Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

முன்னாள் அரசு ஊழியரும் யூட்யூபருமான சவுக்கு சங்கர் பெண் காவலர்களை அவதூறாக பேசிய நிலையில், அவர் மீது அடுத்தடுத்து வழக்குகள் பாய்ந்து வருகின்றன. சுமார் எட்டு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்ட்டிருக்கும் நிலையில் குண்டர் சட்டமும் பாய்ந்துள்ளது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

 

  • Replies 58
  • Views 4.6k
  • Created
  • Last Reply

Most Popular Posts

  • Kavi arunasalam
    Kavi arunasalam

    ஆறெல்லாம் கள்ளானால் அதுக்குள்ளே நான் விழுந்து நீச்சல் அடிப்பேன் நாடெல்லாம் பெண்ணானால் நடுவிலே நான் இருந்து பார்த்து ரசிப்பேன்

  • goshan_che
    goshan_che

    செருப்பை சாணியில் முக்கி அடிப்பது என்பது இதுதானா🤣 அதுவும் அந்த அட்டணக்கால்😎. #மாதர் தம்மை கேலி பேசும் மூட வாயை மூடுவோம்.

  • நிழலி
    நிழலி

    அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, goshan_che said:

காடெல்லாம் கஞ்சாவானால்,

அதில்,

கால் கிலோவை நான் இழுப்பேன்🤣

கவிதை அருமை😂

 

4 hours ago, ரசோதரன் said:

ஏற்கனவே காவலர்களால் உடைத்து முறிக்கப்பட்ட தனது கையை பெண் காவலர்கள் மீண்டும் முறித்து விட்டார்கள் என்று நேற்று நீதிமன்றத்தில் சங்கர் சொல்லியிருக்கின்றார். 

அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!

  • கருத்துக்கள உறவுகள்
28 minutes ago, நிழலி said:

அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!

வன்மையாக கண்டிக்கிறேன் 

முழுமையாக சொல்லாததை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, நிழலி said:

அவர்கள் உடைத்து இருக்க வேண்டியது கையை அல்ல!

பல் என்று சொல்கிறீர்கள் போலுள்ளது ....... அதை நான் ஆமோதிக்கிறேன்......!  😁

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சவுக்கு சங்கர் தான் இலங்கைக்கு கஞ்சா கடத்துபவர் என்று புதிய வழக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 😂

  • கருத்துக்கள உறவுகள்
24 minutes ago, குமாரசாமி said:

சவுக்கு சங்கர் தான் இலங்கைக்கு கஞ்சா கடத்துபவர் என்று புதிய வழக்கு வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. 😂

க‌ட‌ந்த‌ முறை சிறைக்குள் வ‌ந்தாப் பிற‌க்கு இவ‌ரின் சொத்து ப‌ல‌ கோடியாம்.................இவ‌ர் தான் உண்மையை வெளியில் கொண்டு வ‌ரும் புல‌னாய்வு புலி
விலாக்மேல் ப‌ண்ணி ப‌ல‌ரிட‌ம் காசு வேண்டி இருக்கிறார்...........................இதை ச‌வுக்குவின் ம‌னைவி சொல்லி இருக்கிறா இவ‌ர் காசு வேண்டாத‌ ஆட்க‌ளே இல்லை 
அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளிட‌ம் காசு வேண்டி இருக்கிறார் 
இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ரிட‌ம் நேர்மையை எதிர் பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம்............................

 

 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
1 hour ago, வீரப் பையன்26 said:

க‌ட‌ந்த‌ முறை சிறைக்குள் வ‌ந்தாப் பிற‌க்கு இவ‌ரின் சொத்து ப‌ல‌ கோடியாம்.................இவ‌ர் தான் உண்மையை வெளியில் கொண்டு வ‌ரும் புல‌னாய்வு புலி
விலாக்மேல் ப‌ண்ணி ப‌ல‌ரிட‌ம் காசு வேண்டி இருக்கிறார்...........................இதை ச‌வுக்குவின் ம‌னைவி சொல்லி இருக்கிறா இவ‌ர் காசு வேண்டாத‌ ஆட்க‌ளே இல்லை 
அர‌சிய‌ல் க‌ட்சிக‌ளிட‌ம் காசு வேண்டி இருக்கிறார் 
இப்ப‌டி ப‌ட்ட‌வ‌ரிட‌ம் நேர்மையை எதிர் பார்ப்ப‌து முட்டாள் த‌ன‌ம்............................

நான் சவுக்கு சங்கருக்கு வக்காலத்து வாங்கவில்லை. மாறாக சவுக்கு சங்கர் மீது குற்றம் சாட்டிய அரசியல்வாதிகளின் ஜோக்கியதை பற்றி கொஞ்சம்.....🤣

  • 2 months later...
  • கருத்துக்கள உறவுகள்

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை

தேனி: யூடியூபர் சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் வழக்குப் பதிவு செய்து தேனி பழனிசெட்டிபட்டி போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

சவுக்கு சங்கர் தேனி பூதிப்புரம் சாலையில் உள்ள விடுதியில் கடந்த மே 4-ம் தேதி தங்கியிருந்தார். அப்போது கோயம்புத்தூர் போலீஸார் அவரை கைது செய்தனர்.அவரது கார் மற்றும் விடுதி அறையை சோதனை செய்த போது கஞ்சா இருப்பது தெரிய வந்தது. இதனைத் தொடர்ந்து பழனிசெட்டிபட்டி போலீஸார் சவுக்கு சங்கர் மற்றும் அவருடன் இருந்த இருவரையும் கைது செய்து வழக்குப் பதிவு செய்தனர். இதுகுறித்த வழக்கு மதுரை சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

 

 

இந்நிலையில், தேனி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சிவபிரசாத் பரிந்துரையின் பேரில் ஆட்சியர் ஆர்.வி.ஷஜீவனா குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்ய உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தில் இன்று (ஆக.12) வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஏற்கெனவே கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து பொதுமக்கள் மத்தியில் வதந்தி பரப்பி பொதுமக்களை போராடிய தூண்டியதாக சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம் பதிவு செயப்பட்டிருந்தது. இந்த வழக்கில் வெள்ளிக்கிழமை (ஆக.9) தீர்ப்பளித்த நீதிபதிகள், “சவுக்கு சங்கர் மீதான குண்டர் தடுப்புச்சட்ட உத்தரவும், அவர் மீது தொடர்ச்சியாக போடப்பட்டுள்ள வழக்குகளும் உள்நோக்கத்துடன் பதியப்பட்டவை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் நடைபெற்ற போராட்டத்துக்காக கடந்த மே மாதம் அளிக்கப்பட்ட புகாரின் பேரில் போலீஸார் தாமதமாக வழக்குப் பதிவு செய்து அந்த வழக்கின் அடிப்படையில் சவுக்கு சங்கரை குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ சிறையில் அடைக்க உத்தரவிட்டுள்ளனர்.

சவுக்கு சங்கர் பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தியதாக குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்ட நிலையில் அதுகுறித்த காரணங்களை உத்தரவில் தெரிவிக்கவில்லை. சவுக்கு சங்கர் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படுத்தும் அளவுக்கு தீவிரமானவையாக தெரியவில்லை. எனவே அவரை குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையில் அடைத்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு உள்நோக்கம் கொண்டது என்பதால் அந்த உத்தரவு ரத்து செய்யப்படுவதாக கூறியிருந்தது.

மேலும், வேறு வழக்குகளில் சவுக்கு சங்கர் தேவையில்லை என்றால் உடனடியாக அவரை விடுவிக்க வேண்டும் என்றும் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் குறிப்பிட்டிருந்தனர். இந்நிலையில், சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் தேனி மாவட்ட போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சவுக்கு சங்கர் மீது குண்டர் தடுப்புச் சட்டம்: தேனி காவல் துறை நடவடிக்கை | Theni Police action against YouTuber Shavukku Shankar under Goondas Act - hindutamil.in

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.