Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
15 JUL, 2024 | 05:48 PM
image
 

(எம்.நியூட்டன்)

தமிழ்நாட்டில் இவ்வாறான தமிழ் இல்லையே என்று யோசிக்கவைக்கும் அளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது என சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் தெரிவித்தார்.

தெல்லிப்பழை பிரதான வீதி வட்டுக்கோட்டையில் தி.பாலசுப்பிரமணியம்  நினைவாக அவரது குடும்ப உறுப்பினர்களால் அன்பளிப்பாக வழங்கப்பட்ட இல்லம் புனரமைக்கப்பட்டு சிவபூமி தேவார மடமாக திறந்துவைக்கப்பட்டது. 

இதில் பிரதம விருந்தினராக வருகைதந்த சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம்,   சிவபூமி தேவார மடத்தை திறந்துவைத்து உரையாற்றும்போதே மேற்கண்டவாறு  தெரிவித்தார். 

download.jpg

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில், 

இந்தியாவில் தமிழ்நாடு என்று பெயர் இருந்தும், அங்கே தமிழ் இவ்வாறு இருக்காதா என்று யோசிக்கவைக்கிறது. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது. 

சைவத்துக்கும் தமிழுக்கும் சேவை செய்ய  கலாநிதி ஆறுதிருமுருகன் தமிழ்நாட்டுக்கு வருகை தரவேண்டும்.

சாதாரண தொண்டு செய்பவர்கள் விளம்பரங்களுடன் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். விளப்பரத்துக்காகவே தொண்டு செய்கிறார்கள். ஆனால் சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தன்னலம் இல்லாது எவ்வளவோ திருப்பணிகளை செய்துவருகிறார். இத்தகைய பணிகளை மன்னர்கள் செய்யவேண்டிய பணி இவர் சாதாரணமாக செய்துவருகிறார். இது இறைவனின் அருள் இல்லாமல் செய்யமுடியாது. இறைவனின் அருள் இவருக்கு உள்ளது. 

சைவமும் தமிழும் எல்லோரையும் வாழவைக்கும். அத்தகைய பணி செய்பவரை யாழ்ப்பாணம் பெற்றுள்ளது. இத்தகைய பணி  தமிழகத்தில் இல்லையே. காலமாற்றத்தால் சுருங்கிப்போயுள்ளது. ஆறுதிருமுருகனின் பணி உலகில் பல இடங்களுக்கும் தேவையாக உள்ளது. 

இன்றைய தேவார மடம் திறப்பு விழா அவசியமான ஒன்றாகும். எனது பதவி நிலை காரணமாக பல இடங்களுக்கு அழைப்பார்கள். அங்கு சென்றால் பல மொழிகளை பேசுவார்கள்.  தேவாரங்கள் பாடுவார்கள். அவை சிலவே. ஆனால் இங்கு திருமுறை ஆடல் ஆற்றுகை சிறப்பாக நடைபெற்றுள்ளது. இந்த மடத்தில் தேவாரத்துடன் ஆடல் ஆற்றுகையும் நடைபெறவேண்டும். இந்த தேவார மடத்தை இந்த பிரதேசத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

யாழ்ப்பாணத்து தமிழும் சைவமும் தமிழ்நாட்டில் இல்லையே! - சென்னை உயர்நீதிமன்ற நீதியரசர் சிவஞானம் | Virakesari.lk

  • கருத்துக்கள உறவுகள்

சேர்டிபிகேட் கிறாண்டட்! 😂

  • கருத்துக்கள உறவுகள்
4 hours ago, பிழம்பு said:

சிவபூமி அறக்கட்டளையின் தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் தன்னலம் இல்லாது எவ்வளவோ திருப்பணிகளை செய்துவருகிறார். இத்தகைய பணிகளை மன்னர்கள் செய்யவேண்டிய பணி இவர் சாதாரணமாக செய்துவருகிறார்.

large.IMG_6867.jpeg.627a6c72e25446535cd7

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
Quote

இந்தியாவில் தமிழ்நாடு என்று பெயர் இருந்தும், அங்கே தமிழ் இவ்வாறு இருக்காதா என்று யோசிக்கவைக்கிறது. அந்தளவுக்கு யாழ்ப்பாணத்தில் தமிழும் சைவமும் தழைத்திருக்கிறது. 

ஜேர்மனியில் தற்போது ஏராளமான தென்னிந்தியர்கள் வாழ்கின்றார்கள். அதில் தமிழ்நாட்டு தமிழர்களும் அடங்கும். இப்போது  ஜேர்மனியில் உள்ள  இந்து கோவில்களிலும் சரி,தமிழ் பாடசாலைகளிலும் சரி  இவர்களின் எண்ணிக்கை அதிகம். ஆதிக்கம் என்றும் சொல்லலாம்.. இவர்களுக்கு ஈழத்தமிழர்களின் பண்பாடு பிடித்திருக்கின்றது. அதிலும் ஆங்கில கலப்பில்லாத தமிழ் பேச்சு வழக்குகளை மெச்சுகின்றனர். சுத்த தமிழுக்காகவே தமிழ்பாடசாலைகளில் தங்கள் பிள்ளைகளை கொண்டுவந்து சேர்க்கின்றனர்.

புலம்பெயர்ந்து வந்தும் தொப்புள்கொடி உறவுகள் என்பதை நிரூபிக்கின்றனர்.

  • கருத்துக்கள உறவுகள்

தமிழர நாட்டில் அனைத்து தமிழர்களும. உலிய கல்வியை கற்றால்  அர்ச்சகர் ஆகலாம் என்று தமிழ் நாட்டு அரசு கொண்டுவந்த சட்டத்துக்கு எதிராக இந்த சிவஞான சங்கிகள் தான் உயர் நீதிமன்றத்தில் ஆகமங்களை சாட்டாக வைத்து தடை வாங்கின.   ஆலயங்களில் பிரதான வழிபாட்டு மொழியாக்கவும் அங்கு தடையாக இருந்த இந்த சிவஞான சங்கிகள் இலங்கையிலும் தமது ஆர் எஸ் மத வெறியை பரப்ப தமது யாழ்பாண ஏஜெண்டுகள் மூலம். வந்து கூறும் மாய்மாலங்களே இவை. 

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு வேல்சில் முருகன் கோவில் ஒன்று உண்டு 9௦ களில் பலமுறை செல்வதுண்டு தமிழில் வெள்ளைகள் பாடி முருகனை வழிபடுவது கண்டு பெருமிதமாக இருக்கும் அந்த கோவிலை உருவாக்கியது தமிழ் சிங்களவர் அவர் இறந்த பின் பலரின் கைகளுக்கு சென்று  கொரொனோ வரும் முன் சென்றபோது வழிகாட்டும் தமிழ் பலகைகள் பிடுங்கி எறியப்பட்டு கிந்தியில் அறிவிப்புக்கள் தமிழ் கடவுளான முருகன் அறிவிப்புக்கள் அணைத்தும்கிந்தியில் இருந்தன !......இவ்வளவுக்கும் அந்த கோவிலுக்கு செல்பவர்கள் நம்ம ஆட்கள் தான் .

 

  • கருத்துக்கள உறவுகள்
1 hour ago, பெருமாள் said:

இங்கு வேல்சில் முருகன் கோவில் ஒன்று உண்டு 9௦ களில் பலமுறை செல்வதுண்டு தமிழில் வெள்ளைகள் பாடி முருகனை வழிபடுவது கண்டு பெருமிதமாக இருக்கும் அந்த கோவிலை உருவாக்கியது தமிழ் சிங்களவர் அவர் இறந்த பின் பலரின் கைகளுக்கு சென்று  கொரொனோ வரும் முன் சென்றபோது வழிகாட்டும் தமிழ் பலகைகள் பிடுங்கி எறியப்பட்டு கிந்தியில் அறிவிப்புக்கள் தமிழ் கடவுளான முருகன் அறிவிப்புக்கள் அணைத்தும்கிந்தியில் இருந்தன !......இவ்வளவுக்கும் அந்த கோவிலுக்கு செல்பவர்கள் நம்ம ஆட்கள் தான் .

 

தமிழ் இனிமை என்று அளவுக்கு மிஞ்சி அள்ளிப் பருகியதால் வந்த  மயக்கத்தின் (வெறி) விளைவாக இருக்குமோ?? சிலர் தங்கள் வெறிக்கு, வாய்குரிசியாக வறுவல் தேடுவதுண்டு, கிந்தியும் ஒரு வறுவலாக இருக்குமோ??🤔

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.