣

இருக்கலாம்,.அரசாங்கம் தெருக்களிலும். மின்கம்பங்களுக்கு அருகில்   சிக்கினாலுக்கு அண்மையில். பிச்சை எடுக்கவில்லை   மாளிகையிலிருந்து  கடிதம் மற்றும் தொலைபேசி வயிலாகப் பிச்சை எடுக்கிறார்கள்  இது கௌரவமான  பிச்சை எடுப்பு   மக்களும் இதே முறையை பின் பற்றினால்  பிரச்சனையில்லை 🤣

  • கருத்துக்கள உறவுகள்

இனப்படுகொலை செய்த ஒரு அரசு இப்போது ஒரு வர்க்கப்படுகொலை செய்கிறது, திடீரென இவ்வாறான அறிவுறுத்தல் மூலம் அம்மக்களுக்கு எந்த மாற்றீடு செய்யாமல் ஏற்கனவே நடுத்தெருவில் உள்ள மக்களை மீண்டும் மோசமான நடுத்தெருவில் விடுகின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்
13 hours ago, தமிழ் சிறி said:

இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக கடமையில், இருக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களும் சிவில் உடையில் பொலிஸ் குழுக்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

ஏற்கெனவே போலீஸ் நிலையங்களில் இந்தப் பிச்சைக்காரர்களின் தொல்லை தாங்க முடியவில்லை, இனி வீதியிலுமா? இல்லாதவன் பிச்சை எடுத்தால் அவமானம், அரசு பிச்சை எடுத்தால் அதற்கு என்ன பெயர்? இது மட்டுமல்ல உறவுகளை தொலைத்து வீதியில் அலையும் பெற்றோர் இவர்களின் கண்களுக்கு தெரிவதில்லை, அதையும் காட்டி இலங்கையின் கோரமுகத்தை எல்லோரும் பேசச்செய்ய வேண்டும். மக்களை பிச்சை எடுக்க வைக்கும் அரசாங்கம் அதை நிவர்த்தி செய்யாமல் மறைத்து கனவான் பெயரெடுக்க முயற்சிக்கிறது. இது பெரிய ராஜதந்திரம்!

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, vasee said:

இனப்படுகொலை செய்த ஒரு அரசு இப்போது ஒரு வர்க்கப்படுகொலை செய்கிறது, திடீரென இவ்வாறான அறிவுறுத்தல் மூலம் அம்மக்களுக்கு எந்த மாற்றீடு செய்யாமல் ஏற்கனவே நடுத்தெருவில் உள்ள மக்களை மீண்டும் மோசமான நடுத்தெருவில் விடுகின்றனர்.

அடுத்தது என்ன களவு தான்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.