Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் பெயரில் ஆள்மாறாட்டம்

1516070440.jpg

வெளிநாட்டுப்பிரஜை கைது!

(ஆதவன்)

போலிக்கடவுச்சீட்டு, போலி வைப்பகப்புத்தகம், போலி ஆவணங்கள் என்பவற்றைத் தயாரித்தமை, ஆள்மாறாட்டம் செய்தமை போன்ற குற்றச்சாட்டுகளின் கீழ் நெதர்லாந்துப் குடியுரிமையைக் கொண்ட ஒருவர் யாழ்ப்பாணத்தில் நேற்றுக் கைது செய்யப்பட்டுள்ளார்.

சுன்னாகம் பொலிஸ் பிரிவைச் சேர்ந்த அவரது சகோதரி செய்த முறைப்பாட்டுக்கமையவே மேற்படி 42 வயதுடைய பெண்மணி கைது செய்யப்பட்டு நீதிவான் இல்லத்தில் முற்படுத்தப்பட்டு மருத்துவக்காரணங்களைக் கருத்திற்கொண்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.

சகோதரியினுடைய ஆவணங்களைப் பயன்படுத்தி போலியான கடவுச்சீட்டை சந்தேகநபர் 2015ஆம் ஆண்டு தயாரித்துள்ளார். அந்தக் கடவுச்சீட்டை தவிர்த்து வேறு கடவுச்சீட்டில் நெதர்லாந்துக்குச் சென்று அங்கு குடியுரிமையும் பெற்றுள்ளார்.

இதேவேளை, சகோதரி 2019ஆம் ஆண்டு கடவுச்சீட்டுக்கு விண்ணப்பிக்கச் சென்றபோது அவரது பெயரில் முன்னரே கடவுச்சீட்டு எடுக்கப்பட்டமை தெரியவந்துள்ளது. சகோதரி வெளிநாட்டில் இருந்தமையால் அவர் நாடு திரும்பிய பின்னர் நடவடிக்கை எடுப்பதற்காக சகோதரி காத்திருந்துள்ளார். இதற்கிடையில் கடந்த மாதம் 24 ஆம் திகதி போலிக் கடவுச்சீட்டை பயன்படுத்தி வைப்பகப்புத்தகம் பெற்றமையையும் சகோதரி அறிந்துள்ளார்.

இவ்வாறானதொரு நிலையில் தாயாரின் இறுதிக்கிரியைகளுக்காக நெதர்லாந்திலிருந்து சகோதரி யாழ்ப்பாணத்துக்கு இந்த மாதம் வந்துள்ளார்.

இதையடுத்து யாழ். மாவட்ட சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவினரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. அதன்பிரகாரம் சந்தேக நபரை யாழ். மாவட்ட சிறப்பு குற்றவிசாரணைப் பிரிவினர் கைது செய்து யாழ்ப்பாணம் மேலதிக நீதிமன்ற நீதிவான் லெனின்குமார் முன்னிலையில் நேற்று முற்படுத்தினர். இதன்போது மருத்துவக் காரணங்களால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். வழக்கு இன்று மீண்டும் அழைக்கப்படவுள்ளது. (ச)
 

https://newuthayan.com/article/சகோதரியின்_பெயரில்_ஆள்மாறாட்டம்_செய்த_வெளிநாட்டுப்பிரஜை_கைது!

  • கருத்துக்கள உறவுகள்

இப்படி கனக்க கதை இனி வரும் 

  • கருத்துக்கள உறவுகள்

சகோதரியின் பெயரில் டென்மார்க் சென்று பிரஜாவுரிமை பெற்ற பெண் யாழில் கைது!

Published By: DIGITAL DESK 7   20 MAY, 2024 | 12:10 PM

image
 

யாழ்ப்பாணத்தில் வசிக்கும் தனது சகோதரியின் பெயரில் கடவுசீட்டு மற்றும் வங்கி ஆவணங்களை போலியாக பெற்ற குற்றச்சாட்டில் டென்மார்க் பிரஜையை யாழ்ப்பாண பொலிஸார் நேற்று (19)  ஞாயிற்றுக்கிழமை கைது செய்துள்ளனர். 

யாழ்ப்பாணத்தை பூர்வீகமாக கொண்டு தற்போது டென்மார்க் பிராஜவுரிமை பெற்று டென்மார்க்கில் வசிக்கும் 42 வயதுடைய பெண்ணொருவரே கைது செய்யப்பட்டுள்ளார். 

கைது செய்யப்பட்ட பெண் கடந்த 2015ஆம் ஆண்டளவில் தனது சகோதரியின் பெயரில் போலியான கடவுசீட்டை பெற்று டென்மார்க் நாட்டிற்கு சென்றுள்ளார். 

யாழ்ப்பாணத்தில் வசித்த அவரது சகோதரி 2019ஆம் ஆண்டளவில் தனக்கு கடவுசீட்டு எடுப்பதற்காக விண்ணப்பித்த போது அவரது பெயரில் ஏற்கனவே கடவுசீட்டு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு, அவருக்கு கடவுசீட்டு வழங்கப்படவில்லை. அதன் போதே தனது சகோதரி தனது பெயரில் கடவுசீட்டு எடுத்து வெளிநாடு சென்ற விடயம் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் கடந்த மாதம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற தனது தாயாரின் இறுதி கிரியைக்காக டென்மார்க்கில் இருந்து வந்தவர், போலியான கடவுசீட்டை பயன்படுத்தி தனது சகோதரியின் பெயரில் யாழ்ப்பாணத்தில் வங்கி கணக்கொன்றினையும் ஆரம்பித்துள்ளார். 

இது தொடர்பில் அறிந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சகோதரி யாழ்ப்பாண பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், டென்மார்க் பிரஜையான பெண்ணை கைது செய்து, விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/184013

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, ஏராளன் said:

இது தொடர்பில் அறிந்து யாழ்ப்பாணத்தில் வசிக்கும் சகோதரி யாழ்ப்பாண பொலிசாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். 

ஆகா சகோதரியே காட்டிக் கொடுத்துள்ளார்.

சகோதரியை கவனிக்கலையோ?பலே பலே.

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆகா சகோதரியே காட்டிக் கொடுத்துள்ளார்.

சகோதரியை கவனிக்கலையோ?பலே பலே.

அண்ணை சகோதரி பாஸ்போட் எடுக்க முடியாத கோபம், மறுபடி அவ பெயரில வங்கிக் கணக்கு திறந்த கோபம் எல்லாம் சேர்ந்து முறைப்பாடாகியிருக்கு!

  • கருத்துக்கள உறவுகள்
Just now, ஏராளன் said:

அண்ணை சகோதரி பாஸ்போட் எடுக்க முடியாத கோபம், மறுபடி அவ பெயரில வங்கிக் கணக்கு திறந்த கோபம் எல்லாம் சேர்ந்து முறைப்பாடாகியிருக்கு!

ஆஆஆ

என்ன சொல்றீங்க?

இலங்கையில் பணத்தை விட்டெறிந்தால் கையில பாஸ்போர்ட்.

தொலைந்து விட்டதென்று பொலிசில் ஒரு துண்டெடுத்தாலே போதுமே?

  • கருத்துக்கள உறவுகள்
3 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ

என்ன சொல்றீங்க?

இலங்கையில் பணத்தை விட்டெறிந்தால் கையில பாஸ்போர்ட்.

தொலைந்து விட்டதென்று பொலிசில் ஒரு துண்டெடுத்தாலே போதுமே?

அது சரி.

ஆனாலும் ஏதோ ஒரு பிரச்சனை ஓடுது. விசாரணையில் தெரிய வருமா? மூடி மறைக்கப்படுமா தெரியலையே?

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆஆஆ

என்ன சொல்றீங்க?

இலங்கையில் பணத்தை விட்டெறிந்தால் கையில பாஸ்போர்ட்.

தொலைந்து விட்டதென்று பொலிசில் ஒரு துண்டெடுத்தாலே போதுமே?

இதெல்லாம் எங்கே கேள்விப் பட்டீர்கள்? இலங்கையில் தேசிய அடையாள அட்டை தொலைந்தாலே, அதற்கு பொலிஸ் துண்டு எடுக்க - அதுவும் தமிழராக இருந்தால்- பிழிந்து எடுத்து விடுவார்கள். இந்த நிலையில், கடவுச் சீட்டைக் காசை விட்டெறிந்து எடுக்கிறார்களா😂?

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Justin said:

இந்த நிலையில், கடவுச் சீட்டைக் காசை விட்டெறிந்து எடுக்கிறார்களா

ஆமா என்று சொன்னால் நம்பவா போறீங்க?

  • கருத்துக்கள உறவுகள்
11 minutes ago, ஈழப்பிரியன் said:

ஆமா என்று சொன்னால் நம்பவா போறீங்க?

இல்லை அண்ணா 

இன்று அது சாத்தியம் இல்லை 

  • கருத்துக்கள உறவுகள்

வழமையாக இலங்கை குடிவரவுப் பகுதியில் கடவுச்சீட்டில் இருக்கும் அதிகாரிகள் படத்தையும், எங்களையும் ஒப்பிட்டு, கவனமாகப் பார்ப்பது போல ஒரு தோற்றத்தை உண்டாக்குவார்கள். இனிமேல் பெயர்களிலும் ஒரு quiz வைத்தாலும் வைக்கலாம்.......

Edited by ரசோதரன்

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, விசுகு said:

இல்லை அண்ணா 

இன்று அது சாத்தியம் இல்லை 

கடந்த வருடம் இலங்கை போனபோது உறவினர் ஒருவர் இப்படி எடுத்ததாக சொன்னார்.அதனாலேயே நானும் சொன்னேன்.

தவறென்றால் வருந்துகிறேன்.

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, Justin said:

இதெல்லாம் எங்கே கேள்விப் பட்டீர்கள்? இலங்கையில் தேசிய அடையாள அட்டை தொலைந்தாலே, அதற்கு பொலிஸ் துண்டு எடுக்க - அதுவும் தமிழராக இருந்தால்- பிழிந்து எடுத்து விடுவார்கள். இந்த நிலையில், கடவுச் சீட்டைக் காசை விட்டெறிந்து எடுக்கிறார்களா😂?

இது உண்மை தான்.ஒரு லட்சம், இரண்டு லட்சமல்ல.பல லட்சங்களை காட்ட வேணுமாம்.அடிக்கடி ஊருக்கு போய் வருபவர்களிடம் அங்கு நடக்கும் அனைத்தையும் அறியலாம்.

  • கருத்துக்கள உறவுகள்

dayana-1.jpg?resize=750,375&ssl=1

நீதிமன்றத்தில் ஆஜரானார் முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா !

கடவுச்சீட்டு வழக்கில் சந்தேக நபராக பெயர் குறிப்பிடப்பட்டிருந்த,  முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே கொழுப்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.

மோசடியான முறையில் இலங்கை கடவுச்சீட்டுகளை பெற்ற சம்பவம் தொடர்பில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு எதிராக உரிய நடவடிக்கை எடுத்து, நீதிமன்றில் அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று (20) உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, குறித்த விடயம் குறித்தான அறிக்கையை இன்று குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் சமர்ப்பித்தவேளை, முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே நீதிமன்றத்தில் அஜராகி  வாக்குமூலம் வழங்கியுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

https://athavannews.com/2024/1383280

####################     #######################

ஒரு அமைச்சரே... மோசடியான முறையில் கடவுச்சீட்டு  பெறும் நிலையில் நாடு இருக்கும் போது.... சாதாரண மக்கள் எம்மாத்திரம். 
அரசன் எவ்வழி, குடிமக்களும் அவ்வழி.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
17 hours ago, ஈழப்பிரியன் said:

கடந்த வருடம் இலங்கை போனபோது உறவினர் ஒருவர் இப்படி எடுத்ததாக சொன்னார்.அதனாலேயே நானும் சொன்னேன்.

தவறென்றால் வருந்துகிறேன்.

இதில் தவறு என்று ஒன்றுமே இல்லை.

பொலிசாரின் முறைப்பாட்டு அறிக்கைத் துண்டுடன் (receipt) V யில் முடிவடையும் NIC யை நானும் எடுத்துள்ளேன். 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

இதில் தவறு என்று ஒன்றுமே இல்லை.

பொலிசாரின் முறைப்பாட்டு அறிக்கைத் துண்டுடன் (receipt) V யில் முடிவடையும் NIC யை நானும் எடுத்துள்ளேன். 

நன்றி கப்பி.

பாஸ்போர்ட் தான் இப்போ பணம் கொடுத்து எடுக்க இயலாது என்கிறார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, ஈழப்பிரியன் said:

நன்றி கப்பி.

பாஸ்போர்ட் தான் இப்போ பணம் கொடுத்து எடுக்க இயலாது என்கிறார்கள்.

"பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் "

🤣

  • கருத்துக்கள உறவுகள்
36 minutes ago, Kapithan said:

"பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் "

🤣

இப்போ திறக்குதில்லையாமே!

கணனி மயப்படுத்திதாலேயோ?

  • கருத்துக்கள உறவுகள்
57 minutes ago, ஈழப்பிரியன் said:

இப்போ திறக்குதில்லையாமே!

கணனி மயப்படுத்திதாலேயோ?

நெற்றிக்காசை காட்டிப் பாருங்கள் வாய் திறக்கும் 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, Kapithan said:

நெற்றிக்காசை காட்டிப் பாருங்கள் வாய் திறக்கும் 

யாரும் திருந்தக்கூடாது. விட்டு விடுவமா நாங்க?😪

  • கருத்துக்கள உறவுகள்
5 hours ago, விசுகு said:

யாரும் திருந்தக்கூடாது. விட்டு விடுவமா நாங்க?😪

என்ன,....சாத்தான் வேதம் ஓதுகிறது? 

🤣(பெரியவா ,.கோவிக்கப்படாது. சும்மா ஒரு முசுப்பாத்திக்குத்தான்,😁)

Edited by Kapithan

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.