Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
29 MAY, 2024 | 03:43 PM
image
 

பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடொன்று கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த பெண்ணொருவரே இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளார்.

பிரபல யூடியூப் சேனல் ஒன்றினை நடத்திச் செல்லும் இவர் பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாடுகளின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுத்து தனது யூடியூப் சேனலில் பதிவிடுவது வழக்கம். 

சுமார் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள இவர் இலங்கையின் சுற்றுலாத் தலங்களைக் காணொளிகளாக எடுப்பதற்காக கடந்த 24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார்.

இந்நிலையில், இவர் எல்ல பிரதேசத்திற்குச் செல்வதற்காகக் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்குச் சென்றுள்ள நிலையில் சீரற்ற காலநிலை காரணமாக ரயில் சேவை இரத்துச் செய்யப்பட்டுள்ளது.

பின்னர் இவர் பஸ்ஸின் மூலம் எல்ல பிரதேசத்தை நோக்கிப் பயணித்துக்கொண்டிருக்கும் போது அதே பஸ்ஸில் பயணித்த இருவர் இவரது பயணப் பொதியைத் திருடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தனது பயணப் பொதி திருடப்பட்டதை அறிந்துகொண்ட இவர், இது தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளித்துள்ளார்.

இவரது பயணப் பொதியினுள் விமான பயணச்சீட்டு,கமரா , மடிக்கணினி  மற்றும்  2,000 டொலர் பெறுமதியான பணம் உள்ளிட்ட பொருட்கள் காணப்பட்டதாகக் குறித்த முறைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில்,தனது பயணப் பொதியை கண்டுப்பிடித்துக்கொடுக்கும் நபர்களுக்கு 5,000 டொலர் பெறுமதியான பணப்பரிசு வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு! | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தில் நடக்காத களவா???🤣🤣

வீதியில் தொலைபேசிகளை பயன்படுத்த முடியாத நிலை…😡

Edited by MEERA

  • கருத்துக்கள உறவுகள்

இவர் பயணித்த 37 நாடுகளில் இல்லாத கள்ளர், ஶ்ரீலங்காவில் இருக்கிறார்கள். 😂

களவிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும்.
அந்த மனிசியின், விமான பயண சீட்டையாவது திருப்பி கொடுத்து விடுங்க(டா)… 


 

  • கருத்துக்கள உறவுகள்
2 hours ago, தமிழ் சிறி said:

களவிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும்.
அந்த மனிசியின், விமான பயண சீட்டையாவது திருப்பி கொடுத்து விடுங்க(டா

திருப்பி கொடுக்கலாம் என்று யோசித்தேன் பாஸ்.

மிச்சம் எங்கடா என்று பின்னி பிடலெடுத்துடுவாங்களே?

  • கருத்துக்கள உறவுகள்
8 minutes ago, ஈழப்பிரியன் said:

திருப்பி கொடுக்கலாம் என்று யோசித்தேன் பாஸ்.

மிச்சம் எங்கடா என்று பின்னி பிடலெடுத்துடுவாங்களே?

இது மட்டும்தான்... அந்தப் பைக்குள்ளை இருந்தது என்று சொன்னால்,
ஸ்ரீலங்கா பொலிஸ் நம்பி.... அந்த வெள்ளைக்காரிதான்  பொய் சொன்னதென்று பிடித்து விளக்கமறியலில் வைத்து விடுவார்கள். உங்களுக்கு மேலதிக போனசாக 5´000 டொலரும் கிடைக்கும். 🤣
ஒரு கல்லில்... பல மாங்காய்கள்.... 😂

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, தமிழ் சிறி said:

இவர் பயணித்த 37 நாடுகளில் இல்லாத கள்ளர், ஶ்ரீலங்காவில் இருக்கிறார்கள். 😂

களவிலும் ஒரு நியாயம் இருக்க வேண்டும்.
அந்த மனிசியின், விமான பயண சீட்டையாவது திருப்பி கொடுத்து விடுங்க(டா)… 


 

முன்னர் கொழும்பில் பிக்பொக்கற்றில் தங்கள் wallets ஐத் தொலைத்தவர்களது NIC க்கள் தபாலில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பப்படுவது வழமை. 😁

  • கருத்துக்கள உறவுகள்

பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண்ணின் பயணப் பொதி திருட்டு; சந்தேக நபர் கைது

Published By: DIGITAL DESK 7   31 MAY, 2024 | 11:44 AM

image
 

பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்து பெண் ஒருவரின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் திருடிச் சென்றதாகக் கூறப்படும் 20 ஆயிரம் டொலர் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட கமராவை தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபா முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை  பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

“அண்டர் தி சேம் ஸ்கை” என்ற யூடியூப் பக்கத்தை நடத்தி வரும் ஸ்கை மெக்கோவன் என்பவர் 37 நாடுகளுக்குச் சென்றுள்ள நிலையில் கடந்த  24 ஆம் திகதி இலங்கைக்கு வருகை தந்திருந்தார். 

இந்நிலையில், புறக்கோட்டை பெஸ்டியன்  மாவத்தையில் பஸ்ஸில் வைத்து இவரது பயணிப்பைத் திருடப்பட்டுள்ளதாக பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டினையடுத்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/184929

  • கருத்துக்கள உறவுகள்

women.jpg?resize=300,200&ssl=1

இங்கிலாந்துப் பெண்ணின் பயணப் பொதியைத் திருடியவர் கைது!

பஸ்ஸில் பயணித்த இங்கிலாந்துப் பெண்ணின் பயணப் பொதி திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகப்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் களனி பெத்தியகொட பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் திருடிச் சென்றதாகக் கூறப்படும் பெறுமதியான மடிக்கணினி, கமரா, வங்கி அட்டைகள் மற்றும் விமான கடவுச்சீட்டு உள்ளிட்ட பொருட்கள் பொலிஸாரினால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

பஸ்ஸில் பொருத்தப்பட்டிருந்த சிசிரிவி கமராக்களில் பதிவாகிய புகைப்படங்கள் மூலம் சந்தேக நபர் அடையாளம் காணப்பட்டதையடுத்து, அவரை கைது செய்ய முடிந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

திருடப்பட்ட கெமரா தொம்பே பிரதேசத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், மடிக்கணினியின் கடவுச் சொல்லை அழிப்பதற்காக பேலியகொடை பிரதேசத்தில் நபரொருவருக்கு 5,000 ரூபாய் முற்பணமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், ஏனைய பொருட்கள் சந்தேக நபரிடம் காணப்பட்டதாகவும் புறக்கோட்டை பொலிஸ் நிலைய தலைமை அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1385057

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.