-
Tell a friend
-
Topics
-
8
பிழம்பு · தொடங்கப்பட்டது
-
Posts
-
தயவு செய்து யாரவாது அவருக்கு நல்ல வழியில் வழி காட்டுங்க ஆள் கண்ட அறிவற்ற ஆட்களுடன் சகவாசம் கொண்டு அழியுமுன் .
-
By விளங்க நினைப்பவன் · Posted
நான் வீடியோ பார்க்கவில்லை தெரிந்தவர்கள் சொன்னார்கள் போதை பாவிப்பது தவறு இல்லை என்கின்ற மாதிரி அவர் சொன்னதாக. தவறே தான் 😟 -
உண்மையில் இந்திய படங்களுக்கு மூன்று மணி நேர படம் என்றால் அரை மணி நேரத்தில் பார்த்து விடுவேன் காரணம் கட்டாயம் கதாநாயகன் நாயகியிடம் வழிவது அல்லது நாயகி நாயகனிடம் வளிவது எப்படியும் முக்கால் மணி நேரம் அதன் பின் மரத்தை சுத்தி ஆடுவது இயந்திரமனிதன் போல் ஆடும் கொடுமைகள் முக்கால் மணி நேரம் இதெல்லாம் சேர்த்தால் ஒன்றரை மணி நேரம் இந்த காட்சிகள் வராத இந்திய படங்கள் ஒரு ஐந்து வீதமே இருக்கும் அதன் பின் கதை களத்தை உருவாக்கும் காட்சிகள் அனேகமாக நாங்கள் எதிர்பார்த்த ஒன்றாக இருக்கும் அதுக்கு முக்கால் மணி நேரம் அதன் பின் முக்கிய காட்சிகளில் ஒரு சில காட்சிகள் பார்க்க கூடியதாக இருக்கும் இப்படியொரு இரண்டு மூன்று இழவுக்கு ஏன் தியேட்டர். நம்மை பொறுத்தவரை இணையத்தில் இலவசமாக பார்ப்பதே உண்டு .ஆனால் மகாராஜா காட்சிகளை மாற்றி அமைத்து முக்கியமாய் அந்த பெற்றோல் துண்டால் தான் குற்றவாளிகளை கண்டறிகிறார் எனும் காட்சி Netflix வந்த பின்னே அறிய கூடியதாக இருந்தது.அதனால் கொஞ்சம் கடைசி நேர twist இனால் படம் தப்பி பிழைக்கும் . முத்தையா முரளிதரன் போல் தன்னை நடிக்க விடவில்லை என்ற விஜெய் சேதுபதியின் முறுக்கல் எனக்கு பிடிக்காத ஒன்று .
-
சாவகச்சேரி பிரச்சனை ஆரம்பித்ததிலிருந்து அனேகமானவர்கள் வைத்தியர் அர்ச்சனாவின் பக்கமே பேசி வந்தார்கள்..அது நான் உட்பட அது தான் நடந்தது..ஒட்டு மொத்த மக்களும் தன் பக்கம் தான் நிற்கிறார்கள் என்று நினைத்து கொண்டு வைத்தியர் எல்லாரையும் முட்டாளக்க கூடாது..கடந்த ஒரு மாதமாக என்ன செய்கிறார்..அதை சொல்லுங்கள்...... ஓடி, ஒடி அதைத் செய்தேன், இதை செய்தேன் என்று செவ்வி குடுத்து கொண்டு இருக்கிறாரே தவிர.. ஏதாவது உருப்படியா நடக்கிறதா..சுகவீன விடுப்பு எடுத்து கொண்டு போய் நின்று விளையாட்டு நடக்கிறது..சரி அது அவர் விருப்பம் என்றே வைத்து கொள்வோமே,நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள படத்தை சொல்லித் தான் அர்ச்சனாவின் சட்டதரணியும் மேற் கொண்டு கருத்துக்களை வைக்க சொல்லி எழுதி இருந்தார்..அதாவது காமடி. அர்ச்சனா இணையத்திலிருந்து என்ன செய்கிறார்..? போருக்கு முன், போருக்கு பின் எந்த வீட்டில் தாய் , தந்தையர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மது குடிக்க ஊற்றிக் கொடுத்தாக சரித்திரம் இருக்கிறதா.?எங்காவது கேள்விப் பட்டீர்களா..? தனது தந்தை போராளித் தலைவரின் முக்கிய பொறுப்ப்பிலிருந்தவராம்...அப்படி பட்டவர்கள் மதுப் பிரியர்களாக இருந்திருந்தால் பெரிய, பெரிய பொறுப்புக்களில் இருந்திருப்பார்களா.?.இருந்திருக்க முடியுமா.?அவர் வீட்டில் அவரது பெற்றோர் பிள்ளைகளுக்கு மது கொடுப்பது வழமையாம்.இதை எல்லாம் ஏற்றுக் கொள்ள கூடியதாகவா இருக்கிறது... பல தரப்பட்ட வயதுடையவர்களும் வந்து போகும் இடங்களில் ஒன்று முகனூல் அதில் தான் எவ்வளவு மது ஒருவர் எடுக்க வேணும் என்பது பற்றி வேணும் என்றால் சொல்கிறாராம்..தானும் மண்ணாகி மற்றவர்களையும் மண்ணாக்குவது என்பது இது தான்...இப்படி நிறைய, நிறைய இவரைப் பற்றி அப்டுடேற்றா வாசித்திருக்கிறேன். இவர் உண்மையாக மக்களுக்கு பணியாற்றத் தான் படித்தார் மற்றும் பணியாற்றத் தான் யாழ்ப்பாண பக்கம் போனவர் என்றால் நேரத்தை வீணடிக்க மாட்டார்..ஒரு மீடியாகாரரை பேசும் போது கெட்ட வார்த்தை பாவித்தார் அது உங்களுக்கு தெரியுமா.? சுய அறிவோடு நின்று பேசும் எந்த மனிதர்களது வாயிலும் அப்படியான வார்த்தைகள் வரவே வராது..அதுவும் ஒரு படித்தவர் வாயிலிருந்து அப்படியான வார்த்தைகள் வரவே கூடாது..மற்றவர்கள் மேல் விரல் நீட்ட முதல் நாங்கள் சரியாக இருக்கிறமா என்பதை கொஞ்சம் சிந்தித்து பார்க்க வேணும். எனது நோக்கம் பிழை பிடிப்பதோ அவருக்கு போகும் உதவிகளை தடுப்பதோ அல்ல.மொத்தத்தில் ஒரு வைத்தியரையும் கன்டிகப்ற் ஆக்குறீங்கள்..நன்றி.
-
By ஈழப்பிரியன் · Posted
பையா கந்தையர் இலங்கையில் இருக்கும் போது இபோச வில்த் தான் பயணம் செய்கிறவர். ஆதலால் உரசி உரசி பழகிவிட்டார்.
-
-
Our picks
-
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
kandiah Thillaivinayagalingam posted a topic in மெய்யெனப் படுவது,
"சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"
தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!
“ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
வேதத்தில் சாதி இருக்கிறதா?
narathar posted a topic in மெய்யெனப் படுவது,
இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.
ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.-
-
- 1 reply
Picked By
மோகன், -
-
மனவலி யாத்திரை.....!
shanthy posted a topic in கதை கதையாம்,
மனவலி யாத்திரை.....!
(19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)
அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.-
- 1 reply
Picked By
மோகன், -
-
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை
mooki posted a topic in சமூகச் சாளரம்,
பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்
Friday, 16 February 2007
காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.-
- 20 replies
Picked By
மோகன், -
-
ஒரு சித்தர் பாடல்
பண்டிதர் posted a topic in மெய்யெனப் படுவது,
எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)
நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?
பொருள்:
சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.-
- 7 replies
Picked By
மோகன், -
-
Recommended Posts