Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் குரலில் சில வரிகள்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் குரலில் சில வரிகள்!

பகுதி - 01

http://www.ijigg.com/songs/V2A4GBAFPB0

பகுதி - 02

http://www.ijigg.com/songs/V2A4GBBEP0

பகுதி - 03

http://www.ijigg.com/songs/V2A4GBC0PB0

  • கருத்துக்கள உறவுகள்

உலைக்களவியாசரின் குரலிது வல்வை மைந்தன்.

நீங்கள் உணர்ச்சிக் கவிஞர் காசிஆனந்தன் என்று தவறுதலாக குறிப்பிட்டுள்ளீர்கள்.

பெண்களுக்காக படைத்துள்ள கவிதை அவசியம் கேட்க வேண்டிய கவிதை

புரட்சிக்கவிஞர் காசி ஆனந்தனின் குரலில் சில வரிகள்!

பகுதி - 03

http://www.ijigg.com/songs/V2A4GBC0PB0

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அப்படியா?

நன்றி சஹாரா.

எனக்கு கிடைக்கப்பெற்ற ஆவணத்தில் காசி ஆனந்தன் என்றுதான் குறிக்கப்பட்டுள்ளது. இந்த குரலும் அத்துடன் ஒத்துப்போகின்றது.

அது மாத்திரமன்றி கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்கு முன்பு புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் பெரிய சலனத்தையும் இந்த கவிதை ஏற்படுத்தியது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.

இது எனக்கு தமிழீழத்தில் கிடைத்தது, மேடையில் இடம்பெற்ற நிகழ்சி.

மூன்று பகுதிகளும் ஒரே தொடர் கவிதை.

Edited by Valvai Mainthan

ஆமாம் இதை பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கேட்க்க வேண்டிய கவிதை...

காதல் தான் வாழ்வேல்ல

கற்மனைகள் சாந்துவிட்டால் காதல் தான் வழியேல்ல

சரித்திரத்தில் பெயர் பெறிக்கும் பாதையிலே ..........

அருமையான கவிவரிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஓ தவறாகக் கூறிவிட்டேனா?

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் ஆங்கில வார்த்தைகளை உபயோகிப்பதில்லை ஆதலால்த்தான் சற்று தடுமாறிவிட்டேன் வல்வைமைந்தன்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்க் கன்னி தோற்றம்

எத்தனை எத்தனை இன்பன் கனவுகள்....

என்ன புதுமையடா! - அட

புத்தம் புதுக்கிளி சோலைப் புறத்திலே

போடும் ஒலியிவளோ? - வந்து

கத்துங் குயிலின் இசையோ? கலைமயில்

காட்டும் புதுக்கூத்தோ? - அட

முத்தமிழ்க் கன்னியின் பேரெழிலை ஒரு

மொழியில் உரைப்பதோடா?

மன்னர் வளர்த்த புகழுடையாள்! இவள்

மக்கள் உறவுடையாள்! - நல்ல

செந்நெல் வளர்க்கும் உழவ ரிசையில்

சிரிக்கும் அழகுடையாள்! - சிறு

கன்னி வயதின் நடையுடையாள்! - உயர்

காதல் வடிவுடையாள்! - தமிழ்

என்னு மினிய பெயருடையாள்! - இவள்

என்றும் உயிருடையாள்!

முந்திப் பிறந்தவள் செந்தமி ழாயினும்

மூப்பு வரவில்லையே! - மணச்

சந்தனக் காட்டுப் பொதிகை மகளுக்குச்

சாயல் கெடவில்லையே! - அட

விந்தை மகளிவள் சிந்தும் எழில்தனில்

வழிகள் சுழலுதடா! - கவி

தந்து சிரிக்கும் அழகன் எனக்கிவள்

தன்னைத் தரவந்ததோ?

தௌ;ளு தமிழ்மகள் வண்ண முகத்திலே

செம்மை கொலுவிருக்கும்! - ஒளி

கொள்ளும் இதழில் மலர்நகை யொன்று

குழைந்து குழைந்திருக்கும்! - உயிர்

அள்ளும் விழிகள் இரண்டிலு மாயிரம்

ஆற்றல் நிறைந்திருக்கும்! - இவள்

உள்ள மிருக்கும் இடத்திலே காதலும்

ஒளிந்து மறைந்திருக்கும்!

தேனுங் கனியும் மதுவுங் கலந்தொன்று

சேர்ந்த உடலுடையாள்! - கன்னி

மாமெனு மெழில் ஆடையணிந்து

மயக்கப் பிறந்தவளோ? - அட

நானு மிவளும் இருக்கு முலகிலே

நாணம் இருக்குமோடா? - நாங்கள்

வான மளவு பறந்துவிட் டோமிந்த

வையம் தெரியவில்லை!

காலின் சிலம்பும் வளையும் இசையொலி

காட்டப் பறந்து வந்தாள்! - அந்த

நூலின் இடையிலே கை கொடுத்தும் விழி

நோக்கில் உயிர் கொடுத்தும் - ஒரு

வேலின் விரைவில் பறந்து வந்தேன்! - அவள்

வெள்ளை மனந் திறந்து.... - புதுப்

பாலின் சுவையும் வெறியுங் கலந்தொரு

பாடம் நடத்துகின்றாள்.....

காசியானந்தனின் கவிதை தொகுப்பிலிருந்து

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதுவை இரத்தினதுரை ஐயாவின் கவிதை.. இன்றும் அதே குரல்தான். மாற்றமே இல்லை.

  • கருத்துக்கள உறவுகள்

பேயன்

அருவண்ணத் தமிழ் மண்ணில்

ஆரியனை முன்போர் நாள்

வருக என அழைத்திங்கே

வாழ்வித்த முதுதமிழன்

சுருள்குடுமி ஆரியனின்

சூழ்ச்சிக்கே பலியானான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்!

கருநெஞ்சன் வங்கத்தான்

கயவன் விசயனென்பான்

வருபோதில் இலங்கைமண்

வாசல் திறந்துவைத்த

உருகுவிழல் மனத்தமிழன்

ஒளிஈழம் பறிகொடுத்தான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்!

அரு ஞாலத் திசையெல்லாம்

அங்கெல்லாம் இங்கெல்லாம்

கருகி உழைத்து வளம்

கனிவித்த உயர் தமிழன்

எருவாகிப் பிறன்வாழ்வை

எழிலாக்கித் தான் மாய்ந்தான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்!

திருவோங்கு பாரதம்

தெய்வமென்றும் சிங்களம்

தருசுகமே சுகமென்றும்

தனை மறந்த பெருந்தமிழன்

ஒருநாடு தனக்கின்றி

ஊர் ஊராய் உதைபட்டான்....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர் தமிழன்!

அருளாளன் எந்தமிழன்

அனைத்தூரும் ஊரென்றான்.....

எருமை இவனை ஒருவன்

ஏ! கள்ளத் தோணி|| என்றான்!

பொருமி எழா இழிதமிழன்

பொறுத்திருப்போம் என்றானே....

பெருமனத்தால் கெட்ட

பேயனுக்குப் பேர்தமிழன்

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மேல் ஆணை!

தாயே.. தமிழே!

தலை கவிழ்ந்த பொற்செல்வி!

நீ கலங்க வேண்டாம்..

வருங்காலம் நின் காலம்!

அன்னாய்.. இது கேள்!

அடுத்த பரம்பரையில்

பொன்னால் முடி நீ

புனை நாள் இவண் செய்வேன்!

எள்ளி நகைத்து

நினைப்பழிப்போன் செந்நீர்

வெள்ளம் குளித்து

விளையாடுவேன் தாயே!

சத்தை இழந்த தமிழ்ச்

சாதி பிழைக்க நான்

பத்தாயிரங் கவிதை

பாடாமல் போவேனோ?

தாயே! துயரம்

தவிர்த்திரடி.. மாற்றானை

நாயாய் அடித்து

நடுத்தெருவில் வைக்கின்றேன்!

என்னுயிரைத் தூக்கி

எறிந்து தமிழணங்கே

அன்னை நினதுயிராய்

ஆவேன் நான்... ஆணையடி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.