Jump to content

“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”-ஜோ பைடன்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

bidan-1.jpg?resize=750,375&ssl=1

“காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல”-ஜோ பைடன்.

காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல என்றும், ஹமாஸ் படையினர் தோற்கடிக்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.

வெள்ளை மாளிகையில் நடைபெற்ற யூத – அமெரிக்க பாரம்பரிய மாத நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜோ பைடன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ”காசாவில் ஹமாஸ் படையினருக்கு எதிரான இராணுவ நடவடிக்கையில், இஸ்ரேலியப் படைகள் இனப்படுகொலை செய்யவில்லை. காசாவில் நடப்பது இனப்படுகொலை அல்ல. இனப்படுகொலை நடப்பதாக மேற்கொள்ளப்படும் பிரச்சாரத்தை நாங்கள் நிராகரிக்கிறோம்.

ஹமாஸால் பாதிக்கப்பட்ட நாடு இஸ்ரேல். ஒக்டோபர் 7ம் திகதி நடத்தப்பட்ட தாக்குதலில் 1,200 பேரைக் கொன்று நூற்றுக்கணக்கான பணயக் கைதிகளைப் பிடித்துச் சென்றவர்கள் ஹமாஸ் போராளிகள். இஸ்ரேலியர்களின் பாதுகாப்புக்கான அமெரிக்காவின் ஆதரவு என்பது இரும்புக் கவசத்தைப் போன்றது. ஹமாஸ் தோற்கடிக்கப்பட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம். அதைச் செய்ய நாங்கள் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுவோம்” இவ்வாறு பைடன் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1383345

Link to comment
Share on other sites

யூத வாக்குகளும் பணமும் வரும் தேர்தலுக்கு தேவை. ஆகவே  மனிதாபிமானமாவது மண்ணாங்கட்டியாவது.

  • Like 1
Link to comment
Share on other sites

இலங்கையில் நிகழ்ந்தது / நுட்பமாக இன்றும் நடந்து கொண்டு இருப்பது இனப்படுகொலை அல்ல என்று பாலஸ்தீனர்கள் மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் இன்றுவரைக்கும் சொல்லிக் கொண்டு இருப்பது எந்தளவுக்கு சுய நலமானதோ, பக்கச்சார்பானதோ அதே அளவுக்குத் தான் இதுவும்.

  • Like 2
  • Thanks 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதில ஒரு கவலையான விடயம் என்னவென்றால்,  இந்த முட்டாளுகள் இதற்கெல்லாம் பதில் சொல்லவேண்டிய தேவை அநேகம் வராது.
ஆனால் இவையிண்ட சந்ததிகள் பதில் சொல்ல வேண்டியிருக்கும்.


 எங்கட கடவுள் மாரிடம் சொல்லி,  அவரின்ட இம்ப்ளெமெண்டஷன் மொடலை கொஞ்சம் மோடிஃபை பண்ணி,  பலனை இப்பவே அனுபவிக்கிற பெர்ஸன்டேஜை அதிகரிக்கச் சொல்ல வேணும்  ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Posted (edited)

இந்தப் பேச்சுக் கொப்பியையும் தூக்கிக் கொண்டு சப்பிரி கனடாவுக்கு வாறாராம்..😆

Edited by alvayan
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வாறது தமிழனுக்கு அடுத்த ஆப்பைச் சொருக. அதனால இனி அடிக்க மாட்டாங்கள். 2005 இல இருந்து இண்டைக்கு மட்டும் இலங்கையின்ர உற்ற நண்பன் இந்தியாதானெண்டு சிங்களத்துக்குத் தெரியும். 
    • யாழில் அண்மையில் கலந்துரையாடிய விடயங்களும் இக்காணொளியில் உள்ளமையால் இணைத்துள்ளேன்.
    • நேபாளத்தின் கடும் சவாலை முறியடியத்து சுப்பர் 8 சுற்றில் நுழைந்தது பங்களாதேஷ் 17 JUN, 2024 | 12:17 PM   (நெவில் அன்தனி) நேபாளத்துக்கு எதிராக சென் வின்சன்ட், கிங்ஸ்டவுன் ஆனோஸ் வேல் விளையாட்டரங்கில் நேற்று (16) இரவு நடைபெற்ற டி குழுவுக்கான ரி20 உலகக் கிண்ணப் போட்டியில் 21 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பங்களாதேஷ், சுப்பர் 8 சுற்றில் விளையாடுவதை உறுதி செய்துகொண்டது. இப் போட்டியில் நேபாளத்திடம் கடும் சவாலை எதிர்கொண்டே பங்களாதேஷ் வெற்றி பெற்றது. பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக அமைந்த ஆடுகளத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் கடும் சிரமத்துக்கு மத்தியில் 19.3 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 106 ஓட்டங்களைப் பெற்றது. துடுப்பாட்டத்தில் ஷக்கிப் அல் ஹசன் அதிகபட்சமாக 17 ஓட்டங்களைப் பெற்றார். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நேபாளம் 19.2 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 85 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வி அடைந்தது. 7 ஓவர்கள் நிறைவில் நேபாளம் 5 விக்கெட்களை இழந்து 26 ஓட்டங்களைப் பெற்று தடுமாறியதால் பங்களாதேஷ் இலகுவாக வெற்றிபெறும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் குஷால் மல்லா (27), தீப்பேந்த்ரா சிங் அய்ரீ (25) ஆகிய இருவரும் 6ஆவது விக்கெட்டில் 52 ஓட்டங்களைப் பகிர்ந்து பங்களாதேஷுக்கு நெருக்கடியைக் கொடுத்தனர். ஆனால், அவர்களது இணைப்பாட்டம் முடிவுக்கு வந்த பின்னர் விக்கெட்கள் அடுத்தடுத்து சரிந்தன. நேபாளத்தின் மொத்த எண்ணிக்கை 85 ஓட்டங்களாக இருந்தபோது கடைசி 4 விக்கெட்களும் வீழ்த்தப்பட்டன. பந்துவீச்சில் தன்ஸிம் ஹசன் சக்கிப் 2 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 4 ஓவர்களில் 7 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களையும் முஸ்தாபிஸுர் ரஹ்மான் ஒரு ஓட்டமற்ற ஓவர் உட்பட 4 ஓவர்களில 7 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஷக்கிப் அல் ஹசன் 9 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினார். ஆட்டநாயகன்: தன்ஸிம் ஹசன் சக்கிப் https://www.virakesari.lk/article/186257
    • Published By: VISHNU 16 JUN, 2024 | 10:48 PM   வீதியில் மயங்கி விழுந்த, தொல்புரம் விக்கினேஸ்வரா வித்தியாலய மாணவன் ஒருவர் பரிதாபமாக ஞாயிற்றுக்கிழமை (16) உயிரிழந்துள்ளார். தொல்புரம் பகுதியைச் சேர்ந்த தவராசா கோபிக்குமரன் என்ற 16 வயதுடைய மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருகையில்,  குறித்த மாணவன் அவரது நண்பருடன் இன்று மதியம் கடைக்கு சென்று உள்ளார். இதன் போது சுழிபுரம் சந்திக்கு அருகாமையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இந்நிலையில் குறித்த மாணவனை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்த வேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். குறித்த மாணவனுக்கு இதய வால்வில் ஏற்பட்ட சுருக்கம் காரணமாகவே இந்த மரணம் சம்பவித்துள்ளதாக உடற்கூற்று பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. https://www.virakesari.lk/article/186222
  • Our picks

    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.