Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

 மனிதம் இன்னும் .....

அண்மையில்   சென்ற வெள்ளிக் கிழமை  சாய் சென்டர் இல் ஒரு திருமண விழாவுக்கு சென்று இருந்தேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை.,நேரத்துடன் சென்றதால்  அங்கும் இங்கும் விடுப்பு  பார்த்து கொண்டிருந்தேன்.  ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை  கவனமாக  நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு  அவர்  கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். 

மனைவி கைத்தடியுடன்  நிற்கிறார் . அவரருகே ஒரு பெண்மணி இறங்கி உள் நுழைய முற்படட   போது வயதான மனைவி  என்னை   ஒரு இருக்கையில் உட்க்காரவைக்கமுடியுமா எனக் கேடடார். குளிருக்குள் நிற்க சிரமமாயிருக்கிறது என்றார்  . பெண்மணியும் வாருங்கள்  உள்ளே செல்வோம் என அழைத்து,   உயர்த்தி மூலம் (லிப்ட்) அழைத்து சென்று பாதணியைக் கழற்ற வேண்டும்  உதவி செய்கிறேன் என்றார் . அவரை இருத்தி  (buckle )கழற்ற  முற்படும்போது தனக்கு வெறுங் காலோடு   நடக்கமுடியாது . காலுறைபோடவேண்டும் என்று கூறி கைப்பையில் இருந்த புதிய காலுறையை எடுத்தார். பரவாயில்லை தாருங்கள்  என்று கூறி  முழந்தாளிட்டு  மெதுவாக காலுறையை மாட்டி விடடார். வயதானவர் நன்றி சொல்லி நிமிர்ந்த வேளை , ஒருவாறு தேடி காரை தரிப்பிடத்தில் விட்டு பதறியவாறு    (மனைவி எங்கே என்று ) .வந்தவருக்கு  அவருக்கு உதவி செய்யும் பெண்மணியை கண்டதும்  திரும்ப திரும்ப நன்றி சொன்னார்.அவரும் பரவாயில்லை. பெரியவிடயமல்ல. என் தாய்க்கு செய்வதுண்டு என்றார் .
 
தூரத்தே   பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு,  முன் பின் தெரியாத ஒருவருக்கு , பளபளக்கும் பட்டுச்சாரி கசங்கும் என எண்ணாது உதவி செய்தமை ,  " இன்னும் மனிதம் வாழ்கிறது "என எண்ணிக் கொண்டேன். .அந்த பெண்மணி நல்ல, பண்புள்ள உதவும்  மனப்பான்மையுள்ள பெற்றவர்களால் வளர்க்க பட்டுள்ளார் என மனதார   வாழ்த்திக்கொண்டேன்.  பெரியவர்களின் ஆசி என்றும் வாழவைக்கும். 
.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான் மனிதம் வாழ்கிறது . ....... அது மென்மேலும் வாழவேண்டும் . .......!   👍

  • கருத்துக்கள உறவுகள்
6 hours ago, நிலாமதி said:

அங்கும் இங்கும் விடுப்பு  பார்த்து கொண்டிருந்தேன்

எல்லாம் சரி. நீங்கள் ஏன் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை?

  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, நிலாமதி said:

மனிதம் இன்னும் .....

பகிர்வுக்கு நன்றி.
 
நட்பார்ந்த நன்றியுடன்
நொச்சி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
7 hours ago, Kavi arunasalam said:

எல்லாம் சரி. நீங்கள் ஏன் அந்த மூதாட்டிக்கு உதவ முன்வரவில்லை?

சாறி  கசங்கி விடும் என்ற சுய நலம் தான். 😄

  • கருத்துக்கள உறவுகள்
16 minutes ago, நிலாமதி said:

சாறி  கசங்கி விடும் என்ற சுய நலம் தான். 😄

உண்மை சொல்வதில் அக்கா ஒரு "அரிச்சந்திரி " வாழ்க வாழ்த்துக்கள் . ......!   😂

  • கருத்துக்கள உறவுகள்
15 hours ago, நிலாமதி said:

 மனிதம் இன்னும் .....

அண்மையில்   சென்ற வெள்ளிக் கிழமை  சாய் சென்டர் இல் ஒரு திருமண விழாவுக்கு சென்று இருந்தேன். நல்ல மழை பெய்து ஓய்ந்திருந்த வேளை.,நேரத்துடன் சென்றதால்  அங்கும் இங்கும் விடுப்பு  பார்த்து கொண்டிருந்தேன்.  ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை  கவனமாக  நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு  அவர்  கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். 

மனைவி கைத்தடியுடன்  நிற்கிறார் . அவரருகே ஒரு பெண்மணி இறங்கி உள் நுழைய முற்படட   போது வயதான மனைவி  என்னை   ஒரு இருக்கையில் உட்க்காரவைக்கமுடியுமா எனக் கேடடார். குளிருக்குள் நிற்க சிரமமாயிருக்கிறது என்றார்  . பெண்மணியும் வாருங்கள்  உள்ளே செல்வோம் என அழைத்து,   உயர்த்தி மூலம் (லிப்ட்) அழைத்து சென்று பாதணியைக் கழற்ற வேண்டும்  உதவி செய்கிறேன் என்றார் . அவரை இருத்தி  (buckle )கழற்ற  முற்படும்போது தனக்கு வெறுங் காலோடு   நடக்கமுடியாது . காலுறைபோடவேண்டும் என்று கூறி கைப்பையில் இருந்த புதிய காலுறையை எடுத்தார். பரவாயில்லை தாருங்கள்  என்று கூறி  முழந்தாளிட்டு  மெதுவாக காலுறையை மாட்டி விடடார். வயதானவர் நன்றி சொல்லி நிமிர்ந்த வேளை , ஒருவாறு தேடி காரை தரிப்பிடத்தில் விட்டு பதறியவாறு    (மனைவி எங்கே என்று ) .வந்தவருக்கு  அவருக்கு உதவி செய்யும் பெண்மணியை கண்டதும்  திரும்ப திரும்ப நன்றி சொன்னார்.அவரும் பரவாயில்லை. பெரியவிடயமல்ல. என் தாய்க்கு செய்வதுண்டு என்றார் .
 
தூரத்தே   பார்த்துக் கொண்டு இருந்த எனக்கு,  முன் பின் தெரியாத ஒருவருக்கு , பளபளக்கும் பட்டுச்சாரி கசங்கும் என எண்ணாது உதவி செய்தமை ,  " இன்னும் மனிதம் வாழ்கிறது "என எண்ணிக் கொண்டேன். .அந்த பெண்மணி நல்ல, பண்புள்ள உதவும்  மனப்பான்மையுள்ள பெற்றவர்களால் வளர்க்க பட்டுள்ளார் என மனதார   வாழ்த்திக்கொண்டேன்.  பெரியவர்களின் ஆசி என்றும் வாழவைக்கும். 
.

நல்ல ஒரு காரியத்தை அவதானித்து, எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி நிலாமதி அக்கா.  இதனை வாசித்தவர்கள்  அடுத்தமுறை இப்படியான சந்தர்ப்பங்கள் ஏற்படும் போது நிச்சயம் உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. 

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பகிர்விற்கு நன்றி 👍🏼

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
2 hours ago, நிலாமதி said:

சாறி  கசங்கி விடும் என்ற சுய நலம் தான். 😄

ஒருக்கால் கட்டின சாறி இரண்டாம் தரம் கட்டுற பழக்கம் உங்களிட்ட இருக்கா? 😄

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

   அந்தளவுக்கு " ஷோ " கா ட்டும் பழக்கம் என்னிடம் இல்லை. இருப்பதில் பிடித்ததை கட்டிக்க கொள்வேன். வருடத்தில் ஒன்று ரெண்டு தடவைகள்தானே கலியாணங்கள் வரும். நெருங்கிய  உறவினர் என்றால் மட்டும் புதிது எடுத்துக் கொள்வேன். 

  • கருத்துக்கள உறவுகள்
3 hours ago, குமாரசாமி said:

ஒருக்கால் கட்டின சாறி இரண்டாம் தரம் கட்டுற பழக்கம் உங்களிட்ட இருக்கா? 😄

ஒரு நாட்டில கட்டின சாரியை  வேறு ஒரு நாட்டுக்கு போனா கட்டுவார்கள் (பொதுவாக) அதே நாட்டில் கட்டுவது குறைவு ....

20 hours ago, நிலாமதி said:

ஒரு வயதான தம்பதிகள் கணவனுக்கு எண்பது வயதுக்கு மேல் இருக்கும் மனைவியை  கவனமாக  நுழை வாயில் அருகில் இறக்கி விட்டு  அவர்  கார் தரிப்பிடம் தேடி சென்றுவிடடார். 

மனிதம் இன்னும் மரணிக்கவில்லை....பகிர்விற்கு நன்றி ...80 வயதில் கார் ஒடுவது என்பது  கொடுப்பினை...

  • கருத்துக்கள உறவுகள்

தகவலுக்கு நன்றி 

ஒரு சிலரிடமாவது மனிதநேயம் இருப்பது சந்தோசமே.

  • கருத்துக்கள உறவுகள்
9 hours ago, putthan said:

 

மனிதம் இன்னும் மரணிக்கவில்லை....பகிர்விற்கு நன்றி ...80 வயதில் கார் ஒடுவது என்பது  கொடுப்பினை...

சே . ..... புத்தனின் ஆசிபெற நான் இன்னும் ஆறேழு வருடங்கள் கார் ஓட்ட வேணும் போல கிடக்கு . .......!   😂

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.