Jump to content

பிரான்ஸ் தேர்தல் - மக்ரோனுக்கு மரண அடி.


nedukkalapoovan

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்ஸ் முதற்கட்ட பாராளுமன்ற தேர்தல் வாக்குகள் எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில்..

அதிபர் மக்ரோனின் கட்சி மரண அடி வாங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டபடியுள்ளன. 

அதேவேளை பிரான்ஸ் தேசியவாத வலது சாரிகள் அமோக வெற்றிகளை பெற்று வருகின்றனர்.

ஏலவே அமெரிக்காவில் பைடனின் உளறல் தேர்தல் பேச்சு அவரின் வெற்றியை கேள்விக்குறியாக்கிவிட்டுள்ள நிலையில்..

மேற்குலக புட்டின் எதிர்பாளர்கள் நடப்பு தேர்தல்களில் மக்களால் நிராகரிக்கப்பட்டு வரும் நிலையே காணப்படுவதோடு.. தேசியவாதம் எழுச்சி பெற்று வருகிறது.

https://www.bbc.co.uk/news/live/cn087x77g1dt

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனியில் கூட  அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD  கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது.

அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம்.

மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.

  • Downvote 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிரான்சில் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து வன்முறை – வர்த்தக நிலையங்கள் வாகனங்கள் தீக்கிரை

Published By: RAJEEBAN   01 JUL, 2024 | 08:34 AM

image
 

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரி கட்சி முன்னிலை பெற்றதை தொடர்ந்து அதனை எதிர்க்கும் தரப்பினர் தலைநகர் பரிசில் கடும் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

தீவிரஇடதுசாரிகள் இஸ்லாமிய ஆதரவாளர்கள் உட்பட சமூகத்தின் பலதரப்பட்டவர்கள் இந்த ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.

வர்த்தகநிலையங்களும் வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டுள்ளதை காண்பிக்கும் படங்கள் வெளியாகியுள்ளன.

பொலிஸாருக்கும் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கும் இடையில் மோதல்கள் இடம்பெறுகின்றன.

GQ1X0GHWMAAGXfm.jpg

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலில் தீவிரவலதுசாரிகள் முன்னிலைபெற்றுள்ள அதேவேளை தற்போதைய ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கட்சி மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

குடியேற்றவாசிகளிற்கு எதிரான ஆர்என் கட்சி 33 வீத வாக்குகளை பெற்றுள்ள அதேவேளை இடதுசாரிகூட்டணி 28 வீத வாக்குகளை பெற்றுள்ளது.

ஜனாதிபதி இமானுவேல் மக்ரோனின் கூட்டணிக்கு 21 வீத வாக்குகள் கிடைத்துள்ளதாக பிரான்ஸ் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மக்ரோனின் கட்சி முற்றாக துடைத்தெறியப்பட்டுள்ளது என ஆர்என்கட்சியின் மரைன்லெபென் தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் மக்கள் வாக்களித்தால் நான்; அனைத்துபிரான்ஸ் மக்களினதும் பிரதமராக தயார் என ஆர்என் கட்சி தலைவர் ஜோர்டன் பர்டெல்லா தெரிவித்துள்ளார்.

பிரான்ஸ் நாடாளுமன்ற தேர்தலின் முதல் சுற்றில் தீவிரவலதுசாரிகள் வெற்றிபெற்றுள்ளமை அதன் வரலாற்றில் இதுவே முதல்தடவை என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/187350

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சனநாயகக் காவலர்களில் ஒன்றான கனடா,  ஈரானிய சனாதிபதித் தேர்தலின் போது கனடாவில் வாக்களிப்பை நடாத்த அனுமதிக்கவில்லை  எனச் செய்திகள் தெரிவிக்கின்றன. 

🤣

Edited by Kapithan
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2024 at 01:07, குமாரசாமி said:

ஜேர்மனியில் கூட  அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD  கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது.

அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம்.

மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.

நம் நாடு என்பதில் உடன்பாடே. ஆனால் இது வெள்ளை நாடு என்பது தான் தவறு. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 hours ago, விசுகு said:

நம் நாடு என்பதில் உடன்பாடே. ஆனால் இது வெள்ளை நாடு என்பது தான் தவறு. 

விசுகர்!  அவர்கள் சொல்லும் வெள்ளை நாடு என்பதிலும் தவறில்லை.

ஏனெனில்.....

இவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் மீது படையெடுத்து அந்த நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கா விட்டால், அந்த நாடுகளின் சொத்துக்களை கொள்ளையடிக்காமல் விட்டிருந்தால், இன்றும் அவர்கள் தம் கொலனி நாடுகள் என பெருமை அடிக்காமல் இருந்தால்.....
 
எனவே....

மூன்றாம் உலக நாடுகளின் பிந்தங்கிய நிலைக்கு இவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆகின்றார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
On 1/7/2024 at 01:07, குமாரசாமி said:

ஜேர்மனியில் கூட  அடுத்த ஞாயிறு பொது தேர்தல் வைத்தால் AfD  கட்சிதான் வெற்றியடையும். அதில் நியாயமும் இருக்கின்றது.

அவர்கள் எம் நாடு என்கிறார்கள். நாங்கள் புலம்பெயர்ந்து இங்கு வந்து விட்டு தமிழீழம் கேட்கின்றோம்.

மேற்குலக புட்டின் எதிர்ப்பாளர்கள் வாய்ப்பாடு வைத்து கூட்டி கழித்து கணக்கு பார்க்க கடவீர்.

16 %   வெற்றி இல்லை  ....ஆட்சி அமைப்பது,நாட்டை ஆள்வது தான்  வெற்றியாகும்.  இவர்களால்  தனித்து அல்லது  கூட்டணி  அமைத்து தேர்தலில் பின்னர் கூட்டணி அமைத்து  ஜேர்மனியை ஆள்வார்கள??  இல்லை எனபது எனது பதில்    

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
12 minutes ago, Kandiah57 said:

16 %   வெற்றி இல்லை  ....ஆட்சி அமைப்பது,நாட்டை ஆள்வது தான்  வெற்றியாகும்.  இவர்களால்  தனித்து அல்லது  கூட்டணி  அமைத்து தேர்தலில் பின்னர் கூட்டணி அமைத்து  ஜேர்மனியை ஆள்வார்கள??  இல்லை எனபது எனது பதில்    

நீங்கள் பல இடங்களில் அடிக்கடி ஆட்சி அமைப்பதை பற்றியே கருத்தெழுதுகின்றீர்கள்.  ஒரு அரசியலில் அதுவல்ல முக்கியம்.

சீமான் 7வீதம் 8வீதம் முன்னேறியதற்கே கதறிய நீங்கள் 16 வீதம் என்பதை கடந்து போகின்றீர்கள்.

உங்களை நினைத்து கொடுப்புக்குள் சிரித்து விட்டு இடம் மாறுவதை தவிர வேறு வழியில்லை.

ஒரு நாட்டில் பதினாறு வீத அரசியல்  வெற்றி  என்பது குறைந்த விடயமல்ல. 

  • Like 1
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
25 minutes ago, குமாரசாமி said:

சீமான் 7வீதம் 8வீதம் முன்னேறியதற்கே கதறிய

நான் வாழ்த்துக்கள் தெரிவித்தேன். கதறவில்லை  🤣.  உங்களால்  அவர்கள் ஆட்சி அமைப்பார்கள் என்று சொல்ல முடியவில்லை      16 %பெரிய விடயம்   தான்  மற்ற கட்சிகள் இவர்களுடன் இணைந்து அரசாங்கம் அமைக்கும் போது மட்டுமே     கொஞ்ச காலம் முன்னர்  PDS.   என்ற கட்சியும்.  இப்படி தான்   அவர்களும் கிழக்கில் நிறைய ஆதரவு இருந்தது   இப்ப குறைத்து விட்டது  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, குமாரசாமி said:

விசுகர்!  அவர்கள் சொல்லும் வெள்ளை நாடு என்பதிலும் தவறில்லை.

ஏனெனில்.....

இவர்கள் ஆசிய ஆபிரிக்க நாடுகள் மீது படையெடுத்து அந்த நாட்டு மக்களை அடிமைகளாக வைத்திருக்கா விட்டால், அந்த நாடுகளின் சொத்துக்களை கொள்ளையடிக்காமல் விட்டிருந்தால், இன்றும் அவர்கள் தம் கொலனி நாடுகள் என பெருமை அடிக்காமல் இருந்தால்.....
 
எனவே....

மூன்றாம் உலக நாடுகளின் பிந்தங்கிய நிலைக்கு இவர்களும் பதில் சொல்ல வேண்டியவர்கள் ஆகின்றார்கள்.

இதையே இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம்???

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
9 minutes ago, விசுகு said:

இதையே இன்னும் எத்தனை தலைமுறைகளுக்கு சொல்லிக்கொண்டே இருக்கப் போகிறோம்???

இது எங்கள் கொலனி என மார்தட்டிக்கொண்டு திரியும் இவர்கள் அங்கு நடக்கும் பிரச்சனைனைகளை தீர்க்கும்  வரைக்கும்:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஐரோப்பா வெளிநாட்டவர்களை வெறுப்பதற்கும் வெளியேற்ற ஆசைப்படுவதற்கும் , எனதுநாடு எனக்கே என்று ஆவேசப்படுவதற்கும் 70%மான காரணம் எவனையாவது கொன்றால் சொர்க்கத்துக்கு போகலாம் என்ற இனிய மார்க்க இஸ்லாமியர்களே. 

ஏனைய காரணங்கள் மீதம்.

  • Thanks 1
Link to comment
Share on other sites



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்
    • 06 JUL, 2024 | 02:32 PM (நெவில் அன்தனி) அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் பங்குபற்றும் மெய்வல்லுநர் (ஆண்கள்) என்ற அரிய சாதனை 16 வயதான குவின்சி வில்சனுக்கு சொந்தமாகிறது.  ஒரிகொன், இயூஜினில் கடந்த வார இறுதியில் நடைபெற்ற அமெரிக்க மெய்வல்லுநர்களுக்கான ஒலிம்பிக் திறன்காண் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், அதீத ஆற்றலை வெளிப்படுத்தி சாதனைமிகு நேரப்பெறுதியைப் பதிவுசெய்ததன் மூலம் பாரிஸ் செல்லும் அமெரிக்க ஒலிம்பிக் மெய்வல்லுநர் அணியில் இடம்பிடித்துள்ளார்.  ஆண்களுக்கான 400 மீற்றர் திறன்காண் ஓட்டப் போட்டியில் பங்குபற்றிய குவின்சி வில்சன், 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் ஒலிம்பிக்கில் தனிநபராக பங்குபற்ற தகுதிபெறவில்லை. ஆனால், இளம் குறுந்தூர ஓட்ட வீரரான குவின்சி வில்சன், அமெரிக்க 4 x 400 மீற்றர் தொடர் அணியில் இடம்பெற்றுள்ளார்.  அமெரிக்க மெய்வல்லுநர் குழாத்தில் இளம் வீரர் வில்சன் பெயரிடப்பட்டுள்ளதை அவரது பயிற்றுநர் ஜோ லீ உறுதிசெய்தார். இதனை வில்சனும் உறுதிசெய்துள்ளார்.  'ஒலிம்பிக்கிற்கு தெரிவுசெய்யப்பட்டுள்ளேன் என அறியக்கிடைத்ததும் நான் பேரானந்தம் அடைந்தேன்' என சர்வதேச ஊடகம் ஒன்றுக்கு வில்சன் தெரிவித்தார்.  'ஒலிம்பிக் அணியில் பெயரிடப்பட்டுள்ளேன் என அறிந்ததும் நான் பரவசமடைந்தேன். மகிழ்ச்சி வெள்ளத்தில் வீட்டைச் சுற்றி ஓட ஆரம்பித்தேன். இளம் பராயத்தில் ஒவ்வொருவரும் ஒலிம்பிக்கிற்குச் செல்ல வேண்டும் என கனவு காண்கிறார்கள். அந்த வகையில் என்னைப் பொறுத்த மட்டில் இது பொன்னான தருணமாகும்' என்றார் அவர்.  இதன் மூலம் அமெரிக்க வரலாற்றில் மிக இளவயதில் ஒலிம்பிக் மெய்வல்லுநர் போட்டியில் பங்குபற்றவுள்ள வீரர் என்ற பெருமையை மேரிலாண்ட், பொட்டோமக் புல்லிஸ் பாடசாலையில் கல்வி பயிலும் கனிஷ்ட மாணவரான குவின்சி வில்சன் பெறுகிறார்.  ஒலிம்பிக்கில் பங்குபற்றவேண்டும் என்ற ஆர்வம் ரியோ 2016 விளையாட்டுப் போட்டியின் போது வில்சனுக்கு ஏற்பட்டது. மேலும் அவர் தனது 8ஆவது வயதில் இளையோர் ஒலிம்பிக் போட்டிகளில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.  'ஜஸ்டின் கெட்லினும் யுசெய்ன் போல்ட்டும் நேருக்கு நேர் போட்டியிட்டதை நான் பார்த்தபோது நானும் ஒரு நாள் அதில் (ஒலிம்பிக்) பங்குபற்றுவேன் என்று எண்ணியதை நான் நினைவில் வைத்திருக்கிறேன்' என வில்சன் கூறினார். 'அதைப்பற்றி நான் எனது அம்மாவிடமும் அப்பாவிடமும் கூறினேன். இப்போது அந்த கனவு நனவாகியுள்ளது' என அவர் குறிப்பிட்டார்.  கடந்த வாரம் நடைபெற்ற மூன்று வெவ்வேறு 400 மீற்றர் திறன்காண் போட்டிகளை 45 செக்கன்களுக்குள் பதிவுசெய்த குவின்டன் வில்சன், 42 வருடங்கள் நீடித்த 18 வயதுக்குட்பட்டவர்களுக்கான சாதனையை முறியடித்தார். 400 மீற்றர் அரை இறுதிப் போட்டியை 44.59 செக்கன்களில் ஓடி முடித்தன் மூலம் வில்சன் புதிய சாதனையை நிலைநாட்டினார்.  1982இல் டெரல் ரொபின்சனால் நிலைநாட்டப்பட்ட சாதனையை முயறிடித்தே புதிய சாதனையை வில்சன் நிலைநாட்டினார்.  'நான் எனது மெய்வல்லுநர் வாழ்க்கையில் இந்தளவு மகிழ்ச்சியாக ஒருபோதும் இருந்ததில்லை. இதற்காக நான் கடுமையாகவும் அர்ப்பணிப்புடனும் உழைத்தேன். இந்த சாதனையை முறியடிக்க 42 ஆண்டுகள் தேவைப்பட்டுள்ளது. நான் அந்த சாதனையை 3 தினங்களுக்குள் இரண்டு தடவைகள் முறியடித்ததையிட்டு பெருமை அடைகிறேன்' என அவர் மேலும் கூறினார்.  பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழா ஜூலை 26ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் தொடர்ச்சியான பயிற்சிகளில் குவின்சி வில்சன் ஈடுபடவுள்ளார். அத்துடன் லண்டனில் அல்லது மியாமியில் நடைபெறவுள்ள 400 மீற்றர் ஓட்டப் போட்டியிலும் பங்குபற்ற திட்டமிட்டுள்ளார்.  'எனது ஆற்றலை மேம்படுத்திக்கொள்வதற்காக நான் கடும் பயிற்சியில் ஈடுபடவுள்ளேன். மைதானத்தில் உள்ள ஒவ்வொரு சுவடுகளிலும் ஓடிப் பழகவுள்ளேன். நான் எந்த சுவட்டில்  ஓடுவேன் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள முடியாது. முதலாவது, இரண்டாவது, மூன்றாவது அல்லது நான்காவது சுவடுகளிலா ஓடுவேன் என்பது எனக்கு தெரியாது. ஆனால் நான் எதற்கும் தயாராகவே இருக்கிறேன்' என வில்சன் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.  அமெரிக்காவின் 4 x 400 மீற்றர் தொடர் ஓட்ட அணியில் இடம்பெறுவதன் மூலம் மிகக் குறைந்த வயதில் அமெரிக்க அணியில் இடம்பிடித்த வீரர் என்ற சாதனையை 16 வயதான வில்சன் நிலைநாட்டியுள்ளார்.  பாரிஸில் 124 வருடங்களுக்கு முன்னர் நடைபெற்ற 2ஆவது ஒலிம்பிக் விளையாட்டு விழா அத்தியாயத்தில் அமெரிக்க அணியில் தனது 17ஆவது வயதில் பங்குபற்றிய ஆர்த்தர் நியூட்டனை விஞ்சி மிக இளவயதில் ஒலிம்பிக்கில் பங்குபற்றும் அமெரிக்க வீரர் என்ற சாதனையை குவின்சி வில்சன் தனதாக்கிக்கொண்டுள்ளார். குவின்சி வில்சன் ரூபத்தில் புதிய போல்ட் வந்துவிட்டாரா என்பதற்கு பாரிஸ் ஒலிம்பிக்தான் பதில் கூறப்போகிறது. ஆனால், அவரது பிரசன்னம் அமெரிக்க மெய்வல்லுநர் விளையாட்டுத்துறையில் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் குவின்சி வில்சன் தனக்கென ஒரு பெயரைப் பொறிப்பார் என நம்புவோமாக! https://www.virakesari.lk/article/187828
    • தேர்தல் காலங்களில் மக்களை ஏமாற்ற  விடும் புலுடாவாக இருக்கலாம். அல்லது சம்பந்தர் இனி இலையென்பதால் அடுத்த ஏமாந்த சம்பந்தர் என்று நினைத்து அழைக்கலாம் பொறுத்திருந்து பாப்போம்!
    • தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது; உமா குமரனின் வெற்றி குறித்து சீமான் கருத்து – வாழ்த்து தெரிவிப்பு 06 JUL, 2024 | 12:28 PM   பிரிட்டன் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிபெற்றுள்ள இலங்கை வம்சாவளி தமிழரான உமா குமரனிற்கு நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, இங்கிலாந்து நாடாளுமன்றத்தேர்தலில் போட்டியிட்டு வென்றுள்ள அன்புத்தங்கை உமா குமரன் அவர்களுக்கு என்னுடைய நெஞ்சம் நிறைந்த நல்வாழ்த்துகள்! இங்கிலாந்து நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள முதல் தமிழர் என்ற பெருமையை தங்கை உமா குமரன் அவர்கள் பெற்றுள்ளது மிகுந்த மனமகிழ்வை அளிக்கிறது.  இனவழிப்பு தந்த காயங்களோடும் கண்ணீரோடும் ஊரிழந்து உறவிழந்து உரிமையிழந்து உயிர் சுமந்த உடல்களாக அடைக்கலம் தேடி அலைகின்ற  நூற்றாண்டுப் பெருந்துயரைக் கண்ட தமிழினத்திற்கு அங்கொன்றும் இங்கொன்றுமாக கிடைக்கும் இதுபோன்ற சிறுசிறு அதிகாரப்பகிர்வும் அங்கீகார நிமிர்வும் மிகவும் இன்றியமையாததாகும். தூரத்தில் தெரியும் சிறு பொறியும் இன விடுதலைக்கனவை நனவாக்கும் பெரு வெளிச்சத்தைத் தரவல்லது என்பதால் தங்கை உமா குமரனின் வெற்றி உலகத்தமிழினத்தின் வெற்றியாகும். தம்மைத் தேர்ந்தெடுத்த  ஸ்ட்ராட்ஃபோர்ட்ரூபோ தொகுதி மக்களின் மேம்பாட்டிற்கும் நல்வாழ்விற்கும் சிறப்புற பணியாற்றவும் உலகத்தமிழர்களின் உரிமைக்குரலாக இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் ஒலிக்கவும் தங்கை உமா குமரனுக்கு  என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!   அவரைபோன்றே தொழிலாளர் கட்சியின் சார்பாக போட்டியிட்ட அன்புத்தங்கை கிருஷ்ணி ரிசிகரன் தாராள சனநாயகவாதிகள் கட்சி  சார்பில் போட்டியிட்ட அன்புத்தம்பி ஜாகிர் ஹுசேன் ஆகியோர் இத்தேர்தலில் வெற்றி வாய்ப்பினை இழந்தபோதிலும் அதற்காக எவ்வித தற்சோர்வும் அடைய வேண்டாம்; ‘தோல்வியே வெற்றியின் தாய்’ என்னும் முதுமொழிக்கேற்ப  தொடர்ந்து மக்கள் பணியாற்றினால்இ எதிர்காலத்தில் உறுதியாக வெற்றிப்பெறுவீர்கள். மக்கள் தொண்டாற்ற வேண்டுமென்ற உங்களின் முயற்சிக்கும் உழைப்புக்கும் என்னுடைய அன்பும் வாழ்த்துகளும்!  இங்கிலாந்து நாட்டில் பெருவெற்றி பெற்று ஆட்சியைப்பிடித்துள்ள தொழிலாளர் கட்சிக்கும் பிரதமராக பதவியேற்கும் கெய்ர் ஸ்டார்மர் அவர்களுக்கும் நாம் தமிழர் கட்சி சார்பாக என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். 14 ஆண்டுகளுக்குப் பிறகு தொழிலாளர் கட்சி அடைந்துள்ள ஆட்சி அதிகாரமானது இங்கிலாந்தில் வாழ்கின்ற தமிழர்களுக்கு மட்டுமல்லாது ஈழத்தில் வாழ்கின்ற தமிழர்களின் வாழ்விலும் புதிய மலர்ச்சி ஏற்படவும் ‘ஈழத்தாயக விடுதலை’ எனும் தமிழர்களின் இலட்சிய கனவு வென்றிடவும் உறுதுணையாய் இருக்குமென நம்புகிறேன். https://www.virakesari.lk/article/187818
    • 06 JUL, 2024 | 12:46 PM வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைப்பதற்கான அடிக்கல் நடும் நிகழ்வு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு மீண்டும் எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அம்பாறை மாவட்டத்தின் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீரமுனை கிராமத்துக்கான நுழைவாயிலில் வரவேற்பு வளைவு அமைப்பற்கான பணிகள் வீரமுனை மக்களினால் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கான தடை உத்தரவினை கடந்த 15ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸார் நீதிமன்றில் பெற்றிருந்தனர். இது தவிர, இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.  அந்த வழக்கு நேற்று வெள்ளிக்கிழமை (5) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதை அடுத்தே, எதிர்வரும் ஒகஸ்ட் 21ஆம் திகதி வரை  ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. வீரமுனையில் வரவேற்பு வளைவு அமைக்கும் நிகழ்வானது இன முரண்பாட்டை, இன வன்முறையினை ஏற்படுத்தும் என கடந்த வழக்கு தவணைகளில் சம்மாந்துறை பொலிஸாரினால் தெரிவிக்கப்பட்டு இந்த  தடை உத்தரவு பெறப்பட்டிருந்தது. இந்த வழக்கு நேற்று சம்மாந்துறை நீதிவான் நீதிமன்ற நீதிபதி டி.கருணாகரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, மன்றில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்ட வீரமுனை சிந்தா யாத்திரைப் பிள்ளையார் ஆலய நிர்வாகம் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள்  ஆஜராகியிருந்தனர். இதன்போது இரு சாராரின் விண்ணப்பங்கள்  சமர்ப்பணங்களையும் ஆராய்ந்தே நீதிவான் வழக்கினை ஒத்திவைத்தார். செய்திப் பின்னணி சம்மாந்துறை பிரதேசத்தில் சட்ட ரீதியாக அனுமதி பெறாமல் வீரமுனை கிராமத்துக்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு எனும் பெயரில் கோபுரமொன்றை அமைப்பதற்கு எதிராக இரண்டு நபர்களால் முறைப்பாடொன்று கடந்த வெள்ளிக்கிழமை (14) சம்மாந்துறை பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. சம்மாந்துறை பொலிஸ் நிலைய பதில் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நௌபரால் மன்றுக்கு சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையின் பிரகாரம், கடந்த சனிக்கிழமை (15) சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்டதும் சம்மாந்துறை நீதவான் நீதிமன்ற நியாயாதிக்க எல்லைக்குட்பட்டதுமான சம்மாந்துறை ஆண்டியடி சந்தி எனும் இடத்தில் வீரமுனைக்கு செல்லும் வீதியில் வீரமுனை பிரதேசவாசிகளால் வரவேற்பு கோபுரமொன்று  அமைப்பதற்கு அடிக்கல் நடும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இந்த நிகழ்வினை நடத்தினால் தமிழ், முஸ்லிம் மக்களுக்கிடையில் இனக்கலவரம் ஏற்பட சாத்தியமுள்ளது என்பதாலும் பொதுமக்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல், சமாதான குலைவு ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாலும், பொதுமக்களின் போக்குவரத்துக்கு தடைகள் ஏற்படக்கூடிய சாத்தியம் உள்ளதாலும், இந்த  நிகழ்வை நடாத்துவது உசிதமானதல்ல என்பதனால் அடிக்கல் நடும் நிகழ்வு நடைபெறாதவாறு கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், வீரமுனை கோவில் தலைவர் ராஐ கோபால், கிராம உத்தியோகத்தர் பிரதீபன்  உட்பட்டோருக்கு வீரமுனை கிராமத்துக்கான  நுழைவாயில் வரவேற்பு வளைவு அமைக்க தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.  இது தொடர்பாக கடந்த 19ஆம் திகதி சம்மாந்துறை பொலிஸாரினால் மன்றுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இந்த அறிக்கை தொடர்பான விசாரணையை மேற்கொண்டபோது எதிர்வரும் 2024.06.27 அன்று வரை தொடர்ந்து இடைக்கால தடை உத்தரவை நீடித்து சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.  இதேவேளை இரண்டாவது முறையாக சம்மாந்துறை பிரதேச சபையினால் சில தினங்களுக்கு முன்னர் வழக்கு தாக்கல் செய்யப்பட்ட நிலையிலேயே இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.  https://www.virakesari.lk/article/187820
  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
      • 0 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 1 reply
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.